-
20th February 2011, 09:00 PM
#1191
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.
"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,
கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,
'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,
'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,
நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,
"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,
"ராஜா" பதிவுகள் என்ன,
எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,
தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.
தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !
தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.
-
20th February 2011 09:00 PM
# ADS
Circuit advertisement
-
21st February 2011, 12:09 AM
#1192
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார் & சகோதரி சாரதா,
26.1.1972லிருந்து தங்களது 'பஞ்ச்' பதிவுகள் வெளியான இன்றைய காலகட்டம் வரை "ராஜா ராஜா தான்". என்றென்றும் RAJA RULES SUPREME என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.
For a short & smart comparison :
'O Mere Raja' Song from Johny Mera Naam(1970)
(Dev Anand-Hema Malini / Kishore-Asha / Kalyanji-Anandji / Rajinder Krishnan)
'O Raja' Number from Raja(1972)
(NT-JJ / TMS-PS / MSV / Kannadhasan)
IMHO, NT is incomparable, HM & JJ - equally good, TMS-PS edge over Kishore-Asha, MSV Miles ahead.
"ராஜா"வை இன்றளவிலும் ஹிந்தி ரீமேக் அல்ல, தமிழில் வெளிவந்த ஒரு ஒரிஜினல் படம் என்கின்ற ரீதியில் பார்ப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?! அதற்கு ஒரே காரணம் நமது நடிகர் திலகம் தான் !
அன்புடன்,
பம்மலார்.
-
21st February 2011, 02:57 AM
#1193
Senior Member
Veteran Hubber
It's RAJA all the way
கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது. இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
21st February 2011, 03:41 AM
#1194
Senior Member
Veteran Hubber
'மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ'
'தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே'
'யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா'
'பூங்காற்று திரும்புமா'
'சந்தன நிலவொளி'
'சின்னஞ்சிறு அன்னம் ஒன்று'
இன்னும் இது போன்ற சிறந்த பாடல்களையெல்லாம் நமது நடிகர் திலகத்துக்கு பின்னணியில் பாடிய கள்ளத்தொண்டை கலக்காத கம்பீரக் குரலோன் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி. நடிகர் திலகம் முதற்கொண்ட முன்னணி ஹீரோக்களுக்கும், ஏனைய நடிகர்களுக்கும் அவர் பாடிய பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
21st February 2011, 04:11 AM
#1195
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 175
கே: நடிகர் திலகத்தின் "அவன் தான் மனிதன்" வெள்ளிவிழாக் கொண்டாடுமா? (பத்மா ராதாகிருஷ்ணன், விம்கோ நகர்)
ப: கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அப்படித்தானே?! நானும் அதையே விரும்புகிறேன்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1975)
அன்புடன்,
பம்மலார்.
-
21st February 2011, 04:30 AM
#1196
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 176
கே: 'சிக்கல் தம்பி'யின் வாசிப்பு நீண்ட நாட்களுக்கு ஒலிக்கும் போலிருக்கிறதே? (டி.எஸ்.சுப்பிரமணியன், மாயூரம்)
ப: நிச்சயமாக. சிக்கல் தம்பியும் அவர் வாசிப்பும் லக்ஷக்கணக்கானவர்களை திரும்பத் திரும்ப இழுக்கக் கூடியவையாயிற்றே !
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)
அன்புடன்,
பம்மலார்.
-
21st February 2011, 10:29 AM
#1197
Senior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.
"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,
கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,
'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,
'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,
நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,
"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,
"ராஜா" பதிவுகள் என்ன,
எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,
தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.
தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !
தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின், மற்றும், திரு முரளி, திரு ராகவேந்தர், திருமதி சாரதா போன்றோரின் பங்களிப்புக்கு முன் என்னுடையது மிகச் சிறியதுதான். உங்கள் அனைவரது ஆய்வும் அலசலும் பெரிய அளவில் நடந்தேறியாகி விட்ட பின்னமும், நானும் முயற்சி செய்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் நமது நடிகர் திலகம் தான். அவரது, கற்பனைக்கடங்காத, அவரது கற்பனை வளமும் திறமையும் தான் அவரது பங்களிப்பை என்னைப் போன்ற இன்னும் எத்தனையோ லட்சக்கணக்கான ரசிகர்களை இன்னமும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி கலந்த அன்புடன்,
பார்த்தசாரதி
-
21st February 2011, 10:44 AM
#1198
Senior Member
Senior Hubber

Originally Posted by
saradhaa_sn
சாரதி,
பயில்வான் தாரா சிங் அல்ல, அவரது தம்பி 'ரந்தாவா' (என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்).
கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.
இன்னொரு விஷயம், தேவி பாரடஸில் நாலாவது தமிழ்ப்படம் ராஜா. ஏற்கெனவே சொர்க்கம், ரிக்ஷாக்காரன் மட்டுமல்லாது 71 தீபாவளிக்கு 'நீரும் நெருப்பும்' படமும் அங்குதான் ரிலீஸானது.
டியர் சாரதா மேடம் அவர்களுக்கு,
பிழை திருத்தியதற்கு நன்றி. பத்மா கன்னா இரண்டு மொழிகளிலும் நடித்திருந்தார் என்பது தெரியும். ஆனால், குழப்பம் அந்த பயில்வான் கதாபாத்திரத்தில் தான். மேலும், நீரும் நெருப்பும் பற்றிய தகவலுக்கும் நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
21st February 2011, 04:28 PM
#1199
Senior Member
Seasoned Hubber
டெல்லி டூ மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டு கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் தன் குரலால் தமிழ் மக்களை வசீகரித்த வாசுதேவன் அவர்களின் மறப்பு பின்னணிப் பாடகர் சரித்திரத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நடிகர் திலகத்திற்கு அவர் பாடியுள்ள பாடல்கள் என்றும் இனிமை, குறிப்பாக பூங்காற்று திரும்புமா பாடல்.
அவர் மறைவுக்கு நம் அஞ்சலி.
அவருடைய முதல் பாடல்.
பாலு விக்கிற பத்துமா
இசை - வி.குமார்
குரல்கள் - வாசுதேவ், ஸ்வர்ணா
பாடல் - மாயவநாதன்
மலேசியா வாசுதேவனின் முதல் படம் மாயவநாதனின் கடைசிப் படமாய் அமைந்தது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2011, 05:14 PM
#1200
Senior Member
Veteran Hubber
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks