-
25th February 2011, 01:37 PM
#1231
Senior Member
Diamond Hubber

Originally Posted by
parthasarathy
இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது.
1992 -ல் நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் புதிய படங்கள் வெளியாகும் ஸ்டார் திரையரங்கில் இருவர் உள்ளம் திரையிடப்பட்டது ..நடிகர் திலகத்தின் படங்களை பார்க்க திருச்சியின் இண்டு இடுக்குகளில் உள்ள பழைய திரையரங்குகளிலேயே ஆஜராகும் நான் இந்த வாய்ப்பை விடுவேனா ? சுமாரான கூட்டத்தை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது . புதிய படத்துக்கு நிகரான கூட்டம் , அரங்கு நிறைந்தது ..ஆரவாரத்துக்கும் குறைவில்லை.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
25th February 2011 01:37 PM
# ADS
Circuit advertisement
-
25th February 2011, 06:00 PM
#1232
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 178
கே: நடிகர் திலகம் சிவாஜி நடிக்க வேண்டிய படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த விசித்திரம் உண்டா? (த.சத்யநாராயணன், அயன்புரம்)
ப: "சிவாஜிக்கான கதையில் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கான கதையில் சிவாஜி நடித்ததுண்டு. காத்தவராயன், ராணி லலிதாங்கி, எங்க மாமா போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் கூட படமாக்கப்பட்டு பிறகு எம்.ஜி.ஆர் அந்தப் படத்திலிருந்து விலகி அதில் சிவாஜி நடித்துக் கொடுத்தார். எந்த ஈகோவும் பார்க்காமல் சிவாஜி நடித்துக் கொடுத்தது உயர்ந்த கலைஞனுக்கான அடையாளம்" என்கிறார் 'இதயக்கனி' விஜயன்.
(ஆதாரம் : குமுதம், 2.3.2011, "லைட்ஸ் ஆன் சுனிலிடம் கேளுங்கள்" பகுதி) [லேட்டஸ்ட் குமுதம் இதழ்]
அன்புடன்,
பம்மலார்.
-
25th February 2011, 11:06 PM
#1233
Senior Member
Devoted Hubber
டியர் பார்த்தசாரதி சார்
நமது threadல் நடுவில் சற்று கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல் இருந்தது. தங்கள் வரவால் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
மேலும் தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கும்
அன்பன்,
ராதா.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
25th February 2011, 11:16 PM
#1234
Junior Member
Junior Hubber
My Dear NT Fans,
Hope all are doing well. Kindly allow me few days time to get back to our legend forum. I extend my sincere thanks to all our beloved fans for all the good wishes for my exams.
Jai Hind
M. Gnanaguruswamy
-
25th February 2011, 11:18 PM
#1235
Senior Member
Devoted Hubber
பம்மலார் சார்,
தங்களின் வசந்தமாளிகை ஆய்வு என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டது.
இந்த படம் காண என் தாய் மாமாவுடன் சைக்கிளில் 16km சென்ற நினைவு வருகிறது.
Radha
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
26th February 2011, 12:28 AM
#1236
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார் & ஜோ சார்,
"இருவர் உள்ள"த்தை கொள்ளை கொள்ளாத உள்ளமும் உண்டோ !
டியர் ஜேயார் சார்,
பாராட்டுக்கு நன்றி ! என்ன இருந்தாலும் அவையெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளல்லவா !
அன்புடன்,
பம்மலார்.
-
26th February 2011, 12:25 PM
#1237
Senior Member
Senior Hubber
டியர் Joe மற்றும் பம்மலார் அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் ஏராளமான படங்கள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும், குறிப்பாக குறைந்தது, ஐம்பது படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதாவது, ஒட்டு மொத்தமாக ஒவ்வொருவர் மனத்திலும் ஐம்பது. மேலும் பல படங்கள் ரசிகர் வட்டத்தைத் தாண்டி ஒரு சமூகத்தையே கட்டிப் போட்டு விடும். இருவர் உள்ளம் வந்த புதிதிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளிலும், பல இடங்களில் ஏற்படுத்திய அலை மலைக்க வைப்பதாகும். இது பெண் மனம் என்ற பெரிய வாசகர் கூட்டத்தைக் கொண்ட "லக்ஷ்மி என்ற புனைப்பெயரைக் கொண்டு கதைகள் எழுதி வந்த "திரிபுரசுந்தரி" அவர்களது நாவலாகும். இது நாடகமாகவும், நடிகர் திலகம் மற்றும் பத்மினி அவர்களால் நடிக்கப் பட்டதாகக் கூறுவார். இது படமாக எடுக்கப்படும்போது, பத்மினி திருமணம் புரிந்துகொண்டு அமெரிக்கா சென்று விட்டதால், ஒரு வேளை அவர்களால் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த விவரங்கள், பம்மலார் மற்றும் முரளி அவர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். ஆனால், என்னைப் போருதுஅவரை, இந்தக் கதாபாத்திரத்தில், சரோஜா தேவி தவிர்த்து (தேவிகா அவர்களும் ஒரு தொண்ணூறு சதவிகிதம்) வேறு எந்த நடிகையாலும் அந்த அளவிற்கு பொருந்தி செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இது ஒரு லவ் சப்ஜெக்ட் என்பதால், அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த சரோஜா தேவி மற்றும் தேவிகா மட்டும் தான் இதற்கு பொருந்தி இருப்பார்கள். ஏனென்றால், அந்த நேரத்தில் சாவித்திரியும் பத்மினியும் ஓரளவு முதிர்ந்த நடிகையாகி விட்டிருந்தனர்.
நடிகர் திலகம் ஒரு இயக்குனரின் கலைஞன் என்பதற்கு இந்த ஒரு படம் போதும் கட்டியம் கூற. எந்த ஒரு பாத்திரத்திலும், அவர் அளவிற்கு இலகுவாக பொருந்தக் கூடிய கலைஞன் இல்லை. அதனால் தான் அவருடைய versatility -ஐப் பற்றி இன்னமும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம் (YGM சோ உட்பட). இது போல் இன்னும் எத்தனையோ படங்களைப் பற்றி விரிவாக அலச வேண்டியுள்ளதால், இப்போதைக்கு சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
26th February 2011, 02:21 PM
#1238
Senior Member
Senior Hubber

Originally Posted by
j.radhakrishnan
டியர் பார்த்தசாரதி சார்
நமது threadல் நடுவில் சற்று கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல் இருந்தது. தங்கள் வரவால் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
மேலும் தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கும்
அன்பன்,
ராதா.
டியர் jr அவர்களே,
நன்றி. இந்தத் திரிக்கு தோய்வேதும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. புதியதாய் ஒரு உறுப்பினர் அதுவும், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரே உள்ளே நுழையும்போது, புதிது புதியதாய் கருத்துகளும் பகிர்தலும் நேர்வதால், விறுவிறுப்பு கண்டிப்பாகக் கூடும். எனக்குத் தெரிந்து, நடிகர் திலகத்தின் திரி மட்டும் தான் இதனை திரிகளுடன் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே போகின்றது. (யாராவது திருஷ்டி சுற்றிப் போடுங்களேன்.).
அன்புடன்,
பார்த்தசாரதி
-
26th February 2011, 02:25 PM
#1239
Senior Member
Diamond Hubber

Originally Posted by
parthasarathy
புதியதாய் ஒரு உறுப்பினர் அதுவும், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரே உள்ளே நுழையும்போது, புதிது புதியதாய் கருத்துகளும் பகிர்தலும் நேர்வதால், விறுவிறுப்பு கண்டிப்பாகக் கூடும்.
புதிதாக உறுப்பினர்கள் நுழைவது பெரிதல்ல ..ஆனால் நுழைபர்கள் பார்த்தசாரதி போல ஏற்கனவே இருப்பவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்வமும் புதிய தகவல்களும் கொண்டிருப்பது தான் இந்த திரியின் சிறப்பு.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
26th February 2011, 04:21 PM
#1240
Senior Member
Senior Hubber

Originally Posted by
joe
புதிதாக உறுப்பினர்கள் நுழைவது பெரிதல்ல ..ஆனால் நுழைபர்கள் பார்த்தசாரதி போல ஏற்கனவே இருப்பவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்வமும் புதிய தகவல்களும் கொண்டிருப்பது தான் இந்த திரியின் சிறப்பு.
டியர் Joe ,
ஆஹா! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).
இன்னும் நிறைய பேர் வந்து கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks