-
1st March 2011, 10:27 PM
#1261
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் நம் அனைவருடைய எண்ண ஓட்டத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளன. தாங்கள் கூறிய ஒவ்வொரு நண்பரையும் மறக்க முடியாது. பாம்குரோவ் சந்திரசேகர் தற்போது தஞ்சாவூரில் உள்ளார் என அறிகிறேன். மதுரையில் நடந்த சிலை திறப்பு விழாவின் போது அவரை சந்தித்து மிகவும் மகிழ்வுற்றேன். கோவை சேது இன்னும் மற்ற நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். அதேபோல் மந்தவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், இவர்களையெல்லாம் நீண்ட நாட்களாயிற்று பார்த்து. சேப்பாக்கம் பார்த்த சாரதி அவர்களை நடுவில் அமெரிக்க தூதரகத்தில் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனந்த் அவர்கள் சமீபத்தில் தன் மகனுடைய திருமணத்தை நடத்தினார். அவரால் சந்திக்க முடிந்த அனைத்து ரசிக நண்பர்களையும் அழைத்திருந்தார்.
மேலும் சில ரசிகர்கள் அவ்வப்போது சாந்தி திரையரங்கில் சந்தித்து வருகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்பது மிகச் சிறப்பாகும்.
மேலும் நம்முடைய குமாரும் கணேசனும் இணைந்து இதயராஜா புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். தாங்களும் பார்த்திருக்கலாம். அவர்கள் வைத்த பேனர் இன்னும் சாந்தியில் உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட சிகரம் நம்முடைய பம்மலார் தான். சிறு பிராயத்திலிருந்தே வர ஆரம்பித்து அனைத்து ரசிகர்களிடமும் மிக விரைவாக பரிச்சயம் ஆனவர். சொல்லப் போனால் பம்மல் ஸ்வாமிநாதனைத் தெரியாதவர்களே சிவாஜி ரசிகர் வட்டத்தில், குறிப்பாக சாந்தி தியேட்டர் ரசிக நண்பர் வட்டாரத்தில் இருக்க முடியாது என்கிற அளவிற்கு பிரபல்யமானவர்.
இன்னும் ஏராளமான பசுமையான நினைவுகள் உள்ளன.
வெளியூரிலிருக்கும் தங்களைப் போன்ற ரசிகர் நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வரும் வாய்ப்பும் நேரமும் அமையும் காலத்தில் நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st March 2011 10:27 PM
# ADS
Circuit advertisement
-
2nd March 2011, 03:51 PM
#1262
Senior Member
Platinum Hubber
My wife (raised in telugu land, completely oblivious of NT's talents; kind of thinking that he is the tamil equivalent of ANR) catching pAttum nAnE today on TV: "Boy, he can act!"
Me: Oh yeah, not bad, no?
-
3rd March 2011, 10:12 AM
#1263
Senior Member
Senior Hubber
அன்பு நண்பர்களே,
இன்று (3.2 .11 ) ஹிந்து நாளிதழில் (சென்னை பதிப்பு), இரண்டாவது பக்கத்தில், திரு தனஞ்செயன் என்பவர் எழுதிய தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் மிகச் சிறந்த நூறு படங்களைப் பற்றியுமான ஒரு மிகப் பெரிய புத்தகத்தை தமிழ் சினிமாவின் பிரபலங்களைக் கொண்டு வெளியிட்டது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு வந்துள்ளது. திரு கமல்ஹாசன், திரு பாலு மகேந்திரா, திரு ராண்டார் கை உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், பல்வேறு சிறந்த தமிழ்ப் படங்களின் சில காட்சிகளை அங்கு காண்பித்தபோது, நடிகர் திலகத்துக்கு தான் அரங்கத்திலிருந்து மிகப்பெரிய கைத்தட்டல் எழுந்தது - அதுவும் குறிப்பாக - வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் முதல் மரியாதை படங்களிலிருந்து சில காட்சிகளைக் காண்பிக்கும்போது, என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதிலும் தனியாக "Sivaji speak" என்ற தனி பாராவில் இந்த செய்தி வந்துள்ளது.
நடிகர் திலகம் என்ற மாபெரும் சக்தியின் வீச்சு காலத்தை வென்ற ஒன்று என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான் என்றாலும், அவ்வப்பொழுது இதுபோன்ற செய்தித் தொகுப்புகளைப் பார்க்கும்போதெல்லாம், நம்போன்ற ரசிகர்களுக்கு ஏற்படுகின்ற அந்த உணர்வுகள் - இதை வெறும் வார்த்தைகளால் வடித்துவிட முடியுமா என்ன?
அன்புடன்,
பார்த்தசாரதி
-
3rd March 2011, 11:02 AM
#1264
Senior Member
Devoted Hubber
"ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்..."
அருமையான யோசனை. முன்குட்டியே தெரிவித்தால் reserve செய்ய. காரணம், பெங்களூர் - சென்னை - பெங்களூர் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. சனி , சண்டே என்றால் இரண்டு மாதம் முன்பே reseve செய்ய வேண்டும்.
ஏப்ரல் 8 , 9 ஆம் தேதி சென்னையில் இருப்பேன். 9 ஆம் தேதி மதியம் (அ) இரவு பெங்களூர் திரும்புவதாக எண்ணம்.
சிவராத்திரி முன்னிட்டு, நேற்று இரவு MAA டிவியில் , திருவருர்செல்வர் தெலுகு டப்பிங் ஒளிபதிவு செய்தது.
Mr .பார்த்தசாரதி,
என்னுடைய பெயர் அ.பாலகிருஷ்ணன், பிறந்தது திருவண்ணாமலை ; வாழ்வது பெங்களூரில். பிறக்க ஒரு இடம் , வாழ ஒரு இடம், குணசேகரன் மட்டும் அல்ல, நான் கூட விதிவிலக்கல்ல.
-
3rd March 2011, 11:02 AM
#1265
Senior Member
Senior Hubber

Originally Posted by
saradhaa_sn
டியர் பார்த்தசாரதி,
நீங்கள் குறிப்பிட்டது சரியே. பத்மினி 1961 மத்தியில் டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறியவர், மீண்டும் 1965-ல் தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்தார். முதல் படமாக 'சித்தி' 1966 பொங்கலுக்கு ரிலீஸானது.
1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.
இடைப்பட்ட நாட்களில் கோலோச்சியவர்கள் சரோஜாதேவியும், தேவிகாவும்தான் என்றாலும், சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்ததால், நம்மவர்களால் 'நம்மவர்' என்று உரிமையோடு கொண்டாடப்பட்டவர் தேவிகாதான். (அதையும் முறியடிக்க 'ஆனந்த'மாக ஏற்றப்பட்ட 'ஜோதி', அந்த ஒரு படத்தோடு அணைந்துவிட்டது தெரிந்ததே).
அன்புள்ள சாரதா அவர்களுக்கு,
பொதுவாக, நம்போன்ற நடிகர் திலகத்தின் தீவிர ரசிக/ரசிகைகளைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடிகளின் வரிசையின், சரோஜா தேவி எப்போதும் முன்னணியில் - ஏன், முதல் ஐந்து இடங்களில் கூட இருந்ததில்லை - காரணம், எப்போதும், அவர் மாற்று அணியிலேயே இருந்ததனால் தான். ஆனால், முக்கியமாக, அதுவும், இருவர் உள்ளம் படத்தைப் பொறுத்தவரையில், அந்த சாந்தா என்ற கதாபாத்திரத்திற்கு - அன்றிருந்த காலகட்டத்தில் - சரோஜா தேவியோ, தேவிகாவோ தான் சரியாகப் பொருந்தியிருப்பார்கள் என்றாலும் - இந்தக் கதாபாத்திரத்திற்கு சரோஜா தேவி அவர்கள்தான் நூறு சதவிகிதம் சரியாகப் பொருந்தினார். ஒன்று கவனித்தோமேயானால், எல்லா நடிகைகளுக்கும், நடிகர் திலகத்துடன் நடிக்கும் போது தான் நல்ல வேடங்களும், அவர்களின் முழுத் திறமையைக் காண்பிக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்திருக்கின்றன. மாற்று முகாமில் நடிக்கும் போது, அவர்கள் பெரும்பாலும் (சில படங்கள் விதி விலக்கு) வெறும் கொலு பொம்மைகளாகத் தான் இருந்தார்கள்.
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் ரசிகர்களிடம் எடுக்கப் பட்ட ஒரு சர்வேயில், அதாவது, நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளைப் பற்றிய சர்வேயில், முதலிடம் பிடித்தவர், வாணிஸ்ரீ, இரண்டாவது இடம் தேவிகா என்றும் படித்திருக்கிறேன். இதைப் பற்றிய முழு விவரங்கள் என்னிடம் இல்லை. வாணிஸ்ரீ கூட நிறைய படங்கள் மாற்று முகாமில் நடித்திருந்தாலும், தேவிகாவைப் பொறுத்தவரை, தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களில் தான் நிறைய நடித்து வந்திருக்கிறார். நடிகர் திலகத்துடன் தேவிகா நடிக்கும் போது தான், ஜோடிப் பொருத்தம் (மற்றும் கெமிஸ்ட்ரி, பயாலஜி, என்று ஏதோ சொல்கிறார்களே) அது மிகச் சரியாக இருக்கும். பத்மினி இதற்கு அடுத்தபடியாக இருந்தாலும், தேவிகா அவர்களே அவருக்கு இன்னும் அழகான ஜோடியாகப் பொருந்தினார் என்று சொல்லலாம். (இதற்கு, நிறைய மாற்றுக் கருத்துகள் கண்டிப்பாக இருக்கும்.)
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை, அவர் இயக்குனர்களின் கலைஞன் என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல, எந்த முகாமிலிருந்து வந்தாலும், நடித்து விடுவார். எந்த நடிகைகளுடன் நடித்தாலும், அந்தப் பொருத்தம் கனகச்சிதமாக அமைந்து விடும். அந்தளவுக்கு, அவரும் நடித்து, கூட நடிக்கும் நடிக/நடிகைகளுக்கும், சில ஆலோசனைகளை அளித்து, படம் நெடுகிலும் எல்லோருடைய பங்கும் சரியாக அமைந்து, ஒரு முழுமையைக் கொண்டு வர பாடுபடுவார். (இது உயர்ந்த மனிதன் அசோகன் முதல், பாகப்பிரிவினை சரோஜா தேவி என்று பலருக்கும் பொருந்தும்). ஜி. சகுந்தலா (ஏ. சகுந்தலா இல்லை) என்று ஒரு நடிகை (அவருடைய அண்ணன் மகன்கள் நான் முன்பு பணிபுரிந்த அலுவலகத்தில் வேறு பணி புரிந்து கொண்டிருந்தனர்). மந்திரி குமாரி காலத்தில் இருந்தே மாற்று முகாமில் நிரந்தரமாக நடித்துக் கொண்டிருந்தவர். இவருக்கும் நடிகர் திலகத்தின் படங்களில் (உயர்ந்த மனிதன், கந்தன் கருணை உட்பட) தொடர்ந்து நல்ல வேடங்கள் அளிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், வியட்நாம் வீடு நாடகமாக நடிக்கப் பட்டபோது, சினிமாவில் பத்மினி ஏற்ற "சாவித்திரி" கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்தார்.).
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 3rd March 2011 at 11:10 AM.
-
3rd March 2011, 11:19 AM
#1266
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Plum
My wife (raised in telugu land, completely oblivious of NT's talents; kind of thinking that he is the tamil equivalent of ANR) catching pAttum nAnE today on TV: "Boy, he can act!"
Me: Oh yeah, not bad, no?
Would love to have seen your expression when you said that. I used to get that from early days of courting my wife. Now she quit saying that, reserving that statement to the younger bunch.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
3rd March 2011, 11:34 AM
#1267
Senior Member
Seasoned Hubber
டியர் பாலகிருஷ்ணன்,
தங்களுடைய கருத்துக்கு என் உளப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக தங்களைப் போன்ற வெளியூர் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சேர கிடைக்கும் நாளில் நாம் அனைவரும் சந்தித்துக் கொள்ளலாம். ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் இங்கு தேர்தல் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கும். அது மட்டுமன்றி வாக்களிக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டில் அவரவர் ஊர்களில் இருக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் நம் சந்திப்பினை உள மகிழ்வோடு ஏற்று கலந்துகொள்ள விழைவோரும் இருப்பர்.
எனவே சென்னை தவிர்த்த மற்ற ஊர் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர கூறும் தேதியில் நாம் சந்திக்கலாம். பாலகிருஷ்ணன் சார் கூறிய ஏப்ரல் 8, 9 தேதி சௌகரியப் பட்டால் மற்ற நண்பர்களும் ஒத்துக்கொள்ளலாம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd March 2011, 03:01 PM
#1268
Senior Member
Seasoned Hubber
Dear Ragavendran,
Postings about Thiruvarutchelvar & Santhi are very good. Thanks
-
3rd March 2011, 03:03 PM
#1269
Senior Member
Seasoned Hubber
-
3rd March 2011, 03:24 PM
#1270
Senior Member
Devoted Hubber
Typing mistake. Instead of 8th and 9th April'11 it is 9th and 10th and may leave Chennai 0n 10th afternoon.
Bookmarks