-
15th March 2011, 04:32 PM
#1311
Senior Member
Senior Hubber

Originally Posted by
Plum
கலிசி உன்டே கதலு சுகம்
Partha, good to read your posts covering other languages and the comparisons.
The above movie should read kalisi uNtE kaladha sukamu. It means koodi vAzhndhAl kOdi nanmai.
In passing, may I mention that deiva magan was remade in Telugu - and to keep with the gentlemanly traditions of this thread, I will merely state that the "Actor" attempting it in Telugu was Krishna. No further comments.
Dear Plum,
Thanks for your immediate response and for correction. It's as usual, typing mistake. It's not only Deiva Magan, even Thirisoolam (both triple roles) was remade in Telugu by Mr. Krishna only. In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead. He also acted with him in some original Telugu movies, including Nivuru Kappina Nippu. I got these details as some of my cousins are born and brought up in Andhra only and I also used to visit Nellore/Hyderabad during my school days for summer holidays.
As I have reserved Deiva Magan for my ultimate presentation, for strategic reasons, have not included the same in this article.
Thanks once again,
Parthasarathy
-
15th March 2011 04:32 PM
# ADS
Circuit advertisement
-
15th March 2011, 05:18 PM
#1312
Senior Member
Platinum Hubber
" In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead"
Yes, yes, that is why I refrained from making comments on Krishna's remakes. The mention of Deiva Magan was also not to pre-empt you but just to add a snippet I happen to know.
-
15th March 2011, 06:10 PM
#1313
Senior Member
Senior Hubber
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
3. பாசமலர் (1961) - ரக்த சம்பந்தம் (1963) தெலுங்கு / ராக்கி (1965 ) ஹிந்தி
மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கூட்டணி (மறுபடியும் மெல்லிசை மன்னர்கள் இந்தக் கூட்டணியில் இணைந்தனர் - இதற்கு முன் வந்த பாவ மன்னிப்பு படத்திலேயே இவர்கள் இணைந்து விட்டனர். பாவமன்னிப்பு படத்தைப் பற்றியும் அந்தப் படத்தின் இசை பற்றியும் தனியாக எழுதும் எண்ணம் உள்ளது. உண்மையில், பாவ மன்னிப்பு படப்பாடல்கள் தான் இன்று உள்ள அனைத்து பாடல்களுக்கும் அதாவது தமிழ் சினிமா சங்கீதத்திற்கு முன்னோடி. சங்கீதத்தைப் பற்றிய அதற்குள்ள ஹப்பில் தனியாக எழுத வேண்டும்.)
பாசமலர் காலத்தை வென்ற காவியம். இன்றளவும், அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டப் படும் உயிரோவியம். 1961 -ஆம் ஆண்டில், நடிகர் திலகத்தின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம். கே.பி. கொட்டாரக்கரா என்ற கேரளக் கதாசிரியர் மற்றும் பட அதிபரின் கற்பனையில் உருவான கதையை தமிழில், ராஜாமணி பிக்சர்ஸ் பேனரில் எடுத்தனர். ஒரு வகையில், நடிகர் திலகத்தின் சொந்தப் படம் என்றும் கூறலாம்.
இந்த நிமிடம் வரையில், இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும், பார்த்தவுடன், அவரவர்களது அண்ணன் தங்கையை நினைவுகூர வைக்கும் படம்.
இந்தப் படத்தின் டைட்டில் ஓடத் துவங்கியவுடன் ஒரு பாடல் பின்னணியில் துவங்கும் - "அன்பு மலர், ஆசை மலர்..." என்று. இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னரின் ஆரம்ப கால நண்பர் மற்றும் உதவியாளருமான திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்களது வித்தியாசமான குரலில். (ஏற்கனவே, பாவ மன்னிப்பு படத்தில் " நடிகர் திலகம் சிறையிலிருக்கும் போது பின்னணியில் வரும் "இன்பமும் காதலும் இயற்கையின் நீதி..." என்று பாடியிருந்தார்.) இந்தப் பாடல் டைட்டிலில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஒரு சற்றே வயதுக்கு வந்த ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் வருவார்கள் (அந்த சிறுமி நடிகை குட்டி பத்மினி, சிறுவன் தெரியவில்லை.) அந்த சிறுவன் அந்தச் சிறுமியைப் பாடசாலையிலிருந்து ஆதரவுடன் (ஒரு பசுவையும் கன்றையும் வேறு காட்டுவார்கள் உதாரணத்திற்காக)
வீட்டிற்குக் கூட்டிச் செல்லுவதும், அவளுக்குத் தலை சீவி விடுவதும், தூங்க வைப்பதும்... அடடா! முதல் காட்சியிலேயே, நம் அனைவரையும், அந்தப் படத்தின் களத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்கள். அதாவது, இயக்குனர், நடிகர்கள், பாடுபவர், பாட்டு எழுதியவர், மெட்டுப் போட்டவர் என்று அனைவரும் - இதுவன்றோ கூட்டு முயற்சி! அப்போது துவங்கி, கடைசிக் காட்சி வரை, எத்தனை எத்தனையோ காட்சிகளையும், நடிப்பையும், எத்தனையோ பேர் வடித்து விட்டாலும், இன்னுமொரு காட்சி.
நடிகர் திலகம் முதலில் சாவித்திரியை ஜெமினிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தபின், ஜெமினி அவர் வீட்டுக் கொல்லைப் புறத்தில் வந்து சாவித்திரியை சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது, சாவித்திரி, எதிர்காலத்தில், கணவராக வரப்போகும் ஜெமினியிடம், அவரது காதலரை விட, தனக்கு, அண்ணனாக, தாயாக, தந்தையாக, எல்லாமுமாக இருக்கும் தன் அண்ணன் (நடிகர் திலகம்) தான் எனக்கு எல்லா விதத்திலும் உயர்ந்தவர். உங்களுக்காக, நான் அவரைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, ஜெமினி தன் வீட்டிற்கு வந்து கொல்லைப் புறத்தில் தங்கை சாவித்திரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று, அவரது வேலைக்காரர் (திரு எஸ். ஏ. கண்ணன் அவர்கள்) மூலம் தெரிந்து, கொலை வெறியுடன் துப்பாக்கியுடன் வந்து, சாவித்திரி பேசும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, கண்களில் உருண்டோடும் கண்ணீரை அந்தத் துப்பாக்கியாலேயே துடைத்துக் கொண்டு சென்று விடுவார். இது பற்றி எல்லோரும் பேசியாகி விட்டது.
இதற்கடுத்து, நடிகர் திலகம் சாவித்திரியிடம், உனக்கு கல்யாணம் செய்யலாமென்று இருக்கிறேன். மாப்பிள்ளையை அழைத்து வந்திருக்கிறேன் வந்து பார்த்து பிடித்திருக்கிறதா என்று சொல்லம்மா என்று சொல்வார். இதற்கு சாவித்திரி, நீங்கள் பார்த்து என்ன சொன்னாலும் சரி அண்ணா என்று சொல்வார். உடனே, நடிகர் திலகம் ஜெமினியை - ஆம், படம் பார்க்கும் நாமோ, சாவித்திரியோ எதிர்பார்க்காத - ஜெமினியை அழைத்து, சாவித்திரியிடம் கூட்டிச் சென்று, சாவித்திரியிடம், மாப்பிள்ளையைப் பாரம்மா என்பார். அது வரை சோகமாக (ஆம் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் சம்மதித்திருப்பார். அவரைப் பொறுத்தவரை, அண்ணன் தான் முக்கியம் என்று நினைத்ததால். இருந்தாலும், காதலால் சிக்குண்டு தவித்துக் கொண்டிருப்பார்.) அதுவரை சோகமாகத் தலை குனிந்து கொண்டிருந்தவர் இலேசாகத் தலையைத் தூக்கிப் பார்க்க, நேரில், தன் ஆருயிர்க் காதலர்..... ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீரிலும் நெகிழ்ந்து திக்குமுக்காடிப் போய், "அண்ணா" என்று நடிகர் திலகம் காலில் விழ, அவரைத் தூக்கி, ஆதரவோடும், கனிவோடும் நடிகர் திலகம் கூறும் அந்த வார்த்தைகள்....
"ஒரு பெண் தன் வாழ்க்கையில் யாரை வேணுன்னாலும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், தன் வாழ்க்கையின் ஆதாரமான, தன் காதலரையே, தன் அண்ணனுக்காக விட்டுக் கொடுக்கும்போது, அந்தத் தங்கைக்காக, ஒரு அண்ணன் எது வேணுன்னாலும் செய்யாலாம்மா" என்று சொல்லி, சாவித்திரியையும், ஜெமினியையும் அழைத்து ஆசீர்வாதம் செய்வார். இந்த வாக்கியத்தில், அவர் "எது வேணுன்னாலும்" என்று சொல்லும்போது மட்டும், எல்லோரும் கூர்ந்து கவனியுங்கள். அந்த மொத்த வாக்கியத்தில், இந்த வரிகள் தான் மிக மிக முக்கியமானவை. அதனை உன்னிப்பாக உள்வாங்கி, மிகச் சரியாக, இந்த வார்த்தைகளுக்கு மட்டும் ஒரு விதமான அழுத்தத்தைத் தனக்கேயுரிய பாணியில் பேசி, நடித்து, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்ததனால்தான், அவர் நடிகர் திலகமாகிறார்.
இதற்கு முந்தைய காட்சியில், தன் கண்ணிலிருந்து பெருகும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும்போது, தான் அழுது மக்களை அழ வைத்தவர், இந்தக் காட்சியில், தான் அழாமல், தமிழகத்தையே அழ வைத்தார். இதோ இந்தக் காட்சியையும், என் கண்களில் இருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இது போல் எத்தனை எத்தனையோ உணர்ச்சிமயமான கட்டங்களும், நடிப்பும், பார்க்கும் அனைவரையும் நெக்குருக வைத்தது - இன்றும் வைக்கிறது - என்றும் வைக்கும்.
இந்தப் படம் முதலில் தெலுங்கில் 1963 -இல் ரக்த சம்பந்தம் என்ற பெயரில் எடுக்கப் பட்டது. என்.டி. ராமாராவ் நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், சாவித்திரி மறுபடியும் அதே தங்கை வேடத்திலும், ஜெமினி வேடத்தில், ஜக்கையாவும் நடித்தனர். என்.டி. ராமாராவ் மறுபடியும், ஒரு கனமான வேடத்தை ஏற்று நடித்து, தான் ஒரு versatile நடிகர் என்று பெயர் வாங்கினார். சாவித்திரி பற்றிக் கூறவே வேண்டாம். ஜக்கையாவும் நன்றாகத் தான் நடித்திருந்தார் - படமும் நன்றாகத் தான் போனது. ஆனாலும், தமிழ் பாசமலர் அடைந்த அந்த காவிய அந்தஸ்தை அடைய முடியவில்லை. காரணம், நடிகர் திலகத்தின் நடிப்பை, என்.டி.ராமாராவாலும், இதனாலேயே, சாவித்திரியாலும் திரும்பவும் அந்த நடிப்பைக் கொடுக்க முடியாமல் போனதாலும் தான்.
பாசமலர் ஹிந்தியில், 1965 -இல் ராக்கி என்ற பெயரில், சிவாஜி பிலிம்சால் பீம்சிங் இயக்கத்தில் எடுக்கப்பட்டபோது, வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான அசோக் குமார் நடிகர் திலகத்தின் வேடத்திலும், வஹீதா ரஹ்மான் சாவித்திரி வேடத்திலும், பிரதீப் குமார் ஜெமினி வேடத்திலும் நடித்திருந்தனர். எத்தனையோ பேருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் படத்தின் உயிர் நாடியான கடைசிக் காட்சியில் (கை வீசம்மா... கை வீசு...), அசோக் குமாரால் சரியாக நடிக்க முடியாமல் போக, அவரும் தயங்காமல், நடிகர் திலகத்தை அணுகி, அவருடைய ஆலோசனையின் பேரில், அசோக் குமார் என்ற ஜாம்பவான் நடிகர் திலகம் சொல்லிக்கொடுத்தபடி நடித்தார் என்ற செய்தி, இன்று வரலாறு. இந்தப் படமும் ஹிந்தியில் ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் நடிப்புச் சாதனையில், ஐம்பது சதம் தான் அசோக் குமார் செய்தார் எனலாம். (ஆனால், இவரது க்ரிஹஸ்தி என்ற ஹிந்திப் படம் தமிழில், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆன போது, நடிகர் திலகம் அசோக் குமாரை விட பல மடங்கு உயர்வாக நடித்திருந்தாரே! இந்தப் படத்தை என் முந்தைய ரீமேக் கட்டுரையில் தவிர்த்து விட்டேன், அது வேறொரு ஆய்வில் பங்கு கொள்ளவிருப்பதால்.)
பாசமலர் மேற்கூறிய இந்த இரண்டு மொழிகளிலும் நன்றாகவே ஓடினாலும், தமிழின் காவிய அந்தஸ்தை பெற முடியாமல் போனதற்குக் காரணம் - நடிகர் திலகத்தின் நடிப்பு மற்றும் நடிகர் திலகத்திற்கும் சாவித்திரிக்கும் அமைந்த அந்த அண்ணன் தங்கை பொருத்தம். அந்த அளவுக்கு அண்ணன் தங்கையாகவே அவர்கள் மாறி வாழ்ந்ததால், தமிழகமே இவர்களிருவரையும் நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டது. இதனால் தான், இந்தப் படம் வெளியான சில மாதங்களிலேயே வெளிவந்த "எல்லாம் உனக்காக" படம், மிக நன்றாக அமைந்தும், தோல்வி அடைந்தது. அந்தப் படத்தில், நடிகர் திலகமும் சாவித்திரியும் ஜோடியாக நடித்ததை மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
-
15th March 2011, 08:38 PM
#1314
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
சென்னை சாந்தி திரையரங்க மலரும் நினைவுகளாக தாங்கள் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் தங்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் உள்ளத்தில் உற்சாக வெள்ளமும் மகிழ்வும் நினைக்கும் போதெல்லாம் உண்டாகும் என்பது திண்ணம். மேலும் தங்களுடைய நினைவுகளை அறிய ஆவல்.
நிழற்படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
டியர் ராகேஷ்,
vee yaar என்ற பெயரில் FACEBOOK ல் படங்களைத் தரவேற்றியது அடியேன். மற்றபடி இதர படங்களும் அத்திரியும் எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் சிவாஜி அவர்களுடையதாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.
டியர் பார்த்த சாரதி,
நடிகர் திலகத்தின் படங்கள் வேற்று மொழிகளில் வெளிவந்த தகவல்களும் அவற்றின் ஆய்வும் பல புதிய தகவல்களையும் புதிய கோணங்களையும் தருகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் வசந்த் தொலைக்காட்சியில் ஒய்.ஜி. மகேந்திராவின் பார்வையிலே, நிகழ்ச்சியில் தற்போது வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் தன் கருத்துக்களை பகிரந்து கொண்டு வருகிறார். பல புதிய தகவல்கள். நடிகர் திலகம் மிகச் சிறந்த நீச்சல் வீரர், குதிரையேற்றத்தில் வல்லவர், வாட்சண்டையில் வல்லவர் என கூறினார். இன்னும் பல தகவல்கள். முடிந்த வரை அனைத்து ரசிகர்களும் இந்நிகழ்ச்சியினைத் தவறாமல் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை திரு மகேந்திர அவர்களுடன் பகிரந்து கொள்ளலாம். அவருடைய மின்னஞ்சல் - ygeems@gmail.com
சகோதரி சாரதா, பார்த்த சாரதி போன்று பலர் யூட்யூப் ஒளிக் காட்சியினைக் காண இயலவில்லை எனக் கூறியிருந்தீர்கள். தாங்கள் MOZILLA FIREFOX அல்லது GOOGLE CHROME உலாவியைப் பயன்படுத்திப் பாருங்கள். எந்த சிக்கலும் இருக்காது.
Firefox உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.mozilla.com/en-US/product...win&lang=en-US
Google Chrome உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.google.com/chrome/thankyou.html
இவற்றில் அனைத்து ஒளிக்காட்சிகளும் காணும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளன.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th March 2011, 11:51 PM
#1315
அன்பு சாரதி,
நமது திரியில் பங்கு பெறும் பலரின் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் அளவிற்கு என்னால் எழுத முடியாது என்று நீங்கள் சொன்னது பொய்தானே? இப்போது நீங்கள் எழுதும் இந்த பதிவு, இது வரை யாரும் முயற்சிக்காத ஒன்று. சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு சிலப் படங்களைப் பற்றி குறிப்பிட்டு அது பற்றிய வேறு சில பதிவுகளும் வர இருக்கின்றன என்ற தகவல் மற்றோர் சுவையான விருந்தும் காத்திருக்கின்றது என்று சொல்லாமல் சொல்கிறது. தொடருங்கள்.
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
என்று பாடியபடியே மக்களுக்கு தன் முகத்தை காண்பித்த ரஹீமை மறக்க முடியுமா? எப்படி ரங்கனை மறக்க முடியாதோ அது போல் இன்று [16-03-2011] அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் ரஹீமையும் மறக்கவே முடியாது. அமைதியின் மறு உருவமாக, கருணையின் இருப்பிடமாக, கண்ணியமான காதலின் உறைவிடமாக திரையில் வாழ்ந்து காட்டிய ரஹீம்! அதனால்தானே மக்கள் இதயங்களில் நீங்கா புகலிடம் கொடுத்தனர். நம்மைப் போன்றவர்களும் அதன் காரணமாகத்தானே
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை
யார் மாறினாலும், எவை மாறினாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற நிலையிலிருந்து மாறாமல் நிற்கிறோம்!
அவரே பாடியது போல அவரையும் அவர் கதாபாத்திரங்களையும் திரையில் காணும் போது சிரித்துக் கொண்டே அழுகிறோம்! அழுது கொண்டே சிரிக்கிறோம்!
பாவமன்னிப்பு ரஹீம் பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டும் கடந்தது வாழ்வார். அன்றும் இது போல அவர் புகழ் யாராவது பாடிக் கொண்டேயிருப்பார்கள்!
அன்புடன்
-
16th March 2011, 12:39 AM
#1316
Senior Member
Seasoned Hubber


முரளி சார் சொன்னது போல எல்லோரும் கொண்டாடுவோம், இந்நாளை. 50 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனபின்பும் எல்லோரும் கொண்டாடுவோம், இந்தப் படத்தையும், நடிகர் திலகத்தையும்.
நம்முடைய இணையதளத்தில் பாவ மன்னிப்பு 50 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு முகப்பு..
இதோ
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th March 2011, 12:40 AM
#1317
Senior Member
Seasoned Hubber
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சி
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th March 2011, 02:17 AM
#1318
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுதல்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! "விஸ்வரூபம்" 100வது நாள் விழா பற்றிய பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது பாராட்டுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
-
16th March 2011, 02:26 AM
#1319
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி! நமது நடிகர் திலகம் நம் அனைவரது உள்ளங்களிலுமே நீக்கமற நிறைந்திருக்கிறார். தாங்கள் கூறியது போல் அவரது வான்புகழை தொடர்ந்து நாம் அனைவரும் பாடிக் கொண்டே இருப்போம்.
தங்களின் 'நடிகர் திலகமும் அவரது படங்கள் பிறமொழிகளிலும்' தொடர் கட்டுரை அருமை, அற்புதம், அபாரம்.
1959 தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்த "பாகப்பிரிவினை", அதிகபட்சமாக மதுரை சிந்தாமணி திரையரங்கில் 31 வாரங்கள் [216 நாள்] ஓடி இமாலய வெற்றி கண்டது. "பாகப்பிரிவினை" ஏற்படுத்திய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தை அடியேன் ஏற்கனவே இத்திரியின் ஐந்தாவது பாகத்தில் பதிவு செய்துள்ளேன். அதற்கான சுட்டி இதோ:
http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page116
1959-ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில், மூன்று திரைப்படங்கள் இமாலய வெற்றியை அடைந்தன. நமது நடிகர் திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை" மற்றும் காதல் மன்னனின் "கல்யாண பரிசு" ஆகியவையே இந்த மூன்று படங்கள். இம்மூன்றுமே வெள்ளிவிழாக் காவியங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பாகப்பிரிவினை"யை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கிய போது, அதில் கதாநாயகனாக நடிக்க, தாங்கள் குறிப்பிட்டது போல், திலீப்குமாரைத் தான் முதலில் அணுகினார்கள். ஒரிஜினலைப் பார்க்க விரும்பிய அவருக்கு திரையிட்டும் காட்டினார்கள். படம் முழுவதையும் பார்த்த திலீப்குமார், "என்னால் சிவாஜி மாதிரி நடிக்கவே முடியாது. நான் அழகான கதாநாயகனாக, மென்மையான ரொமான்டிக் ஹீரோவாகவே அதிகம் நடிக்க விரும்புகிறேன். அவர் மாதிரி யாராலுமே செய்ய முடியாது. அழகான ஹீரோவாகவும் நடிக்கிறார், அவலட்சணமான ஹீரோவாகவும் பிய்த்து உதறுகிறார். இப்படத்தின் பெரும்பகுதி அவர் அங்கஹீனம் உள்ளவராகவே நடிக்கிறார். ஒரு கையும், ஒரு காலும் செயலிழந்த வேடம் அவருக்கு. விந்தி விந்தி அவர் நடக்கும் போது கவனித்தேன். ஒரு இடத்தில் கூட error வரவில்லை. அதே போல், செயலிழந்த இடது கையை ஒரு மாதிரி உடம்போடு இறுக்கி வைத்துக் கொண்டு வருகிறார். அப்படி அவர் செய்வதில் கூட ஒரு காட்சியிலும் தவறு கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மாதிரி நடிக்க அவரால் மட்டுமே முடியும். நான் இது மாதிரி வேடங்களெல்லாம் செய்வது எனக்கு விஷப்பரீட்சை, எனவே வேண்டாம்" என்று நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமாரப் பாராட்டி "பாகப்பிரிவினை"யின் ஹிந்திப் பதிப்பில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் சுனில்தத் நடித்தார்.
தமிழ் சினிமா வரலாற்றில், "படிக்காத மேதை", 1960-ம் ஆண்டின் No.1 வசூல் சாதனைக் காவியம். அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 153 நாட்கள் ஓடி மெகாஹிட்.
"பாசமலர்" காவியத்தின் ஹிந்திப் பதிப்பான "ராக்கி" 1962-ம் ஆண்டு வெளிவந்தது. "ராக்கி"யை நடிகர் திலகம் தனது சொந்த தயாரிப்பாக 'பிரபுராம் பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்தார்.
தங்களது தொடர் கட்டுரையின் அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் மேலிடுகிறது.
அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.
-
16th March 2011, 03:23 AM
#1320
Senior Member
Veteran Hubber
பாவமன்னிப்பு 51
1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.
2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.
3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.
4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.
5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.
8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.
9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.
10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.
11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.
Bookmarks