-
17th March 2011, 05:27 AM
#1341
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.
1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை
1961 : பாவமன்னிப்பு, பாசமலர்
1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்
1983 : நீதிபதி, சந்திப்பு
1985 : முதல் மரியாதை, படிக்காதவன்
1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.
"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.
['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 17th March 2011 at 05:32 AM.
pammalar
-
17th March 2011 05:27 AM
# ADS
Circuit advertisement
-
17th March 2011, 05:53 AM
#1342
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது காட்டமான பதிலடி, ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் உள்ளக்கிடக்கையையும் பிரதிபலிக்கின்றது. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!
தாங்கள் எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சிக்கும், இறையருளும், இதயதெய்வத்தின் அருளும் என்றென்றும் துணை நிற்கும்!
தங்களது பதிலறிக்கையையும், அதற்கு அவரது(ராகவேந்திரன்) மேன்மையான கருத்தினையும் இங்கே பதிவிட்ட ராகவேந்திரன் சாருக்கு நமது நன்றிகள்!
எனக்கு சிதம்பரம் அவர்களை நோக்கி ஒன்றே ஒன்று கேட்கத் தோன்றுகிறது,
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய குடும்ப நண்பராக, திகழ்ந்த-திகழும் திருவாளர் சிதம்பரம் அவர்களே, "இது நல்ல பேச்சா???????????"
சத்யராஜ் அவர்களே, "யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்................"
கொதிப்புடன்,
பம்மலார்.
-
17th March 2011, 11:38 AM
#1343
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி,
'பாலும் பழமும்' மற்றும் 'படித்தால் பட்டும் போதுமா' படங்களைப்பற்றியும் அவற்றில் நடிகர்திலகத்தின் அற்புத பெர்பார்மென்ஸைப்பற்றியும் தங்களின் ஆய்வுக்கட்டுரைகள் மிகப்பிரமாதம். குறிப்பாக 'பா' வரிசைப்படங்கள் பற்றி பேசும்போது, பெரும்பாலோர் அதிகம் தொடாத படம் 'படித்தால் மட்டும் போதுமா'. நீங்கள் குறிப்பிட்ட சாட்டையடி விஷயம் பற்றி சமீபத்தில் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூட சொல்லியிருந்தார் ராஜ சுலோச்சனா. )'ஒரு அடி கூட என் மீது விழவில்லை. ஆனால் பார்ப்பவர்களுக்கு அவர் சாட்டையால் என்னை புரட்டியெடுப்பது போலத்தோன்றும்').
பாலும் பழமும் படத்தில் இடம்பெறாத 'தென்றல் வரும் சேதி வரும்' பாடலைப்பற்றிக்கூட சொன்னீர்கள். ஆனால் அப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலான 'இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா' பாடல் பற்றிச்சொல்லவில்லை. அந்தப்படத்தின் எல்லாப்பாடல்களைப்போல இதுவும் எனக்குப்பிடித்த பாடல். முதற்பாதி அவுட்டோரிலும், மீதிப்பாதி (கோயில் காட்சி) ஸ்டுடியோவிலும் எடுக்கப்பட்டிருக்கும்.
'காதல் சிறகை காற்றினில் விரித்து பாடலின்போது, அதில் இடம்பெற்ற மூவரின் மீதும் நமக்கு பரிதாபமே ஏற்படும். அவசரப்பட்டு கணவரைப்பிரிந்து வந்துவிட்டோமே என்ற ஏக்கத்தில் அங்கே அவர் பாடிக்கொண்டிருக்க, இரண்டாவது மனைவி கட்டிலிலும், முதல் மனைவி நெஞ்சினிலும் இருக்க, இனம் புரியாத தவிப்புடன் இவர் உலவிக்கொண்டிருக்க, நெஞ்சில் கனவுகளையும் கண்களில் கண்ணீரையும் சுமந்துகொண்டு இரண்டாவது மனைவி சௌகார் கட்டிலில் காத்திருக்க.......
'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாயிருந்தால்
பேச மறந்து சிலையாயிருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி'
(இவ்வரிகளைக் கேட்கும்போதெல்லாம், படுபாவி கண்ணதாசனை உதைத்தால் என்ன என்றுகூடத் தோன்றும்). எத்தனை குத்துப்பாடல் கலாச்சாரங்கள் வந்தாலும் துடைத்தெறிய முடியாத, நம் பண்பாட்டின் ஆணிவேர். பாடல் முடியும்போது, சுழல்நாற்காலியில் அமர்ந்தவாறே கண்ணை மூடியிருக்கும் நடிகர்திலகம், காத்திருந்து பார்த்துவிட்டு கண்ணுறங்கிவிடும் சௌகார், கேமரா நகர்ந்துபோய், ஒன்றையொன்று பார்க்காமல் திரும்பிக்கொண்டிருக்கும் பொம்மையில் போய் நிற்கும் 'டைரக்டோரியல் டச்'.
-
17th March 2011, 01:34 PM
#1344
Senior Member
Devoted Hubber
சொன்னவர் ராதாரவி
ஒருமுறை நான் நடிகர் திலகம் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தை ரீமேக் செய்யலாமா என எண்ணினேன். சிவாஜி ரோலுக்கு பிரபுவையும், எனது தந்தை எம்.ஆர்.ராதா ரோலில் நானும் நடிக்க முடிவாயிற்று.
எல்லாம் முடிவான பின்னர் எங்கள் முன்பு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரிஜினல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் ராஜசுலோச்சனா நடித்த கேர்கடரில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் அளவுக்கு அட்டகாசமாக நடிக்கும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. உடனேயே ரீமேக் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தையோ அல்லது சிவாஜி நடித்த தெய்வமகனையோ யாராவது ரீமேக் செய்ய முடியுமா, அப்படியே எடுத்தாலும் அவர்களது கேரக்டர்களில் நடிக்க யார் இருக்கிறார்கள்
-
17th March 2011, 04:17 PM
#1345
Senior Member
Seasoned Hubber
Thanks
Thank you very much Mr.Ragavedran to publish my Statement.
Thanks Mr.Pammalar, Mrs.Saradha, Mr.Joe, Mr.Jaiganes & other friends to appreciate my action.
Please click the link to view the news published in Maalai Malar on 17-03-2011
http://www.sivajiperavai.com/View_Press.php?id=144
Thanks again
Last edited by KCSHEKAR; 17th March 2011 at 04:26 PM.
-
18th March 2011, 01:06 AM
#1346
Senior Member
Veteran Hubber

Originally Posted by
abkhlabhi
சொன்னவர் ராதாரவி
ஒருமுறை நான் நடிகர் திலகம் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தை ரீமேக் செய்யலாமா என எண்ணினேன். சிவாஜி ரோலுக்கு பிரபுவையும், எனது தந்தை எம்.ஆர்.ராதா ரோலில் நானும் நடிக்க முடிவாயிற்று.
எல்லாம் முடிவான பின்னர் எங்கள் முன்பு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரிஜினல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் ராஜசுலோச்சனா நடித்த கேர்கடரில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் அளவுக்கு அட்டகாசமாக நடிக்கும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. உடனேயே ரீமேக் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தையோ அல்லது சிவாஜி நடித்த தெய்வமகனையோ யாராவது ரீமேக் செய்ய முடியுமா, அப்படியே எடுத்தாலும் அவர்களது கேரக்டர்களில் நடிக்க யார் இருக்கிறார்கள்
டியர் பாலா சார்,
'"படித்தால் மட்டும் போதுமா"வை ரீமேக் செய்ய முயற்சித்து, அதில் ராஜசுலோசனா செய்த ரோலை செய்ய ஆள் இல்லாததால் அம்முயற்சியை கைவிட்டோம்' என ராதாரவி கூறியிருந்ததை பதிவு செய்துள்ளீர்கள். நன்றி!
ராஜசுலோசனா ரோல் மட்டுமா, நடிகர் திலகத்தின் கதாபாத்திரமும், நடிகவேள் செய்த பாத்திரமும் கூட மிகக் கடினமான கதாபாத்திரங்கள் ஆயிற்றே! அந்த இரு பாத்திரங்களும் கூட இளையதிலகத்திற்கும், இளையவேளுக்கும் டூ மச், த்ரீ மச் மட்டுமல்ல அதைவிட அதிகம். இக்கருத்தின் மூலம் இந்த இரு திறமைசாலிகளையும் நான் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டாம். With respect to their potential, they are extremely talented artistes in their own right. But according to me, NT & MRR and the roles they have lived (rather than acted) stay incomparable.
"படித்தால் மட்டும் போதுமா"வில் திருமணத் தரகராக வரும் ராதா, அந்த ரோலில் கணிசமான அளவுக்கு காமெடியையும் கலந்து வெளுத்து வாங்கியிருப்பார். தரகர் வேலையாக பெண்-பிள்ளை வீட்டார் இல்லங்களுக்கு செல்லும் போதெல்லாம், 'ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணணும்' என ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு முணுமுணுப்புடன் பாடிக் கொண்டே நுழைவார். அதே போன்று அவர், ரங்காராவை 'ராவ் பகதூர்' என்று விளிக்கின்ற இடத்திலெல்லாம் அந்த நாமகரணத்தை 'RAAAV BAHADHUUUUUUUUR' என இரு இழு இழுத்துக் கூறுவார். இன்னும் இது போன்று அந்த ரோலைத் தூக்கி நிறுத்த அவர் செய்தவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவையனைத்தும் நடிகவேளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால் தானே ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான நமது நடிகர் திலகம் நடிகவேளை தன் மனம் கவர்ந்த நடிகர் எனக் கூறியுள்ளார். 'ராதா அண்ணனையும், பாலையா அண்ணனையும் Replace செய்யவே முடியாது' எனத் தன் சுயசரிதை நூலிலும் கருத்து
தெரிவித்துள்ளார். பாலாஜி, சாவித்திரி முதற்கொண்ட அதில் நடித்த வேறு யாருடைய ரோல்களையுமே இன்றிருக்கும் யாருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே. "படித்தால் மட்டும் போதுமா"வை ரீமேக் செய்யமுடியாமல் போனதே நல்லது.
மக்கள் திலகம் இரு வேடங்களில் கலக்கிய மெகாஹிட் காவியமான "எங்க வீட்டுப் பிள்ளை(1965)"யைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டது உங்களது பரந்த மனோபாவத்தைக் காட்டுகிறது. நல்ல விஷயங்களை எங்கு பார்த்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், திறந்த விசாலமான மனம் (Open & Broad Mind), உண்மையான சிவாஜி ரசிகர்களுக்கு எப்பொழுதுமே உண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளீர்கள். "எங்க வீட்டுப் பிள்ளை", "ராம் ஔர் ஷியாம் (Ram avur Shyam)" என்கின்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு 1967-ல் வெளிவந்தது. மக்கள் திலகம் ஏற்று நடித்த இரு வேடங்களையும் ஹிந்தியில் தீலிப்குமார் ஏற்று நடித்தார். [தீலிப்குமார் முதன்முதலில் இரு வேடங்களில் நடித்ததே இந்தப்படத்தில்தான்]. எம்.ஜி.ஆர் அவர்களின் அப்பாவித்தனமான-துடிப்பான நடிப்பு, அவரது வேகம், வீச்சு, லாவகம் இவற்றிலெல்லாம் கால்வாசியளவுக்குக் கூட தீலிப்குமாரால் செய்து காட்ட முடியவில்லை. மக்கள் திலகம் என்றதுமே என் நினைவுக்கு வரும் முதல் விஷுவல் "அன்பே வா"வில் இடம்பெறும் 'புதிய வானம் புதிய பூமி' பாடல். சிம்லாவின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாங்கில், Rich Costumeல், இடது கையில் அசத்தலாக ஒரு பெட்டியுடன், 'புதிய வானம்...புதிய வானம்...', 'புதிய பூமி...புதிய பூமி...' எனத் துடிப்புடன் பாடலின் இந்த தொடக்க வரிகளைப் பாடிக் கொண்டே ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பாரே, அப்பப்பா......Simply Superb!
நடிகர் திலகமும், மக்கள் திலகமும் தமிழ்த்திரையுலகின் இரு கண்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
இதயதெய்வத்தின் "தெய்வமக"னுக்கு போய்விட்டீர்களே [ராதாரவியைத் தான் குறிப்பிடுகிறேன்]. இக்காவியத்தையும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ இதயதெய்வத்தின் காவியங்களையும் அவரே திரும்ப வந்தால் மட்டும் தானே செய்ய முடியும். நமது நடிகர் திலகத்தின் 288வது திரைக்காவியமான "பூப்பறிக்க வருகிறோம்(1999)" காவியத்தில், அவர் செய்த முதியவர் ரோலை, இன்றிருக்கும் யாரையாவது அதே உணர்ச்சிப்பெருக்குடன் செய்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம், அப்படி யாராவது செய்து விட்டால், இந்த ஹப்பில் அவரது புகழும் பாட நான் அவருக்குத் தனித்திரியே தொடங்குகிறேன்.
கலைக்குரிசில் போல் அவ்வாறு யாரும் செய்யவும் முடியாது, நான் அவர்களுக்காக தனித்திரி தொடங்கும் நிலையும் ஏற்படாது.
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 18th March 2011 at 01:13 AM.
pammalar
-
18th March 2011, 06:08 AM
#1347
Senior Member
Seasoned Hubber
Harish,
When we talk about Remade films our mind set will always be ready to compare with the originals.
I feel Rajkumar is a wonderful actor by himself and NT -Rajkumar had a wonderful relationship/friendship and each praised the other's acting. I humbly request you to refrain from posting hurting comments like Rajkumar was not equal to NT etc.. Dimension and Scaling are very different and NT is far from comparison and at the same time Raajkumar is a wonderful actor himself. I'm a Tamilian and i loved Him, NTR, ANR, PRem NAzir ,Madhu. NT is always in our heart and these gentlemen too were great actors . Anna-Thangi may be a flop for various reasons and not for Rajkumar's acting. Bedara Kannappa which was a original kannada movie ran for 100 days in tamilnadu only because of RAJKUMAR & PBS
-
18th March 2011, 09:44 AM
#1348
Senior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
Thank you very much Mr.Ragavedran to publish my Statement.
Thanks Mr.Pammalar, Mrs.Saradha, Mr.Joe, Mr.Jaiganes & other friends to appreciate my action.
Please click the link to view the news published in Maalai Malar on 17-03-2011
http://www.sivajiperavai.com/View_Press.php?id=144
Thanks again
Dear KC Shekar Sir,
When I first read the news, like all true NT Fans, I also felt very bad about it and got angry, specifically with Mr. Sathyaraj. People like Sathyaraj, who used certain celebrities to gain popularity rather than believing in himself does not even deserve to be retaliated. However, on behalf of every true NT fans, you took the initiative to retaliate in a big way and got the same published in a leading newspaper daily. We salute you, Mr. K.C. Shekar Sir.
Thank you very much,
Regards,
R. Parthasarathy
-
18th March 2011, 10:37 AM
#1349
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பார்த்த சாரதி,
இனிமையான சாத்தி பாடலை நினைவூட்டியமைக்கு என் உளமார்ந்த நன்றி. ஹிந்தி திரையுலகில் இன்று வரை முகேஷின் பெயர் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சலிக்காது, அலுக்காது. இந்தப் பாடலை கேட்டிராத, பார்த்திராத ரசிகர்களுக்காக இதோ அந்தப் பாடல். இரண்டாம் முறை இதே பாடல் சோகமாக ஒலிக்கும். நான் பேச நினைப்பதெல்லாம் இரண்டாம் முறை வருவதை நினைவூட்டும்.
இதோ இரண்டு வடிவங்கள்
அன்புடன்
டியர் ராகவேந்திரன் அவர்களே,
நன்றிகள். மேலும், தாங்கள் பதிவிட்ட இரண்டு ஹிந்தி பாடல்களுக்கும் சேர்த்து நன்றிகள் பல.
மறைந்த இந்திப் பாடகர் முகேஷ் பாடிய இந்த அற்புதமான பாடல் காலத்தை வென்ற அவரது பாடல்களில் ஒன்று. (முகேஷ் பாடிய பல பாடல்களில் sanjog படத்தில் வரும் "Bhoolihuyi yaadhon " என்ற பாடல் கரையாத நெஞ்சத்தையும் கரைத்து விடும். திரு நௌஷாத் அவர்கள் பெரும்பாலும் முகமது ரபியைத்தான் பாட வைப்பார். நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் ஆரம்பத்திலும்தான் அவர் முகேஷையும் இன்னொரு பிரபல பாடகரான தலத் மெஹமூதையும் பாட வைத்துக்கொண்டிருந்தார். Baiju Baawraa படத்தில் நௌஷாத் திரு முகமது ரபிக்கு பெரிய ப்ரேக் வாங்கித்தந்ததுடன் நிற்காமல் தொடர்ந்து அவரையே தன்னுடைய படங்களுக்குப் பாட வைத்துக் கொண்டிருந்தார். அதிலும், குறிப்பாக, திலீப் குமாருக்கு முகமது ரபியையே தொடர்ந்து பாட வைத்து பெரிய ஹிட் பாடல்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஹிந்திப் பாடல் உலகில் முகமது ரபி, கிஷோர் குமார் வரிசையில், முகேஷுக்கு எப்போதும் மிக மிக முக்கியமான நிரந்தர இடம் உண்டு. முக்கியமாக, நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் Showman என்று சொல்லப்படுபவருமான ராஜ் கபூருக்கு அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்றவை.
நடிகர் திலகம் - கபூர் சகோதரர்கள் மிக மிக நெருங்கிய நண்பர்கள் என்று எழுதும்போது, முப்பது வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்தது நினைவுக்கு வருகிறது. (இது எல்லாம் குமுதத்தில் வேலை செய்தபோது திரட்டியவை.) ஒரு முறை நடிகர் திலகம் அவர்கள் ஜஹாங்கீர் நாடகத்தை பம்பாயில் நடத்தும்போது, முன் வரிசையில் வட நாட்டின் பிரபல கலைஞர்கள் அனைவரும் (கபூர் சகோதரர்கள் உட்பட) முன் வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும், நடிகர் திலகத்தையும் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது, சலீமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அந்தக் காட்சிக்கு (அந்தக் கட்டத்தில் அந்தக் கதாபாத்திரம் பெரும் கோபத்தில் இருப்பதாக வரும்) ஏற்றார்ப் போல், திரை போடப்படுவதற்கு முன், MGM (ஹாலிவுட் பட நிறுவனம்) எம்ப்ளத்தில் கர்ஜிக்கும் சிங்கம் போல் ("கர்ணன்" படத்தில் கூட அப்படித்தான் கர்ஜித்திருப்பார்.) கர்ஜிப்பாராம். ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைத்தட்ட, திக்குமுக்காடிப்போன கபூர் சகோதரர்கள் நேராக மேடைக்குப் போய் நடிகர் திலகத்தைத் தூக்கி கொண்டாடிவிட்டனராம்!
நினைவுகள் தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 18th March 2011 at 10:47 AM.
-
18th March 2011, 10:44 AM
#1350
Senior Member
Senior Hubber
டியர் முரளி அவர்களே,
தங்களின் பாராட்டுக்கும் பாகப் பிரிவினை பட மலையாள ரீமேக் செய்திகளுக்கும் நன்றிகள் பல.
டியர் பம்மலார், சாரதா மேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்,
தங்களைப் போன்றவர்களின் உயர்வான பாராட்டுகள் என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
கூடிய விரைவில், நாமெல்லோரும் சந்தித்துக்கொண்டால், அதை என் வாழ்நாளின் பெரிய பேறாக எண்ணுவேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks