-
18th March 2011, 11:17 AM
#1351
Senior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.
1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை
1961 : பாவமன்னிப்பு, பாசமலர்
1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்
1983 : நீதிபதி, சந்திப்பு
1985 : முதல் மரியாதை, படிக்காதவன்
1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.
"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.
['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் மற்றும் சாரதா மேடம் அவர்களுக்கு,
"பாலும் பழமும்", "படித்தால் மட்டும் போதுமா" படங்களின் பதிவுகளில், பாடல்களைப் பற்றிக் கூறும்போது, நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்கள் முறையே - "இந்த நாடகம் அந்த மேடையில்" மற்றும் "அண்ணன் காட்டிய வழியம்மா" பாடல்களைப் பற்றியும் சிறிது எழுதித்தான் வைத்திருந்தேன். ஒரு பதிவிற்கு பத்தாயிரம் சொற்களுக்கு மேல் அனுமதியில்லை என்ற காரணத்தால் வேறு வழியின்றி நீக்கி விட வேண்டியதாகி விட்டது. வேறு எந்த செய்தி மற்றும் கருத்தையும், இந்தப் படங்களின் ஆய்விலிருந்து என்னால் நீக்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு விஷயம்கூட சோடை போகாத விஷயம். எதை எடுத்தாலும், கட்டுரையின் வீச்சும் சுவையும் குறைந்து விடும்.
இது எப்படி என்றால், ஐம்பதுகளின் இறுதியில், வட நாட்டின் பிரபல எடிட்டர் மற்றும் இயக்குனர் திரு பிமல் ராய் அவர்கள் "மதுமதி" என்ற காவியத்தை எடுத்து முடித்தவுடன், (இந்தப் படம்தான் 1963 -இல், ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு inspiration ஆனது.), படம் பல்லாயிரக்கணக்கான அடிகள் நீண்டு விட்டதை உணர்ந்தார். அவருக்கு படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்தால் தேவலை என்று தோன்றி என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். அவரே எடிட்டராயும் இருந்தும், எதை வெட்டுவது என்று தெரியவில்லையாம். அந்த அளவிற்கு, ஒவ்வொரு காட்சியும் ஒன்றோடொன்று மிகச்சரியான தொடர்புடையதாயிருந்து சிறப்பாகவும் இருந்ததாம். அந்தப் படத்தின் கதாநாயகன் திலீப் குமார் பிமல் ராயிடம், இதற்கு சரியான தீர்வு, நாம் அனைவரும் தென்னிந்தியாவின் பிரபல பட அதிபரும், இயக்குனரும், எடிட்டருமான திரு எஸ்.எஸ். வாசன் அவர்களை அணுகுவதுதான் என்று கூறி, (அவரும் எஸ்.எஸ். வாசனும் மிக நெருங்கிய நண்பர்கள். அவரது இயக்கத்தில், "இன்சானியத்" மற்றும் "பைகாம்" (தமிழில் இரும்புத்திரை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை.) படங்களில் திலீப் குமார் நடித்துள்ளார்.), எல்லோரும் சென்னை வந்து, திரு எஸ்.எஸ். வாசனை அணுக, அவரும் ஒப்புக் கொண்டு, சில ஆயிரம் அடிகளைக் குறைத்து கொடுத்தார் என்பது வரலாறு. அந்த அளவிற்கு, எடிட்டிங்கில், திரு வாசன் அவர்கள் புலி என்பார்கள்.
ஒரு பேச்சிற்காகத் தான் இதை நினவு கூர்ந்தேன். இதற்காக நான் பிமல் ராயல்ல. மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் தான், நிறைய, தொடர்புள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
திரு பம்மலார் அவர்களே, இரும்புத் திரையைப் பொறுத்தவரை, அது கோவையில் வெள்ளி விழாக் கொண்டாடியது என்று தான் எல்லா விவரங்களிலும் உள்ளது. மேலும், தெலுங்கில் வெளி வந்த "நிவுரு கப்பின நிப்பு" படமும், வெள்ளி விழா என்று தான் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். தயை கூர்ந்து திரும்பவும் பார்த்து சொல்லுங்கள்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 18th March 2011 at 11:23 AM.
-
18th March 2011 11:17 AM
# ADS
Circuit advertisement
-
18th March 2011, 12:02 PM
#1352
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் எப்பொழுதும் கட்சியில் ஒரு தொண்டனாக மட்டுமே இருந்தார்.
1 ) mt யை போல ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட; தனக்கு சாதகமாக சுழ்நிலை ஏற்படுத்தி கொள்ள தெரியாத அப்பாவி.
2) தன் நண்பர் கலைஞரை போல் பதவிக்காக மக்களிடம் கெஞ்ச தெரியாத சுயநலம் இல்லாத மனிதர்.
3) செல்வியை போல் நான் ஒரு தொகுதியில் நின்றால் 234 தொகுதிக்கு சமம் என்று தலை கனத்துடன் பேச தெரியாத மனிதர்.
4 ) பதவிக்காக மற்ற கட்சியுடன் விபச்சாரம் செய்ய தெரியாத ஆசாமி.
தலைமைக்கு (டெல்லி தர்பார்) கட்டு பட்டு, ஒரு தொண்டனாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேசியவர்.
பெங்களூரில் ஒரு பொது கூட்டத்தில் (85 / 86 என்று நினைக்கிறன்) (மல்லேஸ்வரம் விளையாட்டு மைதானம்) குண்டு ராவ்க்காக ஆதரவாக பேசும் பொது 2 விரல் 5 இல் அட்டகம் என்று பேசியவர். (1/2 மணி நேரம் என்ன ஒரு தமிழ் - திரையில் மட்டும்மே அவருடைய தமிழை கேட்டதுண்டு. முதன் முறையாக நேரில் பார்த்த , கேட்ட சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. )
ஒரே தலைவர், ஒரே கட்சி என்று வாழ்ந்த சுயநலம் இல்லாத மாமனிதர் நம் நடிகர் திலகம்.
நோட் : நடிகர் திலகத்தில் போல் மக்கள் திலகத்தை நான் என்றும் மறப்பதில்லை. காரணம், ம. தி. என்னுடைய சிறு வயது ஹீரோ.
கன்னட நடிகர் ராஜ்குமார் - கர்நாடகத்தில் அவர் தான் mgr , சிவாஜி. அவரை பற்றி குறை கூறினால், உயிருடன் இருக்க முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் யாரை வேண்டுமானாலும் குறை குறலாம், திட்டலாம். ஒன்றும் ஆகாது. இது தான் வித்தியாசம்.
கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம்.
-
18th March 2011, 12:22 PM
#1353
Senior Member
Devoted Hubber
RAJESH,
When we are talking about NT films remade in other languages comparision is inevitable.Here our hubbers have compared NT's acting with all the giants like dilipkumar,devanand,sunildutt,dharmendra,NTR,ANR,m adhu and said that they have not even done 25% of what NT did in the original.In the same way I have compared rajkumar with NT( I have watched both paasamalar and anna thangi) and told that he was not on par with NT.Even I like all the actors you have mentioned along with rajkumar.Infact I have watched more than 25 of his famous films either in their rereleases or in TV as I had born and brought up in bangalore.
In cricket there can be many talented players all around the world but only one SACHIN TENDULKAR . NADIGARTHILAGAM is the sachin of indian cinema
Last edited by HARISH2619; 18th March 2011 at 12:24 PM.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
18th March 2011, 12:28 PM
#1354
Senior Member
Devoted Hubber
கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம். [/quote]
chancey illa
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
18th March 2011, 12:43 PM
#1355
Senior Member
Senior Hubber

Originally Posted by
abkhlabhi
நடிகர் திலகம் எப்பொழுதும் கட்சியில் ஒரு தொண்டனாக மட்டுமே இருந்தார்.
1 ) mt யை போல ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட; தனக்கு சாதகமாக சுழ்நிலை ஏற்படுத்தி கொள்ள தெரியாத அப்பாவி.
2) தன் நண்பர் கலைஞரை போல் பதவிக்காக மக்களிடம் கெஞ்ச தெரியாத சுயநலம் இல்லாத மனிதர்.
3) செல்வியை போல் நான் ஒரு தொகுதியில் நின்றால் 234 தொகுதிக்கு சமம் என்று தலை கனத்துடன் பேச தெரியாத மனிதர்.
4 ) பதவிக்காக மற்ற கட்சியுடன் விபச்சாரம் செய்ய தெரியாத ஆசாமி.
தலைமைக்கு (டெல்லி தர்பார்) கட்டு பட்டு, ஒரு தொண்டனாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேசியவர்.
பெங்களூரில் ஒரு பொது கூட்டத்தில் (85 / 86 என்று நினைக்கிறன்) (மல்லேஸ்வரம் விளையாட்டு மைதானம்) குண்டு ராவ்க்காக ஆதரவாக பேசும் பொது 2 விரல் 5 இல் அட்டகம் என்று பேசியவர். (1/2 மணி நேரம் என்ன ஒரு தமிழ் - திரையில் மட்டும்மே அவருடைய தமிழை கேட்டதுண்டு. முதன் முறையாக நேரில் பார்த்த , கேட்ட சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. )
ஒரே தலைவர், ஒரே கட்சி என்று வாழ்ந்த சுயநலம் இல்லாத மாமனிதர் நம் நடிகர் திலகம்.
நோட் : நடிகர் திலகத்தில் போல் மக்கள் திலகத்தை நான் என்றும் மறப்பதில்லை. காரணம், ம. தி. என்னுடைய சிறு வயது ஹீரோ.
கன்னட நடிகர் ராஜ்குமார் - கர்நாடகத்தில் அவர் தான் mgr , சிவாஜி. அவரை பற்றி குறை கூறினால், உயிருடன் இருக்க முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் யாரை வேண்டுமானாலும் குறை குறலாம், திட்டலாம். ஒன்றும் ஆகாது. இது தான் வித்தியாசம்.
கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம்.
Dear Friends,
It is very very important and pertinent for me to make a point or two to every one i.e., our friends here as well as those at this juncture, who are reading / who may read my articles in future, on "NT's performance in comparison with other Artistes in other languages". Even though nobody has indicted me, still, I thought that I should clarify certain things straightaway so that there is no misunderstanding now and in future.
From the moment I joined this great thread, I have been refraining myself in commenting other artistes on a bad note (except recently when I saw that Mr. Sathyaraj commented about him badly, I said certain things even though I didn't relegate him completely.).
I am only comparing NT with other Artistes on the overall competency and the effect that he brought out on the screen which made the audience spellbound. On such comparison alone, NT stands TALL than every single Artiste, whose films I have also seen, which has been vouched by the Artistes themselves, who stood compared. This does not mean that we are degrading other giants. Whether it is Ashok Kumar, Dilip Kumar, Uttam Kumar, NTR, ANR, Dr. Raj Kumar, Sathyan, Prem Nazir or Madhu, they are all giants and thespians in their own right. However, on a comparison of acting prowess, imagination, internalisation and the overall effect that they could bring on screen to a role, NT stands tall and has gone miles ahead of others. On the ability to perform roles, which would stand the test of time i.e, TIMELESS CLASSICS which would move anybody regardless of age also, NT is the BEST.
That is why NT is regarded by everybody across the GLOBE as the GREATEST ACTORS OF ALL TIME. While all other Artistes took up Acting as their profession, NT is one of those rarest of gems/geniuses, who is a BORN ACTOR. Still, there are a few born actors; but, NT is the Greatest of them all is my humble submission.
Regards,
R. Parthasarathy
Last edited by parthasarathy; 18th March 2011 at 12:49 PM.
-
18th March 2011, 12:58 PM
#1356
Senior Member
Senior Hubber

Originally Posted by
HARISH2619
RAJESH,
In cricket there can be many talented players all around the world but only one SACHIN TENDULKAR . NADIGARTHILAGAM is the sachin of indian cinema
Dear Mr. Harish,
On a comparison of arguably, the greatest batsmen of all time, Sachin Tendulkar also, I have indicated that somebody may in future, break some of the records set by Sachin (may be centuries of centuries - which he is going to hit on Sunday may be - very difficult to break); but, nobody will be able to break best of the best records set by our NT in future like - 2 films crossing 100 days released on a same day twice - 2 silver jubilee hits in a year for more than 6 times - a movie celebrating 100 continuous days in a touring talkies! - performing 9 different roles by performing the roles distinctively different, most importantly by being a Star and an Actor concurrently for more than 4 decades, etc., etc., etc.
Regards,
R. Parthasarathy
-
18th March 2011, 02:02 PM
#1357
Senior Member
Seasoned Hubber
Thanks

Originally Posted by
parthasarathy
Dear KC Shekar Sir,
When I first read the news, like all true NT Fans, I also felt very bad about it and got angry, specifically with Mr. Sathyaraj. People like Sathyaraj, who used certain celebrities to gain popularity rather than believing in himself does not even deserve to be retaliated. However, on behalf of every true NT fans, you took the initiative to retaliate in a big way and got the same published in a leading newspaper daily. We salute you, Mr. K.C. Shekar Sir.
Thank you very much,
Regards,
R. Parthasarathy
Thanks for your delightful appreciation.
-
18th March 2011, 02:04 PM
#1358
Senior Member
Devoted Hubber
ராஜ்குமாரின் அபூர்வ சங்கமா கன்னடத்தை நடிகர் திலகத்தின் ராஜாவை பாருங்கள். ராஜா ராஜா தான். எல்லாம் சங்கமிக்கும் இடம் ராஜா (ந. தி. தான்).
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபார்கள். உதாரணம் இதோ :
(கன்னடத்தில் இல்லை)
1 திரிசூலத்தில் குருவாக vkr விடிற்க்கு வரும் பொது ஒரு நடை (msv பிண்ணனி இசையுடன்)
2 ராஜாவில் தன் தாயை அடிக்கும் பொது முகத்தில் காட்டும் உணர்ச்சி
கன்னடம் மட்டும் அல்ல, பிற மொழி படங்களை எடுத்து கொண்டாலும், இதை போல் எராளமாக சொல்லிகொண்டே போகலாம்.
-
18th March 2011, 03:31 PM
#1359
Senior Member
Senior Hubber

Originally Posted by
abkhlabhi
ராஜ்குமாரின் அபூர்வ சங்கமா கன்னடத்தை நடிகர் திலகத்தின் ராஜாவை பாருங்கள். ராஜா ராஜா தான். எல்லாம் சங்கமிக்கும் இடம் ராஜா (ந. தி. தான்).
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபார்கள். உதாரணம் இதோ :
(கன்னடத்தில் இல்லை)
1 திரிசூலத்தில் குருவாக vkr விடிற்க்கு வரும் பொது ஒரு நடை (msv பிண்ணனி இசையுடன்)
2 ராஜாவில் தன் தாயை அடிக்கும் பொது முகத்தில் காட்டும் உணர்ச்சி
கன்னடம் மட்டும் அல்ல, பிற மொழி படங்களை எடுத்து கொண்டாலும், இதை போல் எராளமாக சொல்லிகொண்டே போகலாம்.
டியர் பாலகிருஷ்ணன் அவர்களே,
நான் "திரிசூலம்" படத்தை முதன் முதலில் நூறு நாட்களுக்குப் பிறகுதான் சென்னை கிரௌன் திரை அரங்கத்தில் என் கசினுடன் பார்த்தேன் - எப்படி? Rs.1.55 டிக்கெட்டை பத்து ருபாய் கொடுத்து ப்ளாக்கில். நூறு நாட்கள் ஓட்டத்துக்குப் பிறகு - இத்தனைக்கும் அன்று லீவு இல்லை; மேலும் அது மாட்னி காட்சி வேறு. இதைச் சொல்லும்போது, ஒரு முக்கியமான விஷயம். எனக்குத் தெரிந்து, திரிசூலம் தமிழகத்தில் ஏற்படுத்திய அலை இன்று வரை எந்தப் படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை. (சமீபத்தில் வெளி வந்த ரஜினியின் ரோபோ கிட்டத்தட்ட ஐம்பது சதம் வேண்டுமானால் நெருங்கியிருக்கலாம். தெரியவில்லை. ஆனாலும், இது சன் நெட்வொர்க்கின் மிகப்பெரிய மார்கெட்டிங் சாகசத்தாலும்தான் சாத்தியமானது எனலாம்.). அதுவும், படம் வெளிவந்து, நூறு நாட்கள் முடிந்தபின்னும். அப்போதெல்லாம், சென்னையில், புற நகரில், இப்போது போல், பத்து திரை அரங்குகளில் எல்லாம் படம் வெளியிட மாட்டார்கள். வட சென்னையில், ஓடியன்மணி, தென் சென்னையில், தாம்பரம் வித்யா இல்லை பல்லாவரம் நேஷனல் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வரும். புறநகரில் இருப்பவர்கள் பார்க்க வேண்டுமென்றால், சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளுக்குச் சென்று தான் பார்க்க வேண்டும். இல்லை என்றால், பெட்டி மாறி, புற நகர் வருகின்ற வரை பொறுக்க வேண்டும். "திரிசூலம்" தமிழகத்தின் வேறு ஏதோவொரு திரை அரங்கத்தில் இருந்து, பெட்டி மாறி - அதாவது அங்கு நூறு நாற்கால் பேய் ஓட்டம் ஓடிய பிறகு - ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அப்போது ராஜேந்திரா என்ற பெயரில் இருந்த (இப்போது SSR பங்கஜம் - இலட்சிய நடிகரின் சொந்தத் திரை அரங்கம்) திரை அரங்கத்திற்கு வந்தது. அதாவது, கிட்டத்தட்ட ஆகஸ்டு மாத இறுதியில். உங்களால் நம்ப முடியுமா, இந்தப் படம் ஆகஸ்டு இறுதியில் அங்கு வந்தது - கிட்டத்தட்ட தீபாவளி வரை ஓடிய ஓட்டம் இருக்கிறதே - அப்பப்பா! பத்து வாரங்கள். அதுவும் புறநகரில் உள்ள ஒரு டூரிங் டாக்கீஸில்! தீபாவளிக்கு முன், ஒரு நாள் கொட்டும் மழையில், க்யூவில் நின்று (காட்சி துவங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே போய் நின்று!) படத்தை மறுபடியும், எங்கள் வீட்டிலுள்ள எல்லோரும் சேர்ந்து பார்த்த அனுபவம் - அதுவும் எப்படி, அரங்கத்தில் இடம் இல்லாமல், முக்கால்வாசி படம் நின்று கொண்டே!. படம் நெடுகிலும், எத்தனையோ காட்சிகளுக்கு மிக பலத்த வரவேற்பு, ஆரவாரம்.
நீங்கள் சொன்ன அந்தக் காட்சி - நடிகர் திலகம் முதலில் வராமல், வேலைக்காரர்கள் ஒவ்வொருவராய் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். எப்போது நடிகர் திலகம் வருவார் என்று எல்லோரையும் எதிர்பார்க்க வைத்து, கடைசியில், நடிகர் திலகம் வருவார். அப்போது அந்த நடை, கேமரா கோணம் - திரை அரங்கமே திக்குமுக்காடிப்போனது எனலாம். மெல்லிசை மன்னரின் பின்னணி இசையெல்லாம் யார் காதில் விழுந்தது அப்பேர்ப்பட்ட ஆரவாரத்தில். கன்னட அசலிலும் இப்படியேதான் வரும். தமிழில், எனக்குத் தெரிந்து, 99 சதவிகிதம் எந்தக் காட்சியையும் மாற்றாமல் அப்படியேதான் எடுத்தார்கள். பெரிய அளவில் வித்தியாசப் படுத்தியது நடிகர் திலகத்தின் நடிப்புதான். திரிசூலம் பெற்ற வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் - அசலில் இருந்த - தமிழில் மாற்றப் படாத அந்த சரளமான தொய்வில்லாத திரைக்கதை மற்றும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான, அசாதாரணமான, முதிர்ச்சி, துடிப்பு மற்றும் எனர்ஜியுடன் கூடிய நடிப்பு. Dr. ராஜ்குமார் அவர்கள் ஒரு வகை பாணியில் நடித்து பிரமாதப் படுத்தினார் என்றால், நடிகர் திலகம் அவருக்கேயுரிய பாணியில், வித்தியாசப்படுத்தியிருந்தார்.
இந்தக் காட்சியைப் பொறுத்தவரை, இரண்டு முக்கியமான விஷயங்கள். ஒன்று, அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடை - அதாவது ஒரு விதமான ஆர்ப்பாட்டமான, ஸ்டைலான நடை - மற்றும் டாப் ஆங்கிள் கேமரா கோணம் (எப்போதும், கேமரா கோணங்களை நடிகர் திலகம்தான் தீர்மானிப்பார். அதில் அவர் ஒரு விற்பன்னர்!). இந்தக் காட்சியில், நடிகர் திலகம் வருகிற கட்டம் - ஒரு மாதிரி எல்லோரையும் சிரிக்க மற்றும் ரசிக்கத் தயார் செய்து வைத்து விடுவார்கள் (ஏனென்றால், அவர் ஸ்ரீப்ரியாவிற்கு கணவராக நடிக்கப் போகிறார் - காட்சி, மற்றும் நடிகர்கள் எல்லோரும் (முக்கியமாக விகேயார்) மக்களை சிரிக்க வைக்கத் தயார் செய்து வைத்து விடுவார்கள். நடிகர் திலகம் அந்தக் காட்சியில், இவர்கள் எல்லோரையும் விட நன்றாக நடித்து, எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும். மிகச் சரியாக இதைப் புரிந்து கொண்டு, அந்த அறிமுகக் காட்சியிலேயே அந்த நடை மூலம் (இது எப்படி என்றால், ஒரு நாள் கிரிக்கெட் மேட்சில் கடைசி ஓவர் கிட்டத்தட்ட 15 ரன்கள் எடுத்தாக வேண்டும். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விட்டால் அந்த மொமெண்டத்தை வைத்தே, கிடு கிடுவென்று பௌண்டரிகள் அடித்து, போட்டியில் வென்று விடுவார்கள். ஆனால், அந்த momentum அந்த முதல் பந்திலேயே அடித்த சிக்சரால்தான் கிடைத்திருக்கும். அதைப்போல), கிட்டத்தட்ட நூறு பங்கு எல்லோரையும் அந்தக் களத்திற்குக் கொண்டு சென்று சிரிக்கவும், ரசிக்கவும் வைத்து விடுவார். அதிலும், உள்ளே நுழைந்து, அந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரு மாதிரி அலாதியான ஸ்டைலில் சுழற்றி பின்னுக்குக் கொண்டு போய் வீகேயாருக்கு குனிந்து வணக்கம் சொல்வார். மறுபடியும், அரங்கம் அதிரும். (பாலகிருஷ்ணன் சார், ஏன் சார் திரும்பத் திரும்ப அந்த இனிய மலரும் நினைவுகளுக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று வேறு வேலையே பார்க்க முடியாமல் வைத்து விடுகிறீர்கள்? இருந்தாலும், மிக்க நன்றி. சும்மா ஒரு விளையாட்டுக்க்காகத்தான்!).
மதிப்புக்குரிய Dr . ராஜ்குமார் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர். அவரே நடித்து சொந்தக் குரலில் அநாயாசமாகவும், அழகுபடவும் - சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்த பாடல்களையும் - மிக நன்றாக பாடவும் கூடியவர். நடிகர் திலகத்தின் பரம விசிறி மற்றும் மிக நெருங்கிய நண்பர். நான் முன்னரே கூறியபடி, என்னுடைய கசின் ஏவிஎம் ஸ்டூடியோவில், Dr . ராஜ்குமார் அவர்களின் சொந்தப் படக் கம்பெனியில், வேலை செய்து கொண்டிருந்தபோது, அவன் சொல்லி ஏராளமான விவரங்கள் Dr ராஜ்குமாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர், ஒரே நேரத்தில், NT மற்றும் MT நடிக்கும் வகைப் படங்களையும் மிக நன்றாக நடித்தவர். அவருடைய நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கும். அவருடைய நடை - கர்நாடகத்தில் மிகவும் பிரசித்தம் - ஒரு மாதிரி நேர்க் கோடு போட்டார்ப் போல், அலாதியான ஸ்டைலில் நடப்பார்.
எனினும், வேறு நிறைய விஷயங்கள் (ஏற்கனவே கொட்டித் தீர்த்தாகி விட்டது) , நடிகர் திலகத்திடம் வித்தியாசமாகப் பொதிந்திருந்ததால், மற்றவர்களை விட, அவரால் சிறப்பாக செய்து, எல்லோருடைய மதிப்பையும், மரியாதையையும், முக்கியமாக அளவிடமுடியாத பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் - அந்தந்த படங்களின் அசலில் நடித்தவர்களிடமிருந்தே - பெற முடிந்தது.
"ராஜா" படத்தின், அந்த மிகவும் பிரபலமான அந்தச் சிரிப்பு பற்றி வருடக் கணக்கில் பேசிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார். ஹிந்தியிலும், அதே காட்சிதான் அதே களம்தான். வித்தியாசம் நடிகர் திலகத்தால் தான். அசலில் நடித்த தேவ் ஆனந்திற்குக்கூடத் தோன்றாத அந்தக் கற்பனை, கற்பனையில் தோன்றியதை, எள்ளளவும் குறைக்காமல், திரையில் வடித்த சாகசம் - அது நடிகர் திலகத்துக்கு மட்டுமே கை வந்த கலை.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 18th March 2011 at 03:38 PM.
-
18th March 2011, 04:07 PM
#1360
Senior Member
Devoted Hubber
அந்த காட்சி இல்லை என்று சொல்லவில்லை . நம் மகாசிகரத்தின் முத்திரை கன்னடத்தில் மிஸ்ஸிங். ராஜ்குமாரும் நடந்து வருவார். ஆனால் சாதரணமாக தான் இருக்கும். கன்னட படத்தை 5 முறை பார்த்தேன். சமிபத்தில் கூட கன்னட டிவிஇல் ஷங்கர் குருவை பார்த்தேன். ராஜ்குமார் நடிப்பை குற்றம் குறவில்லை. 80 முதல் 85 வரை , அவருடைய கன்னட படங்களை மிஸ் செய்யாமல் பார்த்தவன். ஆனால் திரிசூலத்தை ஒரே ஒரு தடவை தான் பார்த்தேன்.
டைட்டில் முடிந்த உடன் ராஜசேகர், வேலைகாரனிடம் சாட்டையால் அடி வாங்கிய பிறகு, தான் வளர்ப்பு மகள் கேள்வி கேட்க, நடிகர் திலகம் பதில் சொல்லாமல் , மார்பை கையால் தட்டுவார். கன்னடத்திலும் உண்டு. ஆனால் நம் நடிகர் திலகத்தை போல் அல்ல. இன்று நகைச்சுவை நடிகர்ளால் காமெடி செய்ய பட்டு வரும் அந்த தொலைபேசி காட்சி, மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வரவேண்டும். கன்னடத்திலும், தெலுகிலும் , ஹிந்திலும் , தமிழில் ஏற்படுத்திய பாதிப்பு இல்லை.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
Bookmarks