-
21st March 2011, 05:14 PM
#1371
Senior Member
Senior Hubber
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் - (தொடர்ச்சி)
7. நவராத்திரி (1964) / நவராத்திரி (1966) – தெலுங்கு / நயா தின் நயி ராத் (1975) - ஹிந்தி
நடிகர் திலகமே “நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி” என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டபிறகு, நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இல்லையில்லை, வண்டி வண்டியாக இருக்கிறது.
இந்தப் படம், நடிகர் திலகத்தின் கற்பனை வளத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், முனைப்புக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்த படங்களில் முக்கியமான படம். இன்று ஒப்பனைக் கலையில், வியத்தகு தொழில் நுட்பமும், தொழில் நுட்பக் கலைஞர்களும், வந்து விட்ட நிலையில், மீடியாவும், சம்பந்தப்பட்ட நடிகர்களுமே கூட, இந்த கெட்டப் விஷயங்களைப் பற்றிப் பெரிதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். மீடியாக்களும், வட இந்தியாவின் ஆமிர் கான், ஷாருக்கான் முதல், நமது கமல், விக்ரம், சூர்யா வரை, பெரிதாக எழுதுகிறார்கள் - ஒரு படத்திற்காக, உடலைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளுகிறார்கள், உடனே, அடுத்த படத்துக்காக, குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்று. நடிகர் திலகமோ, உடல் மொழியையும், கற்பனை வளத்தையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் மட்டுமே வைத்துக் கொண்டு, சுயமாகவே பாதி ஒப்பனையையும் செய்து, இவர்கள் செய்ததை விட பல நூறு மடங்கு பிரமாதமாக செய்து விட்டாரே. அதற்காக, இந்தக் கலைஞர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய சிரத்தையும், முனைப்பும், திறமையும் பாராட்டுக்குரியதுதான். என்னுடைய ஆதங்கமெல்லாம் (நம் எல்லோரோடையதும் தான்!) இன்றைய மீடியாக்கள், இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டும்போது, இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியும், இவர்கள் மட்டுமல்ல இன்னும் இது போன்ற எத்தனையோ கலைஞர்களை விடவும், பல நூறு மடங்கு, பல வருடங்களுக்கு முன்னரே, நடிகர் திலகம் சாதித்து விட்டதை, விரிவாக எடுத்துச் சொல்லாமல், ஏன் இன்னமும் இருட்டடிப்பு செய்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப ஒருவரது (பெயர் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) புகழ் பாடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைய தலைமுறையினருக்கும், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் (மாறு வேடங்களில் அல்ல) நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.
இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக (அந்த குஷ்ட ரோகி பாத்திரம் தவிர - அதையும், ஓரளவு கண்டு பிடித்து விடலாம்) அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.
மனிதனின் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பாத்திரத்தை அளித்து, அதற்க்கேற்றார்போல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அமைத்து, அதில், முழு வெற்றியையும் அடைந்த, கதாசிரியர்-இயக்குனர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பங்கு இமாலயச் சாதனை என்றால் அது மிகையாகாது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இவை தவிர,
1) நடிகையர் திலகம் சாவித்திரியின் பங்களிப்பு – நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்தது – இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.
2) அது இல்லாமல், படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களும், மிகச் சிறிய பாத்திரத்தில் வருபவர் கூட - அனைவரையும் கவரும் படி நடித்தது; (அந்த நாடகக் கலைஞர் எபிசோடில் குள்ளமாக ஒரு நடிகர் - இவர் ஏபிஎன்னின் அத்தனை படங்களிலும் ஆஜராகியிருப்பார் - அந்தத் தண்ணீர் கூஜாவை மணிக்கணக்கில் திறந்து கொண்டே இருப்பது மற்றும் நடிகர் திலகத்திற்கு விசிறி வீசும்போது, அடிக்கடி அவரை அடித்துக் கொண்டே இருப்பது; (ஏ.பி.என்னின் தனித் திறமைகளில் ஒன்று, அவர் படங்களில் இடம் பெறும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்து விடுவது - சிறு பாத்திரமாய் இருந்தாலும் - காரணம், அந்தச்சிறு பாத்திரமும் முக்கியப் பங்கு வகித்து, நடிப்பவர்களை ஊக்கப் படுத்தி விடும். முடிந்தவரை, தேவையில்லாமல், ஒரு சிறு கதாபாத்திரத்தைக் கூட அனாவசியமாக நுழைக்க மாட்டார்.);
3) மற்றும் "மாமா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் பங்கு;
என்று ஒவ்வொரு அம்சமும் மிக நன்றாக அமைந்தது.
ஒன்பது பாத்திரங்களிலும், நடிகர் திலகத்தின் பங்களிப்பு அற்புதமாக அமைந்தது என்றாலும், முதல் நான்கு பாத்திரங்களும், (முறையே, அற்புதராஜ்; குடிகாரன்; டாக்டர் மற்றும் கோபக்காரனாக வந்து இறந்து போகும் பாத்திரம்), நாடகக் கலைஞர் மற்றும் காவல்துறை அதிகாரி பாத்திரமும், மக்களை வெகுவாகக் கவர்ந்த பாத்திரங்கள் எனலாம்.
முதல் பாத்திரத்தில், ஸ்டைலாகத் தோளைக் குலுக்குவது, சொந்தக் கதையை சாவித்திரியிடம் சொல்லும்போது, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசும் ஸ்டைல்; மற்றும், அந்த நடை;
இரண்டாவது பாத்திரத்தைப் பற்றிச் சொன்னால், சொந்தக் கதையை வர்ணிப்பது(அய்யய்யோ! அய்யய்யோ! என்று சொல்லும்போது எழும் கைத்தட்டல்!), மற்றும் "இரவினில் ஆட்டம்" பாடலில், நடக்கும் அந்த சாய்ந்த ஸ்டைலான நடை;
டாக்டர் பாத்திரம் என்றால், ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கொண்டு நடக்கும் - ஒரு முறை ஸ்டெத்தை மறந்து வைத்து விட்டு நடந்து, பின், திரும்பவும் வந்து, அதே நடையை maintain செய்து திரும்பவும் நடந்து செல்லுவார்; (மக்களைக் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைப்பதற்கு அவர் கையாளும் வித்தை மற்றும் சிரத்தை); சாவித்திரியிடம் பேசும் காட்சிகள் மற்றும்; கடைசியில், சாவித்திரி திடீரென்று காணாமல் போனவுடன், ஒரு மாதிரி, ஸ்டைலாக, அவரது வேலையாளைக் கூப்பிட்டுக்கொண்டே போகும் ஸ்டைல்; (சாவித்திரி தன் கதையை டாக்டரிடம், அதாவது, நடிகர் திலகத்திடம் விவரித்து இலேசாக கண் கலங்குவது (பிரமாதம்!); அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்துவிடுவார்; அதிலேயே, அவருக்குத் தெரிந்து விடும், சாவித்திரி நிஜப் பைத்தியம் அல்லவென்று; சாவித்திரியும் மற்றவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடிக்கும் லூட்டி பிரமாதமாக இருக்கும்; அரங்கமே களை கட்டிவிடும்);
கோபக்காரன் பாத்திரத்தில் காட்டிய அந்தக் கோபம் மற்றும் வேகம்; குறிப்பாக, இறப்பதற்கு முன், சாவித்திரியிடம் சைகையாலேயே, "நான் வந்த காரியத்தை முடித்துவிட்டேன், நீ போய்விடு" என்று சொல்லி விட்டு, கீழே விழுந்து துடிதுடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் கட்டம்;
"நவராத்திரி" - தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 21st March 2011 at 05:26 PM.
-
21st March 2011 05:14 PM
# ADS
Circuit advertisement
-
21st March 2011, 06:25 PM
#1372
Senior Member
Senior Hubber
7. "நவராத்திரி" - தொடர்ச்சி
அப்பாவி கிராமத்து விவசாயி பாத்திரத்தில், "போட்டது மொளச்சுதடி" பாடலில் காட்டும் அந்த இயல்பான உடல்மொழி; ரயில் முன் விழப் போகும் சாவித்திரியைத் தடுத்து நிறுத்த தலை தெறிக்க ஓடுவது; முகம் முழுவதும் வெள்ளை நிறப் பொடியை முகத்தில் கொட்டிக்கொண்டு வாயை வேறு மூடிக் கொள்ளும் காட்சி.
குஷ்ட ரோகி பாத்திரத்தில், வி. கோபாலகிருஷ்ணன் வீட்டில், தன் படத்தையே யாரென்று தெரியாமல் பார்த்து, பின்னர், அது தன் படம் தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சி செய்வது;
அடுத்து நாடகக் கலைஞர் பாத்திரம். வெகு இயல்பாக செய்திருப்பார். இந்தப் பாத்திரத்திற்கு முன்பு வரும் எபிசோடில் படம் இலேசான ஒரு தொய்வு நிலைக்கு வர ஆரம்பித்திருக்கும். சட்டென்று, இந்தக் கதாபாத்திரமும் அதனோடு வரும் காட்சிகளும், படத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த பெரிதும் உதவி செய்யும். ரொம்ப கலகலப்பாக அந்தக் காட்சிகளனைத்தும் அமைக்கப்பட்டிருக்கும் – முத்தாய்ப்பாக, அந்தத் தெருக் கூத்துப் பாடல் ("நான் காண்பதென்ன கனவா அல்லது நினைவா!" என்று பேசும் அந்த விதம். ஒ!). இந்தப் பாடல் முழுவதும், நடிகர் திலகத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தோமேயானால், முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், வசன உச்சரிப்புக்கும், நடன அசைவுகளுக்கும் மட்டும் நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியும். ஒரு தேர்ந்த தெருக் கூத்துக் கலைஞரைக் கண் முன் நிறுத்தியிருப்பார். ஒரு தெருக் கூத்துக் கலைஞர் பெரிதாக முக பாவனையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, மேடையில் என்ன காட்சி நடைபெறுகிறது என்பது கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும். கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கு மேடையில் நடிப்பவர் என்ன பேசுகிறார் என்பது கேட்டால் போதும் – அவர் முகம் எப்படி உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்பது தெரிய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு தெருக் கூத்துக் கலைஞரும், வசன உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி, இவைகளில் தான் பெரிதாக கவனம் செலுத்துவர். ஆனால், இந்தக் கலைஞர்களின் பங்களிப்புதான் மகத்தானது. திரையில் நடிப்பவர்கள், எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பங்களிப்பை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டே போக முடியும். ஆனால், நாடக/மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு, ரீடேக்கெல்லாம் கிடையாது. மேடையில் நின்ற பின், அவர்கள், அடுத்து என்ன பேசுவது என்பதை மறந்து, விழித்தார்களானால், கூச்சலில் ஆரம்பித்து கல்லடியில் தான் முடியும். அந்தக் கலைஞன், இழந்த பெயரை மீண்டும் நிலை நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து, போராடி, படாதபாடு படவேண்டியிருக்கும்.
இந்தக் தெருக்கூத்துப் பாடலில், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதமாக செய்திருப்பார். இத்தனைக்கும், சாவித்திரி அவர்களுக்கு, நாடக்கலையில், முன் அனுபவம் கிடையாது. நடிகர் திலகமும், இயக்குனர் ஏபிஎன்னும் சொல்லிக்கொடுத்ததை நன்கு உள்வாங்கி, அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.
அந்தக் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில், காட்டும் வேகம் மற்றும் மிடுக்கு (அந்த உடை கொஞ்சம் கூட கசங்காமல், இருக்கும், அந்த சிகை அலங்காரம் நிஜக் காவல்துறை அதிகாரியைக் கண் முன் நிறுத்தும்; இத்தனைக்கும், ஒரு பத்து நிமிடம் தான் வந்து போகும் பாத்திரம்; கடைசியில், ஆனந்தின் திருமணத்திற்கு அவர் அந்தக் கூடத்துக்குள் நுழையும் போதும் அதே வேகம்; மிடுக்கு) அதிலும், குறிப்பாக, சாவித்திரி யார் என்று தெரிந்து அவரை அனுப்பி வைத்து விட்டு, மக்களை – நம்மை நோக்கி – "lucky couple, eh!" என்று சொல்லி, சிங்கம் போல் கர்ஜித்து சிரித்து விட்டு – அதிலும் – மறுபடியும், ஹ்ம்ம்! என்று சொல்லி, சிகரெட்டை இழுத்து மறுபடியும், சிரிக்கும் ஸ்டைல் – கோடி கொடுக்கலாம் கொட்டி!. இதுவும், கர்ணனில் வரும் சிம்ம கர்ஜனையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், சிறு வித்தியாசம், அதில், கோபம் மற்றும் அவமானம்; இதில், ஒரு விதமான வெற்றி பெற்ற மனோபாவம் மற்றும் மன நிறைவு அடைந்தவுடன் வரும் அந்த அப்பாடா! என்ற மன நிலை.
அந்தக் கடைசி பாத்திரம், ஆனந்த் பாத்திரத்தில், பேசாமலயே காட்டிய அந்த உணர்வுகள்; மற்றும், திருமணக் கோலத்தில், மேடையில் அமர்ந்திருக்கும் போது, சாவித்திரி ஒரு மாதிரி அவரைக் கிள்ளும்போது நெளியும் அந்த நெளியல்;
பாச மலருக்குப் பின், மூன்று வருடங்கள் கழித்து, நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் படம் நெடுகிலும், சேர்ந்து ஜோடியாக நடித்து பெரிய வெற்றியை ஈட்டிய படம். இதற்கு முன்னர் இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை – ஏற்கனவே குறிப்பிட்ட காரணத்தால் – பாச மலருக்குப் பின்னர் இருவரையும் தமிழக மக்கள் அனைவரும் இவர்களை நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். நவராத்திரிக்கு சற்று முன் வந்த “கை கொடுத்த தெய்வம்” படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தில் இருவரும் படம் நெடுகிலும் ஜோடியாக நடிக்கவில்லை – கதையும் நட்பையும், கதாநாயகியின் வெகுளித்தனத்தால் ஏற்படும் விளைவுகளை ஒட்டியே இருக்கும்.
இந்தப் படம் வெளிவந்த காலத்திலேயே, ஹாலிவுட் நிறுவனமான, MGM -இன் நிறுவனர்கள், இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, கடைசி வரையில், இதில் நடித்தது, ஒரே நடிகர்தான் என்பதை நம்ப மறுத்து விட்டதாகவும், பின் அவர் ஒருவர்தான் என்று தெரிந்ததும், இதைப் போன்ற ஒரு நடிகர் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே வாங்கி விடுவோம் என்று கூறிச் சென்றதாகக் கூறுவர். பின்னாளில், இந்தப் படத்தைப் பிரதானமாக வைத்து தான், நடிகர் திலகத்திற்கு, செவாலியே விருதை, பிரான்சு அரசும் வழங்கி நடிகர் திலகத்தை கௌரவித்துத் தானும் கௌரவப் (கர்வப்!) பட்டுக்கொண்டது.
நவராத்திரி, முதலில் தெலுங்கில் 1966-இல், ஏ. நாகேஸ்வரராவும், சாவித்திரியும் நடித்து, அதே பெயரில் வெளியானது. தெலுங்கில், இந்தப் படம் ஓரளவிற்கு, நல்ல வெற்றியைப் பெற்றாலும், தமிழ் அளவிற்கு சரியாகப் போகவில்லை; அதற்குக் காரணம், மறுபடியும், நடிகர் திலகத்தின் நடிப்பில் ஐம்பது சதவிகிதத்தைக் கூட நாகேஸ்வரராவால் தொட முடியாமல் போனது தான். பல வருடங்களுக்கு முன்பு, ஒரு மேடையில், நடிகர் திலகத்திற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், (எந்த விழா என்று நினைவில் இல்லை, தெரிந்தவர்கள், கூறினால் உபயோகமாக இருக்கும்), நாகேஸ்வர ராவே இது பற்றிக் கூறும்போது, இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை; எத்தனயோ நடிகர்கள் அந்தந்த மொழிகளில் நடித்த படங்களை தமிழில் அசலை விட சிறப்பாக நடிக்கிறார்; ஆனால், அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் எடுக்கப் படும்போது, அசலில், சிவாஜி நடித்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களால் நடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, அவருடைய நவராத்திரி, தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, ஒன்பது வேடங்களிலும் , என்னால் அவர் அளவிற்கு நடிக்க முடியவில்லை . ஆறு அல்லது ஏழு வேடங்களில் தான் , அவருடைய நடிப்புக்கு ஓரளவிற்கு நிகராக என்னால் நடிக்க முடிந்தது என்று சொன்னார்.
நவராத்திரி, பிறகு, 1975-இல், ஹிந்தியில், “நயா தின் நயி ராத்” என்ற பெயரில், வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பாதுரி நடிப்பில் வெளி வந்தது. இவர்கள் இருவரும், அப்போது தான், கோஷிஷ் என்றொரு மகத்தான படத்தில் நடித்திருந்தனர். (சஞ்சீவ் குமார், கோஷிஷ் படத்திற்காக, பாரத் விருது வேறு வாங்கியிருந்தார் – தமிழில் இந்தப் படம், நடிகர் திலகம் நடிப்பதாக இருந்து, பின்னர், கமல் - சுஜாதா நடிப்பில், “உயர்ந்தவர்கள்” படமானது). இந்தப் படமும் ஹிந்தியில், நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனதற்குக் காரணம், நடிகர் திலகம் அளவிற்கு சஞ்சீவ் குமாரால் நடிக்க முடியாமல் போனது தான்.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
-
22nd March 2011, 02:41 AM
#1373
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
வழக்கம் போல், "நவராத்திரி" திரைக்காவிய அலசலும் அற்புதம்!
"நவராத்திரி"யில் நடிகர் திலகத்திற்கு ஒன்பது பாத்திரங்கள்; ஆயினும், நாடக நடிகர் கதாபாத்திரத்தில் அவர் ஏற்கும் 'சத்தியவான்' வேடத்தைச் சேர்த்தால் அவருக்கு மொத்தம் பத்து வேடங்கள்.
நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.
ஒரு நடிகரின் 100வது படம், சென்னை மாநகரில் வெளியான 4 பெரிய திரையரங்குகளிலும் [மிட்லண்ட்(101), மஹாராணி(101), உமா(101), ராம்(101)], ரெகுலர் காட்சிகளில், 100 நாட்கள் ஓடியது நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
மற்றும் மிகப் பெரிய திரையரங்குகளான மதுரை-ஸ்ரீதேவி(108), திருச்சி-சென்ட்ரல்(100) அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது.
100வது படம் கருப்பு-வெள்ளைப் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அது அபார வெற்றி கண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியதும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.
தனது 100வது திரைக்காவியம் வெளியான அதே தீபாவளித் திருநாளில் [3.11.1964], தனது இன்னொரு திரைக்காவியத்தையும் [99வது காவியமான "முரடன் முத்து"] வெளியிட்ட சிகர சாதனை, அசாத்திய துணிச்சல், அசுர தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே உண்டு.
"நவராத்திரி" 100 நாள் மாபெரும் வெற்றிக்காவியம் என்றால் "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல சென்டர்களின் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த சிறந்த வெற்றிக்காவியம். அதிகபட்சமாக, கோவை மாநகரின் 'இருதயா' திரையரங்கில் 79 நாட்கள் ஓடியது.
நமது சிவாஜி அவர்கள் நடிகர் திலகம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளின் 'ராஜ திலகம்'.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd March 2011, 03:04 AM
#1374
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 183
கே: எங்க மாமாவின் இளமை ரகசியம் என்ன? (தெய்வமகன் ரசிகர்கள், பம்பாய்-22)
ப: எதையும் கட்டுப்படுத்தக்கூடியவர் நம்ம தாத்தா! (சாந்தியின் மகளுக்கு)
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
22nd March 2011, 03:29 AM
#1375
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்பு சாரதி,
பாகப்பிரிவினை மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. 1976 -77 காலக்கட்டத்தில் பீம்சிங் அவர்கள் இயக்கத்திலே கமல்-ஸ்ரீதேவி நடிக்க நிறகுடம் என்ற பெயரில் வெளிவந்தது. படம் ஒரு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது என்று கேள்வி. கமலைப் பொறுத்தவரை 16 வயதினிலே சப்பாணி பாத்திரத்தை செய்வதற்கு இந்தப் படம் [நிறகுடம்] ஒரு பயிற்சி களமாக அமைந்தது என்று சொல்லலாம்.
கமலஹாசன் அவர்களின் 56வது திரைப்படமாக, "நிறகுடம்" மலையாளத் திரைப்படம், 29.7.1977 அன்று வெளியானது. கேரளத்தில் இப்படம் 100 நாட்களைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd March 2011, 04:12 AM
#1376
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 184
கே: பெண் சிவாஜியாக ஏன் சௌகார் ஜானகியை சொல்லக்கூடாது என்று பொருமுகிறாளே எனது பெண் சிநேகிதி? (எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை)
ப: சிலர், பத்மினியை மறந்து விட்டீர்களா என்கிறார்கள். சிலர், சாவித்திரிக்காக கஜ்ஜை கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்கள், தவிர, பானுமதியின் விசிறிகள் பலர். எல்லோரையும் மடக்க, சிவாஜியை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். சிவாஜி, ஓர் ஆண் சௌகார். சிவாஜி, ஓர் ஆண் பத்மினி. சிவாஜி, ஓர் ஆண் சாவித்திரி, ஆண் பானுமதி. நீங்களே சொல்லுங்கள், பொருத்தமாக இருக்கிறதா?!
(ஆதாரம் : குமுதம், 13.3.1980)
அன்புடன்,
பம்மலார்.
-
22nd March 2011, 06:10 AM
#1377
Senior Member
Seasoned Hubber
Thanks Parthsarathy and Swmay
Thanks a lot Mr. Parthasarathy and Mr. Swamy for keep providing more and more details of NT. I am simplying enjoying each post. Thanks a again. In front you guys I am very much tiny NT fan.
Cheers,
Sathish
-
22nd March 2011, 05:33 PM
#1378
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி,
ஆலயமணி ஆய்வுக்கட்டுரையைப்படித்து பதில் எழுதுவதற்குள், இன்னும் சிறப்பாக 'நவராத்திரி' சிறப்புக்கட்டுரை. ஒவ்வொரு ரோலைப்பற்றியும் உங்கள் விவரிப்பு மிகவும் அற்புதம். நுணுக்கமாக ஆராய்ந்து செதுக்குகிறீர்கள். அட்டகாசம்.
நவராத்திரியை நேரில் பார்த்ததுபோல, ஒவ்வொரு காட்சியாக அசைபோட வைத்தது. டாக்டர் கருணாகரன், கான்ஸ்டபிள் கரிக்கோல் ராஜுவிடம் 'உங்க உலகத்துக்கும் எங்க உலகத்தும் ரொம்ப தூரம்' என்று சொல்லும் இடத்தில் அவர் முகத்தில் பொங்கும் கருணை. சூப்பர். இன்றைக்கும் கூட பல விஐபிக்கள், விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் 'இரவில் ஆட்டம்' பாடலையோ அல்லது 'தெருக்கூத்து' காட்சியையோ ஒளிபரப்பாமல் இருப்பதில்லை. சமீபத்தில் மறைந்த மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சிலமாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இந்த தெருக்கூத்து காட்சியைப்பற்றி அணுஅணுவாக விவரித்து மகிழ்ந்தார்.
உங்களுடைய ஒவ்வொரு படத்தைப்பற்றிய பதிவும், அதைத்தொடர்ந்து அதன் சாதனை விவரங்களை பம்மலார் விவரிப்பதும், இத்திரிக்கு விறுவிறுப்பை ஊட்டி வருகின்றன.
தொடரட்டும் உங்கள் அதிரடிப்பயணம்.
-
22nd March 2011, 07:03 PM
#1379
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் பார்த்த சாரதி அவர்களின் பட அலசல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற மொழிகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஆய்வு சிறப்பானது. நவராத்திரி திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் ஹி்ந்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்கு பல காரணங்களைக் கூற முடிந்தாலும் முழு முதற் காரணம் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன் மற்றவை மிகவும் சாதாரணமாக தோற்றம் அளித்ததாகவும் கூறலாம். இருந்தாலும் நவராத்திரியை அவர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக எடுத்திருந்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தன. நம்முடைய மொழி பாடல்களுக்கும் அவர்களின் பாடல்களுக்கும் நிச்சயம் ஒப்பீடு செய்ய முடியாது.
அப்படி நயா தின் நயா ராத் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இது இரவினில் ஆட்டம் பாடலின் ஹிந்தி வடிவம். தமிழில் இடம் பெற்ற பாடலை மறந்து விட்டு இப்பாடலைப் பார்ப்பது நன்று. ஏனென்றால் அவர்கள் ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றவாறு பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார்கள். பாடலைப் பாருங்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd March 2011, 11:26 PM
#1380
Senior Member
Veteran Hubber
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,
நாம் எல்லோரும் சிவாஜி குலம், சிவாஜி இனம். நாம் அனைவருமே அவர் புகழ் பாடும் குயில்கள்தான். தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
சகோதரி சாரதா, பாராட்டுக்கு நன்றி!
வீடியோ வேந்தர் ராகவேந்தர் சார், 'மே வஹி வஹி பாத்' பாடலுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks