Page 139 of 199 FirstFirst ... 3989129137138139140141149189 ... LastLast
Results 1,381 to 1,390 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1381
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பற்றி காதல் மன்னன்

    "சிவாஜி கணேசன் என்னை 'மாப்ளே...மாப்ளே'ன்னு தான் கூப்பிடுவார். சாவித்திரியை 'தங்கை'ன்னு தான் அழைப்பார். அதனால மாப்பிள்ளை முறை என்பார். 'பராசக்தி' படத்துலேயே அவர் நன்றாக நடிச்சிருந்தார். ஒரு நல்ல நடிகர் கிடைச்சிருக்கார்னு நான் சந்தோஷப்பட்டேன். சிவாஜியும், நானும் இணைஞ்சு நடிச்ச முதல் படம் 'பெண்ணின் பெருமை'. முதல் படத்திலேயே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம். ஒரு ஷாட்டுல நான் அவரோட கன்னத்துல ஓங்கி அறையற மாதிரி சீன். உடனே சிவாஜி என்கிட்ட 'மாப்ளே, உண்மையிலேயே என் கன்னத்துல அடிச்சிடு. இல்லைன்னா வேறு எங்காவது படாத இடத்துல பட்டுடப்போவுது'ன்னு சொன்னார். நானும் 'சரி'ன்னு சொல்லிட்டேன். ஆனால் ஷாட்டின் போது அவரை எப்படி அடிக்கிறதுன்னு தயக்கம். அதனால அடிக்கிற மாதிரி ஆக்ஷன் தான் பண்ணினேன். அதுதான் வினையாக மாறிடுச்சு. என் கை அவரோட உதட்டுல பட்டு இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. 'மாப்ளே...என்ன இப்படி பண்ணிட்டியே? நீ உண்மையிலேயே அடிச்சிருந்தா வலியோடு போயிருக்குமே'ன்னு சொன்னார். இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு மனசு ரொம்ப சங்கடமாப் போச்சு. இதற்குப் பிறகு 1958-ல 'கல்யாண பரிசு' படத்துல நடிச்சிட்டு இருந்தேன். அதே நேரத்துல தான் ஜெய்ப்பூரில் 'கட்டபொம்மன்' படத்தோட ஷூட்டிங். அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஏதோ காரணத்துனால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அந்த வெள்ளையத் தேவன் கேரக்டரைத்தான் நான் பண்ணினேன். அப்போதும், அதற்குப் பிறகும் கூட நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடிச்சோம். சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் பீம்சிங் இயக்கத்துல தொடர்ச்சியாக நடிச்சோம். பதிபக்தி, பாவமன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம்-ன்னு எல்லாப் படங்களும் ரொம்ப நல்ல படங்களா அமைஞ்சுது. எல்லாப் படங்களும் மக்களிடையேயும் அமோகமாக வரவேற்பு பெற்று நன்றாக ஓடின. அந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதுமே என்னால் மறக்க முடியாதவை." [28.7.2003 தேதியிட்ட 'குமுதம்' இதழிலிருந்து]

    இன்று 22.3.2011 அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம். நமது நடிகர் திலகத்துடன் 13 திரைப்படங்களில் இணைந்து நடித்த காதல் மன்னனுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.

    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.

    இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1383
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)

    3. பாசமலர் (1961)

    இந்தப் படத்தின் டைட்டில் ஓடத் துவங்கியவுடன் ஒரு பாடல் பின்னணியில் துவங்கும் - "அன்பு மலர், ஆசை மலர்..." என்று. இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னரின் ஆரம்ப கால நண்பர் மற்றும் உதவியாளருமான திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்களது வித்தியாசமான குரலில்.
    டியர் பார்த்தசாரதி சார்,

    நமது பாசத்திலகத்தின் "பாசமலர்" காவியத்தினுடைய Title Songஆன 'அன்புமலர் ஆசைமலர்...' பாடலைப் பாடியவர் நமது மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்.

    நடிகர் திலகமும், காதல் மன்னனும் பார்வையால் பேசிக் கொள்ளும் கடற்கரைக் காட்சியில்,
    'முன்புறமாய் கால் நடக்கும்
    பின்புறமாய் மனம் நடக்கும்
    பேசினால் தீர்ந்துவிடும்
    சேர்ந்துவிடும் உறவு
    யார் முதலில் பேசுவது
    அங்கே தான் பிரிவு'
    எனப் பின்னணியில் ஒலிக்கும் வரிகளை இசைத்தவர் இசை மேதை ஜி.கே.வெங்கடேஷ்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1384
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 185

    கே: "தங்கை" படத்தில் சிவாஜி கணேசன் சண்டை போடும் காட்சிகள் எப்படி? (அன்புதாசன், கோயமுத்தூர்)

    ப: வெளுத்து வாங்கி விட்டார்.

    (ஆதாரம் : பேசும் படம் வெள்ளிவிழா மலர், ஆகஸ்ட் 1967)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1385
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 186

    கே: நடிகர் திலகத்திடம் உள்ள தனிச்சிறப்பு என்ன? (ஈ.முத்துக்குமார், அம்பலகாரன்பட்டி)

    ப: அவரைப் போல் தொழிலில் பக்தியுள்ளவர்களைக் காண்பது அரிது!

    (ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1978)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #1386
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    டியர் பார்த்தசாரதி சார்,

    வழக்கம் போல், "நவராத்திரி" திரைக்காவிய அலசலும் அற்புதம்!

    "நவராத்திரி"யில் நடிகர் திலகத்திற்கு ஒன்பது பாத்திரங்கள்; ஆயினும், நாடக நடிகர் கதாபாத்திரத்தில் அவர் ஏற்கும் 'சத்தியவான்' வேடத்தைச் சேர்த்தால் அவருக்கு மொத்தம் பத்து வேடங்கள்.

    நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.

    ஒரு நடிகரின் 100வது படம், சென்னை மாநகரில் வெளியான 4 பெரிய திரையரங்குகளிலும் [மிட்லண்ட்(101), மஹாராணி(101), உமா(101), ராம்(101)], ரெகுலர் காட்சிகளில், 100 நாட்கள் ஓடியது நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.

    மற்றும் மிகப் பெரிய திரையரங்குகளான மதுரை-ஸ்ரீதேவி(108), திருச்சி-சென்ட்ரல்(100) அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது.

    100வது படம் கருப்பு-வெள்ளைப் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அது அபார வெற்றி கண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியதும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.

    தனது 100வது திரைக்காவியம் வெளியான அதே தீபாவளித் திருநாளில் [3.11.1964], தனது இன்னொரு திரைக்காவியத்தையும் [99வது காவியமான "முரடன் முத்து"] வெளியிட்ட சிகர சாதனை, அசாத்திய துணிச்சல், அசுர தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே உண்டு.

    "நவராத்திரி" 100 நாள் மாபெரும் வெற்றிக்காவியம் என்றால் "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல சென்டர்களின் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த சிறந்த வெற்றிக்காவியம். அதிகபட்சமாக, கோவை மாநகரின் 'இருதயா' திரையரங்கில் 79 நாட்கள் ஓடியது.

    நமது சிவாஜி அவர்கள் நடிகர் திலகம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளின் 'ராஜ திலகம்'.

    அன்புடன்,
    பம்மலார்.
    அன்புள்ள பம்மலார் அவர்களே,

    தங்களுடைய பாராட்டு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பதிவு செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் விடாமல் உடனேயே அதற்கு பதில் பாராட்டு செய்து, அந்தப் படத்தைப் பற்றிய மேலும் சிறப்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி என்னை உற்சாகப்படுத்துவதோடு நிற்காமல், இந்தத் திரிக்கு மேலும் சுவையையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி விடுகிறீர்கள்.

    நன்றியுடன்,

    பார்த்தசாரதி

  8. #1387
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Thanks a lot Mr. Parthasarathy and Mr. Swamy for keep providing more and more details of NT. I am simplying enjoying each post. Thanks a again. In front you guys I am very much tiny NT fan.

    Cheers,
    Sathish
    Dear Sathish,

    Thanks for your sincere appreciation. In front of NT, every human being is tiny. We all get immense pleasure and satisfaction whenever we think, talk, discuss, write, share and see NT and his performances.

    Thanks once again,

    Regards,

    R. Parthasarathy

  9. #1388
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    டியர் பார்த்தசாரதி,

    ஆலயமணி ஆய்வுக்கட்டுரையைப்படித்து பதில் எழுதுவதற்குள், இன்னும் சிறப்பாக 'நவராத்திரி' சிறப்புக்கட்டுரை. ஒவ்வொரு ரோலைப்பற்றியும் உங்கள் விவரிப்பு மிகவும் அற்புதம். நுணுக்கமாக ஆராய்ந்து செதுக்குகிறீர்கள். அட்டகாசம்.

    நவராத்திரியை நேரில் பார்த்ததுபோல, ஒவ்வொரு காட்சியாக அசைபோட வைத்தது. டாக்டர் கருணாகரன், கான்ஸ்டபிள் கரிக்கோல் ராஜுவிடம் 'உங்க உலகத்துக்கும் எங்க உலகத்தும் ரொம்ப தூரம்' என்று சொல்லும் இடத்தில் அவர் முகத்தில் பொங்கும் கருணை. சூப்பர். இன்றைக்கும் கூட பல விஐபிக்கள், விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் 'இரவில் ஆட்டம்' பாடலையோ அல்லது 'தெருக்கூத்து' காட்சியையோ ஒளிபரப்பாமல் இருப்பதில்லை. சமீபத்தில் மறைந்த மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சிலமாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இந்த தெருக்கூத்து காட்சியைப்பற்றி அணுஅணுவாக விவரித்து மகிழ்ந்தார்.

    உங்களுடைய ஒவ்வொரு படத்தைப்பற்றிய பதிவும், அதைத்தொடர்ந்து அதன் சாதனை விவரங்களை பம்மலார் விவரிப்பதும், இத்திரிக்கு விறுவிறுப்பை ஊட்டி வருகின்றன.

    தொடரட்டும் உங்கள் அதிரடிப்பயணம்.
    டியர் சாரதா மேடம் அவர்களே,

    தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

    நன்றியுடன்,

    பார்த்தசாரதி

  10. #1389
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அன்பு நண்பர் பார்த்த சாரதி அவர்களின் பட அலசல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற மொழிகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஆய்வு சிறப்பானது. நவராத்திரி திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் ஹி்ந்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்கு பல காரணங்களைக் கூற முடிந்தாலும் முழு முதற் காரணம் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன் மற்றவை மிகவும் சாதாரணமாக தோற்றம் அளித்ததாகவும் கூறலாம். இருந்தாலும் நவராத்திரியை அவர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக எடுத்திருந்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தன. நம்முடைய மொழி பாடல்களுக்கும் அவர்களின் பாடல்களுக்கும் நிச்சயம் ஒப்பீடு செய்ய முடியாது.
    அப்படி நயா தின் நயா ராத் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இது இரவினில் ஆட்டம் பாடலின் ஹிந்தி வடிவம். தமிழில் இடம் பெற்ற பாடலை மறந்து விட்டு இப்பாடலைப் பார்ப்பது நன்று. ஏனென்றால் அவர்கள் ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றவாறு பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார்கள். பாடலைப் பாருங்கள்.


    அன்புடன்
    டியர் ராகவேந்தர் அவர்களே,

    தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை ஒரு நடிகர் திலகத்தைப் பற்றிய படத்தைப் பற்றிப் பதிவிட்ட உடனேயே, நீங்கள் அனைவரும் (நீங்கள், முரளி சார், பம்மலார், சாரதா மேடம், பாலா, மற்றும் பலர்) பதில் பாராட்டு அளிப்பதோடு நிற்காமல், அந்தப் படங்களைப் பற்றி மேலும் பல நுணுக்கமான விவரங்களை உடனுக்குடன் அளித்து, மேலும் மேலும், இந்தத் திரிக்கும், நடிகர் திலகத்துக்கும் வான் புகழை அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

    நன்றியுடன்,

    பார்த்தசாரதி

  11. #1390
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Thanks Mr.Parthasarathy for Very good Review about NAVARATHIRI.

    Thanks Mr.Pammalar for your Value added services to every review.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •