-
28th March 2011, 11:45 PM
#1461
அன்புள்ள சாரதி,
நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த திரியில் ஒரு நீண்ட பதிவை எழுதியது உண்மைதான். காரணம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய பதிவுகளை ஒரு தொடராக எழுதிக் கொண்டிருக்கும் போது அது எந்த இடையூறும் இன்றி வாசகர்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான். மற்றொரு காரணம் கடந்த பல நாட்கள் நமது ஹப்பின் அரசியல் திரியில் பங்கு கொண்டு அருமை சகோதரர் ஜோ அவர்களுடனும், அருமை சகோதரி சாரதா அவர்களுடனும் வாதப் பிரதிவாதம் செய்துக் கொண்டிருந்தேன் [அங்கேயும் நமது நடிகர் திலகம் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தேன்]. ஆகவே நமது திரியில் அவ்வளவாக பங்கு கொள்ள முடியவில்லை.
அவன்தான் மனிதன் பற்றி நீங்கள் சொன்னதும் மிக சரியாக ஐந்து வருடங்களுக்கு முன் நான் இந்த ஹப்பில் நுழைந்த போது நடிகர் திலகம் திரியில் முதன் முதலில் தெய்வ மகன் மூன்று சிவாஜிகள் சந்திக்கும் இடம் பற்றி எழுதினேன். பிறகு சக்தி பிரபா அவர்களுக்காக தங்கப்பதக்கம் படத்தின் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சி பற்றி எழுதினேன் [ஒரு நாள் சாப்பிடலைனா உயிரா போயிடும்?]. அப்போது ஜோ வந்து முதல் நாள் அவன்தான் மனிதன் பார்த்தேன் என்று சொன்னார். அப்போது எனக்கு மிகவும் பிடித்த காட்சி பற்றி சொன்னேன். "லலிதா, நீ படிச்சவ பண்பு நிறைஞ்சவ உன்னை மனைவியா அடையற அளவிற்கு -- ' என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு சின்ன இடைவெளி விட அதற்கு ஜெஜெ "சந்துரு தகுதியில்லாதவர்னு நினைக்கிறீங்களா" என்று பதில் சொன்னவுடன் நடிகர் திலகம் முகபாவம் மாறும் பாருங்கள்! பின்னியிருப்பார். உள்ளே நுழையும் மேஜர் ஏதாவது உளறி விடப் போகிறாரே என்று ஜெஜெவை அனுப்பி விட்டு [அது ஒரு காலாவதியான பத்திரம்] என்று சொல்லி விட்டு கடிதத்தை கிழித்துக் கொண்டே படியேற "எஜமான் எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா" என்று கேட்க " ஆகா" என்று திரும்புவாரே! மறக்கவே முடியாத காட்சி!
படம் வெளியான முதல் நான்கு வாரங்களில் மட்டும் மதுரை சென்ட்ரலில் 5 முறை பார்த்தேன். பிறகு படம் மறு வெளியிடுகளில் வந்த போதும் பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது நான் தியேட்டரில் பார்த்த கடைசி படம். 2001 பிப்ரவரி மாதம் மதுரை ஸ்ரீதேவியில் வெளியான போது ஞாயிறு மாலைக் காட்சி பார்த்தேன். முதல் வெளியிட்டில் மதுரையில் தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ்புல். முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்தது. பொள்ளாச்சி போன்ற இடைநிலை நகரங்களில் கூட தொடர்ந்து 100 காட்சிகள் ஹவுஸ்புல். தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100 நாட்களை கடந்த இந்த படம் மதுரையில் 105 நாட்களில் சுமார் 4 ,22 ,000/- ரூபாய் வசூல் செய்தது. [அதே சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமாவும், தங்கப்பதக்கமும் 100 நாட்களில் பெற்ற வசூலை கிட்டத்தட்ட நெருங்கியது]. அது போல மதுரையில் மறு வெளியீடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட படம். 2005 காலக் கட்டத்தில் அதே சென்ட்ரலில் வெளியான போது ஒரே வாரத்தில் 60000/- ருபாய் வசூல் செய்தது.
அன்புடன்
பதிந்த பிறகு பார்க்கிறேன். ராகவேந்தர் சார் அதே காட்சியை இங்கே கொடுத்திருக்கிறார்,
-
28th March 2011 11:45 PM
# ADS
Circuit advertisement
-
28th March 2011, 11:57 PM
#1462
ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பழைய ஹப்பில் 100 பக்கங்கள் வந்தவுடன் அடுத்த பாகத்தை தொடங்குவோம். புதிய முறையில் எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் போகும் என்ற போதிலும் 150 பக்கங்களை நிறைவு செய்யும்போது பாகம் 8 தொடங்கலாம் என்பது என் கருத்து. 150 என்று குறிப்பிட காரணம் இப்போது பழைய பாகங்களை பார்த்தோம் என்றால் பழைய 100 பக்கங்கள் இப்போது 150 பக்கங்களாக காட்சியளிக்கிறது. எனவே இதையும் 150 பக்கங்களில் நிறைவு செய்து நடிகர் திலகம்- Part 8 தொடங்கலாம். நாம் முன்பே சொன்னபடி ராகவேந்தர் சார் அவர்களை Part 8 தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் இக்கருத்து ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
-
29th March 2011, 12:41 AM
#1463
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பழைய ஹப்பில் 100 பக்கங்கள் வந்தவுடன் அடுத்த பாகத்தை தொடங்குவோம். புதிய முறையில் எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் போகும் என்ற போதிலும் 150 பக்கங்களை நிறைவு செய்யும்போது பாகம் 8 தொடங்கலாம் என்பது என் கருத்து. 150 என்று குறிப்பிட காரணம் இப்போது பழைய பாகங்களை பார்த்தோம் என்றால் பழைய 100 பக்கங்கள் இப்போது 150 பக்கங்களாக காட்சியளிக்கிறது. எனவே இதையும் 150 பக்கங்களில் நிறைவு செய்து நடிகர் திலகம்- Part 8 தொடங்கலாம். நாம் முன்பே சொன்னபடி ராகவேந்தர் சார் அவர்களை Part 8 தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் இக்கருத்து ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
நமது முரளி சார் முன்மொழிந்ததை முதல் ஆளாக வழிமொழிகிறேன்!
-
29th March 2011, 01:08 AM
#1464
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
அன்புள்ள சாரதி,
அவன்தான் மனிதன் 2005 காலக் கட்டத்தில் அதே சென்ட்ரலில் வெளியான போது ஒரே வாரத்தில் 60000/- ருபாய் வசூல் செய்தது.
டியர் முரளி சார்,
வாழ்வியல் திலகத்தின் "அவன் தான் மனிதன்", மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 2004-ல் மறுவெளியீடாக வெளியான போதுதான் தாங்கள் குறிப்பிட்ட மெகா வசூலை ஈட்டியது. 12.3.2004 வெள்ளி முதல் 18.3.2004 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில் "அவன் தான் மனிதன்" சென்ட்ரலில் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.60,000/-த்திற்கும் மேல்.
அன்புடன்,
பம்மலார்.
-
29th March 2011, 01:18 AM
#1465
Senior Member
Veteran Hubber

Originally Posted by
murali srinivas
பதிந்த பிறகு பார்க்கிறேன். ராகவேந்தர் சார் அதே காட்சியை இங்கே கொடுத்திருக்கிறார்,
Great People Think Alike !!!
-
29th March 2011, 02:38 AM
#1466
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 189
கே: நடிகர் திலகம் சிவாஜியின் மணிமண்டபம்? (ப.சிவகுமார் பிரபு, பொன்னாபுரம்)
ப: 'மகா' மண்டபமாக உருவாக வேண்டியது வெறும் 'மன' மண்டபமாக நிற்கிறது.
(ஆதாரம் : ராணி, 27.3.2011)
அன்புடன்,
பம்மலார்.
-
29th March 2011, 03:47 AM
#1467
Senior Member
Veteran Hubber
வீடியோவேந்தர் ராகவேந்தர் சார்,
"பாலாடை" வீடியோக்களை பதிவிட்டு பின்னியெடுத்து விட்டீர்கள்! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!
"பாலாடை", நமது நடிகர் திலகத்தின் 114வது திரைக்காவியமாக - 107வது கருப்பு-வெள்ளைக் காவியமாக - 16.6.1967 அன்று வெளிவந்தது. "பதிபக்தி" முதற்கொண்ட சிவாஜி-பீம்சிங் "ப-பா" வரிசையில் 13வது காவியம் "பாலாடை". உலக சினிமாவின் தலைசிறந்த கூட்டணிகளில் ஒன்றான சிவாஜி-பீம்சிங் கூட்டணியின், அதற்கு முந்தைய மெகாஹிட், சூப்பர்ஹிட் காவியங்களின் ரேஞ்சில் இக்காவியம் ஓடாவிட்டாலும் தோல்விப்படமாக அமையவில்லை. முதல் வெளியீட்டில், "பாலாடை", 8 வாரங்கள் ஓடிய ஒரு சராசரி வெற்றிக் காவியமாகவே திகழ்ந்தது.
சந்துரு பேசும் தெய்வத்தின் அருளுடன் ஜெயக்கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயத்தில், மதன் தன் தங்கைக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வேளையில், சேகர் பாலாடையை அளிக்க மக்கள் விரும்பி உண்டனர். சேகர் வெற்றி உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், அப்பரும், சுந்தரரும், திருக்குறிப்புத் தொண்டரும், சேக்கிழாரும், வில்லவ மன்னனும் திக்விஜயம் செய்ய திருவருட்செல்வர்களை தரிசிக்க மக்கள் அலைகடலெனத் திரண்டனர். எனினும், பாலாடை சேகர் 8 வாரம் பவனி வந்தார். பின்னாளில், பல அரங்குகளில், 11:30 மணிக் காட்சியில் பின்னி எடுத்தார் சேகர் என்பது வேறு விஷயம்.
அன்புடன்,
பம்மலார்.
-
29th March 2011, 04:23 AM
#1468
Senior Member
Seasoned Hubber
Avan Than Manithan
Ragavendra sir, Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks.
I would say infinite thanks for wonderful video of NT, wow simply superb. Even after watching 100 times. it makes me to watch is again, for our NT, even this movie is enough to prove anyone to raise the question about his calibre. There will be no other actor can touch his shoe even.
NT face expression excellent as described by Murali sir. Just to add my 2 cents. this movie re-released on 1990 at Madurai Meenakshi theatre and our Goldstar Sivaji Student Wing has had 4 bits posters (We are only one started 4 bits concept in Madurai) and that time 4 bits were talk of the city and this movie run 2 weeks continuously in Madurai Meenakshi theatre. Madurai Meenakshi theatre is MGR strong hold threate, running any movies other than MGR that to continuously for 2 weeks is big vicotor for our NT that too when Kamal and Rajini were in very much peak. Only NT can pull the crowd and he is ONE and ONLY Box Office King.
Cheers,
Sathish
-
29th March 2011, 09:21 AM
#1469
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பார்த்த சாரதி,
அவன் தான் மனிதன் - இந்தப் படத்தைப் பற்றி நினைக்கும் போதே எங்கள் உடலுக்குள் பல கோடி வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியது போல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. 175 என்ற எண்ணுக்கும் உயிர் கொடுத்த கலைஞன் நடிகர் திலகம். அணு அணுவாக ரசிக்க வேண்டிய படம். உள்ளம் நெகிழ வைக்கும் நடிப்பு. முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்றால் அதற்கு முழு நியாயமும் இப்படத்தில் உண்டு. குறிப்பாக எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடலில் அவருடைய எழிலான நடையும் நளினமான தோற்றமும் குழந்தையுடன் உற்சாகமான துள்ளலும் என்றால் அதே ரவிகுமார் குழந்தையுடன் சோகம் கலந்த குரலில் ஆட்டுவித்தார் பாடலின் போது புன்னகைக்கும் விதமும் உலகத்தில் இவரைப் போல் இனி யாரும் இல்லை என்பதை கட்டியம் கூறும். அனைவரும் நினைத்து மயங்க இதோ ஒரு காட்சி.
அன்புடன்
டியர் ராகவேந்தர் அவர்களே,
அவன் தான் மனிதன் படத்தைப் பற்றிய நினைவுகள் எல்லோருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் எனினும், நான் எழுதி அந்த இனிய நினைவுகள் மேலும் எல்லோருக்கும் கிளர்ந்து எழ என்னால் முடிந்ததைப் பதிந்தேன். பதிந்து முடித்தவுடன், தாங்கள் அந்தப் படத்தைப் பற்றிய நினைவுகளை மேலும் மெருகூட்ட, அந்தப் படத்தின் மிகச் சிறந்த காட்சிகளுள் ஒன்றை உடனே பதிவிட்டு, எல்லோரையும் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.
Subtle ஆக்டிங் ஸ்டைல் - இந்த வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம் அவன் தான் மனிதன் என்பதற்கு யாரிடமிருந்தும் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்காது என்றே நம்புகிறேன். அதிலும், நடிகர் திலகத்தின் பிரத்தியேக ஸ்டைல் நடிப்பையும் சேர்த்தே அளித்து, ரவிகுமார் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அந்த மாமேதையை நினைக்க நினைக்க .... மேற்கொண்டு எழுத முடியாமல் தவிக்கிறேன்.
நன்றி கலந்த அன்புடன்,
பார்த்தசாரதி
-
29th March 2011, 09:35 AM
#1470
Senior Member
Senior Hubber
டியர் முரளி அவர்களே,
நான் இன்று வந்துதானே சேர்ந்து கொண்டேன். என்னதான் இருந்தாலும், அவ்வப்போது, நீங்களும், திரு ராகவேந்தர், திரு பம்மலார், சாரதா மேடம், ராகேஷ், ஜோ, ப்ளம், போன்ற சீனியர்கள் எழுதிக் கொண்டே இருந்தால் தான் இந்தத் திரிக்கு ஒரு பூரணத்துவம் கிடைத்து மேலும் மேலும் சுவை கூடிக்கொண்டே போகிறது.
திரு ராகவேந்தர் அவர்களுக்கு கூறியதை மறுபடியும் உங்களுக்கும் பகர்கிறேன். அவன் தான் மனிதன் படத்தைப் பற்றிய நினைவுகள் எல்லோருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் எனினும், நான் எழுதி அந்த இனிய நினைவுகள் மேலும் எல்லோருக்கும் கிளர்ந்து எழ என்னால் முடிந்ததைப் பதிந்தேன். பதிந்து முடித்தவுடன், தாங்கள் அந்தப் படத்தைப் பற்றிய நினைவுகளை மேலும் மெருகூட்ட, அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றி உடனே பதிவிட்டு, எல்லோரையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
Subtle ஆக்டிங் ஸ்டைல் - இந்த வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம் அவன் தான் மனிதன் என்பதற்கு யாரிடமிருந்தும் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்காது என்றே நம்புகிறேன். அதிலும், நடிகர் திலகத்தின் பிரத்தியேக ஸ்டைல் நடிப்பையும் சேர்த்தே அளித்து, ரவிகுமார் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அந்த மாமேதையை நினைக்க நினைக்க ..... நினைவுகள் எங்கோ சிறகடிக்க ஆரம்பிக்கிறது. (சாந்தி தியேட்டரில் மெய் மறந்த நாட்கள்........)
நன்றி கலந்த அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks