எந்தப் பாடகரானாலும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு தன் வாயசைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் ஐக்கியமாகி விடும் ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதே விதி மற்றவர்களுக்கும் பொருந்தும் ,,, ஏனென்றால் யார் பாடினால் என்ன, நான் வாயசைத்தால் என்ன, மூடிக் கிடந்தால் என்ன என்போரும் உண்டு. பாட்டுக்கெல்லாமா வாயசைத்து மெனக்கெட வேண்டும் என்போரும் உண்டு. பாட்டுக்கு வாயசைத்து நடித்தால் கௌரவக் குறைச்சல் என்று கருதக் கூடிய நடிக நடிகையரும் உண்டு, ரசிகர்களும் உண்டு.
அவர்களுக்காக ஒரு வார்த்தை ...
ஒரு பாடலை உருவாக்க ஒலிப்பதிவாளர், பாடகர், பாடகியர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர், அதனை படத்தில் உயிரோட்டமாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர், என எண்ணற்றோர் கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய உழைப்பினை மரியாதை செய்ய நினைப்போர், நிச்சயமாக பாடல் காட்சியில் ஜீவனுடன் நடிப்பர் என்பது உறுதி.
மனோகரா படத்திலிருந்து அருமையான பாடல் வழங்கிய பம்மலாருக்கு நன்றி.
இப்பாடலை எழுதியது, உடுமலை நாராயண கவியா அல்லது கலைஞரா என்ற மாறுபட்ட கருத்து நிலவுவதாக அந்தக் காலத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அன்புடன்




Bookmarks