நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமையும் உவகை கொள்ளும் போது தாய்த் தமிழ்நாட்டில் அவருடைய வெற்றிகளையும் சாதனைகளையும் மறைத்து அதில் சந்தோஷமடையும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று. இதனை அந்த அன்பர்களுக்கு நாம் அன்புடன் சமர்ப்பிப்போம்.
அன்புடன்
சிங்கத்தமிழனின் வான்புகழை வானளாவப் பாடிய சிங்கைக் குயில்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் !
இந்த அருமையான வீடியோவை இங்கே பதிவிட்ட வீடியோ வேந்தருக்கு வளமான நன்றிகள் !
எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?
Rajaram,
Could you please give the details of 100 days, 175 days of MGR movies and also give me the 100 days movies before MGR started his own party? Please give the collections of MGR movies? Please speak with proof and don't just say other said this and that...
பாராட்டுக்கு நன்றி ! ஸ்டாரில் "புதிய பறவை", சந்தோஷமான விஷயம் !
டியர் selva7, நன்றி !
டியர் mr_karthik, பாராட்டுக்கு நன்றி !
டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் பற்றிய செய்திகள் மற்றும் திரைப்படத் தகவல்கள் பலவற்றை மிகவும் சுறுசுறுப்பாக வழங்கி இந்த திரி உயிரோட்டமாக உள்ளது. அடிக்கடி இந்த திரியை வாசிப்பவனாக எனக்கு நிறைய புதிய செய்திகள் கிடைத்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
Last edited by selva7; 30th April 2011 at 08:44 AM.
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks