-
15th May 2011, 09:20 PM
#1891
Senior Member
Veteran Hubber
uruppadiyA irundhadhu indha oru thiridhAn idhuvum ippO gaaliyA
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
15th May 2011 09:20 PM
# ADS
Circuit advertisement
-
15th May 2011, 09:32 PM
#1892
Senior Member
Diamond Hubber
சம நிலை என்றால் எதுவென்று வெளங்க மாட்டீங்குது. ஊமைக் கோட்டான் போல எப்போதும் அமைதியாய் இருப்பதா? இல்லை.... பொதுவாக மக்களிடத்தில் நிலவுகிற ஒரு கருத்தை சொல்ல விழைவதா? அரசியலைப் பொறுத்தவரை கட்சி ஓட்டுக்கள் எல்லாப் பக்கத்திலும் உண்டு. ஆனால் அவர்களின் ஒட்டு சட்டசபை, மத்திய ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுவது கிடையா. இது இரண்டுக்கும் இடையில் ஒரு சாரார் உண்டு. அவர்கள் தான் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆட்சியை நிர்ணயிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இந்த முறை அதிமுகவிற்கு சார்பாக பேசிய, வாக்களித்த மக்கள் அனைவரையும் ஒரு பக்க சார்பு என அடைக்க முடியாது. அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் அனைவரும் சமநிலை இல்லை என முத்திரைக் குத்துவது வேடிக்கை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2011, 09:45 PM
#1893
Senior Member
Seasoned Hubber
டியர் ஜோ,
தங்களுடைய பதிவில் என் மேல் உள்ள கோபத்தை என்னால் உணர முடிகிறது. என்னை ஒரு சார்பானவர் என்கிறீர்கள். ஆம் அதில் ஓரளவு உண்மை உள்ளது, என்னுடைய ஒரே சார்பு, நடிகர் திலகம் மட்டும் தான். அவருக்கு மரியாதை செய்யும் போது நன்றி பாராட்டு்ம் போதும் அவருடைய மேன்மையைக் குறைத்துப் பேசும் போது எதிர்ப்பை தெரிவிக்கும் போதும் நான் என் கடமையை செய்வதாக உணர்கிறேன். அது யார் என்பது அப்போது என் கண்ணுக்கு தெரியாது. அதனால் தான் என்னைப் போன்ற சிவாஜி ரசிகர்களால் யாரையும் பாராட்டவும் முடிகிறது, எதிர்ப்பை தெரிவிக்கவும் முடிகிறது. சிவாஜி ரசிகர்களுக்கு இருக்கும் ஆதங்கம் உங்களுக்கு தெரியாததல்ல. ஏனென்றால் ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் மன ஓட்டமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வில்லை என்கிற மன வருத்தம் இருக்கும் போது அவருடைய மேன்மையை அங்கீகரித்து யாராவது ஒரு சிறிய அளவில் ஏதாவது செய்தாலும் கூட அதனை மிகவும் மகிழ்ச்சியோடும் அளவிலா ஆனந்தத்தோடும் வரவேற்பவர்கள் நாம் அனைவரும். அதே நேரத்தில் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் அவரவருடைய தனிப்பட்ட கருத்தை உள்ளடக்கியதாகும். நான் ஒருவன் சொல்வதால் இங்கு யாரும் தங்கள் கருத்தை மாற்றி ஓட்டளிக்கப் போவதில்லை. அப்படிப் பட்ட செல்வாக்கு எனக்கு இருப்பதாக நான் நினைத்தால் என்னைவிட அறிவீனமானவர் இன்னொருவர் இருக்க முடியாது. ஒரு சிவாஜிரசிகனாக அந்தக் காலத்திலிருந்து நாம் சந்தித்த அல்லது கேள்விப் பட்ட விஷயங்களை மற்ற ஒத்த கருத்துடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அனைவருக்கும் புதுப்புது செய்திகள் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.
என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் ஒருவரைத் தவிர வேறுயாரையும் தலைவராய் ஏற்கும் மனது இல்லை. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்த வரையில் நடிகர் திலகம் மட்டும் தான் என்றும் ஒரே தலைவர்.
மற்றபடி தேர்தல் என்பதும் வாக்களிப்பு என்பதும் நமக்கு ஒரு சம்பிரதாயம் அவ்வளவே. யார் நடிகர் திலகத்திற்கு மேன்மை செய்தாலும் நன்றி பாராட்டுதலைக் கடமையாகக் கொண்டுள்ளேன். இதில் இவர் அவர் என்கிற பேதமில்லை.
என்னுடைய அபிப்ராயத்தில் தாங்கள் நிச்சயம் மாறுபடலாம். அது தங்களுடைய உரிமை. மற்றபடி தாங்களும் தங்களைப் போல் ஒத்த கருத்துடையோர் யாராயிருந்தாலும் அனைவரும் என் சகோதர சகோதரியராவார். அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அனைவரும் ஒரு குடு்ம்பத்தினர்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th May 2011, 12:11 AM
#1894
Senior Member
Veteran Hubber

Originally Posted by
masanam
நிறம் மாறும் பூக்கள்
"நிறம் மாறும் பூக்கள்" என்கின்ற அரும்பு, மணம் வீசும் மலராக மலர்க !
-
16th May 2011, 12:41 AM
#1895
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 192
கே: ஜெயலலிதா நடிப்பில் கைதேர்ந்ததில் யாருக்குப் பங்குண்டு? (பெ.சுப்பண்ணன், தி.ராமநாதபுரம்)
ப: "நடிப்பில் எனது குரு சிவாஜி தான்" என்று அவரே கூறியிருக்கிறாரே !
(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1971)
மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள தங்கத்தாரகை கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
-
16th May 2011, 02:56 AM
#1896
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகம் பற்றி திரு.என்.ரங்கசாமி
[புதுவையில் 11.2.2006 சனிக்கிழமையன்று புதுவை அரசு சார்பில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வெண்கலத் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி அவர்களின் பெருமுயற்சியின் பலனாக அவரது அரசு நிர்மாணித்த சிலையினை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய சிறப்புரையிலிருந்து சில வரிகள்]
"பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்றுக் கொண்டவர் சிவாஜி கணேசன். பெருந்தலைவர், சிவாஜியைத் தவிர வேறு யார் பிறந்தநாளுக்கும் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது கிடையாது. பெருந்தலைவரோடு சிவாஜி இணைந்து அரசியல் மற்றும் தேர்தல் பணியாற்றியதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நான் பதவியேற்ற முதல் நாளிலேயே சிவாஜி மன்றத்திலிருந்து வந்தவன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். கலைத்தாயின் தலைமகன் சிவாஜி. ஒரு தாய்க்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும் முதல் குழந்தைக்குத்தான் அவள் பெரிதும் மகிழ்வாள். அதனால் தான் சிவாஜியை கலைத்தாயின் தலைமகன் என்கிறோம். நடிகர் திலகம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். இந்திய நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் அவர். நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவருக்கு சிலை அமைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு சிலை வைப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை."
மூன்றாவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்க இருக்கும் நடிகர் திலகத்தின் நல்லிதயம் திரு.என்.ரங்கசாமி அவர்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
-
16th May 2011, 10:25 AM
#1897
Administrator
Platinum Hubber
Vietnam Veedu to be staged in Malaysia
Pleased to inform you that the popular Tamil stage Drama VIETNAM VEEDU which was staged by the late legend Sivaji Ganesan will now be restaged here. Most of you would be aware that this drama was later made into a movie under the same title acted by Sivaji Ganesan and Padmini.
This drama would now be restaged and acted by Kalai Mamani Y.G. Mahendaran a well known movie star. The drama would be staged on
July 31st at the Civic Auditorium, Petaling Jaya.
Organized by the Sivaji Ganesan Cultural Society, Malaysia in conjunction with the 10th Memorial Anniversary of the legendary star Chevalier Nadigar Thilagam Dr Sivaji Ganesan.
Sponsors, Donors and Advertisers who wish to support this event may call us.
Thanks
Yours Sincerely,
EASHVARA LINGAM
Founder and Member of Board of Management
SIVAJI GANESAN CULTURAL SOCIETY, MALAYSIA
*tel: 016-6880455*
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th May 2011, 10:49 AM
#1898
Senior Member
Diamond Hubber
Oh
-
16th May 2011, 11:22 AM
#1899
Senior Member
Seasoned Hubber
NT's fans allapparai in Singapore and Malaysia
Guys from SG or ML (Joe and Rakesh and other friends) please give the details of how fans in these countries used to do allapparais on NT's movies day?
I am more interested whether it will be like TN or better than that? How about cut-outs, posters and garlands? It would be nice if we get details of previously released movies.
Cheers,
Sathish
Last edited by goldstar; 16th May 2011 at 11:59 AM.
-
16th May 2011, 11:29 AM
#1900
Senior Member
Diamond Hubber
Sathish, Joe is not a Singaporean, but he might have some stories from his friends and colleagues there.
As for me, it's zillch. My Dad and his side of family are hardcore MGR fans, so only MGR films for us then. Otherwise, my childhood big screen experience limited to lots of Kamal films and a smattering of Rajini films.
Inviting NOV to the stage now..
Bookmarks