நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளுக்குள் கருத்து வேற்றுமை வேண்டாமே! இந்த பரந்துப்பட்ட இணையத்தில் நடிகர் திலகத்தின் இந்த திரியைப் போன்ற ஒன்று, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த அளவிற்கு சிறப்பாக, சுவையாய் இத்தனை தகவல்கள் அடங்கியதாய் இல்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த திரியில் பங்களிப்பு செய்யாவிட்டாலும் கூட நமது ஹப்பில் பலரும் இந்த திரியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாம் அறிவோம்.
ஆகவே அதை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

ராகவேந்தர் சார் பற்றி நான் நன்கு அறிவேன். அது போல் கார்த்திக், ஜோ போன்றவர்களின் மனோ நிலையையும் நான் அறிவேன். ராகவேந்தர் சாரிடம் பேசினேன். அவர் மீண்டும் இங்கே தன் பதிவுகளை தொடர்வார். அது போல ஜோ, கார்த்திக் போன்றவர்களும் என் பேச்சுக்கு செவி மடுப்பார்கள் என நம்புகிறேன். அவர்களும் தங்கள் பங்களிப்பை தொடர்வார்கள் என அவர்கள் சார்பில் நான் சொல்லலாம் என நினைக்கிறேன்.

மீண்டும் அதே உத்வேகத்துடன் திரியை முன்னெடுத்து செல்ல அனைவரின் ஆதரவையும் வேண்டும்

அன்புடன்