-
30th May 2011, 02:41 PM
#71
Senior Member
Platinum Hubber
NT vs VKR - yes 
Actually, here he invokes comedy with a subtle sense of satire, and elegant ripostes. Not at all easy - when you talk about comedians and heros doing comedy, it is a particular aspect of comedy that they master(Kamal being the later exception ofcourse). They have their brand of comedy that they excel in - with NT, you get the whole range. You sense that the disrespectful, no-holds-barred, sarcastic, whip-tongued, remorseless prankster is a persona that NT had hidden under his real-life nice-guy persona. He brings it out with vengeance here, resulting in much hilarity and a sense of awe at a man who can, at will, bring out a whole new persona you never knew existed in him. What I mean is it is not like he is acting out muradan muthu - that impish muradan had been residing inside him for all these years, and this story was just an outlet for one of the thousand myriad multiple personalities that NT played host to in his mind.
The man is just not an actor. He is something else.
-
30th May 2011 02:41 PM
# ADS
Circuit advertisement
-
30th May 2011, 02:54 PM
#72
Senior Member
Diamond Hubber
Well put, Plum.
The film itself is a remake from a Bengali film. Not sure how much NT took from there (you can see from Hanuman worship its origin), but there are lot more comic moments in this film than you expect from a NT/Bandhulu fare. From beginning when his sis-in-law catches him doing the tiger dance, to the VKR encounters, and even after the tragedy the film is not bereft of comic moments thanks to NT's performance. I seriously like this film (Devika vera, sollava veenum).
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
31st May 2011, 09:10 AM
#73
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Plum
NT vs VKR - yes
Actually, here he invokes comedy with a subtle sense of satire, and elegant ripostes. Not at all easy - when you talk about comedians and heros doing comedy, it is a particular aspect of comedy that they master(Kamal being the later exception ofcourse). They have their brand of comedy that they excel in - with NT, you get the whole range. You sense that the disrespectful, no-holds-barred, sarcastic, whip-tongued, remorseless prankster is a persona that NT had hidden under his real-life nice-guy persona. He brings it out with vengeance here, resulting in much hilarity and a sense of awe at a man who can, at will, bring out a whole new persona you never knew existed in him. What I mean is it is not like he is acting out muradan muthu - that impish muradan had been residing inside him for all these years, and this story was just an outlet for one of the thousand myriad multiple personalities that NT played host to in his mind.
The man is just not an actor. He is something else.
Well said Plum, He is god of acting...
Long live NT fame.
-
31st May 2011, 09:33 AM
#74
Senior Member
Seasoned Hubber
Dear Sathish and Karthik,
Thank you so much for the kind greetings and well wishes.
Dear Plum
I think you asked for the person in the song "Varuvai Kanna Neerada" in the movie Pattakkathi Bairavan. It's Jai Ganesh.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st May 2011, 09:35 AM
#75
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
அடுக்கு மொழியிலும் செம்மொழியிலுமாக அடியேனை நீங்கள் பாராட்டும் விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பேணுவது தான் மிகுந்த சிரமமாகும். முடிந்த வரை முயற்சிக்கிறேன்.
(அதற்காக அரசியல்வாதி ரீதியில் வேந்தர்... என்பதெல்லாம் டூமச் என்று மற்றவர்கள் நினைப்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது). கவலைப் படாதீர்கள். அடுத்த பட்டம் வந்து இதை ஒன்றுமில்லாமல் செய்து விடும். நானும் உங்களையெல்லாம் விடுவதாயில்லை...
மிகுந்த அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st May 2011, 10:09 AM
#76
Senior Member
Seasoned Hubber
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 01
காதல், சோகம், கொள்கை, தத்துவம் போன்ற நிலைகளில் மட்டுமல்லாமல் கதைக்களத்திற்கேற்ற சூழ்நிலைக்கேற்றவாறு இடம் பெற்ற பாடல்களிலும் நடிகர் திலகத்தின் தனித்துவம் காணப்படும். அப்படிப்பட்ட பாடல்களை இங்கே காண்போம். தொடக்கமாக பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்ற யாரோ நீயும் நானும் யாரோ என்ற அருமையான பாடல். கதைப்படி நடிகர் திலகம் ஏற்ற பாத்திரம் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டு வளர்க்கப்பட்டதாகும். வளர்ந்து பெரியவனாகிய பின் தாய்க்கும் மகனுக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து விடுகிறது என்றாலும் சூழ்நிலை இருவரையும் சேர முடியாமல் தடுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பிறந்த நாள் விழாவில் தாயிடம் தன் நிலைமையை உணர்த்துவதாக கதைக்களம். இப்பாடலில் இளையாராஜாவின் சிறந்த மெட்டமைப்பில் கண்ணதாசனின் வரிகள் மிகவும் உள்ளார்ந்த பொருளடக்கியவை. நடிகர் திலகம் தன் நடிப்பால் அந்த சூழ்நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் இப்பாடல், துரதிர்ஷ்டவசமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுவதில்லை.
இதோ அப்பாடல்
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 31st May 2011 at 10:38 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st May 2011, 10:44 AM
#77
திரு ராகவேந்தர் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறோம். இப்போது நெட்டிலும் காண வைத்தீர்கள். மிகவும் மகிழ்ச்சி.
pattakathi bairavan vetri padama, failure padama?.
Last edited by adiram; 31st May 2011 at 10:48 AM.
-
31st May 2011, 03:03 PM
#78
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் (தொடர்ச்சி...)
இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் - இவைகளில், பெரும்பாலும் நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமல்லாது, ஒரு பாடலின் சிறப்பிற்கு வழி வகுத்த அனைத்து அம்சங்களும் அலசப்படுகிறது. இந்த வகையிலும் பார்த்தால், நடிகர் திலகமே மற்றவர்களை முந்துகிறார் - இன்றளவும் - பல சிரஞ்சீவித்தன்மை பெற்ற படங்கள், காட்சிகள் மற்றும் பாடல்களில் நடித்த வகையில்!
3. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல (பாச மலர், 1961) - பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசையமைப்பு - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி; பாடியவர்கள் - டி.எம்.சௌந்தரராஜன்/பி.சுசீலா; இயக்கம் - பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன்.
"பொன்னொன்று கண்டேன்"-ஐத் தொடர்ந்து இன்னொரு டூயட்.
ஆனால், இது காதலர்கள் சேர்ந்து பாடிய டூயட் அல்ல. அண்ணனும் அவன் அருமை, பெருமையாய் வளர்த்த அவனது ஆருயிர்த் தங்கையும் - சேர்ந்து அல்ல - தனித்தனியே அவரவர்கள் வீட்டில் - ஒருவரை மற்றவர் நினைத்து, உருகி, மருகி பாடுகின்ற டூயட்.
அத்தனை நாள் ஒன்றாய் சேர்ந்து, தங்கைக்காகவே வாழ்ந்து விட்ட அண்ணனும், அந்த அண்ணனுக்கு மேலாக வேறு ஒருவரையும் - ஏன் ஆருயிர்க் காதலரையுமே நினைத்துப் பார்க்காத அவனது தங்கையும், மணம் முடித்த பின் - அதுவும், தங்கை விரும்பியவரையே அண்ணன் தன்னுடைய முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல், தங்கையின் நல்வாழ்வு ஒன்றையே நினைத்து, விட்டுக்கொடுத்து, மணம் செய்து வைத்த பின் - அந்தக் காதல் கணவனுடைய உறவினர்கள் சூழ்ச்சியால் ஒரே வீட்டில் இருவரும் திருமணம் ஆன பின் வாழ்ந்தும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து, பிரிந்து, அவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் பிறந்த பின், அந்த அண்ணனும் தங்கையும் பாடுவதாக வரும் பாடல். அடிப்படையில், இது ஒரு தாலாட்டுப் பாடல் - Lullaby.
கவியரசு கண்ணதாசன் உலகில் உள்ள எந்த ஒப்பற்ற கவிஞர்களுக்கும் இணையாகப் போற்றப்பட வேண்டிய கவிஞர். குறிப்பாகத் தமிழில் நாம் நன்கு அறிந்த, வள்ளுவர், கம்பர், பாரதிக்கு இணையாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பற்ற கவிஞர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஏனென்றால், கவிஞன் என்பவனுக்கு முக்கியமான தேவை, சுதந்திரம் - ஒரு கவிஞனுக்கு கற்பனை என்பது எப்போது, எதைப் பார்த்து, எப்படி வரும் - சிந்தனை எப்படி உதிக்கும் - என்பது அவனுக்கு, ஏன் அவனைப் படைத்த இறைவனுக்கே தெரியாது. ஓடும் நதியினைப் பார்த்தோ, நீந்தும் மீனைப் பார்த்தோ, நடக்கும் அன்னத்தைப் பார்த்தோ, ஓடும் மானைப் பார்த்தோ, களங்கமில்லா வான்மதியைப் பார்த்தோ, களங்கமற்ற குழந்தையின் சிரிப்பைப் பார்த்தோ, மங்கையின் புன்னகையைப் பார்த்தோ - எதைப் பார்த்தோ, எதை நினைத்தோ, எப்போது வேண்டுமானாலும் வரும் / உதிக்கும். அவனுக்கு அந்த சுதந்திரம் அத்தியாவசியமான தேவை. ஆனால், சினிமாவுக்குப் பாட்டெழுதும் கவிஞனுக்கோ, அது முற்றிலும் கிடையாது. அவனுக்கு, இயக்குனர்கள் ஒரு சூழல் - அதாவது படத்தின் ஒரு சூழலைக் கொடுத்து - அந்த சூழலுக்கேற்றார்ப்போல் பாட்டெழுதப் பணிக்கிறார்கள் - அதுவும் அந்தப் பாடல் உடனே வேண்டும் - சில நேரங்களில் மெட்டைப் போட்டுவிட்டு அந்த மெட்டிர்க்கேற்றார்ப்போல் பாடல் வேண்டும் என்பார்கள். அது போல் சுதந்திரம் எதுவும் இன்றி ஒரு வட்டத்துக்குள் அவனை சிக்க வைத்து - அந்த வளையத்துக்குள் - அவன் பாட்டுக்கள் பல எழுதி - பல பாடல்கள் அமரத்துவம் பெற்று விட்டதால் தான் - அதுவும் படித்தவன் முதல் பாமரன் வரை அனைத்து தரப்பினரையும் எளிதில் சென்று சேர வைத்த பாடல்கள் - அதனால் தான் இந்த ஒரே ஒரு கவிஞனை மட்டும் அந்த மாபெரும் முக்கவிஞர்களுக்கு இணையாக என்னால் காண முடிகிறது.
அப்படி அந்தக் கவிஞன் எழுதிய எத்தனை எத்தனையோ பாடல்கள் - பல சந்தர்ப்பங்களில், மெட்டுகளுக்கும் பல அற்புதமான பாடல்கள் - அந்தப் பாடல்கள் இன்றும் ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் நீங்கா இடம் பெற்றவை.
இந்தப் பாடலின் பல்லவி - அன்றும், இன்றும், என்றும் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு ஆட்படுகின்ற வரிகள். எப்படி?
கவிதை என்பது என்ன? வேர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி சொல்கிறான் "Spontaneous overflow of powerful feelings" என்று.
அதாவது "மடை திறந்த வெள்ளம்போல் வரும் சக்திமிக்க எண்ணங்கள்". இதில் மிக முக்கியம் - spontaneous மற்றும் powerful. அவை இப்படித்தான் வருமோ!
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - ஒரு குழந்தையின் வளர்ச்சி;
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே - அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி சொல்ல நினைத்த கவிஞன் – அரைகுறை பருவமான விடிகாலை, அந்தி இரண்டில் - விடிகாலையை மட்டுமே ஒப்பாக எடுத்துக் கொண்டான் - வளர்ச்சியை சொல்வதற்கு. (இதே கவிதான் பின்னர் காதலர்கள் பாடும் டூயட் பாடலில் "மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே" என்று அந்திப் பொழுதை எடுத்துக் கொண்டான் - காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும் மாலைப் பொழுதை ஒப்பாக எடுத்துக் கொண்டு.
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே - மறுபடியும் குழந்தையின் வளர்ச்சி;
இப்போது தான் அற்புதம் - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே - தாய் மொழியாம் தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை - ஒரே வாக்கியத்தில் எளிமையாகச் சொல்கிறான் அய்யா அந்தத் தமிழ்க் கவி!
அடிப்படையில், இது ஒரு தாலாட்டுப் பாடல் என்றாலும், அந்தப் பாடலின் மூலம், அண்ணனும் தங்கையும் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளைக் கூறி - எப்படியெல்லாம் வளர்ந்தோம், தங்களுடைய உறவு எத்தகையது, இந்த உறவு இந்த சந்ததியோடு முடிந்து விடாமல், காலா காலத்திற்கும் தழைத்தோங்க வேண்டும்! - என்று இருவரும் பாடி தங்கள் ஆதங்கத்தை ஆற்றிக் கொள்வதற்குப் பயன்படும். இன்னும் இது போல் நான்கு சரணங்கள்.
இப்பொழுது இசையமைப்பு:- பாடலின் ஆரம்பத்தில் வரும் மயிலிறகால் வருடுவது போன்ற மென்மையான இசை, குழந்தையை மட்டுமல்ல, எல்லோரையுமே அந்தச் சூழலுக்குக் கொண்டு செல்லும். தாலாட்டுப் பாடல்கள் எத்தனையோ வந்து விட்டாலும், இந்த வகைப் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்த பாடல் இந்தப் பாடல்தான் என்றால் அது மிகையாகாது. அந்த மென்மையான லயமும் சங்கதிகளும் பாடல் நெடுகத் தொடர்ந்து, அமைதியாக முடியும்போது, கேட்பவர்களும், பார்ப்பவர்களும், அந்தச் சூழலுக்குச் சென்று தங்களை மறந்த நிலையில் இருப்பார்கள் - இன்னமும் இருக்கிறார்கள். அப்படி ஒரு மெட்டு மற்றும் இசையமைப்பு!
அடுத்து பாடிய முறை:- அடடா! தேனினும் இனிய குரலால், பி.சுசீலா அவர்கள் பாடி, கேவி, விக்கி மெய் மறக்கச் செய்து விடுகிறார் என்றால், நடிகர் திலகம் - மன்னிக்கவும் - டி.எம்.எஸ். அவர்கள் வழக்கம் போல், எடுத்த எடுப்பில், நடிகர் திலகத்தின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து, பின்னர் அந்த சூழலைத் தனதாக்கிக் கொண்டு, கேட்பவர்களையும், பார்ப்பவர்களையும் அந்த சூழலுக்குள் கொண்டு சென்று விடுகிறார்.
அடுத்து இயக்கம்:- ஒரு கப்பலின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கேப்டனைப் போன்றவர் ஒரு படத்தின் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்த பீம்சிங் தான் அடிப்படையில், மொத்தப் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர், இந்தப் பாடலை சிருஷ்டி செய்தவர் என்கிற முறையில். ஒரு இடத்தில் கூட, பாடலின் தரமோ, அமைப்போ, சுவையோ, ஒரு மாற்றுக் கூட குறையாமல், பாடலை இயக்கி, அந்தப் பாடலை சிரஞ்சீவிப் பாடலாக்கிய மாபெரும் இயக்குனர். இன்றளவும், தமிழ்த் திரைப்பட உலகில் வெளி வந்த முதல் தர, தரமான படங்களில் முன்னணி இடம் பெற்ற படங்கள் நடிகர் திலகம்-பீம்சிங்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் இருந்துதான் வந்தவை என்கிற முறையில், இந்தக் கூட்டணியின் கேப்டனாக பீம்சிங் என்றும் எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த இயக்குனராகிறார்.
இறுதியாக நடிப்பு:- பாடல் வெறும் தாலாட்டுப் பாடலாகத் துவங்கும் போது, அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, தாலாட்டுவதாக சாவித்திரி அவர்கள் துவங்கி, பாடல் அப்படியே நடிகர் திலகத்தை சென்று சேரும்போது, அவரும் அதே மனோ நிலையில் பாடத் துவங்குவார். முதல் சரணத்தில் "யானைப் படை கொண்டு சேனை பல வென்று" என்று துவங்கி "வாழப் பிறந்தாயடா!" என்று அந்த வரிகளைப் பாடி முடிக்கும் போது "வாழப் பிறந்தாயடா!" என்ற வரிகளை எப்படி டி.எம்.எஸ். சடாரென்று மாற்றி சன்னமாக பாடினாரோ, அதே போல், நடிகர் திலகமும் அப்படியே அதற்கு உதட்டை அசைத்து, முக பாவனையை அதற்கேற்றாற்போல் வெளிப்படுத்திய விதம் அற்புதம் என்றால், மறுபடியும் அதே வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடி மெலிதான கேவல் கலந்த அழுகையுடன் முடிக்கும் போது, கல் நெஞ்சமும் கரையும்!
"தங்கக்கடியாரம் வைர மணியாரம்" எனும் இரண்டாவது சரணத்திலும், இதே போல் சாதாரணமாகத் துவங்கி பெருத்த கேவலுடன் அந்தச் சரணம் முடியும் போது - நடிகையர் திலகத்தின் நடிப்பில் கட்டுண்டு கலங்கிப் போகாத இதயமும் உண்டோ!
"சிறகில் எனை மூடி அருமை மகள் போல" சரணத்தில் மறுபடியும் நடிகையர் திலகம் உருகி, எல்லோரையும் உருக்குகிறார் என்றால் "கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல" என்ற கடைசி சரணத்தில், தரையில், மல்லாந்து படுத்துக் கொண்டு, தன்னுடைய குழந்தை தன் மேல் விழுந்து விளையாடுவதைக் கூட பெரிய அளவில் கவனிக்க முடியாமல், வித்தியாசமாக தன்னுடைய உணர்வுகளைக் காட்டிய அவரல்லவோ நடிகர்களின் திலகம்!
அந்த வித்தியாசமான சிந்தனை மற்றும் முயற்சி - எதையும் வேறொரு கோணத்தில் சிந்தித்து, வித்தியாசமாக உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற விதம் - நடிகர் திலகத்துக்கு மட்டுமே அது வெற்றியடைந்த சாத்தியங்கள் உண்டு!
பாடல் மெலிதான ஹம்மிங்கில் முடியும் போது, கேட்பவரும் பார்ப்பவரும் தங்களை மறந்த நிலைக்கு சென்று, ஒவ்வொருவரையும் அவரவர்களது சகோதர சகோதரிகளையும் அவர்களது பழைய வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வைத்த மாத்திரத்தில் - இன்னமும் அப்படித்தான் - இந்தப் பாடல் சிரஞ்சீவிப் பாடலாகிறது.
பாச மலர் - பொன் விழா நிறைந்து விட்டாலும், இந்தப் பாடலும், படமும், நடித்த நடிகர்களின் நடிப்பும் - குறிப்பாக, நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் - இன்னும் பல பொன் விழாக்களைக் கண்டாலும் பார்ப்பவர்களின் மனதை விட்டகலாதிருக்கும் என்பது திண்ணம்!
தொடரும் ......
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 31st May 2011 at 04:48 PM.
-
31st May 2011, 03:23 PM
#79
Senior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
Parthasarathy sir,
Wonderful analysis about 'pon onRu kandEn' song from 'PadithAl mattum pOthumA'. You have described each and every nuances of the song, with your special touches.
This is also one of the 'saagaavaram petra' songs in Tamil cinema, and is being telecasted everyday in any of the TV channels, and also one among the special songs choosen by cine VIP's when they are giving 'special thEnkinnam' etc.
You have analysed the stylish action of NT (and ofcourse Balaji too) especially for the line 'vinnOdu viLaiyAdum peN andha peNNallavO'. No doubt this song captured the first place among male duets in Tamil cinema.
Thanks again, and please continue............
Dear Mr. Karthik,
Thanks very much for your sincere appreciation. I have selected only such of those great songs in every genre, which would find a place in the Immortal List of Songs. When it comes to "immortal performances", Nadigar Thilagam alone scores heavily over every single Actor.
Regards,
R. Parthasarathy
-
31st May 2011, 06:56 PM
#80
Senior Member
Veteran Hubber
Bookmarks