-
14th April 2011, 06:03 PM
#251
Senior Member
Seasoned Hubber
"சேகர்"
சஹான்ய என்ற சங்கதச் சொல்லினின்று "சேகர்" என்ற பெயர்
தோன்றியிருத்தல் கூடுமென்பது ஒரு கருத்து. சஹா - சேஹ - சேக
என்று திரிதல், அ > ஆ > ஏ திரிபுவிதியின்பாற் படும்.
அங்ஙனமாயின், சந்திர சேகர என்ற தொடருக்கு: நிலா
மலை என்று பொருள் கொள்ளவேண்டும்.
தமிழ்வழியில்் நோக்கின் இதற்குப் பொருள் யாது?
-
14th April 2011 06:03 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2011, 06:27 PM
#252
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
சேகர் என்பது சிவபெருமானைக் குறிப்பதென்று கூறுவர். சந்திர சேகரன் என்ற தொடரில், பிறை சூடிய நிலையைக் குறிப்பதாகக் கொள்வர்.
சேகர் என்ற பெயர், திருமாலைக் குறிப்பதாகக் கூறுவர். இவர்கள் பெரும்பாலும் வட நாட்டினர். மலையுச்சி என்று பொருள்தந்து, திருமாலைக் குறிக்குமாம்.
பாரசீக மொழியில் "இரை" என்று பொருள்படுகிறது. எபிரேய மொழியில் ( Hebrew ) "குடிவகை" (any liquor obtained by fermentation) என்றும், அரபியில் "சர்க்கரை" என்றும் அர்த்தம் என்பர்.
இங்கு கூறப்பட்டவை ஏறத்தாழ ஒரே மாதிரி ஒலிக்கப்பெறும் வெவ்வேறு சொற்கள் என்க.
{தொடரும்.}
-
20th April 2011, 09:44 PM
#253
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
சேகர் என்பது சங்கதச் சொல் என்று பலர் நினைத்தாலும், அதைச் சங்கதத்தில் காணமுடியவில்லை. மலை குறிக்கும் சொல்லினின்று திரித்தமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறலாம். பாலி மொழியிலும் கிடைக்கவில்லை. ஆனால் இச்சொல்
இந்திய வழக்கில் உள்ளது.
சே என்ற மூலவடி, செம்மை நிறம் குறிப்பது. சே > செ > செம்மை, சிவப்பு நிறம். சே - சேயோன். (ஓன் - விகுதி ). (சேய் - சேயோன் என்றும் ஆகும் என்பது ஒருபுறம் இருக்கட்-
டும்). சே - சேவடி, சிவந்த அடி.
சே > செவப்பு > சிவப்பு > சிகப்பு. இவ்வடிவங்களில் சில பேச-்சு வழக்கினவாகும். இதில், வ>க திரிபு கவனிக்கத்தக்கது. சிவப்பு என்பதை சோப்பு என்றும் சிலர் ஒலிப்பதுண்டு.
சே > செகப்பு.
சே > சேக > சேகர் எனின், சிவ > சிவன் என்பதனோடு ஒத்த சொல் என்பது கவனிக்கத்தக்கது. சே, செ, சி என்பனவுடன், வ/க அடுத்து நின்று சொல்லமைவது, தமிழினியற்கை என்பதும் கொள்ளத்தக்கதே.
(தொடரும்.)
-
21st April 2011, 06:21 PM
#254
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
தமிழில் எங்ஙனமெலாம் பொருளுரைக்கலாம் என்ற ஆய்வு தொடரும். இடைவேளையில், சீனமொழியில் சேகர் என்பது என்ன பொருள் படக்கூடுமென்று பார்ப்போமே!
(ே)ஷ என்றால் மண்ணின் கடவுள் என்று பொருள். கர் ் (கெர்) மண்மேற்பகுதி என்று பொருள். எனவே நிலக்கடவுள் என்பதாம்.் ஒப்பாய்வில் பொருளொற்றுமை தென்படுகிறது.
(தொடரும்.)
Notes: 社壳儿
社 shè god of the soil
壳儿 kér crust
For further reading on antiquity of Tamil:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post108498
Last edited by bis_mala; 1st May 2011 at 09:17 PM.
Reason: add postscript
B.I. Sivamaalaa (Ms)
-
22nd April 2011, 10:43 AM
#255
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
சேகர் (தொடர்ச்சி)
சேகு = சிவப்பு நிறம்.
சேகு+ அர் = சேகர் = சிவந்தவர்; சிவன்.
சேகன் என்ற ஒருமைவடிவம் அமையவில்லை. (apparently)
சேகன் என்னும் வேறொரு சொல் உள்ளது. அது சேவகன் என்ற
சொல்லின் இடைக்குறை. சேவகன் - சே(வ)கன் - சேகன்.
கு என்பதோர் சொல்லமைப்பு விகுதி அல்லது ஈறு.
அடகு
பிசகு
குடகு
விறகு
மசகு
தரகு
இம்மூன்றெழுத்துச் சொற்கள் -கு விகுதி பெற்று முடிந்தன.
ஆகு(=எலி); நாகு என்பன காண்க
"ku" is also a popular suffix for verb formation in Tamiz.
(தொடரும்.)
-
22nd April 2011, 05:36 PM
#256
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
சேகரன் என்ற வடிவமும் வழங்குகிறது. குலசேகரன், குணசேகரன், சந்திர சேகரன் என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.
சேகரன் = சிறந்தோன் என்பது அகராதிப் பொருள். மேலே குறித்த சேகர் என்பதே அன்விகுதி பெற்று சேகரன் என்றாகியது என்று சொன்னால், பன்மை அர் விகுதியும் ஒருமை
அன் விகுதியும் அடுத்தடுத்து நிற்பது சற்று முரணாகத் தோன்றும்.இவன்கள்(இவய்ங்க), அவன்கள்(அவய்ங்க) என்று ஒருமை-பன்மை கலந்து பேசுவதை இலக்கணியர் ஏற்றுக்கொள்ளார்.ஆனால் தவறாய் அமைந்த பல சொற்கள் மொழியில் உள்ளன. அவற்றைக் களைந்துவிடுதல் இயலாது. அல்லது, "அர்" என்பதன் பன்மைப்
பொருள் மறக்கப்பட்டபின், சேகர் என்பதை ஒரு விகுதியற்ற முழுச்சொல்லாகக் கருதிய நிலையில், சேகரன் என்ற சொல் அமைக்கப்பட்டிருக்கலாம். அங்ஙனமாயின், அர் என்பது வெறும் சொல்லாக்க இணைப்பாகப் பயன்பட்டு, அன விகுதியை ஏற்றது என்று விளக்கலாம். எனவே, அர் அவ்விடத்து வெறும் சொல்லமைப்புச் சாரியை ஆகும்.
அரன் என்ற சொல்லும் சிவனையே குறிக்கும். சேகரன் என்ற சொல்லை சேகு+ அரன், அதாவது செந்நிறத்தனாகிய அரன் என்று கொண்டால், அந்த விளக்கம் தேவையற்றதாகிவிடுகிறது.
இதிலிருந்து, சேகர் என்பதற்கும் இன்னொரு முடிபு கூறலாம். சேகரன் என்பதே கடைக்குறைந்து சேகர் ஆயிற்று என்று.
அது மட்டுமோ? இன்னும் தொடரும்.
-
1st May 2011, 09:04 PM
#257
Senior Member
Seasoned Hubber
சேகர் (தொடர்ச்சி)
சேகரித்தல் என்பதொரு வினைச்சொல். அஞ்சல் தலை சேகரித்தல், பன்னாட்டு நாணயங்கள் சேகரித்தல் என்றெல்லாம்
வாக்கியங்களில் இச்சொல் கையாளப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.
இது உண்மையில், சேர் + கு +அரித்தல் (சிறுகச் சிறுகச் சேர்த்தல்), அல்லது சேர+ அரித்தல் = சேரவரித்தல் --
சேர்கரித்தல் என்ற மூலச்சொற்களின் சேர்க்கையால் அமைந்திருக்கலாம். சேர்க்க அரித்தல் - சேர்கரித்தல் - சேகரித்த-
ல் என்பதும் கருதத்தக்கது. கருத்தல் (செய்தல்) என்றொரு பழைய வினைச்சொல் இருந்து வழக்கற்றது என்று ஆய்வாளர்
கூறுவதனால், சேர்கருத்தல் > சேகரித்தல் என்று வந்ததென்பதும் ஏற்புடைத்தே. கருத்தல் > கரித்தல் என்று திரிவது, இரு
> இரி என்ற மலையாளத் திரிபு போன்றது. எங்ஙனமாயினும் , சேர் > சே என்று திரிந்துள்ளது தெளிவு.
எனவே, சேகரித்தல் - சேர்த்துவைத்தல்.
சந்திரசேகரன் - சந்திரனைச் தன்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டிருப்பவன் என்று இவ்வாய்வின்படி பொருள்தரும்.
Last edited by bis_mala; 1st June 2011 at 04:33 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
1st June 2011, 04:30 PM
#258
Senior Member
Seasoned Hubber
piNdi, piNdam (பிண்டம் என்ற சொல்.)
பிடி >பிடித்தல்.
உருண்டை பிடித்தல், பிண்டம் பிடித்தல்.
பிடி > பிண்டி
பிண்டி > பிண்டித்தல்.
பிண்டி + அம் = பிண்டம்.
பிண்டி என்பதன் டி-யில் உள்ள இகரம் கெட்டுப் புணர்ந்தது.
-
1st June 2011, 09:14 PM
#259
Senior Member
Seasoned Hubber
பண்டிதர்.
பிண்டம் என்ற சொல்லின் அமைப்பை மேலே கண்டீர்கள்.
இதன் தொடர்பில், பண்டிதன் என்ற சொல்லைப் பார்ப்போ-
ம்.
பிடி - பிண்டி - (பிண்டம்)
இதுபோல,
படி - பண்டி - (பண்டிதர்). பொருள்: படித்தவர் என்பது.
தர் என்பது உண்மையில், த்+ அர் என்பதே.
இது என்ற சொல்லின் தேய்ந்த வடிவமே, "த்".
விரித்துரைத்தால்:
இது > இ+த் +உ, இங்கு "இ" "உ" முதலிய உயிர்கள் கெட்டன.
படி > பண்டி > பண்டி+இது+ அர் > பண்டி+து+அர் > பண்டி த் அர் >
பண்டிதர்.
இங்கு இது என்பதிலுள்ள "த்" சொல்லாக்க இணைப்பாகப்
பயன்பட்டுள்ளது.
பண்டிதர் என்பது எந்தமொழிச் சொல்லாயிருந்தால் என்ன, அது
படி என்பதனின்று தோன்றியுள்ளமை தெளிவு.
-
2nd June 2011, 04:13 AM
#260
Senior Member
Seasoned Hubber
another example ( wrt prev. posts)
பிடி > பிண்டி (இங்கு ணகர ஒற்று ் தோன்றியதனால், இது
இடைமிகை ஆகும்.)
படி > பண்டி(தர்) (இதுவும் ணகரவொற்று ் தோன்றியதே).
இவை மேலே விளக்கப்பட்டன.
இப்போது, வேறு ஒரு சொல்லில், இடை மிகுந்து வந்துள்ள-
தைக் காட்டுவோம்.
குறு > குறவர். (பொருள்: மலைவாழ்நர்).
குறு > குன்று (பொருள்: சிறிய மலை, அல்லது (ெ)பரிய மேடு)
குறு > குன்று ஆனதில், ஒரு "ன்" அதாவது னகர ஒற்று
தோன்றியது. குன்று என்ற சொல், பின் குன்னு என்றும்
திரியும்.
கடி (கடிதல்) > கண்டி(த்தல்).
இங்ஙனம் மாறிய சொற்களில், பொருள் நுட்ப வேறுபாடுகள்
ஏற்படுவது இயல்பு.
Bookmarks