-
28th May 2011, 10:07 PM
#901
Moderator
Diamond Hubber
கொடி முல்லையுடன் ஒரு கொண்டாட்டம்
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `கொடிமுல்லை' தொடர், பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நடிகை தேவயானி அம்மா-பெண் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இன்னும் அம்மா-மகள் சந்திக்கவில்லை. என்றாலும் காட்சியமைப்புகள் இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகமானதும் தேவயானி எடுத்த அதிரடி முடிவு, சிறந்த ரசிப்புத்தன்மை கொண்ட ரசிகர்களுக்கு விருது வழங்கி பாராட்டுவது. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக நடக்கும் கோடைக்கொண்டாட்ட விழாக்களில் அவர் ரசிகர்களை சந்தித்து வந்தார். கடந்த வாரம் இப்படி மதுரை விழாவில் ரசிகர்களுக்கு விருதுகளை வழங்கிய தேவயானி, இன்று வேலூரில் இதற்கான பிரமாண்ட விழாவில் ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுக்கு விருதுகளையும் கொடுத்து மகிழ்கிறார்.
விழாவின் முத்தாய்ப்பாக அடுத்த சனிக்கிழமை சென்னையில் விழா நடக்கிறது. இதுபற்றி தேவயானி கூறும்போது, "விருதுகளோடு இப்போது பூந்தொட்டியில் வளரும் கொடிமுல்லை செடியையும் ஒவ்வொருமேடையிலும் 50 பேருக்கு வழங்கி வருகிறோம். இது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்துகிறது'' என்றார்.
நன்றி: தினதந்தி
-
28th May 2011 10:07 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2011, 10:08 PM
#902
Moderator
Diamond Hubber
அவள் ஒரு தொடர்கதை
பாலிமர் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் `அவள் ஒரு தொடர்கதை'.
சமுதாயத்தின் பார்வையில் அழகற்றவளாக சேரியில் வாழும் அபலைப் பெண் சுஜாதா, அழகற்ற முகத்தை கொண்டிருந்தாலும் அற்புத குணங்களை கொண்டவள். பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அவள் வாழ்க்கை வேதனையும், சோதனையும் மிக்கது. ரகசியங்கள் அடங்கியதும் கூட. அவளது ஒவ்வொரு போராட்டத்திலும் அவளது தாய் பத்மா மட்டுமே துணை.
சுஜாதாவிற்கு ஒரு சகோதரி. நல்ல பண்பும், அழகும் கொண்டவள். அவளது அழகே அவளுக்கு எதிரியானது.
தனது அழகான இளைய மகளை சமுதாயத்தின் கொடிய பார்வையிலிருந்து பாதுகாக்க விரும்பினாள் தாய். இளைய மகளை அழகின் வாசனையே இல்லாமல் வளர்த்தாள். ஒரு படி மேலே போய் அவளை குரூபியாக வெளி உலகத்திற்கு காண்பித்தாள்.
ஆனால் அவள் இயல்பில் அழகானவள் என்பதை தெரிந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவளை மிரட்டுகிறார். அதற்காக அவளது பெற்றோரையும் துன்புறுத்துகிறார்.
இதனை அக்கா சுஜாதா எப்படி சமாளிக்கிறாள்? போலீஸ் அதிகாரியின் பிடியிலிருந்து அவளது தங்கையும், குடும்பமும் எப்படி தப்பிக்கிறது? பரபரப்பு சம்பவங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
28th May 2011, 10:10 PM
#903
Moderator
Diamond Hubber
மீட்டர் மேல காசு
ஜெயா டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு `மீட்டர் மேல காசு' எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
ஆட்டோ ரிக்ஷாவில் கொஞ்சதூரம் பயணம் செய்தால் கூட, அதிகப்படியான பணம் செலவாகிறதே என்ற எண்ணம் சகஜம். ஆனால் இனி ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு காசு கொடுக்கப்படும். அதுவே மீட்டர் மேல காசு.
ஒரு மணிநேர குதூகல ஆட்டோ பயணம் இனி சனிக்கிழமை இரவு தோறும் ஜெயா டிவியில் இடம் பெறும். தொகுப்பாளர் ராதாமணாளன் `ஆட்டோ ராஜா' என்ற பட்டப்பெயருடன் இந்நிகழ்ச்சியை வழங்குவார். இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக தேர்வு செய்து அந்த ஏரியாக்களுக்கு வலம் வரப்போகிறார். இந்நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் எஸ்.எம்.எஸ். மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருக்கும் போட்டியாளரிடம் ஆட்டோ ராஜா பல்வேறு கேள்விகளை கேட்பார். அக்கேள்விகள் பொது அறிவு, திரைப்படம், வரலாறு, விளையாட்டு இதர விஷயங்கள் சார்ந்து இருக்கும். கேள்விகளுக்கு பங்கேற்பாளர் சரியான பதிலளிக்கவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் அடுத்த கட்டப் போட்டிக்கு செல்வதற்கு முன் ஒரு `சவால்சுற்று' வைக்கப்படும். இதற்காக பல்வேறு கேமராக்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களையும் வலம் வரப்போகிறது ஆட்டோ.
மேலும் பங்கேற்பாளருக்கு ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் `கத்திப்பார்' என்ற வாய்ப்பு அளிக்கப்படும்.
இதை பயன்படுத்தி சாலையில் செல்லும் எவரேனும் ஒருவரிடம் அந்தக் கேள்விக்கான பதிலை கேட்டு சொல்லலாம். இதில் தவறான பதில் அளிக்கும் போட்டியாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
இதன்பிறகு அடுத்த போட்டியாளரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ராஜா புறப்படுவார். நிகழ்ச்சியில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலளிக்கும் போட்டியாளருக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசாக வழங்கப்படும்.
நன்றி: தினதந்தி
-
28th May 2011, 10:11 PM
#904
Moderator
Diamond Hubber
அந்த நாள் ஞாபகம்
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `அந்த நாள் ஞாபகம்'.
காலத்தால் அழியாத, பல இனிய தமிழ் சினிமா பாடல்களின் சங்கமம் தான் இந்த நிகழ்ச்சி. விஸ்வநாதன்- ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி, சுசிலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பி, ஜேசுதாஸ் என பலரது படைப்பில் வெளிவந்த பல அற்புத பாடல்களின் தொகுப்பாக இந்த நிகழ்ச்சி அமையும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.
கொசுறு - இடைச் செருகல்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 28th May 2011 at 10:17 PM.
"அன்பே சிவம்.”
-
4th June 2011, 06:15 PM
#905
Moderator
Diamond Hubber
`திரு' திருமதி
செவ்வாய் தோறும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி திரு.திருமதி.
பல துறைகளில் உள்ள பல்வேறு சாதனையாளர்கள், பிரபலங்களின் பின்னணி அவர்கள் வளர்ந்த முறை, ஆற்றிய பணிகள், புரிந்த சாதனைகள் இவை அனைத்தையும் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கலாம். ஆனால் சாதனை புரிந்த அந்த பிரபலத்தின் வாழ்க்கைத் துணையைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்புமிகக் குறைவு. பிரபலமாகாத அந்த வாழ்க்கைத் துணையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிதான் `திரு திருமதி'.
ஜெயா டிவி ஒளிபரப்பும் இந்நிகழ்ச்சியில் சாதனைப் பெண்கள் இடம் பெறுகிறார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திரைப்பட நடிகை ஊர்வசி.
நன்றி: தினதந்தி
-
4th June 2011, 06:17 PM
#906
Moderator
Diamond Hubber
நாகம்மாவின் அபூர்வ சக்தி
தன் உடம்பு முழுக்க விஷத்தன்மையோடு நாகக்கன்னியாக இருக்கும் நந்தினி உடல் நலம் சரியில்லாதவனை தொட்டால் அவன் நோய் விலகுகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை தொட்டதும் உயிர் திரும்புகிறது.
இதெல்லாம் எப்படி நடக்கிறது? தான் யார்? என்ற உண்மையை தெரிந்து கொள்ள விரும்பும் நாகம்மா, அதற்காக பஞ்சநாத சித்தரை சந்திக்கிறாள். சித்தர் தனது உதவியாளர் அனுமந்தையாவை நாடி எடுக்க அனுப்புகிறார். ஆனால் அனுமந்தையா நாடி கிடைக்காமல் திரும்பி வருகிறார். அவர் பஞ்சநாத சித்தரிடம், "மந்திரமூர்த்தி சாஸ்திரி வீட்டில் இருக்கும் ஆஸ்திகர் நாடியை சர்ப்பம் ஒன்று காவல் காத்திட்டிருக்கு. அது என்னை நாடியை தொட அனுமதிக்கவில்லை. அதனால் மந்திரமூர்த்தி சாஸ்திரி என்னிடம், `இதற்கு உரியவங்க வந்து இதை எடுக்கலாம். நீங்க நந்தினியை அழைச்சிட்டு வாங்க' என்று கூறியதாக சொல்கிறார்.
உடனே `நான் வருகிறேன்' என்று பஞ்சநாத சித்தரிடம் நந்தினி கூற, அவர் அவளை அனுமதிக்காமல், தானே காலமும் நேரமும் வரும் போது அழைத்து செல்வதாக கூறுகிறார்.
நாடியைப் பற்றிய தகவலை பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நாதன் அறிகிறார். அவர் அந்த சர்ப்பத்தை பார்க்கிறேன். அந்த ஆஸ்திகர் நாடியை எடுக்கிறேன் என்று சபதம் விடுகிறார்... சித்தரோ, எதற்காக மரணத்தை நீயே தேடிப் போகிறாய்? என்று தடுக்கிறார்.
ஆஸ்திகர் நாடி நந்தினியின் கைக்கு கிடைத்ததா... அவளைப் பற்றி உண்மைகள் அவளுக்கு தெரிந்ததா.. பேராசிரியர் நாதன் என்ன ஆனார்? என்பதே நாகம்மாவின் மீதிக்கதை..
நந்தினியாக நாக கன்னியாக நடிகை சாயாசிங் நடிக்கிறார். பேராசிரியர் நாதனாக சேத்தன் வருகிறார். தொடரை இயக்குபவர் சி.ஜெரால்டு. கதை, திரைக்கதை: இந்திரா சவுந்தர்ராஜன், ஒளிப்பதிவு- விஸ்வநாதன்.
சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் இது.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 4th June 2011 at 06:28 PM.
"அன்பே சிவம்.”
-
4th June 2011, 06:18 PM
#907
Moderator
Diamond Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திங்கட்கிழமை தோறும் இரவு 7 1/2 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.' சினிமாவில் சாதித்து. அரசியலிலும் உன்னத இடம்பிடித்து இப்போதும் மக்கள் நெஞ்சில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் சிறப்புகள் இந்த தொடரில் இடம் பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும்விதமாக எம்.ஜி.ஆருடன் நெருங்கிப்பழகிய ஆர்.எம்.வீரப்பன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பிரமுகர்கள் எம்.ஜி.ஆரிடம் தாங்கள் வியந்த பண்பு, அவரது சிறப்பியல்பு, மக்களை அவர் நேசித்தவிதம் பற்றி நெஞ்சம் நெக்குருக பகிர்ந்து கொள்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 4th June 2011 at 06:21 PM.
"அன்பே சிவம்.”
-
4th June 2011, 06:22 PM
#908
Moderator
Diamond Hubber
காசியாத்திரை
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ஒளி மயமான எதிர்காலம்'. திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து விவரங்களும் மற்றும் புராதனமான கோவில்களின் சிறப்புகளும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் சிறப்பு பகுதியாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீகாசியாத்திரை என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித நகரமான காசி பற்றிய இதுவரை மக்களுக்கு தெரிய வராத பல அபூர்வமான தகவல்களும், காசி நகரில் உள்ள புண்ணிய தலங்களின் விளக்கங்களும் இடம் பெறுகின்றன. இத்துடன் அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, உள்ளிட்ட இடங்களின் சிறப்புகளையும், சாதுக்கள், அஹோரிகள் பற்றிய உண்மையான விவரங்களையும் இத்துடன் புண்ணிய நதியாம் கங்கையின் புனிதத்தையும் தொடர் விவரிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன், பாடகர் வீரமணி ராஜ× தொகுத்து வழங்குகிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
4th June 2011, 06:27 PM
#909
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் சித்தி* கொடுமை!
--------------------------------------------------------------------------------
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் செண்பகம். சந்தோஷமாய் வாழ்க்கை நடத்திவரும் ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு பெண், 2 ஆண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். மகிழ்ச்சியாய் பயணித்த அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்புயல். எதிர்பாராமல் மனைவி இறந்து போக, சூறாவளியில் சிக்கிய படகாய் தடுமாறிப்போகிறது ராமச்சந்திரனின் குடும்பம். காலம் சில காயங்களை மாற்றும். ஆற்றும். `குழந்தைகளை பார்த்துக்கொள்ளவாவது இன்னொரு பெண்ணை மணந்துகொள் என்று வற்புறத்திய உறவினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறார் ராமச்சந்திரன். இரண்டாவது மனைவியாக வடிவு வருகிறாள். மூத்தாளின் பிள்ளைகளை கரித்துக் கொட்டுகிறாள். சித்தி கொடுமை தாங்காத பிள்ளைகள் மூவரும் வீட்டை விட்டே ஒடிப்போகிறார்கள்.
வளர்ப்புத் தாயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை படம் பிடித்துக் காட்டும் தொடர் இது. தனது இரு தம்பிகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் செண்பகம், நல்ல உள்ளம் கொண்ட ஒரு செல்வந்தரால், தத்து எடுக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம், அவளது சகோதரர்களின் எதிர்காலம் இரண்டையும் காலம் கருணையுடன் கணிக்க, வசதிவாய்ப்புகளுடன் செல்வந்தர்களாகிறார்கள். ஊரில் சித்திக்கும் மூன்று பெண் பிள்ளைகள். இப்போது முதல் தாரத்து பிள்ளைகள் சித்தி குடும்பத்தை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்புறம் என்னாகிறது என்பது தொடரின் விறுவிறுப்பு பகுதிகள். ராமச்சந்திரனாக வின்சென்ட் ராய் நடிக்க, வடிவாக நடிப்பவர் வடிவுக்கரசி. செண்பகமாக நடிப்பவர் புஷ்பலதா. தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: பரத், ராஜ்குமார், சத்யா, காவேரி, ஸ்வப்னா, யோகினி, ரேவதிப்பிரியா, திரிஷா, ஷோபனா, ரொசாரியோ, ஜோக்கர் துளசி. வசனம்: ராஜேந்திர செல்லையா. ஒளிப்பதிவு: கே.எஸ்.சங்கர். கதை, திரைக்கதை, இயக்கம்: தன்ராஜ். தயாரிப்பு வேதாத்திரி கலைக்கூடம் சார்பில் எஸ்.கே.எம்.சம்பத்ராசா, மு.ஜெகநாதன், மு.குலசேகரன்.
நன்றி: தினமலர்
-
19th June 2011, 06:35 PM
#910
Moderator
Diamond Hubber
கொடிமுல்லையுடன் கைகோர்க்கும் தாமரை
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், கொடிமுல்லை. நடிகை தேவயானி அம்மா-மகள் என இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில், தாமரை என்ற கேரக்டரில் நடிகை காவேரியும் இடம் பிடித்திருக்கிறார்.
அன்னக்கொடி ஜெயிலில் இருக்கும்போதே அவளை சந்தித்த தாமரை, அப்போது அவளது வளர்ப்புத் தந்தை பற்றி தெரிவிக்கிறாள். இதனால் ஜெயிலில் இருந்து விடுதலையானதும் அன்னக்கொடி தனது வளர்ப்புத் தந்தையை ஆவலாய் காணச்செல்கிறாள். அவரை சந்தித்த பிறகே அவர் நல்லவரில்லை என்பது தெரியவருகிறது. அதோடு அவள் ஜெயிலுக்கு வரக்காரணமாக இருந்தவரும் அவரே என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.
இதற்கிடையே அன்னக்கொடியின் சொந்த ஊரான பூங்சோலை கிராமத்திற்கு அன்னக்கொடியின் மகள் மலர்க்கொடி வரவிருக்கிறாள். அன்னக்கொடியை அங்குள்ள மக்கள் தங்கள் ஊரைக்காக்க வந்த தெய்வமாகவே கருதுகிறார்கள். இந்த சூழலில் இளம்வயது அன்னக்கொடியை அப்படியே தோற்றத்தில் பிரதிபலிக்கும் மலர்க்கொடியை பார்த்ததும் எந்த மாதிரியான உணர்வுக்குள்ளாகிறார்கள்? மலர்க்கொடி, தங்கள் அன்னக்கொடியின் வாரிசு என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் அடுத்த கட்டமாய் எடுத்த முடிவு என்ன? இந்த முடிவு அன்னக்கொடியும் மலர்க்கொடியும் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கித் தருமா? உறவுகளின் உணர்வுப் போராட்டங்கள் வரும் வாரங்களில்.
நன்றி: தினதந்தி
Bookmarks