-
10th July 2011, 10:01 PM
#271
Senior Member
Seasoned Hubber
a further summary.....
தேவர்:
தேய் > தீ.
தேய்> தேய்வு> தேவு > தேவர்.
தீ வணங்கப்பட்டது. பல தெய்வச் சொற்கள் தீ குறிக்கும் அடிச்சொல்லினின்று பிறந்தவை.
நகர் > நகரகம் > நகரிகம் > நாகரிகம். ( நகரவாழ்நர் பண்பாடு).
நா : நாக்கு. நா + ம் + அம் = நாமம்.
நாமம்: நாவினால் அழைக்கப் பயன்படும் சொல்.
பகவு = பகிர்வு.
>பகவன் = பகிர்ந்து அளிப்பவன்; படியளப்பவன்.
பண் > பண்ணு > பண்ணுதல்.
பண்+து+அம் = பண்டம், பண்ணப்பட்ட பொருள்.
பகு> பாகு > பாக்கு > பாக்கியம். = நன்மையான பாகம், அல்லது நல்ல பகுதி.
பகு > பகுத்தல்.
பகு+அம் =பாகம், முதனிலை நீண்டு விகுதி பெற்றது.
(இப்படி நீண்ட சொற்களை அடுக்கலாம். பிறகு பாரக்கலாம்).
பாழ் > பாழ்வு > பாவு > பாவம்.
பாவம் > பாவி.
பூசனை (இந்தத் திரியில் முன் இடுகைகளைக் காண்க).
பூதம் = "பூ" என்ற ஒப்பொலியில் இருந்து எழுந்த சொல்.
பூதம் = புது+அம்; புதியதாய்த் தோன்றுவதும் ஆகும்.
மங்குதல், மங்கல் > மங்கலம்.(மங்கல் நிறம்
நற்பயன் விளைக்கும் என்பதே நம்பிக்கை.)
மன்னுதல்; மன்+திரம் > மந்திரம் (மன்றிறம் என்பதன் திரிபு).
(முன்னு > மன்னு )
முன்+ தி = முந்தி , பின் + தி = பிந்தி ( முந்துதல் , பிந்துதல் என்பவற்றின் எச்சங்கள் ஏன் இம் முடிபு எய்தின என்று சிந்திக்கவும் )
மந்திரி < மந்திரம்.
மாய் > மாயம். அறிவை மாய்ப்பது.
மன்> மனம்.
மானுதல் : ஒத்தல். மானம் = பிறர் மதிக்கும் நிலைக்கு ஒத்திருத்தல்.
மானம் அளவும் ஆகும்.
வரன் < வரிப்பவன். வரித்தல்: மணத்தல்.
வள் > வண் > வணிகம் >வாணிகம். (வாங்கி விற்று வளம் பெறுதல்).
பின் தேவை ஏற்பட்டால் விரிவு செய்யப்படும்.
Last edited by bis_mala; 11th July 2011 at 05:31 AM.
Reason: supply title, some examples added
B.I. Sivamaalaa (Ms)
-
10th July 2011 10:01 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2011, 10:00 PM
#272
Senior Member
Seasoned Hubber
பிம்பம்.
பின் > பின்பு > பின்பு+அம்> பின்பம் >பிம்பம்.
ஒளியை நோக்கிச் செல்கையில், பின்பு தோன்றுவதாகிய நிழலுரு.
குறிப்பு: கல்லாதார் பேச்சு வழக்கில் "இன்பம்" என்பது "இம்பம்" என்றும் "துன்பம்" என்பது "தும்பம்" என்றும் நாவொலிக்கப் பெறுதல் கேட்டிருக்கலாம்.இம்ப தும்பம் என்பர்.
பிம்பம் என்பதும் இத்தகைய திரிபே.
Last edited by bis_mala; 6th August 2011 at 08:48 PM.
Reason: postscript
B.I. Sivamaalaa (Ms)
-
17th August 2011, 12:22 PM
#273
Senior Member
Seasoned Hubber
சொற்பம்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவினவானால், அவற்றைச் "சில" என்று குறிக்கிறோம்.
வாயால் எளிதில் சொல்லிவிடக்கூடிய எண்ணிக்கை உடையனவானால், சொற்பம் என்கின்றோம்.
சொல் - (சொல்லக்கூடிய எண்ணிக்கை, அல்லது சொல்வது).
சொல் > சொற்பு > சொற்பம்.
பு, பு+அம், என்பன விகுதிகள்.
ஒன்று என்பதறிந்த முந்தியல் மாந்தனுக்கு, இரண்டு பெரியதாம். இரண்டறிந்தபோது,மூன்று பெரிதாம். நான்கு அறிந்தகாலை, இரண்டு சொற்பமாகும்.
இப்போது கோடிக்கணக்கில் எண்ணுகிறார்கள்.
சொற்பம் = சொல்லத்தக்க சிற்றளவு, சிறு எண்ணிக்கை.
-
2nd September 2011, 06:54 PM
#274
Senior Member
Seasoned Hubber
தான் தாம்
அவர்தானே என் தெய்வம்.
இது இக்காலத்தில் சரியென்று எண்ணப்படுகிறது. ஆனால் பழந்தமிழ் இலக்கணப்படி,
அவர்தாமே என் தெய்வம்
என்றிருக்கவேண்டும்.
அவர் - உயர்வுப் பன்மை அல்லது மரியாதைப் பன்மை.
எதுவானாலும் பன்மை பன்மைதானே.
தான் (ஒருமை) : தாம் (பன்மை).
அவன் தானே என் தெய்வம்.
இதில் பணிவு இல்லை ஆனால் இலக்கணம் உண்டு.
அவர் என்பது பன்மை வடிவில் இருந்தாலும் அதனால் சுட்டப்படும் பொருள் ஒருமைப் பொருளே என்பர் சிலர். ஆகையால், அவர்தானே என் தெய்வம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று சிலர் வாதாடுவர்.
இவ்விலக்கண விதி சொல்வடிவு நோக்கியது. சொற்பொருள் பற்றியதன்று.
Last edited by bis_mala; 2nd September 2011 at 09:02 PM.
Reason: add note
B.I. Sivamaalaa (Ms)
-
14th September 2011, 02:34 AM
#275
Senior Member
Seasoned Hubber
தேதி
சங்க காலத்திலும் (2000 ஆண்டுகளின் முன்) அதற்கு முன் மிகப் பழங்காலத்திலும் தமிழை எவ்வளவு திருத்தமாக மக்கள் பேசினார்கள் என்று தெரியவில்லை. இதை நாமறிய உதவும் ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் தமிழை வைத்து, இதை நாமறிய இயலாது என்பது கூறாமலே புரியும்.
திகைதல் என்ற சொல் பெரிதும் வழக்கில் இல்லை என்று நினைக்கிறேன். "விலை திகையவில்லை" என்று கூறுவதுண்டு.
The price has not been determined or settled என்பது இதன் பொருள்.
நாள், நேரமிவை திகைவதற்குத் (to determine) தேதி, மணிக்கணக்கு முதலியவை உள்ளன.
திகை > திகைதி > திகதி.
தி என்பது விகுதி.
கை என்ற எழுத்து, "க" ஆனது, ஐகாரக் குறுக்கம்,
திகதி > தேதி,
பகுதி > பாதி என்பதுபோன்ற திரிபு.
தேதி என்றால், "இன்ன நாள் என்று நிறுவப்பட்டது" என்பது பொருள்.
-
20th September 2011, 04:01 AM
#276
Senior Member
Seasoned Hubber
உயிர் எழுத்தில் தொடங்கிய....
உயிர் எழுத்தில் தொடங்கிய பல சொற்கள், பின் உயிர்மெய் முதலாகி விட்டன:
எடுத்துக்காட்டு:
ஏணி -- சேணி.
-
28th September 2011, 01:44 AM
#277
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
உயிர் எழுத்தில் தொடங்கிய .................
எட்டி - செட்டி. (செட்டியார்).
ஏன் இப்பெயர் ஏற்பட்டது தெரியுமோ?
Further derivations:
செட்டி >செட்டு. (being thrifty).
"கட்டுச் செட்டு."
-
29th September 2011, 03:37 AM
#278
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
உயிர் எழுத்தில் தொடங்கிய ................... பின் உயிர்மெய் முதலாகி விட்டன:
.
எத்துதல் - கெத்துதல் to cheat, defraud.
-
5th October 2011, 02:31 AM
#279
Senior Member
Seasoned Hubber
இத்தகைய உயிர்முதற் சொற்கள், உயிர்மெய் முதலாகி நிற்றலை, ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் தேடிக் கண்டுபிடியுங்கள்.
உ-ம்:
ஏறு > கேறு (மலையாளம்).
இது ஏறுதல் எனும் வினைச்சொல்.
-
10th October 2011, 09:53 AM
#280
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
இத்தகைய உயிர்முதற் சொற்கள், உயிர்மெய் முதலாகி நிற்றலை, .....................
குமரிமுனைக்கும் தெற்கே குமரிநாடு இருந்ததாகத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத நூல்களிலும் புராண நூல்களிலும் குறிப்புகள் உள்ளன என்பர். இது குமரி(க்) கண்டம் என்றும் அறியப்படுகின்றது.இதை மறுப்பவர்கள் சிலரும் உள்ளனர்.
ஆய்வாளர் சிலர், தமிழ் என்ற மொழிப்பெயர், அமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்ததாகக் கூறுகின்றனர். குமரி அமிழ்ந்து போயிற்றன்றோ? அமிழ்ந்துபோன நாட்டவரின் மொழி என்ற பொருளில் இங்ஙனம் அமைந்ததாம். தமிழ் என்ற சொல் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களும் உள்ளன.
உயிர்முதலாகிய சொற்கள் உய்ர்மெய் முதலாகத் திரிதலை முன் இடுகைகளீல் எடுத்துக்காட்டி யுள்ளேன்.
அமிழ் என்பதுதான் தமிழ் என்று திரிந்து மொழிப்பெயர் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமாயின், இத்திரிபையும், மேற்குறித்த சொல்லமைப்பு விதியின்பால் அடக்கிவிடலாம்.
தெலுங்கு என்ற மொழிப்பெயர் அமைந்ததற்கு பலவாறு ஆய்வாளர் கூறுவதுபோல, தமிழுக்கும் பல கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bookmarks