Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......
90களில் பிறந்த தாங்கள் அதிக பட்சம் 20வயது தாண்டியிருக்க மாட்டீர்கள். இவ்வளவு இளம் வயதினர் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதை விட அவருக்கு பெருமை பத்மஸ்ரீ, பத்மபூஷ்ன், பாரத், பாரத ரத்னா போன்ற எந்த விருதுகளும் தந்து விடாது. உள்ளத்தினை நெகிழச்செய்யும் இந்த வரிகள் அவருக்கு சமர்ப்பணம். அவருடைய நடிப்பைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு அவரைப் புரிந்து கொள்ளாமல் மிகை நடிப்பு என்று உளறித் திரியும் அறிவிலிகளுக்கு நிச்சயம் இது ஒரு சவுக்கடி.
தங்களுக்கு அனைவரின் சார்பிலும் உளமார்ந்த வரவேற்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் திலகம் என்கிற புதையலை அள்ளி அள்ளிப் பருக இது சிறந்த இடம் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 4th August 2011 at 06:01 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
டியர் சதீஷ்,
தங்களுடைய இணைப்புக்கு நன்றி. மாற்றம் தினமலர் வீடியோவில் மட்டுமா, தினமலர் அணுகுமுறையிலும் கூட என்று எதிர்பார்ப்போம். தேசீயவாதிகளின் உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள மாற்றம் என்று அது உருவெடுத்தால் நல்லது தானே.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
On behalf of all our NT thread viewrs welcome you. Very happy to know that you are in the age group of 20+ From Ragavender sir reply . Yesterday only said that NT should be 'chiranjeevi' like hanumar lives in all the four yuga.
Once again welcome
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
எழுதியவர் :இரா .இரவி
தேதி 21/7/2011
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ
பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வாசன் உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ
நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ
கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ
அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ
ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ
தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ
போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ
முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ
வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ
பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ
உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று
இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ
Dear Raghavendran sir,
I too don't know telugu. My collegeue who knows telugu briefed about the article. From his brief transalation, i mentioned only few. i requested him to transalate the full article. I will produce here tamil transalation as soon as i received from him.
To all my friends from bangaloreans who are there in the hub please give your contact numbers it will be esay for us to inform u about the functions, and we are planning to release Pudhiyaparavai in Bangalore Nataraja and Lavanya theaters shortly
Cheers
kumareshanprabhu
'கோடு போட்டால் போதும், அதில் ரோடு போட்டு விடுவார்' என்ற சொல்வழக்கு உங்களுக்குத்தான் பொருந்தும். நடிகர்திலகத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு, மலையாளப்பட உலகினர் பாராட்டுவிழா நடத்தியதை, முரளிசார் ஒரு செய்தியாகப் பதிப்பித்தார்.
உடனே அது சம்மந்தமாக அப்போதைய நியூஸ்பேப்பர் கட்டிங்ஸ்களை அப்படியே அள்ளித்தந்து மலைக்க வைத்ததுடன், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எப்போதும் எதையும் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் அள்ளி விட்டுப்போகிறவர்கள் அல்ல. எந்த ஒன்றையும் ஆதாரத்துடன் அடிப்பவர்கள் என்ற பேருண்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்.
நீங்களும் ராகவேந்தர் சாரும் அள்ளி அளித்து வரும் புதையல்களுக்கு நன்றி சொல்லியெல்லாம் மாளாது. அதுக்கெல்லாம் மேலே போய் விட்டீர்கள்.
Music collection from Panthulu films to be released today
From The Hindu, Bangalore Edition
A few lines quoted from the coverage about B.R. Panthulu:
His first directorial venture was Rathnagiri Rahasya, a hit. He made some spectacular period films with Sivaji Ganesan such as Veerapandiya Kattabomman, adjudged best film at the Afro-Asian Film Festival at Cairo.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks