வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 4
வரலாற்று ஆவணம் : பிலிமாலயா : 1972
[மேற்காணும் ஆவணத்தில் 'இரண்டு மனம் வேண்டும்' பாடலுக்காக எழுதப்பட்ட அனைத்து சரணங்களும் வெளியாகியிருப்பதை கவனிக்கவும்].
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 4
வரலாற்று ஆவணம் : பிலிமாலயா : 1972
[மேற்காணும் ஆவணத்தில் 'இரண்டு மனம் வேண்டும்' பாடலுக்காக எழுதப்பட்ட அனைத்து சரணங்களும் வெளியாகியிருப்பதை கவனிக்கவும்].
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
pammalar
டியர் பம்மலார்,
இரண்டு மனம் வேண்டும் பாடலை முழுமையாக வெளியிட்ட சில இதழ்களில் பிலிமாலயாவும் ஒன்று. இதே போல் திரு மதிஒளி சண்முகம் அவர்களின் சினிமா குண்டூசி இதழ், திரைவானம் இதழ், மின்மினி ஆகியவையும் வெளியிட்டன. அந்தப் பாடலை அப்போதிருந்த சிவாஜி ரசிகர் மன்றம் ஒன்று தனித் துண்டு பிரசுரமாக வெளியிட்டு ரசிகர்களுக்கு அளித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. சில ரசிகர்கள் யாரையும் நாடாமல் தங்கள் சொந்த செலவில் பல பணிகளை அப்போதே செய்து வந்தனர். அப்படிப்பட்ட ரசிகர் ஒருவர் தன் சொந்த செலவில் அச்சிட்டு நண்பர்கள் உதவியுடன் இதனை எல்லோருக்கும் கொடுத்தார்.
தாங்கள் மீண்டும் அப்பாடலின் நிழற்படத்தை வெளியிட்டு பழைய நாட்களை நினைவுறுத்தியமைக்கு உளமார்ந்த நன்றி.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இரண்டு மனம் வேண்டும் பாடலின் வரிகள்
எதை எடுப்பது எதை விடுப்பது என்பதில் நிச்சயம் திரை இசைத் திலகம் திக்கித் திணறி இருப்பார் என்பது இந்த வரிகளில் தெளிவாகத் தெரிகிறது அல்லவா. அது மட்டுமல்ல, கவியரசருக்கு நிகர் யாரும் இல்லை என்பதற்கு இந்த சரணங்களை விட வேறு என்ன சான்று இருக்க முடியும்.குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
சரணம் 1
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
சரணம் 2
மேகம் போடும் கோலங்கள்
மின்னல் காட்டும் ஜாலங்கள்
காதல் கதையும் அதுவானால்
கண்ணும் மனமும் எதற்காக
சரணம் 3
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்றே போதாதே
சரணம் 4
கொடுத்ததும் அவன் தான் கொடுத்தானா
பறித்ததும் அவன் தான் பறித்தானா
நடந்தது இறைவன் செயலானால்
நானும் இன்னொரு நாஸ்திகனே
சரணம் 5
மயக்கம் நிறைந்த பார்வையிலும்
மனிதனின் தேவை புரிகின்றது
கலக்கம் நிறைந்து வரும்போது
கண்ணீர் தானே தெரிகின்றது
சரணம் 6
அன்பு என்றொரு முள்வேலி
ஆசை என்றொரு விஷக்காற்று
காதல் என்றொரு பொய்க்கனவு
கடல் போல் துடிப்பது ஒரு மனது
சரணம் 7
மண்ணில் பிறப்பது ஏழு முறை
மரணம் ஜனனம் ஏழு முறை
இன்னொரு பிறவி என வந்தால்
இரண்டு மனதுடன் தான் வருவேன்
சரணம் 8
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி
இந்த வரிகளில் தன்னுடைய ஜீவனை முழுமையாக அளித்து பாடலுக்கு உயிர் கொடுத்த ஜீவனான டி.எம்.எஸ். அவர்கள் உடல் நலம் பெற்று சீராக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
வசந்த மாளிகை திரைக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் நிழற் படம் பொம்மை இதழில் வெளிவந்தது.
![]()
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மேலே உள்ள படங்கள் தனித்தனியாக
ஹேமமாலினியிடமிருந்து நடிகர் திலகம் கேடயம் பெறும் காட்சி
ராஜேஷ் கன்னாவிடமிருந்து தயாரிப்பாளர் ராமா நாயுடு கேடயம் பெறும் காட்சி
விழாவில் பங்கேற்ற நாகேஸ்வரராவ் அவர்களுடன் கலைஞர்கள் எடுத்துக் கொண்ட நிழற்படம்
நடிகர் திலகத்துடன் ராஜேஷ் கன்னா
![]()
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Dear Pammalar sir
i was In Ramnad for The opepning of Kalyan jewlers
my belated Birthday wishes to you
you will always be blessed by Our NT
REGARDS
KUMARESHAN PRABHU
27.09.1975 அன்று வெளியாகி 27.09.2011 அன்று தன்னுடைய 37வது ஆண்டில் நுழையும் அன்பே ஆருயிரே திரைக்காவியத்தினை நினைவு கூறும் வகையில்...
திரைவானம் இதழ் வெளியிட்ட சிறப்பு மலரின் முகப்பு
அம்மலரில் இடம் பெற்ற படப்பிடிப்புக் காட்சி
இம்மலருக்கு நன்றியினை திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
One of the best Documentary on Nadigar Thilagam
Narrated by Prof. Karhihesu Sivathamby
PLAYING 30 MINS.
Last edited by abkhlabhi; 26th September 2011 at 06:19 PM.
அற்புதம் ! நமது மண்ணின் , மரபின் மேதைகளை இழித்தும் , பழித்தும் , நிராகரித்தும் பேசுவதே , எழுதுவதே அறிவுஜீவித்தனத்தின் அடையாளம் என்ற சுயசொறிதல்கள் மிகுந்துள்ள சமூகத்தில் போலி அறிவுஜீவிகளிலிருந்து தனித்து நின்று தனது பார்வையை பதிவு செய்த தமிழறிஞர் ஈழத்து பெரியவர் அமரர் சிவதம்பி காதிகேசு அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
வெளிவந்துவிட்டது...இதயவேந்தன் வாசகர் வட்டத்தின் அடுத்த வெளியீடு
இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் [பாகம் 3]
நூலாசிரியர் : கா.வந்தியத்தேவன்
நூல் முகப்பு
பின் அட்டை
நூல் பதிப்பாளர் : என்.நாராயணன்
புத்தகப் பிரதிகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
G.சில்க் இளங்கோ,
இதயவேந்தன் வாசகர் வட்டம்,
257, பவுடர் மில்ஸ் ரோடு,
காந்திஜி நகர்,
புளியந்தோப்பு,
சென்னை - 600 012.
ஒரு பிரதியின் விலை ரூ. 165/-
அன்புடன்,
பம்மலார்.
pammalar
Bookmarks