-
8th October 2011, 06:55 AM
#971
Moderator
Diamond Hubber
அழகிய தமிழ் மகள்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் `அழகிய தமிழ் மகள்' நிகழ்ச்சியில், ராசிபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடமாடும் கருணை இல்லத்தை நேரில் கண்டு நேயர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்
கே.பி.முத்துக்குமார், `யமஹா' என்.பிரகாஷ் தயாரித்து, நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், சாதனை பல படைத்து, புதியதோர் உலகம் செய்யும் பெண்மணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில், தெருவோர குப்பை தொட்டிகளில் வீசி எறியப்படுகின்ற அனாதை குழந்தைகளை, தேடி எடுத்து சீராட்டி வளர்க்கும் மேரி என்ற தெய்வத்தாயை காணமுடிந்தது.
இதுபோன்ற அரும்பணி ஆற்றும் பெண்கள் பற்றிய அரிய தகவல்களைத் தரும் நிகழ்ச்சி என்பதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம்
நன்றி: தினதந்தி
-
8th October 2011 06:55 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2011, 06:57 AM
#972
Moderator
Diamond Hubber
சொல்லத்துடிக்குது மனசு
கேப்டன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய மெகா தொடர், `சொல்லத்துடிக்குது மனசு'
இந்தியாவின் உயிர்நாடியான விவசாயிகளை பற்றிய கதை இது. கதாநாயகி அம்மு விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். அவள் தன் கிராமத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களை களைந்து, வறுமைப்போராட்டத்தில் இருந்து அவர்களை மீட்க போராடுகிறாள். அதோடு விவசாயிகளை கொடுமைப்படுத்தும் ஜமீன்தாரின் அடக்கு முறைகளுக்கும் எதிராக காய் நகர்த்தி விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகிறாள்.
நன்றி: தினதந்தி
-
8th October 2011, 06:59 AM
#973
Moderator
Diamond Hubber
ரஜினி கட்டிய சித்தர் கோவில்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமானுஷ்ய அனுபவங்களை மக்களுக்கு வழங்கி வரும் நிகழ்ச்சி `நம்பினால் நம்புங்கள்.' பல்வேறு இடங்களில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் திகில் கலந்த அனுபவங்களை வழங்குவது நிகழ்ச்சியின் சிறப்பு.
இந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் கட்டிக்கொடுத்த சித்தர் கோவிலும் அவர் கோவில்களுக்கு ரகசியமாக வந்து செல்வது பற்றி அக்கோவிலை சார்ந்தவர்கள் தரும் தகவல்களும் இடம் பெறுகிறது.
மற்றொரு பகுதியில், அண்ணாமலையாரின் உறைவிடமான திருவண்ணாமலை நகருக்கு குகை நமச்சிவாயர் கொடுத்த சாபத்தையும், அதன் விளைவாக நடக்கும் சம்பவங்களையும் `நம்பினால் நம்புங்கள் குழு' விவரிக்கிறது.
வால்பாறை அருகேயுள்ள தாய்முடி எஸ்டேட்டில் வீற்றிருக்கும் பாண்டி முனி ஆலயத்தில் அரங்கேறும் பேய் ஓட்டும் சடங்கு திகிலூட்டும் ரகம். குறிப்பாக பேயோட்டபட்ட பெண்கள் அமாவாசை தினத்தன்று நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அரிவாளால் தங்களது தலையில் அடித்துக்கொள்வது அதிர்ச்சியின் உச்சம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி
-
8th October 2011, 07:01 AM
#974
Moderator
Diamond Hubber
ராஜேஷ்குமாரின் `விசாரணை'
கலைஞர் தொலைக் காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவல்கள் `விசாரணை' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகின்றன. கிராவிட்டி இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜயகுமார் தயாரிக்க, பிரபு இயக்குகிறார். சாக்ஷி சிவா, ஷியாம் துப்பறியும் நிபுணர்களாக நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
8th October 2011, 07:08 AM
#975
Moderator
Diamond Hubber
-
15th October 2011, 07:42 PM
#976
Moderator
Diamond Hubber
நடிகை கஸ்தூரி நடிக்கும் `அழைத்தால் வருவேன்'
வசந்த் டிவியில் தீபாவளியில் இருந்து ஒளிபரப்பாகவிருக்கும் தொடர், `அழைத்தால் வருவேன்.'நடிகை கஸ்தூரி இந்த தொடர் மூலம் சின்னத்திரையில் தனது நடிப்பு முத்திரையை பதிக் கிறார்.
கொடுமைக்கார மாமியார். சாது மருமகள். அவ்வப் போது மாமியார் கொடுமை மருமகளுக்கு நேர்கிறது. ஆனாலும் மருமகள் அமைதியாகப் போகிறாள்.
முதன்முதலாக வெளிïரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குப் போனபோதுதான் மருமகளிடம் திடீர்மாற்றம். தங்கியிருந்த ஓட்டல் அறையில் நள்ளிரவில் திடீரென `நேத்து ராத்திரி யம்மா' என்ற பாடல் ஒலிக்க, தப்பாமல் தாளம் போட்டு ஆடுகிறாள் மருமகள். அரண்டு போகிறாள் மாமியார்.
"ஆட்டமாடி போடறே?'' என்று மாமியார் உக்கிரமாகி மருமகளை நோக்கி கையை ஓங்க, ஓங்கிய கையை அதேவேகத்தில் பிடித்து திருகும் மருமகள், அப்படியே ஒரு சுற்று சுற்ற... தட்டாமாலை சுற்றிய குழந்தையாய் கிறுகிறுத்து கீழே விழுகிறாள் மாமியார்.
அதன்பிறகு தான் தன்னை தாக்கியது மருமகள் அல்ல, ஒரு ஆவி என்பது மாமியாருக்கு புரிகிறது.
அது ஒரு நடிகையின் ஆவி. வாழ்ந்த நாட்களில் தனக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த பெண்ணிடம் சமீபத்தில் குடி கொண்டிருக்கிறது.
சரி, இப்போது ஒரு கேள்வி எழும். பாதிக்கப்பட்ட நடிகையின் ஆவிக்கு ஒரு அப்பாவி பெண்ணிடத்தில் என்ன வேலை?
இருக்கிறது, அதற்கும் காரணம். இந்த பெண்ணின் கணவனின் நண்பர்கள் தான் அந்த நடிகை மரணத்துக்கே காரணமானவர்கள். பெண்னின் கணவன் மூலம் அவனது நண்பர்களை புத்திசாலித்தனமாக பழிதீர்க்கிறது, நடிகையின் ஆவி. அது எப்படி என்பது பரபரப்பான கதைக்களம்.
தொடரில் மருமகளாக நடிகை கஸ்தூரி நடிக்கிறார். மாமியாராக நளினி வருகிறார். காத்தாடி ராமமூர்த்தி, டெல்லிகணேஷ், வாசுவிக்ரம் ஆகியோரும் நடிக்கிறார்கள். எழுத்தும் இயக்கமும்: ஜெயமணி.
நன்றி: தினதந்தி
-
15th October 2011, 07:46 PM
#977
Moderator
Diamond Hubber
நானும் ஒரு பெண்
திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `நானும் ஒரு பெண்.'
தனது கறுப்பு நிறத்தால் சமுதாயத்தாலும், தன் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் மற்றும் அனைவராலும் ஒதுக்கப்படும் சங்கீதாவை, தன் வாழ்க்கைத் துணையாக்கப் போகிறான் ஜெயக்குமார். இருமனங்களும் இணையும் திருமணத்தின் கோலாகல கொண்டாட்டங்களின் வரிசையில் மருதாணியிடுதல், ஆடல், பாடல், மணமகள், மணமகன் இருவருக்கிடையே நடக்கவிருக்கும் போட்டிகள் என்று மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறது சங்கீதாவின் குடும்பம்.
மறுபுறம் இந்த மகிழ்ச்சியை கெடுக்க சதி திட்டம் தீட்டும் கவிதா, கரண் மற்றும் அவரது நண்பர்கள். இவர்களின் வஞ்சகத்தால் திருமண மண்டபத்தில் இருந்து சங்கீதா காணாமல் போக, துடித்துப்போகிறாள் அவளது தாய்.
சங்கீதா திருமணம் நடைபெறுமா? அவள் வெளியேறிய காரணம் என்ன? இந்நிலையில் தன் காதலை மறந்து நட்பை மட்டும் சுமந்து சங்கீதாவின் திருமணத்திற்கு வரும் நிர்மலின் நிலை என்ன? சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
15th October 2011, 07:56 PM
#978
Moderator
Diamond Hubber
கொடிமுல்லை-200
நடிகை தேவயானி இரட்டைவேடத்தில் நடிக்கும் `கொடிமுல்லை' தொடர் 200-வது எபிசோடை நிறைவு செய்திருக் கிறது.
தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு.
அன்னக்கொடியின் ஒரே மகள் தான் மலர்க்கொடி. மகள் பிறந்த நேரத்தில் கொலைக் குற்றவாளி என்ற பழியை ஏற்று ஆயுள்தண்டனைச் சிறைவாசியாகிறாள் அன்னக்கொடி. குழந்தை இறந்தே பிறந்ததாக சிறையில் சொல்லி விடுகிறார்கள்.
25 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலையாகும் போது தான், மகள் உயிருடன்இருக்கும் தகவலே தெரியவருகிறது. தாய்மைக்கே உரிய தவிப்புணர்வுடன் மகளைத்தேடி பயணப்படுகிறாள்.
பல சூழ்நிலைகளில் அம்மாவும் பெண்ணும் சந்திக்கும் வாய்ப்புகள் அமைகின்றன. ஆனால் கடைசி வினாடியில் சந்திப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.
ஆனாலும் காலம் கொஞ்சம் கருணை வைக்கவே செய்கிறது. காலப்போக்கில் இருவரும் யாரென்றே தெரியாத நிலையில் போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி விடுகிறார்கள்.
அன்னக்கொடியை பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பியது அவள் வாழ்ந்த பூஞ்சோலை கிராமம்தான். அந்த கிராமத்தில் அதற்குப்பிறகு 25 ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. இப்போது அந்த கிராமத்தில் மலர்க்கொடி தங்கி சமூகசேவையை தொடருகிறாள். அப்போதுதான் தனது அம்மா உயிருடன்இருப்பதை தெரிந்து கொள்கிறாள்.
இந்தநேரத்தில் மலர்க்கொடியிடம் தற்செயலாக போனில் பேசுகிறாள் அன்னக்கொடி. மலர்க்கொடி பூஞ்சோலை கிராமத்தில் இருப்பதாக தெரியவந்ததும் `அந்த கொலைகார ஊரில் மட்டும் இருக்காதே' என்கிறாள், ஆத்திரமாய். அதோடு மலர்க்கொடியின் விருப்பம் அறிந்து அவளை சந்திக்கவும் புறப்படுகிறாள். அவர்கள் சந்தித்தால் அம்மா-மகள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விடும். இந்த சந்திப்பாவது நிகழ்ந்ததா? என்பது பரபரப்பான பிற்பகுதிக்கதை.
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் இது.
நன்றி: தினதந்தி
-
15th October 2011, 07:57 PM
#979
Moderator
Diamond Hubber
திரும்பிப் பார்க்கிறேன்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு `ஜெயா தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில், வரும் திங்கள் முதல் பிரபல திரைப்பட நடிகை சீமாவின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது.
சென்னையில் பிறந்த சீமா திரையுலகில் நடன உதவி இயக்குனராக இருந்தார். பின்பு இயக்குனர் ஐ.வி.சசி மூலம் நடிகையாக அறிமுகமாகி, தொடர்ந்து `தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி' உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழில் முன்னணி நாயகர்கள் கமல், ரஜினி ஆகியோருடனும் இணைந்து நடித்தவர்.
தன் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்கமுடியாத அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார். அவர் பணிபுரிந்த படங்களில் இருந்து பாடல் களும், காட்சிகளும் இடையிடையே இடம்பெறும்.
நன்றி: தினதந்தி
-
15th October 2011, 07:58 PM
#980
Moderator
Diamond Hubber
மலைப்பயணம்
தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியினரை இனி ஒவ்வொரு வாரமும் மக்கள் தொலைக்காட்சியில் `மலைப்பயணம்' நிகழ்ச்சி மூலம் நேயர்கள் சந்திக்கலாம்.
அந்த மக்களின் வாழ்க்கை நகரவாசிகளின் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. நடுக்காட்டுக்குள் அவர்கள் நடத்தும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், ஆட்டம் - பாட்டம் அடங்கிய நடன நிகழ்வுகளும் பிரமிக்க வைப்பவை.
யாரும் தொட்டுவிட முடியாத மலை உச்சியில் வசிக்கும் அவர்கள், நகரவாசிகளைக் கண்டால் ஓடி மறையும் குணம் கொண்டவர்கள். பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், `மக்கள் தொலைக்காட்சி'யின் சிறப்புக்குழு நேரடியாகச் சென்று படமாக்கி வந்திருக்கிறது.
இரவும், பகலுமாக அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட பல அதிரடி நிகழ்வுகளை இந்தத் தொடரில் நேயர்கள் காணலாம். சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக, முற்றிலும் புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகும் இந்த மலைப்பயணம் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.
தொடர்ந்து சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தொடர்கிறது, இந்த `மலைப்பயணம்.'
நன்றி: தினதந்தி
Bookmarks