nanri aanaa!
Thirumathi Selavam
Thendral
Chellame
Thangam
புதியதோர் கவிஞன் செய்வோம்
திறன் படைத்த புதிய கவிஞர்களை தேடிக்கண்டு பிடிக்கும் அரிய பணியை ராஜ் டிவி தொடங்கியிருக்கிறது. இதற்காக கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் முதல்கட்டத் தேர்வு நடந்தது. கவிவிஞர் கண்ணதாசனின் மகளும் கவிஞருமான விசாலி கண்ணதாசன் புதிய கவிஞர்களை அவர்கள் கவிதைத்திறன் அடிப்படையில் தேர்வு செய்தார்.
அவருடன் கவிஞர்கள் கபிலன், மதன் கார்க்கி, பிரியன் ஆகியோரும் புதியகவிஞர் தேர்வுக்காக இணைந்ததில், இரண்டாம் கட்டமாக 60 கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தகட்டதேர்வு நகரின் பிரமாண்ட அரங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் டிசம்பர் முதல் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு இந்த புதியகவிஞர் தேடல் நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
ரஞ்சனியின் `குழந்தை' போராட்டம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "முத்தாரம்'' தொடர் எடுத்த எடுப்பிலேயே வேகம் பிடித்து விட்டது.
கணவர் விட்டுப்போன பிறகு நான்கு பிள்ளைகளை வளர்க்க படாத பாடுபடும் மாமியார் சாரதா, ஒரு பேரப்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில், அதை பெற்றுத் தர முடியாத மருமகள் ரஞ்சனி மேல் கோபப்படுவது தப்பா?
வாழ வந்த வீட்டில் எல்லாருக்கும் ஈடு கொடுத்து, அடங்கிப்போய், கணவனின் தம்பி, தங்கைகளை தன் பிள்ளைகளாக நினைத்துப் பாசம் காட்டும் ரஞ்சனி, ஒரு பிள்ளைக்காக நடத்தும் போராட்டம் தப்பா?
தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தாய்க்கும், தன் மீது அபரிமிதமான அன்பு கொண்ட மனைவிக்கும் மத்தியில் ஊசலாடும் முரளி, தாய்க்கு ஆதரவாக இருப்பது தப்பா?
அன்பு கொண்ட அண்ணியை அம்மாவாக நினைக்கும் மது மற்றும் சூர்யாவின் அளவு கடந்த பாசம் தப்பா?
அவரவர் பக்கத்தில் இப்படி நியாயங்கள் இருக்க, இந்த குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது யாருடைய தப்பு?
ஒருபெண்ணின் ரத்தமும், சதையுமான உணர்வுகளின் அப்பட்டமான நிஜம் இந்த `முத்தாரம்.'
நாத்தனார் புஷ்பாவின் வளைகாப்பில், குழந்தை பெற முடியாத ரஞ்சனி, மாமியார் சாரதாவால் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறாள். இதைப் பார்த்து கொதித்து எழும் மது, அண்ணியின் கண்ணீரைத் துடைக்க, அவளை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு எதிர்பாராமல் வரும் சாரதா, ரஞ்சனியைப் பார்த்தால்... என்ன செய்யப் போகிறாள்? மது எடுக்கும் முயற்சி குடும்பத்தில் எப்படி புயலாக வெடித்துச் சிதறப்போகிறது?
வரப்போகும் வாரங்களில் இத்தனை பரபரப்பான கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
தொடரில், தேவயானி ரஞ்சனி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். கதை, திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு: `மெட்டிஒலி' எஸ்.சித்திக்.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
தேவி
அம்மனின் அருள் பெற்ற தேவிக்கு நவசக்தி கொண்ட சங்கு கிடைக்கிறது. இதே சங்கை அடைய துர்காபுரத்தின் செல்வந்தனான கேசவ்நாத்தின் தாத்தா மார்த்தாண்டன் பலமுறை முயன்று தோற்றார். அவரின் கனவை நனவாக்கத் துடிக்கும் கேசவ்நாத், பல சந்தர்ப்பங்களில் சங்கை அடைந்தும் அது அவரின் கையில் தங்காமல் தேவியிடம் பாதுகாப்பாக இருந்து வந்தது.
கேசவ்நாத் தன் குரு நம்பூதிரியிடம் சங்கை அடையும் வழியைக் கேட்க, அவர் தேவியின் அண்ணன் சந்தானத்தின் மூலம் கிடைக்கும் என்று கூற, தன் பணபலத்தை பயன்படுத்தி அவன் மூலம் சங்கை அடைகிறான். சங்கை ஊதி உபயோகப்படுத்துமுன் சில பரிகாரங்களை செய்யக்கூற, கேசவ்நாத் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றார். இதற்கிடையில் கேசவ்நாத்தின் உதவியாளன் கோபால் மற்றும் நம்பூதிரியின் சிஷ்யன் வசந்த் ஆகியோரும் சங்கை அடையத் துடிக்க, கேசவ்நாத்தின் சந்தேகம் நம்பூதிரியின் மீது எழுகிறது.
சங்கை உபயோகப்படுத்தும் நாள் வருகிறது. அப்போது சந்தானத்திற்கு தேவியின் மீது இருந்த தவறான எண்ணம் போக, சங்கை தேவியிடமே திருப்பித்தர முடிவு செய்கிறான்.
பலரும் பல கோணங்களில் நவசக்தி கொண்ட சங்கை அடையத் துடிக்க, சங்கு யாரை அடைந்தது? தேவி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் `தேவி' தொடரில் காணலாம்.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
வாலி-1000
கவிஞர் வாலி சினிமாவுக்கு பாட்டெழுத வந்து 50 ஆண்டுகளை தாண்டி விட்டார். 1948-ம்ஆண்டில் `அழகர் மலைக்கள்ளன்' படத்தில் தன் பாட்டு சாம்ராஜ்யத்தை தொடங்கியவர், இடைவிடாமல் தொடர்ந்து தேடிவந்த வாய்ப்புகளில் 15 ஆயிரம் பாடல்களை தாண்டி விட்டார். இப்போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் `சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான்.' நல்லவன் வாழ்வான் படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா இசையில் இந்தப்பாடலை எழுதினார். இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் மெலடிப்பாடல் இது. தொடர்ந்து வாலியை பிரபலப்படுத்தியது எம்.ஜி.ஆரின் படகோட்டி படம். அந்தப்படத்தில் `தரை மேல் பிறக்கவைத்தான்', `பாட்டுக்குப் பாட்டெடுத்து' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சம் கொண்டு போயின. பிறகென்ன, வாலிக்கு பாட்டு வாசல் நிரந்தரமாகத் திறந்தது.
வாலி எழுதிய 15 ஆயிரம் பாடல்களில் இருந்து ஆயிரம் பாடல்களை தெரிவு செய்து அதை மேடையில் பாடகர்களை பாடவைத்து வசந்த் டிவிக்காக தயாரிக்கிறார், `சாதகப்பறவைகள்' சங்கர். இந்த பாடல் நிகழ்ச்சியில் வாலி பற்றி அவரது சிறுவயது நண்பர்கள், இசை ரசிகர்கள், கல்லூரிமாணவர்கள் காலத்தால் அழியாத வாலியின் பாடல்களின் தனித்துவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், கதிர், எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, கவிஞர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், நாடக ஆசிரியர் கிரேசிமோகன், நடிகை குஷ்பு ஆகியோர் கவிஞர் வாலியை சந்தித்து பேசினார்கள். அவர்களின் கலந்துரையாடல்களும் பாடலினூடே இடம் பெறுகிறது.
விரைவில் வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
மீண்டும் வந்தாச்சு!
விஜய் டிவியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி, "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.'' இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு பிரபுதேவா நேரில் வந்திருந்து அடுத்த `பிரபுதேவாவை' தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி மீண்டும் `உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சியை தொடங்குகிறது. இதற்கான நேர்முகத்தேர்வுகள் கோவை, திருச்சி, மதுரையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
நாளை சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட நடன ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
Bookmarks