-
12th December 2011, 12:10 PM
#311
Senior Member
Diamond Hubber
Even the CM or PM havent made a statement which condemns the action of Kerala. All they've asked is to keep mum.. Now these jobless morons will question the actors for not raising their voice.
Hope the govt imposes extra taxes on video cameras and internet.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
12th December 2011 12:10 PM
# ADS
Circuit advertisement
-
15th December 2011, 05:33 PM
#312
Member
Regular Hubber
அரை மணி நேர தம்.பல மணி நேர கேரவன் தூக்கம்.ப
அரை மணி நேர தம்.பல மணி நேர கேரவன் தூக்கம்.புகைப்படக்காரரை காக்க வைத்து விரட்டிய சிம்பு!
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரவழைத்த சிம்பு, அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, பேட்டியோ போஸோ தராமலே திருப்பி அனுப்பிவைத்தார்.
சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம்.
காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள். ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல், தம்மடித்துக் கொண்டிருந்தாராம் அரைமணி நேரமாய்.
அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், நேரில் போய் விஷயத்தைச் சொல்ல நிருபரும் போட்டோகிராபரும் சென்றார்களாம். ஆனால் சிம்புவைச் சுற்றி நின்று கொண்டிருந்த அ(த)டியாட்கள், "யோவ்... உங்களையெல்லாம் யாருய்யா உள்ளே விட்டது. போங்க போங்க..." என்று விரட்டியடித்தார்களாம்.
இதனால் கடுப்பாகி கிளம் எத்தனித்தவர்களை, சிம்புவின் மேனேஜர் வந்து சமாதானப்படுத்தி இருக்கச் சொன்னாராம்.
ஆனால் அதுவரை தம்மடித்துக் கொண்டிருந்த சிம்பு, சட்டென்று எழுந்து கேரவனுக்குள் போய்விட்டாராம்.
அவ்வளவுதான்... இங்கே நிருபரும் புகைப்படக்காரரும் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க, சிம்புவோ கேரவனில் செட்டிலாகிவிட்டாராம்.
இனி வாழ்நாளில் சிம்பு பேட்டியும் வேண்டாம் போட்டோவும் வேண்டாம்.. ஆள விடுங்கப்பா என்று அங்கிருந்து கிளம்பி வந்துள்ளனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து விசாரிக்க நாம் முயன்றபோது, 'இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்று சிம்பு தரப்பில் அலட்சியம் காட்டினர்.
படம் மட்டுமில்ல... நடவடிக்கை கூட ஒஸ்தியா இல்லையே தம்பி!
http://tamil.oneindia.in/movies/shoo...t-aid0136.html
-
15th December 2011, 05:37 PM
#313
Member
Regular Hubber
வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் ஆரம்பித்துள்ளது. இவரிடம் மேனேஜராக வேலைப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட வேலுச்சாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் மனைவி தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் பலளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் வேலுச்சாமி கொலை குறித்து வடிவேலுவிடம் விசாரணை நடத்துவது உறுதியாகியுள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மேனேஜராக வேலை பார்த்தார்.
கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
16th December 2011, 11:39 PM
#314
Senior Member
Senior Hubber
That guy prasanth has a point. If actors has the right to talk about kaveri prachanai (because tamil movies dont have market there???) - he can criticize actors for not taking mullai periyar issue. He clearly says that - if the actors have said that they are mere actors, then its not an issue.
-
18th December 2011, 03:57 PM
#315
Senior Member
Seasoned Hubber
''வெறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் வேண்டாம்!'' - வெடிக்கிறார் பாரதிராஜா
கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'அணையை உடைப்போம்...’ என்று குரல் எழுப்பினார்கள். அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
''இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது.
இப்போது கேரளாவில் ஆட்சி செய்வது மைனாரிட்டி அரசு. அங்கே ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக, தமிழக - கேரள அப்பாவி மக்களைப் பயன்படுத்துகிறார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவது தானே, இறையாண்மை. கேரளாவில் மத்திய அரசின் எண்ணத்துக்கு முரண்பட்ட மாநிலக் கட்சி ஏதாவது ஆட்சியில் இருந்தால், சும்மா இருப்பார் களா? சினங்கொண்டு சீறி எழுந்து 356-வது சட் டத்தைப் பயன்படுத்தி இந்நேரம் ஆட்சியைக் கலைத்து இருக்க மாட்டார்களா?
'ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்கிறார்கள், காப்பாற்றுங்கள்...’ என்று அபயக் குரல் கொடுத்தால் அது 'இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என்று சொல்லி தமிழரைக் கைது செய்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், நீதிமன்ற அவமதிப்பு செய்யும் கேரளாவை மத்திய அரசு தட்டிக் கேட்காமல், தட்டிக்கொடுத்துப் பாராட்டுவது எந்த வகை நியாயம்?
உங்கள் தேசிய இறையாண்மையை தமிழன் தலையில் மட்டும் சுமத்தாதே. கண்டுகொள்ளவில்லை கர்நாடகா. கேவலமாகப் பார்க்கிறது கேரளா. மத்திய அரசே, முதலில் தேசியத்துக்கான வரை யறையை வரையறுத்துக் கொடு. 'முல்லைப் பெரி யாறு அணையை உடைப்பேன்...’ என்று வெறித் தாண்டவம் ஆடும் மலையாளி பேசுவது தேசியமா? 'அணையை உடைக்காமல் காப்போம்’ என்று முழங்குகிற தமிழன் பேசுவது தேசியமா?
எப்போதுமே மத்திய அரசுக்கு தமிழர்களைப் பிடிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சிங்களவனை ஏவிவிட்டு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது. இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில், மலை யாளியை ஏவிவிட்டு தமிழ்நாட்டுத் தமிழர்களைக் வதைத்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில், தமிழனுக் காக 40 சதவிகிதம் தமிழர்கள்கூட போராட வரவில்லை என்பது வேதனையான உண்மை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பாரதிராஜா இதுவரை மௌனியாக இருந்தான். இப்போதுதான் மனசு தாங்க முடியாமல் வாய் திறக்கிறான்.
கறுப்புப் பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந் தார். இங்கே தமிழ் சினிமாவில் கக்கத்தில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டெல்லி சென்று, ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்குத் தெரியவில்லையா? அந்த நடிகனுக்குத் தேனி செல்லும் வழிதான் தெரியாதா?
'காவிரி நீர் பிரச்னை, ஈழத் தமிழர் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் ஏன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் மௌனம் சாதிக்கிறீர்கள்?’ என்று கேட் கிறார்கள்.
கடந்த காலங்களில் என் இதயத்தில் ஏற்பட்ட ரணம்... வலி இன்னும் ஆறவே இல்லை. இதே பாரதிராஜா காவிரி நதிநீர்ப் பிரச்னைக்காக, தமிழ்த் திரையுலகையே ஒன்று திரட்டி நெய்வேலியில் மாபெரும் போராட்டம் நடத்தினான். அங்கே 'கட்சிக் கொடி, சாதி இன வேறுபாடு இல்லாமல் சாதாரண பொதுத் தமிழனாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தேன். திரையுலகமே திரண்டது. அப்போது காவிரிப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது மன்றக் கொடியை திடீரென்று பறக்கவிட்டார், அந்த இடத்திலும் பதவிக்கு ஆசைப்பட்ட ஒரு கலைஞன். அரசியல் தலைவராக அங்கே உருவானார். கொத்துக் கொத்தாய் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்ஷே. கோபம்கொண்டு கொதித்து எழுந்தேன். தமிழ்த் திரையுலகையே ராமேஸ்வரத்தில் கூட்டி எதிர்ப்பைக் காண்பித் தேன். கண்ணீரும் ரத்தமும் இழந்து நின்ற ஈழத் தமிழரின் துயரத்தைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார் நாற்காலி வெறி பிடித்த ஒரு டைரக்டர், அரசியல்வாதியாக ஆகிப்போனார்.
இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில் திரையுலகை அழைத்து வந்து போராட்டம் நடத்தப்போய், அங்கேயும் ஒரு நாற்காலி வெறி பிடித்த அரசியல்வாதி உருவாக நிச்சயம் நான் காரணமாக இருக்க மாட்டேன். நான் தமிழ் மண்ணுக்குப் பொதுவானவன். தேனி மக்களுக்குச் சொந்தமானவன். என் மண்ணின் மக்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலை கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் என்மீது பாசம் கொண்டவர்கள். நானும் அவர்கள் மீது அன்புகொண்டவன். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் தனது கட்சிக்கொடி, கரை வேட்டி, தொண்டனைத் தவிர்த்து... மக்களோடு மக்களாக நின்று முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் போராடுகிறாரோ, அவர் பின்னால் நிச்சயமாக இந்த பாரதிராஜா நிற்பான்!''
http://www.vikatan.com/article.php?a...sid=378&mid=2&
-
19th December 2011, 03:27 PM
#316
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BM
''வெறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் வேண்டாம்!'' - வெடிக்கிறார் பாரதிராஜா
கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'அணையை உடைப்போம்...’ என்று குரல் எழுப்பினார்கள். அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
''இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது.
இப்போது கேரளாவில் ஆட்சி செய்வது மைனாரிட்டி அரசு. அங்கே ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக, தமிழக - கேரள அப்பாவி மக்களைப் பயன்படுத்துகிறார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவது தானே, இறையாண்மை. கேரளாவில் மத்திய அரசின் எண்ணத்துக்கு முரண்பட்ட மாநிலக் கட்சி ஏதாவது ஆட்சியில் இருந்தால், சும்மா இருப்பார் களா? சினங்கொண்டு சீறி எழுந்து 356-வது சட் டத்தைப் பயன்படுத்தி இந்நேரம் ஆட்சியைக் கலைத்து இருக்க மாட்டார்களா?
'ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்கிறார்கள், காப்பாற்றுங்கள்...’ என்று அபயக் குரல் கொடுத்தால் அது 'இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என்று சொல்லி தமிழரைக் கைது செய்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், நீதிமன்ற அவமதிப்பு செய்யும் கேரளாவை மத்திய அரசு தட்டிக் கேட்காமல், தட்டிக்கொடுத்துப் பாராட்டுவது எந்த வகை நியாயம்?
உங்கள் தேசிய இறையாண்மையை தமிழன் தலையில் மட்டும் சுமத்தாதே. கண்டுகொள்ளவில்லை கர்நாடகா. கேவலமாகப் பார்க்கிறது கேரளா. மத்திய அரசே, முதலில் தேசியத்துக்கான வரை யறையை வரையறுத்துக் கொடு. 'முல்லைப் பெரி யாறு அணையை உடைப்பேன்...’ என்று வெறித் தாண்டவம் ஆடும் மலையாளி பேசுவது தேசியமா? 'அணையை உடைக்காமல் காப்போம்’ என்று முழங்குகிற தமிழன் பேசுவது தேசியமா?
எப்போதுமே மத்திய அரசுக்கு தமிழர்களைப் பிடிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சிங்களவனை ஏவிவிட்டு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது. இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில், மலை யாளியை ஏவிவிட்டு தமிழ்நாட்டுத் தமிழர்களைக் வதைத்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில், தமிழனுக் காக 40 சதவிகிதம் தமிழர்கள்கூட போராட வரவில்லை என்பது வேதனையான உண்மை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பாரதிராஜா இதுவரை மௌனியாக இருந்தான். இப்போதுதான் மனசு தாங்க முடியாமல் வாய் திறக்கிறான்.
கறுப்புப் பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந் தார். இங்கே தமிழ் சினிமாவில் கக்கத்தில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டெல்லி சென்று, ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்குத் தெரியவில்லையா? அந்த நடிகனுக்குத் தேனி செல்லும் வழிதான் தெரியாதா?
'காவிரி நீர் பிரச்னை, ஈழத் தமிழர் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் ஏன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் மௌனம் சாதிக்கிறீர்கள்?’ என்று கேட் கிறார்கள்.
கடந்த காலங்களில் என் இதயத்தில் ஏற்பட்ட ரணம்... வலி இன்னும் ஆறவே இல்லை. இதே பாரதிராஜா காவிரி நதிநீர்ப் பிரச்னைக்காக, தமிழ்த் திரையுலகையே ஒன்று திரட்டி நெய்வேலியில் மாபெரும் போராட்டம் நடத்தினான். அங்கே 'கட்சிக் கொடி, சாதி இன வேறுபாடு இல்லாமல் சாதாரண பொதுத் தமிழனாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தேன். திரையுலகமே திரண்டது. அப்போது காவிரிப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது மன்றக் கொடியை திடீரென்று பறக்கவிட்டார், அந்த இடத்திலும் பதவிக்கு ஆசைப்பட்ட ஒரு கலைஞன். அரசியல் தலைவராக அங்கே உருவானார்.
கொத்துக் கொத்தாய் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்ஷே. கோபம்கொண்டு கொதித்து எழுந்தேன். தமிழ்த் திரையுலகையே ராமேஸ்வரத்தில் கூட்டி எதிர்ப்பைக் காண்பித் தேன். கண்ணீரும் ரத்தமும் இழந்து நின்ற ஈழத் தமிழரின் துயரத்தைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார் நாற்காலி வெறி பிடித்த ஒரு டைரக்டர், அரசியல்வாதியாக ஆகிப்போனார்.
இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில் திரையுலகை அழைத்து வந்து போராட்டம் நடத்தப்போய், அங்கேயும் ஒரு நாற்காலி வெறி பிடித்த அரசியல்வாதி உருவாக நிச்சயம் நான் காரணமாக இருக்க மாட்டேன். நான் தமிழ் மண்ணுக்குப் பொதுவானவன். தேனி மக்களுக்குச் சொந்தமானவன். என் மண்ணின் மக்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலை கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் என்மீது பாசம் கொண்டவர்கள். நானும் அவர்கள் மீது அன்புகொண்டவன். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் தனது கட்சிக்கொடி, கரை வேட்டி, தொண்டனைத் தவிர்த்து... மக்களோடு மக்களாக நின்று முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் போராடுகிறாரோ, அவர் பின்னால் நிச்சயமாக இந்த பாரதிராஜா நிற்பான்!''
http://www.vikatan.com/article.php?a...sid=378&mid=2&
Why DO BR passess Unnecessary comments on other persons of his film family ??!
Last edited by balaajee; 19th December 2011 at 03:29 PM.
-
19th December 2011, 06:06 PM
#317
Senior Member
Regular Hubber
vidunga brother idhellam pudhusa.avangalukkellam ANDHA nadigardhan ilichavaayan.avardhan thirumbi thitta maattar.andha dhairiyathula pesuraru.andha nadigar callsheet tharamattennu solliruppar udane ivar pongitar.damn this politicians.oruthan edhu senjalum kurai solla oru koottam.iam sick and tired of this
VANGA KADAL ELLA NAAN SINGAM PETHA PULLA
-
19th December 2011, 06:40 PM
#318
Member
Junior Hubber
Vijay pathi yaar enna sonnalum atha in the threadla podrathe velaya iruppanga pola...
United! United! rah rah rah!
-
19th December 2011, 08:17 PM
#319
Senior Member
Diamond Hubber
Neenga yen ellaathayume appadi paakkureenga?!? Actors laye Vijay mattum thaan black money vechirukkaar nnu sonaa yaarum namba porathillai. Appuram ethukku kavalai padureena?!? And that "தனது மன்றக் கொடியை திடீரென்று பறக்கவிட்டார்" is Vijayakanth i suppose. appallaam Vijay politics pathi pesalai. Also "நாற்காலி வெறி பிடித்த ஒரு டைரக்டர், அரசியல்வாதியாக ஆகிப்போனார்." can be at the max, Vijay's dad, not vijay. freeya viduveengaLaa
-
19th December 2011, 08:57 PM
#320
Senior Member
Regular Hubber
that anna hazare matter only making me doubt he is scolding vijay
VANGA KADAL ELLA NAAN SINGAM PETHA PULLA
Bookmarks