-
22nd December 2011, 08:29 AM
#1
Senior Member
Seasoned Hubber
ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் கிருஷ்ணா திரையரங்க அனுபவத்தை கார்த்திக் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நமக்கு விஷுவலாக உணர்த்தி விட்டார்கள் வாசுதேவனும் பம்மலாரும்.
பாராட்டுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு சென்று விட்டார்கள் இருவரும்.
இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக ஒரு
நன்றி...
நமது பதிவுகள் எந்த அளவிற்கு எதிர்கால சந்ததியினரிடம் நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறுகின்றன என்பதை நாம் அவ்வப்போது உணர்ந்து வருகிறோம். 30 வயது கூட இல்லாத ஒரு இளைஞர் நடிகர் திலகத்தைப் பற்றி தன் வலைப்பூவில் எழுதியுள்ளதைப் படியுங்கள்.
அதிலிருந்து ஒரு பகுதி
இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல. சிவாஜி கணேசன் மறையும் போது எனக்கு வயது 16. அந்த வயதிற்கு அது ஒரு நியூஸ். அதற்குப் பிறகுதான் சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது? என்பதை அவரின் திரைப்படங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
மேலும் படிக்க..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd December 2011 08:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks