-
29th December 2011, 05:27 PM
#1721
Senior Member
Devoted Hubber
ஜல்லி கட்டு வெற்றி விழாவில்
மக்கள் திலகத்திடம் இருந்து முத்தம் பெற்றும் நடிகர் திலகம். மக்கள் திலகத்திடம் நம்பியார் முத்தம் கேட்டக, மக்கள் திலகம் மறுக்க, நடிகர் திலகம் ஒரு சிறுவன் போல் நம்பியாரை தள்ளிவிட, கடைசியில் , மக்கள் திலகம் நம்பியர்ர்க்கு முத்தம் கொடுக்க ................
Video :
One RARE photo of NT, MT , Rajkumar and Prem Nazir (?) together in the end of the video
Last edited by abkhlabhi; 29th December 2011 at 05:36 PM.
-
29th December 2011 05:27 PM
# ADS
Circuit advertisement
-
29th December 2011, 10:02 PM
#1722
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!
சில பல நாட்களாய் இங்கே பதிவிட முடியாதபடி சில பல வேலைகள்!
வழக்கம் போல் சுவாமியும் வாசுதேவனும் அள்ளி வழங்கியிருக்கிறார்கள்! அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தவம்! அதன் மூலம் மற்றவர்களுக்கு கிடைப்பது வரம்! தவங்களை புரிவோர் எதையும் எதிர்பார்பதில்லை. அதே நேரத்தில் வரங்கள் கிடைக்கப் பெற்றோர் நன்றி சொல்வதிலும் தவறில்லை. அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!
ஒவ்வொரு படத்தின் வெளியிட்டு நாளன்றும் கார்த்திக் தன் நேரடி தியேட்டர் அனுபவங்களை பதிவு செய்த விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக 70-களில் வெளியான படங்களுக்கு அவரின் பதிவுகள் அன்றைய காலக் கட்டத்தின் நேரே பிடிக்கப்பட்ட கண்ணாடி!
நீண்ட இடைவெளிக்கு பின் வந்த சாரதா அக்குறையை ஈடு கட்டும் வண்ணம் பல பதிவுகளை செய்திருக்கிறார்!அவற்றில் அவரின் முத்திரைகள் வழக்கம் போல்!
சாரதா,
ஒரே ஒரு சந்தேகம்? நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருந்த போது அவருக்கு எதிராக எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டது எப்போது? காரணம் நீங்கள் ராம்குமாரின் திருமண வரவேற்பு விழாவையும் அதில் சேர்த்திருப்பதால் கேட்கிறேன்! ராம்குமாரின் திருமணம் நிகழ்ந்தது 1980 ஜனவரியில். [நீங்கள் கூட சிறுமியாக இருந்த போது உங்கள் தந்தையாரோடு கல்யாண வரவேற்பிற்கு போய்விட்டு வந்ததை ஒரு முறை இங்கே எங்களோடு பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வருகிறது]. நடிகர் திலகத்தின் தலைவர் பதவிக்கு அப்போது ஏதும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. 1974 முதல் 1984 வரை அவர் எவ்வித தடையிமின்றி தொடர்ந்தார். 1984 ஜூன் மாதம்தான் இந்த எஸ்.எஸ்.ஆர். போட்டி வந்தது. நமக்கு வேதனையளித்த விஷயம் என்னவென்றால் அதே 1984 மார்ச் ஏப்ரல் மாதங்களில்தான் நடிகர் திலகமே தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள போரூர் சிவாஜி கார்டன்-ல் அன்னை ராஜாமணி அம்மையார் சிலை திறப்பு விழா மற்றும் தஞ்சையில் சாந்தி கமலா திரையரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. அதுவும் தவிர அதே 1984 மே மாதத்தில் தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. தஞ்சை, மாயவரம், உப்பிலியாபுரம் மற்றும் சென்னை அண்ணா நகர் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஏனைய கட்சிகள் எல்லாம் தி.மு.க. தலைமையில் எதிர்த்து நின்றன. அப்போதும் கூட்டணி தர்மத்தின்படி காங்கிரஸ் -அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு நடிகர் திலகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். [அந்த தேர்தலில் தஞ்சையில் காங்கிரஸ்-ம் உப்பிலியாபுரத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்ற போது மாயவரத்திலும் சென்னை அண்ணா நகரிலும் தி.மு.க. வெற்றி பெற்றது]. மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளிலுமே ஆதரவான நிலையை நடிகர் திலகம் எடுத்த போதும், அவர் உயிரைக் கொடுத்து உழைத்த நடிகர் சங்கத்தில் அவருக்கு எதிராக எஸ்.எஸ்.ஆர். களமிறக்கப்பட்டார். அது நடிகர் திலகத்தை வேதனையில் ஆழ்த்தியது என்றால் ரசிகர்களுக்கு அது கோவத்தை வரவழைத்தது. அந்த நேரத்தில்தான் சிம்ம சொப்பனம் வெளியாகிறது [1984 ஜூன் 30]. மதுரையில் எஸ்.எஸ்.ஆருக்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். ஆனால் எஸ்.எஸ்.ஆர். அம்புதானே! ஆகவேதான் இனிமேல் நடிகர் சங்க வாசலை மிதிக்க மாட்டேன் என்று நடிகர் திலகம் ஒரு முடிவு எடுத்தார்.
அதன் பிறகு நீங்கள் குறிப்பிடும் ராதாரவி வெற்றி பெற்றதெல்லாம் 1986-ல் நடந்தவை. அன்னை இல்லத்திற்கே வந்து நடிகர் திலகத்தை சமாதானப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிடும் அதே ஐசரி வேலன்தான் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போதும்கூட நடிகர் திலகத்தைப் பற்றி ஒரு பேட்டியெல்லாம் கொடுத்தார் [இது சிவாஜியின் வெற்றியும் அல்ல, ---- ரின் தோல்வியும் அல்ல].
எது எப்படியிருப்பினும் நடிகர் சங்கம் என்ற ஒன்று இன்றும் நிலைக் கொண்டிருக்கிறது அதற்கு ஹபிபுல்லா ரோட்டில் சொந்தமாக ஒரு கட்டிடம் இருக்கிறது, இன்று சத்யம் சினிமாஸ் குழுமத்தோடு அங்கே ஒரு மல்டிப்ளெக்ஸ் அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்படுகிறது என்றெல்லாம் சொன்னால் அதெற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது நடிகர் திலகம் என்பதை யார் நினைத்தாலும் மறைக்க முடியாது.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 30th December 2011 at 10:51 AM.
-
30th December 2011, 01:52 PM
#1723
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,
என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!
We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.
Thank you friends,
ANM
-
30th December 2011, 11:03 PM
#1724
Junior Member
Senior Hubber

Originally Posted by
anm
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,
என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!
We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.
Thank you friends,
ANM
MURALISRINIVAS and amm are absoltely correct. Because of all these happenings NT decided not to step iin nadigar sangam activities any more.
BOTH THE CONGRESS PARTY AND NADIGARSANGAM HAS NOT RECEIPROCATED NT PROERLY.
-
31st December 2011, 04:45 AM
#1725
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
மக்கள்திலகம் பற்றிய நடிகர்திலகம் அவர்களின் கட்டுரையின் இறுதிப்பகுதியை அளித்து செவ்வனே நிறைவு செய்து விட்டீர்கள். அருமையான ஆவணப்பதிவை முழுமையாக அளித்து மகிழ்வித்ததற்குப் பாராட்டுக்கள்.
'பணம்' திரைக்காவியத்தின் ஒன்பது நவரத்தினமான விளம்பரப்பொக்கிஷப்பதிவுகளும், 'பாக்கியவதி' படத்தின் அருமையான விளம்பரப்பதிவுகளும் மிக மிக அற்புதம். பணம் திரைப்படம் தனது அறுபதாவது ஆண்டை நெருங்கும் வேளையில், அன்றைய விளம்பரங்கள் எப்படி புதுமை மாறாமல் பதிக்க முடிகிறது என்று எண்ணி குழம்பினேன். அப்புறம்தான் தெளிந்தேன். நீங்கள் என்ன எங்களைப்போன்ற சாதாரண மனிதரா?. நீங்கள்தான் 'ஜீ பூம்பா' பூதமாயிற்றே. நீங்கள் நினைத்தால், தமிழின் முதல் பேசும் படமான 'சீனிவாச கல்யாணம்' விளம்பரத்தைக்கூட கொண்டுவர முடியும்.
அப்பப்பா என்ன ஒரு அசுர உழைப்பு....
இணைப்பாகத் தந்துள்ள இயக்குனர் பிரசாத் அவர்களின் புகழ்க்கட்டுரையும் அருமை. அனைத்து ஆவணங்களுக்கும் எண்ணற்ற நன்றிகள்.
டியர் mr_karthik,
தாங்கள் என்னிடம் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கும், இதயத்தின் அடித்தளத்திலிருந்து தொடர்ந்து தாங்கள் அள்ளி அளித்துவரும் உயர்வான, உச்சமான பாராட்டுக்களுக்கும், எனது உணர்வுபூர்வமான, சிரந்தாழ்த்திய நன்றிகள் !
[தமிழின் முதல் பேசும் படம், "காளிதாஸ்". இத்திரைப்படம், 31.10.1931, ஸ்திரவாரமான சனிக்கிழமையன்று வெளியானது. தாங்கள் குறிப்பிட்டுள்ள "ஸ்ரீனிவாச கல்யாணம்" 1934-ம் ஆண்டில் வெளியானது. இந்தப்படத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுதான் சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும் படம்.]
அன்புடன்,
பம்மலார்.
-
31st December 2011, 04:50 AM
#1726
Senior Member
Seasoned Hubber
aaha... andha viLambaramum kaivasam irukku-nu solRIngaLaa?
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
31st December 2011, 04:57 AM
#1727
Senior Member
Veteran Hubber
டியர் பாலா சார்,
நடிகர் திலகம்-மக்கள் திலகம்-வில்லன் திலகம் ஆகிய தமிழ்த்திரையுலகின் மூன்று அரும்பெரும்திலகங்கள் ஒரே மேடையில் அபூர்வமாக இணைந்த "ஜல்லிக்கட்டு" திரைக்காவிய 100வது நாள் வெற்றிவிழா வீடியோவை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள் ! அதில் உள்ள, இருதிலகங்கள் இணைந்திருக்கும் அரிய நிழற்படங்கள், கண்களுக்கு கலக்கல் விருந்து. கிடைத்தற்கரிய காணொளியின் சுட்டியினை வழங்கிய தங்களுக்கு தீர்க்கமான நன்றிகள் !
டியர் முரளி சார்,
தங்களின் மேன்மையான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 2nd January 2012 at 04:58 AM.
pammalar
-
31st December 2011, 05:25 AM
#1728
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RC
aaha... andha viLambaramum kaivasam irukku-nu solRIngaLaa?

டியர் Mr. RC,
முதல் தமிழ் பேசும் படமான "காளிதாஸ்" படத்தின் விளம்பரம் விக்கிபேடியா இணையதளத்திலேயே உள்ளது. அந்த மிகமிக அரிய விளம்பரம் இங்கே தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு:

"காளிதாஸ்"தான் தெலுங்கு மொழியின் முதல் பேசும் படமும் கூட. இப்படத்தில் நடித்த பாதி கலைஞர்கள் தமிழிலும், பாதி கலைஞர்கள் தெலுங்கிலும் பேசி நடித்தனர். அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழிலும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கிலும் பேசி நடித்தனர். [சென்னையில் இப்படம் வெளியான 'கினிமா சென்ட்ரல்' அரங்கம்தான் சென்னை தங்கசாலைப்(Mint) பகுதியிலுள்ள 'ஸ்ரீமுருகன்' திரையரங்கம்].
"ஸ்ரீனிவாச கல்யாணம்" விளம்பரம் கிடைக்கப் பெற்றால், அவசியம் இங்கே பதிவிடுகிறேன்.
Thanks for your response !
[இதற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய mr_karthik அவர்களுக்கும் இனிய நன்றி !]
அன்புடன்,
பம்மலார்.
-
31st December 2011, 05:36 AM
#1729
Senior Member
Veteran Hubber
-
31st December 2011, 08:40 AM
#1730
Senior Member
Seasoned Hubber
Bookmarks