-
25th December 2011, 07:20 AM
#1031
Moderator
Diamond Hubber
ராதா கல்யாணம்-200
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `ராதா கல்யாணம்' தொடர், 200-வது எபிசோடை எட்டுகிறது.
கீர்த்தி தன் தங்கையைப் போல் பாவிக்கும் ராதாவின் வாழ்க்கை மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறாள். அதன் காரணமாகவே ராதாவின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நினைக்கிறான். ஆனால் ராதாவோ தன் உயிர் போனாலும் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
ராதாவின் வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதையும், அதை ராதா மறைப்பதையும் நன்கு உணர்ந்த கீர்த்தி, ராதாவை அவளின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு கீர்த்தியும், ராதாவும் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அச்சமயம் குடிகார சேவகனை கீர்த்தி கண்டுவிட கீழே மயங்கி விழுகிறாள். கீர்த்தியை பரிசோதிக்கும் வைத்தியர், கீர்த்தி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூற, வம்சியின் அம்மா உட்பட அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தை நீடிக்க விடாமல், குழந்தை பெற்றவுடன் கீர்த்தியின் உயிர் பிரிந்துவிடும் என்ற அபாய செய்தியை அவர் கூற, அனைவரும் கலங்கிப் போகிறார்கள்.
ராதாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களை உணரும் கீர்த்தி அடிக்கடி மயங்கி விழுகிறாள். ராதாவின் தாலி பற்றிய உண்மையை கீர்த்தி அறிந்தாளா? கீர்த்தியின் உடல் நிலையை வம்சி அறிந்தானா? தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
25th December 2011 07:20 AM
# ADS
Circuit advertisement
-
25th December 2011, 07:22 AM
#1032
Moderator
Diamond Hubber
தங்கம் தொடரில் நடிக்கப்போகும் அடுத்த அழகுப் பெண் யார்?
நடிகை ரம்யாகிருஷ்ணன் சன் டிவியில் நாயகியாக நடிக்கும் தொடர் தங்கம். இந்த தொடரில் ஒரு புதுமுக நடிகைக்கு கடந்த ஆண்டு நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதற்காக எடுத்த எடுப்பில் இந்த வாய்ப்பை அவர் வழங்கி விடவில்லை. சிறந்த சரும அழகியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த விரும்பினார். அதற்காக கோத்ரேஜ் நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு பிரபல நகரங்களில் போட்டி நடத்தியதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் நித்யா.
போட்டியில் வென்ற நித்யா கோவையைச் சேர்ந்தவர். கல்லூரி மாணவியான அவர், இந்த தொடரில் வள்ளி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் நடிக்கத் தொடங்கியதும் `விளக்கு வச்ச நேரத்திலே', `அபிராமி' தொடர் களிலும் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.
இப்போது இன்னொரு புதுமுகத்தை தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கும் பொருட்டு `சிந்தால் சரும பாதுகாப்பு சவால் சீசன்-2' என்ற போட்டியை அறிவித்திருக்கிறார். இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட இளம் சரும அழகி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தங்கம் தொடரில் புதிதாக உருவாக்கப்படும் முக்கிய கேரக்டரில் நடிப்பார்.
போட்டிக்கான முதல் கட்டத்தேர்வு கோவை, திருச்சி, சென்னையில் நடைபெறவிருக்கிறது. டைரக்டர் டி.பி.கஜேந்திரன், நடிகை காவேரி இருவரும் நடுவர்களாக இருந்து சிறந்த சரும அழகியை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் காவேரி, இதே தங்கம் தொடரில் இளவஞ்சி என்ற கேரக்டரில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:03 AM
#1033
Moderator
Diamond Hubber
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!
116 நாடுகளில் 83 மொழிகளில் 13 வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பது `ஹு வாண்ட்ஸ் டு பி எ மில்லினிர் கேம் ஷோ' நிகழ்ச்சி. இதை இந்தியில் `கோன் பனேகா குரோர்பதி' என்ற பெயரில் அமிதாப்பச்சன் நடத்தி புகழ் பெற்றார். இப்போது தமிழில் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற தலைப்பில் பிரத்யேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது, இந்த நிகழ்ச்சி.
எளிய நடையில், எளிய கேள்விகள் மூலம் பொது அறிவில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களை கோடீஸ்வரராக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா வழங்குகிறார். சின்னத்திரையில் சூர்யாவின் முதல் பங்களிப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான படப்பிடிப்பு புத்தாண்டு முதல் தொடங்குகிறது. பிப்ரவரியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:05 AM
#1034
Moderator
Diamond Hubber
புத்தாண்டு சிறப்பு ஜாக்பாட்
ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சி வரும் 2012 புத்தாண்டை மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் வகையில் `ஜாக்பாட்' சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில் இளம் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர்.
ஒரு அணியில் நடிகர்கள் ஜெய் ஆகாஷ், பிருத்திவ் பாண்டியராஜன், உதயா, நடிகை ஆர்த்தி, மற்றொரு அணியில் நடிகர்கள் ஹம்சவர்தன், கணேஷ்கர், சச்சின், நடிகை அனுஜா ஐயர் என இரு அணிகளும் உற்சாகத்துடன் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறார்கள்.
நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சி, புத்தாண்டு தினத்தில் இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:06 AM
#1035
Moderator
Diamond Hubber
மூதாய்
மக்கள் தொலைக் காட்சியின் தயாரிப்பில், வரும் வெள்ளி இரவு 8.30 மணிக்கு `மூதாய்' என்கிற தலைப்பில் வெளிவரும் மாண்டுபோன பெண்களின் வீரவரலாறு தொடங்குகிறது. இதுவரை யாராலும் சொல்லப்படாத மண் வணங்கும் பெண்களின் உண்மைக்கதைகள் இதில் இடம் பிடிக்கின்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் மக்களால் போற்றப்படும் இந்த ஞான தெய்வங்கள் அத்தனைபேரும் சமூகத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
பிள்ளைக்காரி
இவள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம், இலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவள். நாற்றுக் கட்டை வைத்து விளையாடிய பெண்ணை கொச்சைப்படுத்திய பண்ணையாரை எரித்தவள். தன்னைக் கொன்று பண்ணையாரின் கண்ணை பிள்ளைப்பால் தந்து காத்தவள்.
அழகம்மை
தேனி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவள். தன் தாத்தா ஊரை ஏமாற்றிய கதையை ஊர் பஞ்சாயத்துக்குச் சொன்னவள். சொந்தத் தாத்தாவால் பழிவாங்கப்பட்டவள்.
வெட்டுடையாள்
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவள். சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட வீரநங்கை வேலு நாச்சியாரை வெள்ளைக்காரர்களிடம் இருந்து தன் தலையைத் தந்து காத்தவள்.
பாகம்பிரியாள்
பழைய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், திருவொற்றிïர் கிராமத்தைச் சேர்ந்தவள். பெண்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சொன்னதால் சொந்த உறவுகளால் புதைக்கப்பட்டவள்.
கண்ணாத்தாள்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவள். சிவகங்கை சமஸ்தானத்தில் பணியாற்றி வெள்ளையர்களுக்கு தன் நாட்டு ரகசியங்களைச் சொன்ன தன் கணவனை கொன்று, ராணிக்காக கொலையுண்டவள்.
குயிலி
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவள். சிவகங்கை அரண்மனையை வெடிகுண்டால் தகர்த்தெறிய வைத்திருந்த வெள்ளைக்காரர்களின் வெடிகுண்டுக் கிடங்கை தன் உடலில் நெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டு குதித்து வெடிக்க வைத்து நாசம் செய்தவள்.
சிகப்பி
மதுரை மாவட்டம், சின்ன பள்ளப்பட்டியைச் சேர்ந்தவள். சாதிவிட்டு சாதித் திருமணம் செய்து ஊர்த் துணிகளைத் துவைத்து புரட்சி கண்டவள்.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:08 AM
#1036
Moderator
Diamond Hubber
தென்னிந்திய அழகிக்கு கிரீடம்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் தென்னிந்திய அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது. இறுதிச்சுற்றில் இடம் பிடித்த 18 அழகுப்பெண்களில் சிறந்த தென்னிந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த ரோகிணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது அழகியாக ஸ்வேதாவும், மூன்றாவது அழகியாக அஸ்வினியும் தேர்வு பெற்றார்கள். இவர்கள் இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.
போட்டியில் வென்ற 3 அழகிகளுக்கும் நடிகர் பிரசாந்த் கிரீடம் சூட்டி வாழ்த்தினார். இந்த அழகிப்போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் பொங்கல் தினத்தில் தனியார் சேனலில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:09 AM
#1037
Moderator
Diamond Hubber
அஞ்சறைப்பெட்டி ஸ்டார் கிச்சன்
ஜீ தமிழ் டி.வி.யில் 650 பகுதிகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சமையல் நிகழ்ச்சி அஞ்சறைபெட்டி. தென் இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் சிறப்பான உணவு வகைகளை தேடி அதனை நேயர்களிடையே சேர்த்து வருவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்ச்சியின் புத்தாண்டு சிறப்பாக வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்கள் பங்கு பெற்று அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர்.
நடிகர் பரத், உலகம் முழுவதும் தான் ரசித்து ருசித்த உணவு வகைகளையும், தன் உடல்வாகிற்கு தான் மேற்கொள்ளும் உணவு முறைகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். இன்னொரு பகுதியில் நடிகை மோனிகா தனக்கு பிடித்த உணவு வகைகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜீவாவின் மனைவி சுப்ரியா, தான் புதிதாக ஆரம்பித்திருக்கும் சாட் ஷாப் பற்றியும், அங்கு உள்ள வித்தியாசமான சாட் வகைகளையும், ஜீவா அவற்றை எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது போன்ற பல விஷயங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியை ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்குகிறார்.நாளை புத்தாண்டு தினத்தில் மதியம் 1.30 மணிக்கு இடம் பெறுகிறது, இந்த நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:09 AM
#1038
Moderator
Diamond Hubber
ஜெயா அவார்ட்ஸ் 2011
ஜெயா டி.வி.யில் புதிய ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சியாக `ஜெயா அவார்ட்ஸ் 2011' எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி இன்று இரவு 8.30 மணி முதல் ஜெயா டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.
புதிய ஆண்டை பிரபலங்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் வரவேற்கின்றனர். இந்த புத்தாண்டை ஜெயா டி.வி. தனது நேயர்களுடன் இணைந்து புதுமையாக கொண்டாடுகிறது.
2011-ம் ஆண்டில் திரைத்துறையில் சாதனை படைத்த இளம் சாதனையாளர்கள் விருதை, நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஜெயா டி.வி. வழங்குகிறது.
ஜெயா அவார்ட்ஸ் 2011 நிகழ்ச்சியில் இன்னிசையுடன் பிரபல நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் பங்கேற்ற பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:11 AM
#1039
Moderator
Diamond Hubber
கிருஷ்ணனை மீட்க போராடும் காயத்ரி
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், 650 எபிசோடுகளை நிறைவு செய்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் மேன்மையை காட்சிப்படுத்தியிருக்கும் இந்த தொடரின் சிறப்பு யதார்த்தமான கேரக்டர்கள். அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள்.
கிருஷ்ணன்-முகுந்தன் இடையே நீடித்து வரும் சண்டையில், கிருஷ்ணன் தன் மீதான நம்பகத் தன்மையை முகுந்தனிடம் ஏற்படுத்த பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அவை அனைத்தும் முகுந்தனின் அலட்சிய மனோபாவத்தால் தோல்வியில் முடிகிறது.
இந்நிலையில் முகுந்தனின் இரண்டாவது மனைவி சுவேதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதை தெரிந்து கொண்ட சுவேதாவின் முதல் கணவன் சத்யா, குழந்தையை திருடிப்போய் விடுகிறான். குழந்தையை ஆளாளுக்கு தேடிப்போக, கிருஷ்ணனும் தேடலை தீவிரமாக்குகிறான். இந்த சூழலில் கிடைக்கிறது சத்யாவின் மரணச்செய்தி. சத்யா இறந்ததற்குக் காரணம் கிருஷ்ணன் தான் என்பதாக சந்தர்ப்பம் சாட்சியமைக்க, கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போகிறான்.
கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போன பிறகும் முகுந்தன் திருந்தினானில்லை. தன்னை நல்லவனாக நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக இது கிருஷ்ணன் நடத்தும் நாடகம் என்பதாகவே நினைக்கிறான்.
கணவன் முகுந்தனின் இந்த கடின முகம் பிடிக்காத அவன் மனைவிகள் சுவேதாவும் சித்ராவும் அவனை திருத்தும் நோக்கில் ஒரு முடிவெடுக்கிறார்கள். எந்த சூழலிலும் அவனிடம் பேசிவிடக்கூடாது என்பது தான் அந்த முடிவு. இதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால் ஒருகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை சித்ரா மீறி விடுகிறாள். சுவேதாவுக்குத் தெரியாமல் முகுந்தனிடம் பேச ஆரம்பிக்கிறாள். இது தெரிய வந்ததும் சித்ராவிடம் சுவேதா கோபமாகிறாள். இருவருக்கும் சண்டை ஆரம்பம். அதுவரை ஒற்றுமையாக இருந்தவர்களை இந்த சண்டை ஜென்ம விரோதிகள் போலாக்கி விடுகிறது. இதனால் `முகுந்தன் யாருக்கு?' என்ற போட்டி அவர்களுக்குள் தீவிரமாகிறது. இரண்டு மனைவிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் கிருஷ்ணன் யார் பக்கமாய் சாய்கிறான் என்பது அடுத்த கட்ட திருப்பம்.
இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் தன் கணவன் கிருஷ்ணனை மீட்க காயத்ரி முயற்சி மேற்கொள்கிறாள்.அவள் முயற்சிக்கு பலன் கிடைத்ததா? சஸ்பென்சை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர்.
தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ராஜ்காந்த், ஸ்ரீதுர்கா, அமரசிகாமணி, பீலிசிவம், ரேவதி சங்கர், ராஜேஸ்வரி, சிநேகா, பாஸ்கர்ராஜா, சாந்தி வில்லியம்ஸ், சிவகவிதா, ராமச்சந்திரன், ஜெயந்த், சோனியா, ஜெயலலிதா, சுதா, ஆர்த்தி, அப்சர், கே.எஸ்.ஜெயலட்சுமி, பரத், ஜெயபிரபு, வைரவராஜ்.
பின்னணி இசை: ரேஹான். முகப்பு இசை: டி.இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: பழனி. திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யா. இயக்கம் ஷிவா.
தயாரிப்பு: சேன் மீடியா.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:12 AM
#1040
Moderator
Diamond Hubber
இல்லம் தேடி இறைவன்!
ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "யுவர் சாய்ஸ்'' நிகழ்ச்சி தற்போது மாற்றம் செய்யப்பட்டு 5 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரையும், பின்னர் 6 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரையும் நேரடி ஒளிபரப்பாக தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆன்மிகம் சம்பந்தமான திருத்தலக் காட்சிகளையும் கண்டு பரவசிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு நேயர் தாம் நினைத்தவுடனேயே பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஆலயம் குறித்தோ, அல்லது அந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள் குறித்தோ அரிய காட்சிகளை இந்நிகழ்ச்சிகளின் மூலம் கண்டு மகிழ முடியும்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல மொழிகள் பேசும் நேயர்களிடமும் சரளமாக அவர்களின் மொழியில் பேசுவதோடு, நிகழ்ச்சியின் இடையிடையே பல்வேறு அரிய தகவல்களையும் அற்புதமான பாசுரங்களையும் பாடுவது பரவசம்.
நன்றி: தினதந்தி
Bookmarks