-
3rd January 2012, 04:21 PM
#1771
Senior Member
Devoted Hubber
மேடையில் நடனமாடும் நடிகர் திலகம்
(நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் பாடலுக்கு என்று நினைகிறேன் )
http://s431.photobucket.com/albums/q...vajiunseen.jpg
Last edited by abkhlabhi; 3rd January 2012 at 05:17 PM.
-
3rd January 2012 04:21 PM
# ADS
Circuit advertisement
-
3rd January 2012, 05:17 PM
#1772
Senior Member
Devoted Hubber
-
4th January 2012, 07:45 AM
#1773
Senior Member
Veteran Hubber
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
நன்றி கலந்த வணக்கம் !
டிசம்பர் 2011-ன் இறுதி நாட்களில் ஏற்பட்ட திடீர் இயற்கைச் சீற்றங்களினால் புதுச்சேரியும், தமிழகமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருப்பது அனைவரும் அறிந்ததே. புதுவையிலும், தமிழகத்தில் குறிப்பாக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம், தஞ்சை, குடந்தை போன்ற பகுதிகளிலும் இச்சீற்றங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கிப்போயிருப்பது ஊடகங்களின் மூலம் தெள்ளத்தெளிவாகின்றன. 'தானே' சூறாவளிப்புயல் உண்டாக்கிய சீரழிவால், பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கும், முக்கிய தேவைகளுககுமே அல்லல்படும் அமைதியற்ற சூழலில், பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து விடுபட்டு, தமிழகமும், புதுச்சேரியும் வெகுவிரைவில் இயல்புநிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனிடமும், இறைவனுக்கு நிகரான நமது இதயதெய்வத்திடமும் பிரார்த்தனை செய்வோம். இந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இத்துன்பநிலை நீங்கி இன்பநிலை காண்பதற்கும், அனைத்து அல்லல்களிலிருந்தும் வெளிவருவதற்கும், அவர்களுக்கு எல்லாவித சக்திகளையும் இறைவனும், இதயதெய்வமும் அளித்து அருள் பாலிக்கட்டும் !
நமது திரியின் சுப்ரீம் ஸ்டார் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் வசிக்கும் ஊரான நெய்வேலியும், இந்த இயற்கைச் சீரழிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அவர் வசிக்கும் இடத்தின் பகுதிகளில் உள்ள மின்சார இணைப்புக்களிலெல்லாம் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதால் கடந்த ஒருவார காலமாகவே அவர் மின்சாரம் இல்லாமல் இருந்து வருகிறார். இதுதவிர, நெய்வேலியில், தொலைத்தொடர்பு இணைப்புகளும் முழுவதுமாக சேதமடைந்திருக்கின்றன. இவைதவிர, மற்ற முக்கிய அன்றாட அடிப்படைத்தேவைகள், இறையருளாலும், இதயதெய்வத்தின் கிருபையாலும் அவருக்கு பாதகமில்லாமல் சாதகமாக இருக்கின்றன என்பது இந்த நிலையிலும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி. நானும், அவரும் தினந்தோறும் சிலமணித்துளிகளாவது கைபேசியில் உரையாடாமல் உறங்கியதில்லை. அதேபோல, கடந்த சில தினங்களாகவும் அவருடன் பேசியபோது, நான் மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களை அவர் என்னிடம் தெரிவித்தார். நேற்றிரவு பேசும்போது, மின்சாரம் இணைப்புகளெல்லாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறினார். எனினும், தொலைபேசி இணைப்புகளெல்லாம் சீராகி, internet broadband சேவைகள் வருவதற்கு குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்றும் கூறினார். கடந்த ஒரு வாரகாலமாக நமது திரிக்கு வரமுடியவில்லையே, பதிவுகளை அளிக்க முடியவில்லையே என்று அவரது இந்த நிலையிலும் மிகுந்த மனவருத்தம் கொண்டார். நான் அவரைத் தேற்றியதோடு, கடந்த ஒரு வாரமாக நமது திரியில் வந்த பதிவுகளையும் வாசித்துக் காண்பித்தேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தங்களது சங்கடங்கள் இன்னும் சில தினங்களில் சரியாக பிரார்த்திக்கிறேன் என்று கூறியதோடு, தாங்கள் பதிவிட இயலாத இச்சூழ்நிலை குறித்து நமது திரியிலும் ஒரு பதிவை இடுகை செய்துவிடுகிறேன் என்றும் இயம்பினேன். அவர் உணர்ச்சிவயப்பட்டார். நமது திரியின் அன்பர்களும், நமது அன்புள்ளங்கள் அவைவரும் தங்களுக்காக அவசியம் பிரார்த்தனை செய்வார்கள் என்றும் கூறினேன். அவர் பரமதிருப்தி அடைந்தார். 'Happiness is the state of mind' என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது வாசுதேவன் சாரும் அவரது குடும்பத்தினரும். இந்த இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும்போல் மகிழ்ச்சியாகவே இருந்து வருகின்றனர். இப்பண்பு, அவர்கள் எப்பேர்ப்பட்ட உயர்ந்த நெறியாளர்கள்-பண்பாளர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய நல்ல உள்ளங்களுக்கு எல்லா நன்மைகளும் சேரவும், வெகுவிரைவில் அவர்களுக்கு சகஜநிலை திரும்பவும் இறைவனிடமும், இதயதெய்வத்திடமும் வேண்டிக் கொள்வோம். குகநாதனின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய சமீபத்திய 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" காவியக்கட்டுரையை தனது சமீபத்திய பதிவாக அளித்தபின், இயற்கை இடையூறுகளால் சில தினங்கள் பதிவுகளை இட இயலாமல் இருக்கும் வாசுதேவன் அவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில், தமிழர் திருநாளையொட்டி, பதிவுகளை அள்ளி வழங்க வந்து எப்பொழுதும்போல், நமது திரியின் ராஜபார்ட்டாக ராஜநடை போடுவார் என்பது திண்ணம் !
[வாசுதேவன் அவர்கள் இல்லாமல் நமது திரி வெறிச்சோடிக்கிடக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் எனக்கு ரொம்பரொம்பவே].
பாசத்துடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 4th January 2012 at 07:47 AM.
pammalar
-
4th January 2012, 08:29 AM
#1774
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் வழங்கிய சிறப்பான பாராட்டுதல்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !
2011-ம் ஆண்டு நமது திரிக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூறினால் அது மிகையன்று. திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தாங்களும், திரியின் சுப்ரீம் ஸ்டாரான வாசுதேவன் அவர்களும் நமது திரிக்குள் வந்து அசத்தத் தொடங்கிய ஆண்டாயிற்றே ! இங்குள்ள அனைவரும் தெரிவித்ததுபோல நம் அனைவரது பங்களிப்பாலும், 2012லிருந்து நமது திரி மேலும் மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம் !
சக்கை போடு போட்டுத் துவங்கிய தாங்கள் அடுத்ததாக அண்டபகிரண்டத்தைக் காக்கும் கலையுலகப் "பராசக்தி"யின் 'கா..கா..கா' பாடலோடு கம்பீரமாக வந்துள்ளீர்கள். காலஞ்சென்ற எனது தாயார், இந்தப்பாடல் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், அவர்கள் அப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியேவிட்டுவிட்டு, இப்பாடலை முழுவதும் பார்த்து ரசித்துவிட்டு, அதன் பின்தான் அந்த விட்ட வேலையைத் தொடர்வார்கள். அவர், ஒவ்வொரு முறையும், இப்பாடலை கண்டு களிக்கும் போதெல்லாம் சொல்லும் வாசகம், 'முதல் படத்திலேயே என்னமாய் நடிச்சிருக்கார் பாரு..அவர மாதிரி இனியொருத்தர் பொறந்து வரணும்' என்பார். இவையெல்லாம் எனது நினைவுத்திரையில் நீங்காமல் இடம்பெற்றிருப்பதால், தங்களுடைய 'கா..கா..கா' பாடல் பதிவைப் படித்தவுடன், அப்படியே எழுத வந்துவிட்டது.
உடுமலை நாராயண கவிராயரின் உண்மையை உரக்க உரைக்கும் உன்னத வரிகள், சுதர்சனம் அவர்களின் சுகமான சங்கீதம், இசைச் சித்தரின் இங்கிதம்கலந்த குரல்ஜாலம் எல்லாம் "பராசக்தி" கணேசரின் performanceஸோடு இணைந்து பரிமளிக்கும் போது, அந்தப்பாடல் எவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறந்த முன்னுதாரணம். மாருதிராவின் கேமராவும் இப்பாடலில் திலகத்தைப் படம்பிடிப்பதில் மலைப்பை ஏற்படுத்தியிருக்கும். சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் பாட்டுக்குரல் பட்டி-தொட்டியெங்கும் ஒலிக்கும் பிரபலக்குரலானதும் "பராசக்தி" கணேசரின் performance பலத்தால்தான் !
அருமையான ஆய்வுப்பதிவை அழகுற அளித்த தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !
தங்களுக்காகவும் மற்றும் இங்குள்ள அனைவருக்காகவும் 'கா..கா..கா' பாடலின் வீடியோ:
அன்புடன்,
பம்மலார்.
-
4th January 2012, 09:01 AM
#1775
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
ஆங்கிலப்புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் அளித்துள்ள 'அன்பளிப்பு' ஆவணப்பொக்கிஷங்கள் அருமையாக உள்ளன. நேற்று நீங்கள் அளித்திருந்த, இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைப்பக்கங்களும் கன ஜோர். ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஆவணங்களை பல்வேறு பத்திரிகைகளில் இருந்து நீங்கள் சேகரித்து, தொகுத்து, அழகுற அளித்து வரும் பாங்கு பாராட்டுக்குரியது.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இங்கு பதிவிடுவோர் மட்டுமல்லாது வெளியிலிருந்து பல்வேறு ரசிகப்பெருமக்களும் தங்களின் சளைக்காத சேவையைப்பாராட்டி நன்றி தெரிவிக்கின்றனர். சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுதும் மடல்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து, 'எங்களுடைய இத்தனை வயதிலும் இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை. எப்பவோ வெளியான சாதனைகளையெல்லாம் இவர் தேடித்த்ருகிறார். இந்தப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்' என்று எழுதுகின்றனர். படிக்கும்போது எனக்குப்பெருமையாக இருக்கிறது.
தங்கள் தொண்டு ரசிகர்களின் இதயங்களில் முத்திரையைப் பதித்து விட்டது.
டியர் mr_karthik,
தங்களது தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அன்றாடம் அள்ளி வழங்கிவரும் பாசமான பாராட்டுதல்களுக்கு முதற்கண் எனது பொன்னான நன்றிகள் !
இயன்ற அளவு, இந்த எளியேன் இங்கே ஆற்றிவரும் சிறுதொண்டு, நமது நல்லிதயங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தாங்கள் தெரிவித்திருப்பது என் வாழ்வின் பாக்கியம். இதற்காக தங்களுக்கும், நமது அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். அனைவரது பாராட்டுக்களும், வாழ்த்தொலிகளும், ஆசிமலர்களும் இந்த சிறியேனுக்குக் கிடைக்கும்போது அதைவிட வேறு என்ன பேறு வேண்டும் ஒரு பக்தனுக்கு. அடியேனது ஒவ்வொரு பங்களிப்புக்கும் இவையெல்லாம் மாபெரும் ஊக்கசக்தியாக விளங்கும் என்பது சத்தியவாக்கு !
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
4th January 2012, 09:07 AM
#1776
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
தாங்கள் கூறியது போல் வாசுதேவன் சாருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே நமக்கே ஒரு ஆறுதலாக இருந்தது என்றால் அவர்கள் அங்கு கண்ட இன்னல்கள் அல்லது இடையூறுகள் மிகவும் கஷ்டமானவை. ஒரு வாரத்திற்கும் மேலாக மின் இணைப்பின்மையும் தொலைத் தொடர்பின்மையும், நிச்சயம் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமைதான். அவர்கள் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
தங்களுடைய ஆவணங்கள் தங்களின் உயரத்தை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு எங்களை நாளுக்கு நாள் கழுத்தை உயர்த்தச் செய்கின்றன. நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு கழுத்தை நிமிர்த்திப் பார்க்க வேண்டியது ஒன்றும் சுமையல்லவே..
பாராட்டுக்கள்..
அன்புடன்
-
4th January 2012, 09:51 AM
#1777
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
"மோகனப்புன்னகை" நினைவலைகள் அனுபவப்பதிவு படுஅமர்க்களம் !
இப்பதிவின் தொடக்கமே சுவை. நடிகர் திலகமும் புதுமை இயக்குனரும் மீண்டும் இணைந்தததை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
"பாவை விளக்கு" காவியத்திலும் நான்கு ஹீரோயின்கள் [சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், குமாரி கமலா, பண்டரிபாய்].
தாங்களும் மன்றங்களில் இணைந்து செயல்பட்டதை ஏற்கனவே தங்களின் பதிவுகளில் பசுமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் ! "மோகனப்புன்னகை"க்காகவும் தங்கள் மன்றம் சார்பில் அண்ணலின் கட்-அவுட்டுக்கு ராட்சதமலர்மாலையெல்லாம் அணிவித்திருப்பது போற்றுதலுக்குரிய செயல். ஏனைய மன்றங்கள் சளைக்காமல் செய்தவற்றையும் உள்ளன்போடு குறிப்பிட்டிருக்கிறீர்கள் ! நடிகர் திலகத்தின் புகழை எப்படியெல்லாம் வளர்த்து, பாடி, பரப்பி, கட்டிக்காத்திருக்கிறீர்கள். Simply great !
அனைவரது பங்களிப்புகளையும் உயர்வாகப் பாராட்டும் பெருங்குணம் அப்போதிருந்தே தங்களுக்கு இருப்பது தெரிகிறது. நமது ராகவேந்திரன் சார் 'சித்ரா'வில் அமைத்த பதாகையை குறிப்ப்ட்டுப் பாராட்டியதைத்தான் சொல்கிறன். ராகவேந்திரன் சார் குறிப்பிட்டதுபோல், இந்த விஷயத்தில் சகோதரி கிரிஜாவும் உச்சமாகப் பாராட்டப்படவேண்டியவர். சிகர ரசிகை சகோதரி கிரிஜாவும், நமது ரசிக முதல்வர் ராகவேந்திரன் சாரும், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், நமது இதயதெய்வத்திற்கு தொண்டு புரிவதை மட்டுமே, அவரது புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுபவர்கள், வாழ்பவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
தங்களது இனிய நினைவுப்பதிவு வழக்கம் போல் வெகு அருமை ! ஆரவாரங்களைப் பற்றிய அட்சரப்பிசகாத வருணனைகள் என்ன, திரைக்காவியத்தைப் பற்றிய ஒரு மினி அலசல் என்ன, காவியம் குறித்த மக்களின் பல்ஸ் என்ன என ஒவ்வொன்றையும் எப்பொழுதும்போல் புட்டுபுட்டு வைத்துவிட்டீர்கள் !
பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
-
4th January 2012, 10:27 AM
#1778
Senior Member
Devoted Hubber
Dear Vasudevan,
Every day he helps you and your family
Every hour he loves you and your family
Every minute he blesses you and your family
Becasue,
Every second I pray God to take care of you and your family and OTHERS THOSE WHO AFFECTED
Pray God for speedy recovery from natural disaster
-
4th January 2012, 10:32 AM
#1779
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
பொங்கல் நாளுக்கு இன்னும் பத்துநாட்களுக்கு மேல் இருக்கையில் இப்போது ஏன் 'மோகனப்புன்னகை' பதிவை இட்டாய் என்று நினைக்கலாம். பொங்கலுக்கு வேறு சில படங்களும் வர இருப்பதால் மோகனப்புன்னகை முந்திக்கொண்டு விட்டது.
டியர் mr_karthik,
தகவல் பெட்டகங்களாக பொங்கிப்பிரவாகிக்கும் தங்களின் பதிவுகள் வரும் ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு பொங்கல் திருநாள்தான். அடுத்தடுத்த அனுபவப்பதிவுகளையும் படித்து சுவைக்க ஆவல் மேலிட காத்திருக்கின்றோம் !
அன்புடன்,
பம்மலார்.
-
4th January 2012, 11:06 AM
#1780
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் !
mr_karthik அவர்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் பதிவுக்கு பாராட்டு தெரிவித்து பதிலளிக்கும் பதிவாக தாங்கள் அளித்திருந்த பதிவும் பிரமாதம் என்பதோடு மட்டுமல்லாமல் பல உண்மைகளை உலகுக்கு விளக்கின.
"மோகனப்புன்னகை" பாடல் காணொளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
['பிளாசா' தியேட்டர் முதியவரிடம் எனக்கும் நல்ல பரிச்சயமுண்டு. சற்றேறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்னர், அவரிடம் இருந்த "வணங்காமுடி","குறவஞ்சி" காவியங்களின் சில அபூர்வ புகைப்படங்களை(மொத்தம் ஒரு ஏழெட்டு புகைப்படங்கள் இருக்கும்), ஒரு நல்ல விலைக்கு எனக்களித்தார். வாங்கிவந்து பத்திரமாக வைத்திருக்கிறேன். "வணங்காமுடி", "குறவஞ்சி" ரிலீஸ் மேளா சமயத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். இதற்கு முன்னர் கூட, பல சமயங்களில், அண்ணலின் சில அரிய புகைப்படங்களை அவர் எனக்கு அளித்திருக்கிறார்].
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 4th January 2012 at 11:13 AM.
pammalar
Bookmarks