-
12th February 2012, 12:06 AM
#1071
Moderator
Diamond Hubber
|
|
‡jL ˜R Y YW ‡]˜• TL 12 U‚eh N z..› JTWTf Y• Y[†RUW RPŸ, G|†R G|‘XV YL• ‘z†‰ yP‰. A‘SV fVc NŸ‘ WR fQN– RV֡eL, ^.L.LR, ‡WeLR GR, U‚TW‡-RPT‚ CVef Y• RPŸ C‰. BŸ.G.TX˜L YN]• GR, `GjL• GT‰•' “L N†V CN AU†‰ Yf\Ÿ.
C‹R RPeLL N] AL E[ IVTRjL Th‡› RUW› LRX WV KP KP Wyz LX NšY‰ T\ TWTWT] Lyp TPU]‰. C‹R LypV TPUefVT‰ J EUoN•TY• SPT‰ TX T‰UeL Œ]†‰ A‡Ÿop› E\‹‰ T›]Ÿ. AYŸL TRyP†R AYŸLeL RVU C]֣ L–W֫ T‡ Nš‰ E[]Ÿ, TPeh]Ÿ.
RP RUWVL “TXR, LRX]L ‘WN] Sz†R]Ÿ. CYŸLP A‘ce, Yr eW•, SN, R, A˜LSVf RŸ, R]Xyr–, LV†, Œ†V W‹RŸ, i†‰TyPW W, AZh, W, S, G•.G.H.RjLW, hL Sz†‰ E[]Ÿ. |
|
|
|
|
|
-
12th February 2012 12:06 AM
# ADS
Circuit advertisement
-
22nd February 2012, 04:18 AM
#1072
Moderator
Diamond Hubber
ஆண் பாவம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், "ஆண் பாவம்.''
திருப்பரங்குன்றம் கோபால்சாமியின் மூத்த மகன் 33 வயது மாதவனை பிடித்திருப்பதாக சாத்தூர் அழகர்சாமியின் கல்லூரியில் படிக்கும் கவிதா சொல்கிறாள். கவிதாவை பிடித்திருப்பதாக மாதவனும் சொல்கிறான். பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்ததை கண்ட இரண்டு குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க, இந்நிலையில் கவிதாவை 5 வருடமாக ஒருதலையாக காதலிக்கும் முருகன் எடுக்கும் முடிவு என்ன?
கோபால்சாமியின் மற்ற 3 மகன்கள் சுந்தர்ராஜன், பத்மநாபன், சீனிவாசன் ஆகி யோரின் நிஜ முகத்தை நேயர் கள் பார்க்கப்போவது மிகப் பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
கோபால்சாமியின் தங்கை சாந்தி லாரன்சின் மூத்த மகள் கிரேசுக்கு பார்த்த வரன் தட்டிப்போக, அதற்கு காரணம் மாதவன் என்ற உண்மையை மறைத்த கிரேஸ் எடுக்கும் முடிவு என்ன? இந்த உண்மை தெரியாமல், கிரேஸ் அம்மா சாந்தி லாரன்சின் மற்ற மகள்கள் மேரி லாரன்சும், ஜெனியும் தவிக்கும் தவிப்பும் தொடரின் ஏனைய காட்சிகள்.
அப்பாவாக ராஜேசும், அம்மாவாக மீரா கிருஷ்ணனும் நடிக்கிறார்கள். பரத் கல்யாண், ராஜ்கமல், வெங்கட், சதீஷ் ஆகியோர் பிள்ளைகளாக நடித்திருக்கின்றனர். இவர்களின் ஜோடியாக ஜெயஸ்ரீ, மேகி, கவுரி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் அழகன்தமிழ்மணி, பாம்பே பாபு, பவானி, சுஜிபாலா, ஜக்குபாண்டி, மகிமா, பரணி, சாய் கோபி ஆகியோரும் உண்டு.
கதை-வசனம்: பொன்காந்திராஜன்; ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணகுமார்; திரைக்கதை, இயக்கம்: டி.சி.பாலா; கிரியேட்டிவ் ஹெட்: டி.ஜி.தியாகராஜன்; தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.
நன்றி: தினதந்தி
-
22nd February 2012, 04:19 AM
#1073
Moderator
Diamond Hubber
காதம்பரி
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `காதம்பரி.'
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட, வெள்ளையர்களின் அடிவருடிகளாக இருந்த பல சமஸ்தானத்து அரசர்களில் ஒருவன் ருஷ்யேந்திர பூபதி. நாகருத்ராட்சவர சமஸ்தானத்தின் சக்கரவர்த்தியான இவன், வெள்ளையர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றி தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறான்.
சமஸ்தானத்தில் வாழும் அப்பாவி மக்களை பெற்றோர், உறவினர்களிடமிருந்து பிரித்து பல தேசங்களுக்கு அடிமைகளாக நாடு கடத்தி வெள்ளையர்களிடம் இருந்து பொற்காசுகளையும், நற்பெயரையும் பெற்றுக் கொள்கிறான். மன்னனின் வழியிலேயே மகாராணி மங்களேஸ்வரியும் நடந்து கொள்கிறாள்.
இவர்களின் கண்ணசைவில் உத்தரவுகளை நிறைவேற்றுபவன் தளபதி கஜேந்திரவர்மன். இறைவன் படைத்த மனித உயிர்களை விருப்பம் போல் பறிப்பது இவன் பொழுதுபோக்கு. இவர்களுக்கெல்லாம் நேர்மாறாக, அன்பு, மனிதநேயத்தோடு இருப்பவன் இளவரசன் கவுதமபூபதி.
கொடுங்கோல் ஆட்சியில் இருந்து அடிமை மக்களை விடுவிக்க வானத்து விடிவெள்ளியாய் உதயமாகிறான் விருமன் என்னும் இளைஞன். தனது வீரம், புத்திசாலித்தனத்தால் இளைஞர்களை திரட்டி மன்னர் ஆட்சியை நிலைகுலையச் செய்கிறான். ஆனாலும் மக்களின் துன்பம் தீரவில்லை. இறுதியாக நகாருட்ராட்சவர சமஸ்தானத்து மக்கள் கேட்காமலேயே கிடைத்த வரமாக, ஒரு வெட்டியானின் மகளாக பிறக்கிறாள் காதம்பரி. இவளது பிறப்பே சமஸ்தானத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. தனது மக்களை விடுவிக்க காதம்பரி ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த முடிவால் சமஸ்தானத்து மக்களுக்கு விடுதலை கிடைத்ததா?
வெள்ளித்திரை நாயகி மிதுனா முதன் முறையாக சின்னத்திரையில் நடிக்கிறார். இவருடன் சுதா சந்திரன், ஏ.சி.முரளி, லட்சுமிராஜ் மற்றும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: வி.ராக்கு; இசை: ராஜேஷ் ராமலிங்கம்; வசனம்: என்.கிருஷ்ணசாமி; கதை, திரைக்கதை, இயக்கம்: எஸ்.பிரபுசங்கர்; தயாரிப்பு: சாப்ரான் கிரியேஷன்ஸ்.
நன்றி: தினதந்தி
-
25th February 2012, 08:58 AM
#1074
Moderator
Diamond Hubber
|
|
^V z› ‡jL ˜R Y YW ‡]˜• ˜TL 11.30 U‚eh JTWTf Y• “‡V RPŸ, "C UXŸL.''
L› TzT ˜z†‰ C Rֳ ˜\› G‡• “‡UL U‡eLցzeh• CW| TL WtN•, A˜Rְ•. CYŸL Tyz C BW•TU]RX. p YV‡ C‹R Tz“, [Vy| G G‹R TyzVL C‹R֨• JYW JYŸ –tN RQ• TŸ†RTz CTŸL. L Tz“ ˜z• Sָ JYŸ ˜L†R JYŸ YֲSָ C TŸeL TY‡X G\ •“P ‘‹R]Ÿ. B]֥ ‡› [VyP֥ CY• JY]V •‘ LQY]L APV Œ]†‰ UQeLX†‡ N‹‡ef\]Ÿ.
CYeh• G‡ŸTWR A‡Ÿop. G\֨•, AYŸLeh `V S]' Tyz RPWY Nšf\‰. C‹R ^U TLV By|T‰ VŸ?
WtNVL ULXyr–•, A˜RYL AfXְ• Y Y UQ• r• C UXŸL[L ”†‡ef\]Ÿ. S, ~R, AUWpLU‚, pY qYN, WY‡ NjLŸ, YN‹† BfV֣• UXŸ† RyP†‡ Cef\]Ÿ.
^V zeLL RV֡†‰ CVef CTYŸ R[T‡. CYŸ `S•U AQop', `A“' T\ TPjL[ CVefVYŸ. AZf TP†‡ Gepfz “WzNŸ.
"JY֣ Sַ ˜z• A|†R Sַ TŸ†R BLY|• G\ “P LypL AUeLTy|[‰, C‹R RP p\“'' Gf\Ÿ, CVeh]Ÿ.
|
|
|
|
|
|
|
-
3rd March 2012, 09:01 AM
#1075
Moderator
Diamond Hubber
நடிகை குஷ்பு நடிக்கும் புதிய தொடர்
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர், "பார்த்த ஞாபகம் இல்லையோ.'' கதையின் நாயகியாக நடிப்பதோடு, தனது `அவ்னி டெலிமீடியா' மூலம் இந்த தொடரையும் தயாரிக்கிறார், குஷ்பு.
சின்னத்திரைக்கு கல்கி, ருத்ரா, நாங்கள் என அடுத்தடுத்து 3 வெற்றித்தொடர்களை தந்த குஷ்பு, தனது நாலாவது படைப்பாக சின்னத்திரைக்குத் தருவதே இந்தத் தொடர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியிருக்கும் குஷ்பு இம்முறை வித்தியாசமான கதையை வடிவமைத்திருக்கிறார்.
"எந்த மாதிரியான கதை'' - குஷ்புவை கேட்டால், "அமானுஷ்ய நிகழ்வுகளை உள்ளடக்கிய சமூகத்தொடராக இருக்கும். முதல் எபிசோடில் இருந்தே நேயர்களின் எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் கதையை உருவாக்கியிருக்கிறேன்.
ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் ஓவியாவை (குஷ்பு) அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால்... புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகள், அதற்கு மாறாக அழிக்கத் தொடங்குகிறாள். ஏன்? ஓவியாவின் திட்டம் என்ன? எதற்காக இந்த பழிவாங்கும் படலம்? கதையின் மைய முடிச்சு இதுதான். எடுத்த எடுப்பிலேயே கதை வேகம் பிடித்து விடும்'' என்கிறார்.
நட்சத்திரங்கள்: குஷ்பு, சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா, தனுஷ், விஜேஷ்.
கதை, கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர்; திரைக்கதை: என்.பிரியன்-பி.மாரிமுத்து. வசனம்: டி.வெங்கடேஷ். ஒளிப் பதிவு: ஆல்வின். இயக்கம்: என்.பிரியன்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.
நன்றி: தினதந்தி
-
3rd March 2012, 09:02 AM
#1076
Moderator
Diamond Hubber
கால பைரவர்
ஜெயா டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தொடர், கால பைரவர்.
பாதாள உலகத்தில் பல யுகங்களாக அடைப்பட்டிருக்கும் அசுரன் பாண்டாசூரன், தானும் தேவர்களை போல சுதந்திரமாக உலவ சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருக்கிறான். அவன் தவத்தை ஏற்ற சிவபெருமான், அவனுக்கு கேட்ட வரமளித்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்கிறார்.
வரம் பெற்ற அரக்கன் தனக்கே உரிய அசுர குணத்தோடு மேலும் அதிக சக்தி பெற பிரம்ம தண்டத்தை தேடிச் செல்கிறான்.
மறுபுறம் ஈரேழு உலகங்களையும் அடிமைப்படுத்தி, தேவர்களை கொடுமைப்படுத்தும் பாண்டாசூரனின் கொட்டத்தை அடக்க, சிவபெருமானிடம் பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்ட, அண்ட சராசரங்களையும், தேவர்களையும் காக்க பதினெட்டு சித்தர்களுடன், ருத்ர மூர்த்தியான சிவபெருமான் தீய சக்திகளை அழிக்கவும், தீய வினைகளை வேரறுக்கவும், தடைகளை தகர்க்கவும், நல்லோர்களை காக்கவும் கால பைரவர் ஆக அவதரித்தார்.
வரம் பெற்ற பாண்டாசூரன் பிரம்ம தண்டத்தை பெற்றானா? கால பைரவராக அவதரித்த சிவன் தீய சக்திகளை அழித்தாரா? என்பதே கதை.
பிரம்மாண்ட செட்களிலும், அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும் வளர்ந்து வரும் கால பைரவர் தொடர், சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
சதீஷ், மாஸ்டர் ஸ்ரீதர், கே.ஆர்.செல்வராஜ், தாதா முத்துகுமார், ஸ்ரீதேவி, ஸ்ரீஹரி மற்றும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வசனம் கே.பி.அறிவானந்தம். கதை, திரைக்கதை இயக்கம்: எஸ்.எஸ்.சரவணன்.
நன்றி: தினதந்தி
-
3rd March 2012, 09:04 AM
#1077
Moderator
Diamond Hubber
3 புதிய தொடர்கள்
மெகா டிவியில் வரும் திங்கட்கிழமை முதல் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
சந்திரலேகா: வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதவுகிறாள், சந்திரலேகா. பெண்களின் மனப்போராட்டங்களை ஆண்களால் அத்தனை சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது. பெண்கள் தான் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தொடரில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
இளவரசன், மஞ்சுளா, சாதனா, ஜெயலட்சுமி, மோகன்சர்மா தொடரின் நட்சத்திரங்கள். கதை, வசனம்: தேவிபாலா. இயக்கம்: சுதர்சன்.
ரோஜா: ஆரம்பத்தில் கெட்டவர்கள் என்னதான்ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசியில் நல்லவர்கள் தான் வெற்றியை சுவைப்பார்கள் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை. நம் சமூகத்தில் உள்ள பலவகை பெண்களை படம் பிடித்துக் காட்டும் இந்த தொடரை பச்சில் சிவா இயக்குகிறார்.
நட்சத்திரங்கள்: சுஜிதா, லட்சுமிராஜ், ஐஸ்வரியா, தேவதர்ஷினி, நளினி, பாத்திமா பாபு, புவனேஸ்வரி.
அக்கா-தங்கை: அக்கா-தங்கை பாசம், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவம் பற்றி விவரிக்கும் இந்த தொடரில், எஸ்.பி.பி.சரண், ஜீவா, பிரகதி, பாவனா, வசந்த வரலட்சுமி, விஜய்பாபு நட்சத்திரங்கள். தேவராஜ் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
3rd March 2012, 09:05 AM
#1078
Moderator
Diamond Hubber
வீர சிவாஜி
ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரித்திரத் தொடர் `வீர சிவாஜி.'
ஷாஜி மகாராணி ஜீஜீபாய் தன் மகனுக்கு சிறுவயது முதலே வீரத்தையும் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்ததால், எந்தவொரு அநியாயத்துக்கும் எதிராக கொடி பிடிக்கிறார், சிவாஜி.
இந்நிலையில் விவசாயிகளின் தானியத்தை சிலர் கொள்ளையடித்துச் செல்ல, இந்த தகவல் சிவாஜி காதுக்கு வர, கொதித்தெழுகிறார். அப்போது தான் பிஜப்பூர் மன்னன் ஆதில்ஷாவுக்கு அடங்கிப்போயிருந்த தன் பெற்றோர் பற்றி தெரிய வருகிறது. ஆவேசமாகிற சிவாஜியை அடங்கிப்போகச்சொல்கிறார்கள் பெற்றோர்.
சிவாஜி என்ன முடிவெடுக்கிறார்? தன்னை சிவாஜி எதிர்க்கத் துணிந்துவிட்ட தகவல் தெரிந்ததும் பிஜப்பூர் மன்னன் ஆதில்ஷா எடுத்த நடவடிக்கை என்ன?
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 10th March 2012 at 09:38 PM.
"அன்பே சிவம்.
-
10th March 2012, 09:36 PM
#1079
Moderator
Diamond Hubber
சொல்வதெல்லாம் உண்மை
ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் இடம்பெறும் பலரின் கதைகள் சினிமா மற்றும் சீரியல் கதைகளையே மிஞ்சி விடுகிறது.
ஒரு இளைஞன் தன்னுடைய 21 வயதில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். 7 வருட திருமண பந்தத்தின் வழியாக 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான். மனைவி சலித்துப்போகவே, இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவளுடன் 4 வருடமாக முதல் மனைவிக்குத் தெரியாமலேயே குடும்பம் நடத்துகிறான். அவளும் சலித்துப்போக, புதிதாக கல்லூரி மாணவி ஒருத்தியைக் காதலித்து, திருமணம் செய்து கொள்ள தயாராகிறான்.
இதற்கிடையே ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குத் தூண்டில் வீசியிருக்கிறான். இதில் மூன்று பெண்கள் சிக்கிக் கொண்டும் விட்டனர். இதில் உள்ள சுவாரசியம் என்னவெனில், சம்பந்தப்பட்ட எல்லா பெண்களுக்கும் இவன் மற்ற பெண்களுடன் உறவு வைத்திருப்பது தெரியாது.
எல்லா பெண்களும் ஒரே இடத்தில் கூடி அவனிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டதற்கு நியாயம் கேட்டால் என்ன நடக்கும்? அவன் எப்படி அந்தப் பெண்களிடம் இருந்து தப்பித்தான்? அந்தப் பெண்கள் அவனுக்குக் கொடுத்த தண்டனை என்ன? சினிமாவை மிஞ்சும் மன்மத ராசா உண்மைக் கதையே வரும் வாரத்தில் ஒளிபரப்பாகிறது. இது வெறும் சுவாரசியமான கதை மட்டுமல்ல. பெண்களுக்கான விழிப்புணர்ச்சியும் கூட.
இதுபோல் ஆண்களிடம் இருந்து அபலைப் பெண்கள் தப்புவது எப்படி? என்பதைச் சொல்லித் தருகிறது, "சொல்வதெல்லாம் உண்மை.''
நிகழ்ச்சியை தேர்ந்த நடுவருக்கே உரிய அணுகுமுறையில் கொண்டு செல்கிறார் நிர்மலா பெரியசாமி.
நன்றி: தினதந்தி
-
10th March 2012, 09:37 PM
#1080
Moderator
Diamond Hubber
சபாஷ் சரியான போட்டி
கல்லூரிக் குறும்புகளை படம் பிடித்துக்காட்ட கல்லூரி வளாகத்துக்கே செல்கிறது, கலைஞர் தொலைக்காட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி `சபாஷ் சரியான போட்டி' என்ற தலைப்பில் இடம் பெறுகிறது.
கல்லூரி மாணவ மாணவிகளின் இளமைத்துள்ளல் நிகழ்ச்சியான இதில் மாணவர்களின் அரட்டை தொடங்கி சாதனை வரை அமர்க்களமாக அரங்கேறுகிறது. அவர்களின் தனித்திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு புதிய வரவாக இடம் பிடித்திருக்கும் இன்னொரு புதிய நிகழ்ச்சி, `கல்லூரிக் கச்சேரி.'
கல்லூரி மாணவ, மாணவிகளை மையப்படுத்தி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், அந்தாக்ஷரி பாணியில் பாடல்கள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக அலங்கரிக்கின்றன. பாடகர்கள் எம்.எல்.ஆர்.ரமேஷ்-செந்தில்தாஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்கம்: விஜயலட்சுமி ரமேஷ்.
நன்றி: தினதந்தி
Bookmarks