-
10th March 2012, 09:39 PM
#1081
Moderator
Diamond Hubber
வெள்ளைத்தாமரை
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `வெள்ளைத்தாமரை' தொடர், தொடக்கத்திலேயே பரபரப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
மகள் இந்து படிக்கும் கல்லூரிக்கு செல்லும் தாமரை, அங்கு "டிரியோ... டிரியோ'' என்று ஒரு பெண் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்கிறாள். அந்த குரலுக்கு சொந்தமான கலைவாணி, தாமரை திரும்பிப் பார்த்ததும், அவளை வியப்போடும், கனிவோடும் பார்க்கிறாள்.
தாமரை அமைதியாக அவளைப் பார்த்துவிட்டு, தனது பழைய ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்தாள். `இது தன்னுடைய காதலன் பிரசன்னா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ஆயிற்றே' என்று யோசித்தவள், பிரசன்னாவோடு பழகிய அந்த நாளைய நினைவுகளில் மூழ்கினாள். பிறகு சட்டென சுதாரித்துக் கொண்டு கலைவாணியை ஆழமாய் பார்த்தபடியே அங்கிருந்து சென்றாள்.
இப்படி ஒரு காட்சி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வெள்ளைத்தாமரை தொடருக்காக சித்திரைச் செல்வன் ஒளிப்பதிவில் படமானது.
இந்த காட்சி பற்றி கதாசிரியர் ஜே.கே.கூறுகையில், "தாமரையும், பிரசன்னாவும் காதலர்கள். இது தெரியாத தாமரையின் தந்தை சூரியமூர்த்தி, தொழில் பகை காரணமாக, எதிரியின் மகனான பிரசன்னாவை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுகிறார்.
அதோடு காதலை சொன்ன மகளிடம் காதலுக்கு பச்சை கொடி காட்டுவது போல நடிக்கிறார். ஒருகட்டத்தில் `அவன் உன்னை ஏமாற்றி விட்டு எங்கோ போய்விட்டானம்மா' என்று மகளை நம்ப வைக்கிறார்.
தந்தை சொல்வதை அப்படியே நம்பும் தாமரை, காதலனால் தான் தாய்மை அடைந்திருப்பதை தெரிவிக்கிறாள். இதை கேட்டு அதிரும் சூரியமூர்த்தி, தனது மகளின் எதிர்காலத்துக்கு அந்த குழந்தை எதிராக இருக்கும் என்பதால் பிறந்ததும் அதை கொலை செய்ய முடிவு செய்கிறார்.
தந்தையின் திட்டம் நிறைவேறியதா? தாமரைக்கு இந்த உண்மை எப்போது தெரியவரும்? கேள்விகளுக்கு, தொடரும் தொடரில் விடை இருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
10th March 2012 09:39 PM
# ADS
Circuit advertisement
-
10th March 2012, 09:41 PM
#1082
Moderator
Diamond Hubber
ஏவி.எம்.மின் புதிய தொடர் `வைராக்கியம்'
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், வைராக்கியம். இது ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பு.
பெண் உரிமைக்காகவும், நீதிக்காகவும் வைராக்கியத்துடன் போராடும் ஒரு பெண்ணின் கதை தான் `வைராக்கியம்.' ராஜ்காந்த், மீனாகுமாரி, கீதாரவிசங்கர், கோவை அனுராதா, சாதனா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு: பிரபாகர்; இசை: பரத்வாஜ்; பாடல்: கவிஞர் வைரமுத்து; கதை, திரைக்கதை, வசனம்: சேக்கிழார்;
இயக்கம்: ஆர்.கே.
தொடரின் கதை கேட்டு கவிஞர் வைரமுத்து வடித்திருக்கும் பாடல் வரிகள் இவை: `வாழ்வுக்கு பிடிமானம் வைராக்கியமே; அந்த வைராக்கியம் வென்றால் சவுபாக்கியமே.'
இந்தக்கதைக்குள் நிகழும் சம்பவங்களை பாடல் வரிகளாக இனங்காட்டியிருக்கும் அடுத்த வைர வரிகள் பின்வருபவை:
`வேண்டாத தீமைகளை வெல்லுவதே வைராக்கியம்.
வெற்றியிலும் தலைவணங்கி மன்னித்தல் வைராக்கியம்.'
தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன்.
நன்றி: தினதந்தி
-
10th March 2012, 09:42 PM
#1083
Moderator
Diamond Hubber
மனம் விட்டு பேசலாம்
கேப்டன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, "மனம் விட்டு பேசலாம்.''
பாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே முன்வந்து தங்களின் வாழ்வியல் பிரச்சினைகளை கூறி அதற்கு தீர்வு பெறும் நிகழ்ச்சி இது. அவர்கள் சொல்வதை ஆராய்ந்து தீர்வு காண்பது நிகழ்ச்சியின் சிறப்பு. தேவைப்பட்டால் பல துறையைச் சேர்ந்த வல்லுனர்கள், சட்ட ஆலோசகர்களின் அறிவுரையும் உண்டு.
"மனம் விட்டு பேசலாம்'' நிகழ்ச்சி தீர்வுகளின் களம் என புரிந்து கொள்ளும் வாதி - பிரதிவாதியும் முடிவை ஏற்றுக் கொள்கின்றனர்.
பல வருடம் பிரிந்து வாழும் அப்பாவும் - மகனும் இதன் மூலம் ஒன்று சேர்ந்ததும், கணவன் - மனைவி தகராறில் பிரிந்து வாழ்ந்தோர் ஒன்று பட்டதும் இந்த நிகழ்ச்சிக்கான மகுடம்.
தயாரிப்பு: கேப்டன் டிவி;
நிகழ்ச்சியில் நடிகை குட்டி பத்மினி நடுவராக இருந்து தீர்வுக்கு வழிவகுக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:21 PM
#1084
Moderator
Diamond Hubber
நேற்று கோலங்கள்... இன்று பொக்கிஷம்...
கோலங்கள் வெற்றித்தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் எழுதி இயக்கும் புதிய தொடர், `பொக்கிஷம்.' இந்த தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார், திருச்செல்வம்.
`திருச்செல்வம் தியேட்டர்ஸ்' என்ற பேனரில் அவர் தயாரிக்கும் இந்த தொடர், வரும் திங்கள் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு:
உறவுகளே வாழ்க்கை என வாழுகிறான், வசந்தன். உறவுகளால் ஏமாற்றப்பட்டு தனித்து வாழ பழகிக் கொண்டவள் கண்மணி. எதிரெதிர் புள்ளிகளில் இருக்கும் இவர்கள், விதி வசத்தால் வாழ்க்கையில் இணைகிறார்கள்.
எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் இவர்களுக்கு உறவுக்காரர்கள் தான் பிரச்சினையாகிறார்கள். அம்மா, இரண்டு அக்காக்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தங்கை என, தான் நேசிக்கும் தன் கூட்டுக்குடும்பத்தை மனைவியும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் வசந்தன். அவர்களோடு ஒட்டவே முடியாமல் தவிக்கிறாள், கண்மணி.
கண்மணியின் தோழி யமுனா. கணவனைப் பிரிந்து தனது டீன்ஏஜ் மகனோடு வாழும் யமுனா, இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் கதையின் இன்னொரு பக்கம். இவர்கள் தவிர, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுன்-மாயா, பத்திரிகை உலகில் சாதிக்கத் துடிக்கும் கண்மணியின் தங்கை நந்தினி, திருமணம் செய்து கொள்ளாமல் கடற்கரையில் ஒரு குடிசையில் வாழும் வசந்தனின் சித்தப்பா... இப்படி பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இந்த தொடரில் வரவிருக்கிறார்கள்.
"வழக்கமான சீரியல் பாணியில் இருந்து விடுபட்டு இன்றைய பெண்கள் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை இந்த தொடர்அணுகப்போகிறது. அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் இந்த பொக்கிஷத்தில் உண்டு'' என்கிறார், இயக்குனர் திருச்செல்வம்.
வசந்தனாக திருச்செல்வமும், கண்மணியாக மலையாளப்படங்களில் முன்னணி நாயகியான மீராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி, `தோழர்'ஆதவன், பவ்யகலா, கற்பகம், பவானி, பாரதிகண்ணன், ரமேஷ், நந்தினி, வித்யா ஆகியோரும் தொடரின் கலைப்பொக்கிஷங்கள்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:23 PM
#1085
Moderator
Diamond Hubber
அரையிறுதிச் சுற்றில் `ஜெயிக்கப் போவது யாரு?'
ஜெயா டி.வி.யில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ஜெயிக்கப் போவது யாரு?. சின்னத்திரை வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு கலைகளின் தலைசிறந்த கலைஞர்கள் சங்கமிக்கும் பிரம்மாண்ட மேடை இது.
நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பல வித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து, வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.
நேயர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி தற்போது அரை இறுதி சுற்றை எட்டியுள்ளது. அரை இறுதி சுற்றிற்கு மொத்தம் இருபது குழுவினர் முன்னேறியுள்ளனர்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஐந்து குழுவினர் என மொத்தம் நான்கு அரை இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் மூன்று குழுவினரை நடுவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் இதில் ஒரு முக்கிய நிகழ்வாக எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு என புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று குழுவினரில் இருந்து மக்கள் தங்களுக்கு பிடித்த திறமையான இரண்டு குழுவினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களே எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பின் அடிப்படையில் தங்களின் மனம் கவர்ந்த திறமையான எட்டு குழுவினருக்கு பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பினை பெற்றுத் தருகிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:24 PM
#1086
Moderator
Diamond Hubber
மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சி.ஜே.பாஸ்கரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வரவிருக்கும் புதிய தொடர், மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்.''மாறுபட்ட கதையம்சம் இந்த தொடரின் சிறப்பு.
நாயகன் அமைதியே வடிவானவன். வங்கி ஒன்றில் மேலாளராக இருக்கிறான். நாயகியோ துறுதுறு பார்ட்டி. சேனல் ஒன்றில் நிருபராக பணி.
அமைதியும் ஆர்ப்பாட்டமும் காதல் கொண்டு இரு வீட்டு சம்மதத்துடன் திருமணமும் முடிகிறது.
அதன்பிறகே சிக்கல். வங்கிப்பணி முடிந்து வீட்டுக்கு வரும் கணவன், தன்னுடன் மனைவி அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் பரபரப்பான அவள் வேலைப் பின்னணியில் அது கனவாகவே போகிறது.
இதனால் சின்னச்சின்ன முட்டல் மோதல்கள், உரசல்கள் தொடர்ந்து கடைசியில் `நாம் பிரியலாம்' என முடிவெடுக்கிறார்கள் தம்பதிகள். விவாகரத்துக்காக மனு செய்கிறார்கள்.
இரண்டு குடும்பமும் இவர்களின் இந்த அவசர முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்களை ஒன்று சேர்க்க போராடித் தோற்கிறது. தம்பதிகள் தங்கள் உண்மையான காதலை உணர்ந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தனரா என்பது பரபரப்பான திரைக்கதை.
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது, இந்த காதல் தொடர்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:24 PM
#1087
Moderator
Diamond Hubber
சூர்ய புத்திரி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `சூர்ய புத்திரி.' தமிழகத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்களில் முதல் பெண் தயாரிப்பாளர் என்கிற பெருமைக்குரியவரான நடிகை குட்டி பத்மினி தயாரிக்கும் தொடர் இது..
சூர்யபுத்திரி, பெற்றோரின் திரைமறைவு வாழ்க்கையில் வந்த வாரிசு. பெற்ற தாய் இறந்த பிறகு தந்தையின் மற்றொரு குடும்பத்துடன் அடைக்கலமானாலும், அந்த குடும்பத்தினரின் அன்பைப் பெற போராடி வருகிறாள். விமானப் பணிப்பெண்ணான அவளுக்கும் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் கோடீஸ்வர இளைஞனுக்கும் காதல் அரும்புகிறது. அவனுடைய குடும்பம் பெரிது என்பதால், அதில் பிரளயமென உருவெடுக்கும் பிரச்சினைகள் இவர்கள் காதலை அமுக்கப் பார்க்கிறது. குடும்ப சிக்கல்கள் சதி வலைகளுக்கு இடையில் இவர்கள் காதல் நிறைவேறியதா என்பதே சுவாரஸ்ய திரைக்கதை.
தொடரின் நட்சத்திரங்கள்: நிழல்கள் ரவி, சந்தோஷி, லாவண்யா, சுதாசந்திரன், ஏ.ஆர்.எஸ்., பிரகதி, ராஜ்குமார், குமரேசன், ஸ்ரீவித்யா, ராஜசேகர். இவர்களுடன் குட்டி பத்மினி அவரது மகள் பேபி ஆர்யாவும் இருக்கிறார்கள்.
கதை: குட்டி பத்மினி. திரைக்கதை: சவீதா, தேவிபாலா. கிரியேட்டிவ் இயக்குனர்: கீர்த்தனா. வசனம்: ஜெகன் மோகன், ராதாகிருஷ்ணன். இசை: டி.இமான். இயக்கம்: தமிழ்பாரதி.
"கிருஷ்ணதாசி, காற்றாய் வருவேன், மந்திரவாசல், கனா கண்டேன் தோழி, பைரவி, தில்லுமுல்லு போன்ற தொடர்களால் சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது போல் சூர்யபுத்திரி தொடரும் பெரிய அளவில் ரசிகர்களைச் சேரும்'' என்கிறார், தயாரிப்பாளர் குட்டி பத்மினி.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:26 PM
#1088
Moderator
Diamond Hubber
துளசி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய மெகா தொடர் `துளசி.'
நன்மைகள் பல தந்தபோதும் காலம் காலமாக வீட்டிற்குள் அனுமதிக்கப்படாத துளசி செடியைப்போன்றவள் துளசி. தன் குடும்பத்திற்காக தியாகங்கள் பல செய்தும், உறவுகளால் ஒதுக்கப்படும் அபலைப் பெண்ணாக வாழ்ந்து வருகிறாள் "துளசி.''
துளசிக்கும் ஒரு ஆசை இருந்தது. இத்தனை இடர்களையும் தாங்கிக்கொண்டு அவள் அமைதியாக வாழும்பின்னணியில் மாமா மகன் செல்வா இருந்தான். அவனை திருமணம் செய்து கொண்டு எதிர்காலத்தை இனிமையாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமே அவள் கனவு.
ஆனால் நடந்தது வேறு. அவளை மனதளவில் டார்ச்சர் செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த பிரசன்னாவால் மேலும் மேலும் தொல்லைகள். ஒரு கட்டத்தில் அவனை தன் சமயோசிதத்தால் திருப்பித் தாக்கும் நிலைக்கு துளசி வருகிறாள். அதற்கு அவள் கொடுத்த விலை, அவள் உயிராய் நேசித்த மாமா மகன் செல்வா. அவனை தன் தங்கை தாமரைக்கு திருமணம் செய்து வைத்தவள், இப்போது களம் புகுந்த புலியாக சீறிப்பாய்கிறாள், வழக்கறிஞர் ஒருவரின் துணையோடு.
இத்தனைக்கும் பிரசன்னா மணமாகி, மனைவி, குழந்தைகள் என்றிருப்பவன். போராட்டத்தில்அவனை எதிர்கொள்ள துளசிக்கு உதவ செல்வா முடிவெடுக்கிறான். இதனால் அவன் வாழ்க்கையிலும் சோதனை ஏற்படுகிறது.
துளசியின் வாழ்க்கை என்னானது? துளசியை அடையத் துடித்த பிரசன்னா தன் முயற்சியில் வென்றானா?
திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு `துளசி'யை காணலாம்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012, 10:27 PM
#1089
Moderator
Diamond Hubber
திருக்குறள் கதைகள்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக்கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது. `திருக்குறள் கதைகள்' என்ற தலைப்பில் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தரப்படுகிறது, இந்த நிகழ்ச்சி.
4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், பெரியவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது, நிகழ்ச்சி.
நன்றி: தினதந்தி
-
24th March 2012, 09:46 PM
#1090
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் நடிகை ரோஜா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `லக்கா கிக்கா' என்ற ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை ரோஜா நடத்துகிறார். டிவி. நேயர்களுடன் சின்னத்திரை பிரபலங்கள், சீரியல் நட்சத்திரங்களும் பெருவாரியாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி 4 வித ரவுண்டுகளை உள்ளடக் கியது. முதல் ரவுண்டில் ரோஜா ஒரு கேள்வி கேட்பார். பார்வையாளர்கள் இந்த கேள்விக்கு விடை சொன்னால் அப்போதே கையில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு. இரண்டாவது ரவுண்டு திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.
மூன்றாவது ரவுண்டில் ஏலம் விடும் நிகழ்ச்சி. இதிலும் நேயர்கள்அதிக தொகை வெல்லலாம். நாலாவது இறுதி ரவுண்டை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை வைக்கப்பட்டிருக்கும். இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூன்றில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம். அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் அதிக பணம் வைக்கப்பட்டிருக்கும் பொம்மை கிடைக்கும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை களில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
Bookmarks