-
24th March 2012, 09:05 PM
#371
Senior Member
Seasoned Hubber
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ
அஞ்சா அரசு! அடடா!
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.
அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
24th March 2012 09:05 PM
# ADS
Circuit advertisement
-
31st March 2012, 11:26 PM
#372
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
geno
அஞ்சா அரசு! அடடா!
அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.
கவிதையைப் படித்துத் திறனாய்வு செய்து பாராடிய தாங்களுக்கு என் நன்றி.
இந்தக் குருவிகள், கூரைக்குக் கீழும் கூரைப்பலகைக்கு மேலுமுள்ள இடைவெளியில் வாழ்கின்றன. இவ்வளவு உயரத்துக்குப் பூனைகள் ஏறிப் போவதில்லை.( 3 storey building) எலிகளும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்த "உயிரி"யும் (other than insects etc) செல்லாத இடம். இந்தக் குருவிகளுக்கே உரிமைபூண்ட இடம்போல ஆகிவிட்டது. ஒருவன் நிலம் வாங்கினால்கூட, அங்கு விளவனவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் அத்துமீறி யாரும் அங்கு புகுந்துவிடாதபடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியனாய் இருக்கின்றான்.அவன் பட்டா பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆகவேதான் "பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் மிகப் பண்ணாகும் நல்லிடம்" என்று வருணித்தேன். இந்தக் குருவிகள் அதிகாலையிலேயே எழுந்து ஒலிசெய்கின்றன. அதிலும் பண் ( இசை) இருக்கிறது...இதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளேன்.
குழந்தைகள் விரும்பும் பாடல் எழுதுவது கடினம் என்று நினைக்கிறேன்.
பள்ளிப் பிள்ளைகள் படிக்க விரும்பும் பாடலாக இது அமையுமானல் அஃது எனக்கு மகிழ்வு தரும்.
-
1st April 2012, 09:19 PM
#373
Senior Member
Seasoned Hubber
எழுத்துப்பிழைத் திருத்தம்: விளவனவற்றை என்பதை விளைவனவற்றை என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும். முன் இடுகையைத் திருத்த இயலவில்லை. The Edit feature is "jammed".
-
6th April 2012, 01:54 AM
#374
Senior Member
Seasoned Hubber
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
15th June 2012, 02:31 PM
#375
Senior Member
Seasoned Hubber
விளம்பரத் தந்திரங்கள்.
தன்பற்றியே யாரும்
பேசும்படி செய்தோன்,
பண்பட்டு உயர் தன்விளம்பரத்தின்
விண்தொட்டோன்!
சிக்கினோன் அன்னோன் எனப்பட்டால்
சிக்கினோன் அன்னவனோ?
மற்றோரோ
யார்?
குறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.
Last edited by bis_mala; 15th June 2012 at 06:23 PM.
Reason: thalaippu..& kuRippu
B.I. Sivamaalaa (Ms)
-
18th June 2012, 08:46 AM
#376
Senior Member
Seasoned Hubber
சீனக்கண்
சின்னக்கண் அழகன் என்றால்
சீனனைச் சொல்ல வேண்டும்.
என்பக்கம் சிரிக்கும் போதில்
இமை மூடிக் கண்மறைக்கும்.
வெளிறிய மஞ்சள் மேனி
வேண்டுமோ குளிக்க மஞ்சள்?
உளறிய அசை ஒவ் வொன்றுக்கும்
உட்பொருள் வாஞ்சை கெஞ்சும்.
-
18th June 2012, 09:47 PM
#377
Senior Member
Senior Hubber
வண்ணமாய்ப் பாடினீரே
..வழக்கமென் றாலும் கூட
சின்னதாய்க் கண்ணன் பற்றி
சந்தமாய்க் கவிதை சொல்வீர்....
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி
-
20th June 2012, 03:46 PM
#378
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
வண்ணமாய்ப் பாடினீரே
..வழக்கமென் றாலும் கூட
சின்னதாய்க் கண்ணன் பற்றி
சந்தமாய்க் கவிதை சொல்வீர்....
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி
Welcome back !
வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.
Last edited by bis_mala; 21st June 2012 at 08:32 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
21st June 2012, 01:55 PM
#379
Senior Member
Senior Hubber
நன்றி மாலா..
வெளியிலே வெய்யி லென்றால்
..உளத்திலே சூடு எல்லாம்
மெலியதாய்க் கூடிக் கூடி
..மேகமாய்ச் சூழ்ந்துகொள்ளும்
துளியென மகிழ வந்தேன்
..தூங்கிய நெஞ்சை இன்று
களிகொளச் செய்த தாலே.
..கண்ணனும் சொல்வான் நன்றி..
-
24th June 2012, 06:53 PM
#380
Senior Member
Seasoned Hubber
எந்த நாளும் இனிது வாழ்க!
அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !
உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!
Bookmarks