-
8th April 2012, 06:46 AM
#1101
Moderator
Diamond Hubber
முத்தான `முத்தாரம்'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளி பரப்பாகி வரும் ``முத்தாரம்'' தொடர், வரும் வாரங்களில் பரபரப்பான மாறுபட்ட கதைக் களத்தில் பயணிக்கப் போகிறது.
தான் புகுந்த வீட்டுக்காகவும், கணவருக்காகவும், தியாகியாக, சாதுவாக வாழ்ந்து வரும் ரஞ்சனி கதாபாத்திரம் புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சராக இருக்கும் ரஞ்சனி, உண்மையில் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகள். ஊட்டியில் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவள். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம் வந்தவள். அவளுக்கு ஒரு மூத்த சகோதரியும் இருக்கிறாள்.
நேர்மையான போலீஸ் வாழ்க்கையில், ரஞ்சனி பல பெரும்புள்ளிகளின் பகையை சந்திக்க நேர்கிறது. ஒரு காலகட்டத்தில் ரஞ்சனியின் கோபப் பார்வைக்கு, பெற்ற தந்தை கூட தப்பவில்லை. தந்தையின் கையில் விலங்கு மாட்டி சிறைக்கு அனுப்புகிறாள். இதனால் பெற்ற தாயின் கோபத்துக்கு ஆளாகிறாள்.
தந்தை நடத்தும் பஸ் கம்பெனியில் வேலை பார்த்த பழனிச்சாமியின் சாவுக்கு, தன் தந்தையே காரணம் என்று தெரிந்து பழனிச்சாமியின் குடும்பத்துக்கு உதவி செய்து வருகிறாள், ரஞ்சனி. சூழ்நிலை காரணமாக பழனிச்சாமியின் மகன் முரளிக்கு மனைவியாகி, பழனிச்சாமியின் மனைவி சாரதாவிற்கு மருமகளாகிறாள்.
இந்த சூழ்நிலையில் தன்னால் பாதிக்கப்பட்ட பெரும் புள்ளிகளை ரஞ்சனி சந்திக்க நேரிடுகிறது. ரஞ்சனி உயிரோடு இருப்பதை அறிந்த பெரும் புள்ளிகள் அவள் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறுகிறார்கள்.
எந்தக் குடும்பத்திற்காக தன் காக்கிச்சட்டையை தியாகம் செய்தாளோ, அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் காக்கிச் சட்டை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. ``ரஞ்சனி காக்கிச் சட்டை அணிந்தாளா?'
தன் கணவரின் சாவுக்கு ரஞ்சனி குடும்பம் தான் காரணம் என்பதை அறிந்த சாரதா, ரஞ்சனியை மருமகளாக ஏற்றுக் கொண்டாளா?
எதிரிகள் ஒரு புறமும் தன் குடும்பம் மறுபுறமுமாக ரஞ்சனி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பதை, வரும் வாரங்களில் காணலாம்.
தொடரின் நட்சத்திரங்கள்: தேவயானி, சத்யப்பிரியா, சீனு, பாலாசிங், டாக்டர் ஷாஜு, கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மா, பவானி, ராஜா, ரம்யா, ஷப்னம்.
கதை: தேவிபாலா. திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: பா.ராகவன், இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.
தயாரிப்பு: `மெட்டி ஒலி' எஸ்.சித்திக்.
நன்றி: தினதந்தி
-
8th April 2012 06:46 AM
# ADS
Circuit advertisement
-
8th April 2012, 06:55 AM
#1102
Moderator
Diamond Hubber
நடிகை புவனேஸ்வரி வில்லியாக நடிக்கும் `வாழ்வே மாயம்'
மெகா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், வாழ்வே மாயம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகை புவனேஸ்வரி இந்த தொடரில் வில்லியாக நடிக்கிறார்.
காதல் ஜோடிகள் சதீஷ்-பிரியா இருவரும் ஒரு சுப நாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பேரதிர்ச்சி. விபத்தொன்றில் சதீஷ் தனது ஞாபக சக்தியை இழக்கிறான்.
இந்தக் காதல் திருமணத்திற்கு முன்பே பாவனா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான் சதீஷ். அந்தக் காதல் நிறைவேறாத நிலையில் தான்அடுத்த காதல். இந்தக் காதல் கல்யாணத்தில் முடிய, சதீஷின் திருமதியானாள் பிரியா.
நினைவாற்றலை சதீஷ் இழந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ். பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயத்தையே மறந்து விடுகிறான் சதீஷ்.
இந்த சூழலில் சதீஷின் பழைய காதலி பாவனா அவனை சந்திக்கிறாள். மீண்டும் தனது காதலை புதுப்பித்துக் கொள்கிறாள். சதீஷூம் பாவனாவின் அன்பில் உருகி அவளுடனே சென்று விடுகிறான்.
விஷயம் தெரிந்து அதிரும் பிரியா, தன் கணவனை பாவனாவிடம் இருந்து மீட்டெடுக்க போராடுகிறாள். அவளால் தன் கணவனை பழைய நினைவுகளுக்குள் கொண்டு வந்து இழந்து போன தன் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிந்ததா என்பது பிற்பகுதி கதை.
பிரேம்சாய், அகிலா, பாவனா, லட்சுமிராஜ், பாலாஜி, ராஜ்குமார், ஷிவானி ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்.
திரைக்கதை: கண்மணிசுப்பு. இயக்கம்: எஸ்.வி.சோலைராஜா. தயாரிப்பு: மெகா டிவி.
நன்றி: தினதந்தி
-
8th April 2012, 06:57 AM
#1103
Moderator
Diamond Hubber
மங்கம்மாவை பாராட்டிய ஸ்ரீதேவி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் `மை நேம் இஸ் மங்கம்மா.' உல்லாசம், நேசம் படங்களில் கதாநாயகியாக நடித்த மகேஸ்வரி, இந்த தொடரில் நாயகியாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் தங்கை (சித்தி மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றுகிறாள் மங்கம்மா. முதிர்கன்னியான அவளுக்கு மாப்பிள்ளை தேடுவதே அவளது பெற்றோரின் அனுதின கடமையாகி விடுகிறது. வரும் வரன்கள் எல்லாம் நழுவிப்போக, மங்கம்மா என்ற தனது பெயர் தான் திருமணத்துக்குத் தடையாக இருக்கிறதோ என்று எண்ணுகிறாள், அவள்.
ஆனால் எதையும் வெளிப்படையாக பேசும் அவளது குணாதிசயம் தான் திருமணத்துக்கு தடையாக இருக்கிறது. இது இந்த நிமிடம் வரை அவளுக்குத் தெரியவில்லை என்பது பரிதாபம். இந்த கதையை நகைச்சுவை பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
இந்த தொடரை பார்க்க செட்டுக்கே வந்த நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரியின் அப்பாவித் தனம் கலந்த நகைச்சுவை நடிப்பை ரசித்துப் பார்த்தார். `நான் எதிர்பார்த்தை விட நகைச் சுவையில் கலக்கி இருக்கிறாய்' என்று பாராட்டினார். அக்காவின் பாராட்டில் மகேஸ்வரி முகத்தில் மத்தாப்பு பிரகாசம்.
நன்றி: தினதந்தி
-
14th April 2012, 06:16 PM
#1104
Moderator
Diamond Hubber
மூன்று முகம்
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் `மூன்று முகம்.'
ரேகா, லேகா இருவரும் அக்கா-தங்கை. மூத்தவள் ரேகாவுக்கு பணக்கார சம்பந்தம் தேடி வருகிறது. பெண் பார்க்க வந்தவர்களுக்கு இளையவள் லேகாவை பிடித்துப் போகிறது. ரேகாவும் தங்கை லேகாவுக்கு அந்த சம்பந்தத்தை விட்டுக் கொடுக்கிறாள். இந்நிலையில் இவர்களின் சித்தி அன்னலட்சுமி வீட்டுக்கு வர, நடந்ததை அறிந்து அவள் கொதித்துப் போகிறாள்.
ஒருநாள் பெற்றோர் தன்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்க, அதைக்கேட்டு மனம் உடைந்து போகிறாள், ரேகா. அவள் சித்தி என்று அறியப்பட்ட அன்னலட்சமி தான் அவள் தாய் என்கிற அந்த உண்மை அவளை அதிர்ச்சியாக்குகிறது. அதோடு அதுவரை தான் இரண்டாம்பட்சமாக அந்த வீட்டில் நடத்தப்பட்டதும் நினைவுக்கு வர, இன்னும் அதிர்ந்து போகிறாள். அதுவரை சித்தியாக கருதியஅம்மா தனலட்சுமியிடம் தன் மனக்குமுறலை கொட்டுகிறாள். அவளோ, தன்மகளுக்கு கிடைக்காத எதுவும் லேகாவுக்கு கிடைக்கக்கூடாது என்று சதித்திட்டம் தீட்டுகிறாள். முதல்கட்டமாக லேகாவுக்குபேசி முடித்த அந்த பணக்கார வரனை `கட்' பண்ண பிளான் போடுகிறாள்.
அன்னலட்சுமியின் திட்டம் பலித்ததா? ரேகாவின் எதிர்காலம் என்ன? என்பது பரபரப்பாக தொடரும் காட்சிகள்.
நன்றி: தினதந்தி
-
14th April 2012, 06:17 PM
#1105
Moderator
Diamond Hubber
ருத்ரம்-50
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர், "ருத்ரம்.''
2012-ல் உலகம் அழியப்போகிறது என்கிற மையக்கருத்தை அடிப்படையாக கொண்ட இந்த தொடர், இப்போது 50-வது பகுதியை எட்டியிருக்கிறது.
தொடரில் ஒய்.ஜி.மகேந்திரன், பாரதி, பூவிலங்கு மோகன், குயிலி போன்ற பிரபலங்களுடன் புதுமுகங்களும் உண்டு.
இனி வரப்போகும் கதையில் அழியப்போகும் உலகை காக்கும் சக்தியை தேடிப்போகும் முயற்சியில் இறங்கும் பேராசிரியர் விஸ்வநாதன், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் அணிந்திருந்த ருத்ராட்சம் பறிபோக, அதன் விளைவாக பித்து பிடித்த நிலைக்குள்ளாகிறார். அவர் பறிகொடுத்த ருத்ராட்சம் பல்வேறு இடங்களில் உள்ள பலதரப்பு மக்களிடையே பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.
சாலக்குடி, தலக்கோணம், திருநெல்வேலி, கும்பகோணம், பாணதீர்த்தமலை போன்ற இடங்களில் படமாக்கியதைத் தொடர்ந்து, இந்த தொடரின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, காசி, வாரணாசி, பத்ரிநாத் போன்ற இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
14th April 2012, 06:28 PM
#1106
Moderator
Diamond Hubber
பிரமாண்ட காட்சிகளில் `கால பைரவர்'
அசுரன் பாண்டாசூரன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருக்கிறான். அவன் தவத்தை ஏற்ற சிவபெருமான், அவன் கேட்ட வரமளித்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்கிறார். அவன் மேலும் சக்தி பெற பிரம்ம தண்டத்தை தேடிச் செல்வதோடு, மறுபுறம் ஈரேழு உலகங்களையும் அடிமைப்படுத்தி, தேவர்களை கொடுமைப்படுத்துகிறான். பாண்டாசூரனின் கொட்டத்தை அடக்க, கால பைரவர் ஆக அவதரிக்கிறார் சிவபெருமான்.
பாண்டாசூரன் பிரம்ம தண்டத்தை பெற்று மேலும் சக்தி பெற்றானா? கால பைரவராக அவதரித்த சிவன் தீய சக்தியின்மொத்த வடிவான அவனை அழித்தாரா என்பதே கதை. புராணக்கதை என்பதால் பிரமாண்ட காட்சிகள் தொடரின் பலம். சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சதிஷ், மாஸ்டர் ஸ்ரீதர், கே.ஆர்.செல்வராஜ், தாதா முத்துகுமார், ஸ்ரீதேவி, ஸ்ரீஹரி நடிக்கிறார்கள்.வசனம்: கே.பி.அறிவானந்தம். கதை, திரைக்கதை, இயக்கம்: எஸ்.எஸ்.சரவணன். சேலம் எம்.பி.எல். பிலிம்ஸ் பி.எல். பாபு தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
14th April 2012, 06:29 PM
#1107
Moderator
Diamond Hubber
ராஜயோகம்
ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி,
"ராஜயோகம்.''`முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பொன் மொழியின்படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை. இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் செய்தால், இப்புண்ணியமானது தொடரும் பிறப்புகளில் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.
அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜோதிட நிபுணர் முனைவர் கே.ராம் கலந்து கொண்டு நேயர்கள் தங்களது எதிர்காலம் குறித்து தொலைபேசி மூலம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
14th April 2012, 06:29 PM
#1108
Moderator
Diamond Hubber
ஞானானந்தம்
பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.05 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய ஆன்மிகத் தொடர் ஞானானந்தம்.
நம் வாழ்க்கையை நமக்கு நடக்கும் நல்லது கெட்டது தான் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு அனுபவங்களில் இருந்து தான் பாடமே கற்றுக்கொள்கிறோம். இந்த அனுபவம் தான் ஒருகட்டத்தில் நம்மில் பலரையும் ஆன்மிகப் பாதைக்குள் செலுத்துகிறது.
ஞானம் போதித்த மகான்கள் வாழ்ந்த காலகட்டம் நாம் அறிந்திருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஞானானந்தம் மகான் வாழ்ந்த காலத்தில் போதித்த பல போதனைகள் இப்போதும் மக்களின் அத்தியாவசியத்தேவையாகவே இருக்கிறது. ஞானானந்த மகானுக்கு சீடராக அமைந்தவர் சுவாமி ஹரிதாஸ் கிரி. இவரும் இன்று நம்மிடையே இல்லை. இருவரின் பின்னணியிலும் உள்ள சம்பவக் கோர்வைகளை, அவர்கள் மக்களுக்கு போதித்த ஞானத்தை, சமூக கதைகள் வடிவில் தருவதே இந்த நிகழ்ச்சி.
மாஸ்டர் ஸ்ரீதர் சுவாமி ஹரிதாஸ்கிரியாக மாறி இந்த கதையை சொல்கிறார். வி.எஸ்.ராகவன், காத்தாடி ராமமூர்த்தி, ராதா, லலிதா, சித்ரா, விஜயலட்சுமி, தனலட்சுமி, மேனேஜர் சீனா ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள்.
கதை,வசனம்: கே.ராஜேஷ்வர். தயாரிப்பு நிர்வாகம் மற்றும் இணை இயக்கம்: கே.ஆர்.நாகராஜ். இசை:கே.கே. ஒளிப்பதிவு மற்றும் எபிசோடு இயக்குனர்: எஸ்.பி.ராஜாராம். கிரியேட்டிவ் ஹெட்-இயக்கம்: எஸ்.சந்திரமவுலி. ஆஸ்டர் மீடியா பிரைவேட் லிமிடட் சார்பில் தயாரிப்பு: எஸ்.கணேஷ்.
நன்றி: தினதந்தி
-
22nd April 2012, 06:19 PM
#1109
Moderator
Diamond Hubber
தர்மனிடம் திரவுபதி வாங்கிய உறுதிமொழி
சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புராணத்தொடர், மகாபாரதம்.
பாண்டவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும்படி செய்து துரியோதனின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறான், திருதராஷ்டிரன். அதன்பின்னர் காந்தாரி, திரவுபதி இருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் பாண்டவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் திருப்பி அளிக்கிறான். இதனால் வெகுண்ட துரியோதனன், சகுனியின் அறிவுரைப்படி திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களை மீண்டும் சூதாட்டத்திற்கு வருமாறு வற்புறுத்துகிறான்.
தர்ம மகாராஜாவான யுதிஷ்டிரன் யார் பேச்சையும் கேட்காமல் தன் பெரியப்பாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவரின் உள் எண்ணத்தை அறியாமல் சூதாட்டத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இம்முறை யார் தோற்றாலும் 12 வருட வனவாசமும், ஒரு வருடகாலம் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசமும் மேற்கொள்ள வேண்டும் என்பது போட்டி விதி.
சூதாட்ட களத்தில் அனைவரும் காத்திருக்க, திரவுபதி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் `இம்முறை யாரையும் பணயம் வைத்து விளையாடக் கூடாது' என்ற உறுதிமொழியை பெறுகிறாள்.
சூதாட்டம் ஆரம்பிக்கிறது. சகுனி தனக்கே உரிய கெட்ட எண்ணத்துடன் பகடைக்காயை உருட்டுகிறான். சூதாட்டத்தில் வென்றது யார்? வனவாசம் சென்றது யார்? எதிர்பாராத திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
-
22nd April 2012, 06:20 PM
#1110
Moderator
Diamond Hubber
மணமேடையில் நடந்த கலாட்டா!
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், துளசி.
மிகப்பெரிய மண்டபத்தில் திரளான உறவினர் மத்தியில் துளசி - செல்வராஜ் திருமணம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. திருமணத்துக்கு செல்வராஜின் நண்பனாக வந்திருந்த முட்டுக்காடு காவல் அதிகாரி பிரபாகரன், `துளசி நல்லவள் இல்லை. பிரசன்னா என்பவருடன் ஓர் இரவு தங்கி இருந்தாள்' என்ற குழப்பத்தை செல்வராஜ் மனதில் விதைக்கிறான். இந்த நேரத்தில் பிரசன்னாவும் துளசி திருமணத்திற்கு வருகிறான்.
அவன் வருகையை தடுக்கும் விதமாக வாசலில் கட்டியிருந்த வாழை மரம் தானாக அறுந்து விழுகிறது. பிரச்சினைக்குரிய பிரசன்னாவே விழுந்த வாழை மரத்தை எடுத்து இறுக்கமாக கட்டுகிறான். கள்ளங் கபடம் இல்லாத துளசி, பிரசன்னாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். இதை கண்கூடாக பார்த்த செல்வராஜின் மனதில் மெல்ல சந்தேகப் பேய் நுழைகிறது.
சீதை மேல் ராமன் சந்தேகம் கொண்டது போல் துளசி மேல் செல்வராஜ் சந்தேகம் கொள்கிறான். அந்த சந்தேகம் புற்றுநோயை போல் அவன் மனதில் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக வளர்கிறது. மனமேடையிலோ சந்தேகப்பேய் சம்மணம் போட்டு அமர்கிறது.
இதற்குள் இந்த திருமணம் சிக்கல் இல்லாமல் நடக்க வேண்டுமே என்று துளசியின் தந்தை ரங்கசாமி பயத்தில் இருக்க, செல்வராஜ் யாரும் எதிர்பாராத வண்ணம் மாலையும் கழுத்துமாக மணமேடையில் இருந்து எழுந்து பிரசன்னாவை நெருங்குகிறான். அதேவேகத்தில் துளசிக்கும் அவனுக்குமான நெருக்கம் குறித்து கேட்டும் விடுகிறான்.
பிரசன்னா உண்மையை சொல்லி துளசி தூய்மையானவள் என்பதை நிரூபித்தானா? அல்லது தன் மேல் சந்தேகப்பட்டதுக்காக துளசி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாளா?
பரபரப்பும் விறுவிறுப்புமாய் தொடர்கிறது, தொடர்.
Bookmarks