-
1st May 2012, 09:00 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.twitlonger.com/show/h80e8l
தோழர் ஞாநி,
மீண்டும் தம் வெறுப்பை உமிழ துவங்கி விட்டார். https://www.facebook.com/permalink.p...source=message இவருக்கு ராஜா மீது என்ன வெறுப்பு என்றே தெரியவில்லை! ஒரு தலித் காலில் பார்ப்பனர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் அளவுக்கு உச்சானி கொம்பில் நிற்கிறார் என்றா அல்லது ராசைய்யா தமது இசையின் தரத்தால் ஒரு கடவுளைப் போல் கொண்டாடப் படுவதை சகிக்க முடியவில்லை என்பதாலா? ரஹ்மான தமது சினிமா ஆல்பங்களில் இசை கலைஞர்களின் பெயரை சேர்த்து வெளியிடுவதற்கு வெகு காலம் முன்பே இசையமைக்க பட்ட ’ஹவ் டூ நேம் இட்’ இன் ’ஆல்பம்’ கவர் இதுதான் http://www.thehindu.com/multimedia/a...I_1065272a.jpg மிக தெளிவாக ‘எல்லா’ இசை கலைஞர்களும் பெயர் குறிப்பிடபட்டு இருக்கிறது. இசை கலைஞர்களின் பெயர் குறிப்பிடுவது என்பது உலகளவில் தனி பாப்/கிளாசிக்கல் ‘ஆல்பங்களுக்கு’ கடைபிடிக்கபட்ட நடைமுறை. எந்த சினிமா சவுண்ட்ராக்கிலும் கம்போஸரை தவிர இசைத்த கலைஞர்களின் பெயர் இருக்காது . ரஹ்மான் தமது சினிமா இசையை பாப் ஆல்பங்களாகவே பார்த்ததும் அதில் இசைக்கும் எல்லா கலைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்று கொண்டதுவுமே காரனம் அவர்கள் பெயர்களையும் சேர்த்து கொண்டதற்கு. ஆனால் ராஜா உலகின் நடைமுறை எதுவோ அதையே பின்பற்றி தமது பெயரை மட்டுமே தாம் இசை அமைத்த சினிமா ‘சவுண்ட்ராக்குகளில்’ போட்டு கொண்டார். மேலும் ராஜா தமது இசை கோர்வைகளில் உலகளாவிய கம்போஸர்களின் பானியிலேயே இசைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்பதில்லை. இந்த எளிய விஷயம் கூட தெரியாமல் இதை ஒரு பெரிய குற்றம் போல் பல ஆண்டு காலமாக ராஜாவுக்கு எதிராக ஞாநி கக்கி வரும் விஷம் அருவருப்பாக இருக்கிறது. கண்டிக்கதக்கது. இதற்கு முன்பு நிகழ்ந்த நத்திங் பட் விண்ட் லைவ் கான்சர்ட்டிலும் அதில் வாசித்த ஹரி பிரசாத் செளராஷியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமது பேச்சில் அவரை குறிப்பிட்டார் ராஜா அதை போலவே இங்கும் நரசிம்மன்னின் பெயரை குறிப்பிட்டார் ராஜா. அதை நேரில் பார்த்தவர்களான நாங்களும் இந்த ஒலிப்பதிவுமே சாட்சி. https://t.co/S8u4UQj3 https://t.co/wYFrPK8D
மேலும் இவ்விரு நிகழ்ச்சிகளும் அவரது மகளான பவதாரினி மூலம் ஏற்பாடு செய்யபட்டு ராஜாவின் குழுவின் முக்கிய நெறியாளுனரான ‘பிரபாகர்’ என்பவரால் மீள் உருவாக்கபட்டு நிகழ்த்தபட்டது. ராஜா ரிஹர்சல்களில் கூட பங்கு பெறவில்லை! அவரும் மற்றவரை போல் ஒரு பார்வையாளர் என்ன மேலதிகமாக அவரது இசை ஆக்கம் என்பதால் ’எ ட்ரிபியூட் டூ ராஜா’ என்று சொல்லிக் கொள்ளலாம். என்ன பாடல்கள் இடம் பெரும் எப்படி நடக்கும் நிகழ்வு என்பது கூட அவருக்கு தெரியாது. என்வேதான் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் சில சினிமா பாடல்கள் இசைக்கபட்டதை, பாஹ்-தியாகைய்யர் படங்களை மேடையில் வைத்து கொண்டு இந்த பாடல்களை பாடலாமா அது தவறு என்று மேடையிலேயே பவாவை கண்டித்தார். பொது விஷயங்களில் நேர்மையாளராகவே அறியபடும் ஞாநி ராஜா விஷயத்தில் மட்டும் இப்படி நேர்மையற்ற அற்பதனமான வாதங்களை வைத்து மனித தன்மையிலிருந்து சறுக்கி விடுகிறார். பகுத்தறிவு என்பதை கண்மூடி பூனைப் போல் அனுகுவதின் விபரீதம் இது. சமூகத்தை திறனாய்வு செய்வது இருக்கட்டும் தமது கருத்து நிலையை திறனாய்வு செய்வாரா ஞாநி? ஏனென்றால் மனிதத் தன்மையும் நேர்மையும் இல்லாமல் ஏராளமான திறமை இருந்து என்ன பயன்!
-
1st May 2012 09:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks