-
22nd April 2012, 06:26 PM
#1111
Moderator
Diamond Hubber
இறுதிப் போட்டியில் `ஜெயிக்கப்போவது யாரு'
ஜெயா டிவியில் வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `ஜெயிக்கப்போவது யாரு' நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. நடைபெற உள்ள பிரமாண்ட இறுதிப்போட்டிக்கு 8 குழுவினர் வந்திருக்கிறார்கள். இவர்களில் 3 குழுவினர் மட்டும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
இறுதிப் போட்டியில் பங்குபெறும் 8 குழுவினர் வருமாறு:
ஈ குரு நடனக்குழு, சென்னை. தாண்டவா நடனக்குழு, பெங்களூர். சென்னை மற்றும் தமிழ்நாடு மலர் கம்பம் மல்கம்ப் குழு, விழுப்புரம். உமயல்ஆச்சி யோகாகுழு, அறந்தாங்கி. அஜய்குமார் வோவினம் மார்சியல் ஆர்ட்ஸ், காரைக்கால். சாலமன் டிவிஸ்டர்ஸ் நடனக்குழு, சென்னை. அமரேசன் பேலன்சிங் ஏக்ட், சென்னை. பிரதீப் ரமேஷ், புட்பால் ப்ரீஸ்டைல், சென்னை.
இந்த 8 போட்டியாளர்களில் நேயர்களைக் கவர்ந்த போட்டியாளரை தேர்ந்தெடுக்க நேயர்கள் தங்கள் வாக்கை எஸ்.எம்.எஸ்.சில் பதிவு செய்யலாம். நடிகர் சுரேஷ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
-
22nd April 2012 06:26 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2012, 06:25 PM
#1112
Moderator
Diamond Hubber
மூன்று முடிச்சு
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `மூன்று முடிச்சு.'
நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகுற சித்தரிக்கும் தொடர் இது. சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்க.. வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் இருக்கிறாள்.
`சீமா ஆடினால் நிச்சயம் வெற்றி பெறுவாள். அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும்' என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்த.. ஒரு சாதனையாளர் தங்கள் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவளது பெற்றோர் நிராகரிக்க... சீமா என்ன செய்யப் போகிறாள்.. போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெறப் போகிறாளா? அல்லது குடும்பத்தினருக்கு பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளை தியாகம் செய்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறாளா? என்பது வரும் வார காட்சிகள்.
நன்றி: தினதந்தி
-
28th April 2012, 06:28 PM
#1113
Moderator
Diamond Hubber
நிறைவு பெறும் `பிரிவோம் சந்திப்போம்'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு விஜய் டி.வி..யில் ஒளிபரப்பாகி வரும் `பிரிவோம் சந்திப்போம்' தொடர், அடுத்த மாதம் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மாமன் மகள்- அத்தை மகள் ஆகிய இரண்டு சகோதரிகளைப் பற்றிய தொடர் இது. ரேவதியாக கல்யாணியும், ஜோதியாக மகாலட்சுமியும் நடித்துள்ளனர்.
ரேவதி, பிரபுவை திருமணம் செய்து கொள்கிறாள். ஜோதியோ ரேவதியின் மாமியாரின் தம்பி கார்த்திக்கை விரும்பி, அந்த காதலை அப்பா ஏற்காததால் ரகசியமாய் பதிவு திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கிடையில் ஜோதியின் காதலுக்கு துணைப்போகக்கூடாது என்று ரேவதிக்கு மாமா ஆணை போட்டு விட, ஜோதியின் காதலுக்கு உதவுவது போல் நடித்து வேறு மாப்பிள்ளையை ஜோதிக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளுக்கு துணை போகிறாள் ரேவதி.
இதனால் ஜோதி ரேவதியை எதிரியைப்போல் கருதுகிறாள். ரேவதியின் வீட்டிற்கே வாழப்போகும் ஜோதி, ரேவதியை வெறுக்கிறாள். ரேவதியின் சின்ன மாமியாரும் அவரது மகன் மற்றும் மருமகளும் ரேவதிக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட, ரேவதி தன் கணவன் பிரபுவுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள்.
ரேவதியை ஜோதி புரிந்து கொள்வாளா? மீண்டும் அவர்கள் நட்பு பாராட்டுவார்களா? ரேவதி தன் புகுந்த வீட்டில் போய் மீண்டும் வாழ்வாளா? ஒரே வாரத்தில் இதற்கான விடை கிடைத்துவிடும்.
நன்றி: தினதந்தி
-
28th April 2012, 06:29 PM
#1114
Moderator
Diamond Hubber
காதலுக்காக மோதிக்கொள்ளும் `இருமலர்கள்'
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இருமலர்கள் தொடர், 50-வது எபிசோடை எட்டியிருக்கிறது. `நம்ம அண்ணாச்சி' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய டைரக்டர் தளபதி இந்த தொடரை இயக்குகிறார்.
கல்லூரிப்பருவத்தில் அமுதா-ரஞ்சனி என்ற இரு பெண்கள் மோதிக் கொள்கிறார்கள். இனி வாழ்நாளில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதில்லை என்று சபதமும் எடுக்கிறார்கள்.
அப்படி அவர்கள் வைராக்கியத்துடன் பிரிந்தபிறகு யார், எங்கிருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரியாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யார் என்று தெரியாமலே ஒருவரால் மற்றவருக்கு பிரச்சினைகள் நீடிக்கிறது.
இயக்குனர் தளபதியுடன் மகாலட்சுமி, அகிலா. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இருவரும் ஒரே இளைஞனை ஒருவர் அறியாமல் மற்றவர் காதலித்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
இப்படிப்பட்ட இந்த எதிர்மறை தோழிகள் எப்போது தான் நேரில் சந்திக்கப் போகிறார்களோ என்ற கேள்வி மனதில் எழுகிறதல்லவா? ஒருத்தியின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னொருத்தி வரப்போகிறாள். வந்த இடத்தில்தான் இருவரின் விருப்பத்துக்குரியவனும் ஒருவனே என்ற உண்மை அதிர்ச்சியாக வெடிக்கப் போகிறது.
இவர்கள் காதலில் அப்படி என்ன விசேஷம்? அதுவும் இருவர் ஒருவனை விரும்பும் அளவுக்கு?
சிவா அமுதாவை காதலிக்கிறான். ரஞ்சனி, சிவாவை காதலிக்கிறாள்.
தான் ரஞ்சனியால் காதலிக்கப்படுவது தெரியாமல் சிவாவும் உற்சாகமாக அமுதாவுடன் திருமணத்துக்கு தயாராகிறான். இதோ அதற்கான நிச்சயதார்த்த விழாவை தடுக்கும் முகமாகத்தான் ரஞ்சனி வீறுகொண்டு வருகிறாள்.
அடுத்து வரும் காட்சிகள் அமுதா-ரஞ்சனியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அவர்களுக்கிடையேயான போட்டி இன்னும் வீரியமாகிறது. சவால்கள் தொடர்கின்றன.
தொடரில் ரஞ்சனியாக மகாலட்சுமியும், அமுதாவாக அகிலாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி, வித்யா, அமரசிகாமணி, சிவன்சீனிவாசன், தினகரன், ரேவதிசங்கர், வசந்த் ஆகியோரும் இருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
1st May 2012, 02:16 AM
#1115
Moderator
Diamond Hubber
23-04-2012 தொடங்கி....
Pillai Nila Sun Tv New Serial
-
5th May 2012, 09:18 PM
#1116
Moderator
Diamond Hubber
புதிய தொடர்கள்
கனா காணும் காலங்கள் தொடரைத் தொடர்ந்து விஜய் டிவியின் இன்னொரு பள்ளித்தொடர், `7-சி.' அந்தப்பள்ளியில் `7-சி' வகுப்பில் உள்ள அத்தனை மாணவ-மாணவிகளும் இரட்டை வால்கள். இந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க பயப்படுகிறார்கள், ஆசிரியர்கள். ஆனால் அவர்களுக்கென்று அமைகிறார், ஒரு ஆசிரியர். குறும்புகளைத்தாண்டி அந்தப் பிள்ளைகளிடம் பொதிந்து கிடக்கும் திறமையை கண்டறியும் அநத ஆசிரியர், அந்த மாணவர்களின்திறமைகளைக் கொண்டே அவர்களை ஜொலிக்கச் செய்கிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த தொடர்.
இதே நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இன்னொரு தொடர், ஆஹா. கூட்டுக்குடும்பங்கள் நகர வாழ்க்கையில் குறைந்துவரும் இந்த காலகட்டத்தில் அழகான ஒரு பெரிய குடும்பத்தைப்பற்றிய கதை இது. பெரியதிரை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சின்னத்திரைக்காக இயக்கும் முதல்தொடர் இது. இவரது `ஆஹா' சினிமாவில் நடித்த பானுப்பிரியாவே தொடரிலும் நடிக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
5th May 2012, 09:19 PM
#1117
Moderator
Diamond Hubber
பாட்டு தர்பார்
ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய இசை நிகழ்ச்சி, பாட்டு தர்பார். நடிகர் மதன்பாப் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மூன்று பகுதிகளைக் கொண்டது. காலத்தை வென்ற பாடல்கள் பலமுறை நம்மனதை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த பாட்டுக்கான பின்புலம் தெரிய வந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் விருப்பத்துக்குரிய பாடல்களை அந்த பாடல்களுக்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லி தற்போதுள்ள பின்னணி பாடகர்கள் அந்தப்பாடலை பாடுவார்கள். இந்த பகுதிக்கு `பாட்டோட கதை கேளு' என்று பெயர்.
இரண்டாவது பகுதி `சிரிப்பு மழை'. நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கு பெற்று தங்கள் அதிரடி நகைச்சுவையால் ரசிகர்களை குலுங்க வைப்பார்கள்.
மூன்றாவது பகுதியில் `என் கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதில் பிரபலமான வி.ஐ.பி.களிடம் நடிகர் மதன்பாப் அதுவரை யாரும் கேட்டிராத அனல் பறக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிறார். இதில் முதல் வி.ஐ.பி.யாக டைரக்டர் கே.எஸ்.ரவி குமார் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியில் நடிகர் மதன்பாப்பின் மகன் அர்ச்சித், மகள் ஜனனி இருவரும் பாடுகிறார்கள். இருவரும் சினிமா பின்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு: கிரியேட்டிவ் கோம்ப்
நன்றி: தினதந்தி
-
5th May 2012, 09:20 PM
#1118
Moderator
Diamond Hubber
வீர சிவாஜி
பிஜப்பூர் சுல்தான் ஆதில்ஷாவின் சர்வாதிகாரத்திற்கு உட்பட்டு பல்வேறு மன்னர்கள் அடிமைகளாக இருந்து வந்தனர். ஆதில்ஷாவை எதிர்த்த முதல் மாவீரர் சிவாஜி.
சிவாஜியின் சுதந்திர தாகத்தை உணர்ந்த அவரின் தந்தை ஷஹாஜிராவ், தன் உற்ற நண்பரான ரன்துல்லாகானின் உதவியோடு அதிக அளவில் போர்க்கருவிகளையும் குதிரைகளையும் சிவாஜிக்கு கிடைக்கச் செய்கிறார்.
இதற்கிடையில் பிஜப்பூர் சுல்தானின் நம்பிக்கை நட்சத்திரமான மியா ரஹீமுக்கு சிவாஜியை கொல்லும்படி ஆணையிட்டிருக்க, மியா ரஹீம் தன்அடிமையான கிருஷ்ணாஜியை பகடைக்காயாக்கி பல்வேறு விதத்தில் சிவாஜியை கொல்ல ஆணையிடுகிறார். கிருஷ்ணாஜி தேஷ்முக் இனத்தவரை தன்பணயக் கைதிகளாக்கி அதன்மூலம் சிவாஜியின் தன்மானத்தை சூறையாடுகின்றனர்.
சிவாஜி எடுத்த முடிவு என்ன? பல்வேறு திருப்பங்களுடன் தொடரும் `வீர சிவாஜி' தொடரை திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.
நன்றி: தினதந்தி
-
11th May 2012, 04:41 AM
#1119
Moderator
Diamond Hubber
‘Aahaa’ is directed by Suresh Krishna who has given the super hits movies like Baasha, Annamalai, Indiran Chandiran, Aalavandan & Sathya. Aahaa is a heart warming story riding high on family emotions.
In the current trend of nuclear families, there exists in the heart of Chennai, an ideal joint family led by the patriarch Parameshwara Iyer. Then love intervenes and Harsha a young man born and raised aboard, carefree, without a worry happens to lands up in the midst of the big joint family. Adamant to attain his love, Harsha sets out on a mission to win the heart of every family member. Little does he know that his life is going to change forever!
Starring popular names from the Tamil Film industry that includes Seema, Banupriya, L. Raja, J.V. Ramanamoorthy, Bharat Kalyan, Prabhudeva Balaji, Vijay Babu, Elavarasan, Delhi Ganesh, Kavithalaya Krishnan, Jayarekha and Benito Alex (‘Mahaan’ Baba fame).
Beginning from May 07, 2012, Aahaa would air every Monday-Friday, 1930 hrs on Vijay TV.
-
12th May 2012, 08:38 PM
#1120
Moderator
Diamond Hubber
நடிகை ரோஜாவின் `லக்கா... திக்கா...'
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `கேம் ஷோ' நடிகை ரோஜா வழங்கும் `லக்கா, திக்கா!'
எந்தவொரு முன்எதிர்பார்ப்பும் தயாரிப்புமின்றி ஒவ்வொரு மனிதரின் அதிர்ஷ்டத்தை மட்டுமே மையமாக கொண்டு நடைபெறும் ஒரு `கிக்'கான விளையாட்டு நிகழ்ச்சி, இது.
நிகழ்ச்சியில் `ரோஜா தி பாக்ஸ், கண்ண தொறக்கணும் சாமி, வைராஜா வை, ராஜாராணி, அதிர்ஷ்ட சக்கரம்' என ஐந்து பகுதிகள் உண்டு. முதல் பகுதி, `ரோஜா தி பாஸ்.' நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய நிகழ்வுகளை மையப்படுத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு.
அடுத்தது `கண்ண தொறக்கணும் சாமி' பகுதி. இதில் பங்கேற்பவர்கள் நிழ்ச்சியில் சாமி வேடம் அணிந்தவரை தங்கள் திறமையால் கவர வேண்டும். அதன் மூலம் அவர்கள் திறமைக்கேற்ற ரொக்கப்பரிசு வழங்கப்படும். அடுத்து வரும் `வை ராஜா வை' பகுதியில், அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மேல் பந்தயம் கட்டி விளையாட வேண்டும். இதில்ஜெயித்தால் யார்மேல்பணம் கட்டி விளையாடினார்களோ, அவர்களின் பணம் கிடைக்கும். இல்லையேல் இவர்கள் பணம் அவர்களுக்குப் போய் விடும்.
`ராஜா ராணி' பகுதியில் பங்கேற்பவர்களுக்கு பொம்மை, ராஜா, ராணி போன்ற மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அனைத்திலும் பணம் அதிகமாக இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். ஏதாவது ஒன்றில் இல்லாமலும் இருக்கலாம். பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை பொறுத்து பணம் அவர்களுக்கு போய் விடும்.
அடுத்து அதிர்ஷ்ட சக்கரத்தை சுற்றுவதில் கடைசி இரண்டு பங்கேற்பாளர்கள் விளையாடுவார்கள். இதில் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப் படும். சக்கரம் சுற்றுவதில் யாருக்கு அதிக பணம் கிடைக்கிறதோ, அவர் தான் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்.எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் நடிகை ரோஜா.
நன்றி: தினதந்தி
Bookmarks