-
9th May 2012, 03:32 AM
#3271
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பொம்மை கல்யாணம்
[3.5.1958 - 3.5.2012] : 55வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.5.1958

பக்தியுடன்,
பம்மலார்.
-
9th May 2012 03:32 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2012, 03:41 AM
#3272
Senior Member
Veteran Hubber
சமீபத்திய பதிவுகளைப் பாராட்டி நமது வாசு சார் மின்னஞ்சல் மூலம் அளித்த மடல்:
அன்பு பம்மலார் சார்,
வாழ்வியல் திலகம் பற்றி வரகவி வாலி எழுதியுள்ள கவிதைப் பொக்கிஷம் ஒரு கலக்கல் பொக்கிஷம் தான். வாலி ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பது தெள்ளத் தெளிவாக இக்கவிதையின் மூலம் நிரூபணமாகிறது.
ஒரு மாமேதையைப் பற்றிய மிகச் சிறப்பான கவிதையை அற்புதமாக வடிவமைத்துவிட்டு தன்னை ஒரு பேதையான் என அடக்கத்தோடு வாலி கூறிக்கொள்வது அவரது உயரிய பண்பைக் காட்டுகிறது.
தமிழர்களின் திருத்தலம் விழுப்புரம் என அழுத்தம் திருத்தமாக வாலி கூறியுள்ளது ஒரு வார்த்தையானாலும் திருவார்த்தை.
நடிகர் திலகம் குறிஞ்சி மலருமல்ல... மகாமகமும் அல்ல... தெய்வம் தாராது தந்த தனிக்கொடை, அவர் நாமகளின் மகன்... என கவிதையில் குறிப்பிடப் பட்டிருப்பது குற்றாலக் குளிர்ச்சி.
பள்ளியில் அதிகம் பயிலாத கோமகன் கால் முளைத்த கல்லூரியாய், நடிப்புப் பல்கலைக்கழகமாய்த் திகழ்ந்தது கவிதையில் அற்புதமாகச் சொல்லப் பட்டுள்ளது.
தன்னைத் தவிக்க விட்டுப் போனதால் தமிழ் மட்டுமா அழுதது?... உலகம் மட்டுமா அழுதது? நீ அழுவதற்காகப் பிறந்தவன் இல்லை... தொழுவதற்காகப் பிறந்தவன்...
எவ்வளவு நிதர்சனமான உண்மை!
நடிகர் திலகமே! எங்கள் இறைவா! தொழுவதற்காகப் பிறந்த நீ மண்ணுக்குச் சொந்தமில்லை... விண்ணுக்குத்தான் சொந்தம் என தேவரும், மூவரும் உன்னை விரும்பி அழைத்துக் கொண்டதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.
தேவர்க்கும் தேவனே!
நித்தமும் உன் புகழை பார் முழுதும் பத்திரிகை ஆவணங்கள் மூலம் திருப்புகழாய் பாடிக்கொண்டிருக்கும் பம்மல் சாமிநாதன் என்ற நின் பக்தனை நாங்கள் தவம் புரியாமலேயே எமக்களித்து அருள் புரிந்தாய்!
அதே போல்
கவிதையா... கட்டுரையா... புகைப்படமா... புள்ளி விவரமா...எது வேண்டும்? எந்த நேரத்தில் வேண்டும்? இதோ.. என்று கண்சிமிட்டும் நேரத்தில் கன கச்சிதமாய் பதிவுகளை அளிக்கும் பம்மலாரை நின் ஆசிர்வாதங்களால் வாழ்வாங்கு வாழ வைப்பாய். இன்று போலவே என்றும் பம்மலாரின் ஆவணங்களினால் எங்களை மகிழ்விப்பாய்.
ஆவணத் திலகத்தை எங்களுக்களித்ததற்காக உனக்கும், ஆவணங்களை எங்களுக்களிப்பதற்காக ஆவணச் செம்மலுக்கும் எங்கள் வாழ்நாள் நன்றிகள்.
பம்மலார் சார்,
திரு.வி.சி.ஷண்முகம் பற்றிய திரு.முக்தா வி.சீனிவாசன் அவர்களின் (தம்பியுடையான் படைக்கஞ்சான்) கட்டுரைப் பதிவு அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் பால் நமக்கிருக்கும் அன்பும், அக்கறையும் போல அவர்தம் குடும்பத்திற்கு அதனினும் மேலான அக்கறையுண்டு. அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் இளைய சகோதரருக்கு நடிகர் திலகத்தின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு உண்டு என்பதை திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரை ஆணித்தரமாக நிருபிக்கிறது. திரு.சண்முகம் அவர்களின் கட்டுப்பாடும், கண்டிப்பும், சரியான திட்டமிடுதலும் இருந்ததனாலேயே இவ்வளவு பெரிய வெற்றியை சிவாஜி பிலிம்ஸ் அடைந்தது என்றால் அது மிகையில்லை. அதுமட்டுமன்று. சிவாஜி மன்ற வளர்ச்சிக்கும் சண்முகம் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது.
மிக மிக அரிய அபூர்வ கட்டுரையை அற்புதமாகப் பதிவிட்டுள்ளீர்கள். நிறைய சந்தேகங்கள் இக்கட்டுரையின் மூலம் தெளிவடைகின்றன. நன்றி! இது போன்ற அரிய கட்டுரைப் பதிவுகளுக்கு நீங்கள் இருக்கையில் எங்களுக்கென்ன கவலை?
vasudevan.
தங்களின் உன்னத பாராட்டு மடலுக்கு எனது உற்சாகமான நன்றிகள், வாசு சார்..!
Last edited by pammalar; 9th May 2012 at 03:44 AM.
pammalar
-
9th May 2012, 06:58 AM
#3273
Senior Member
Seasoned Hubber
பொம்மை கல்யாணம் பாடல் காட்சிகள்
1. விதி இதுவோ - ஜிக்கி
2. கல்யாணம் கல்யாணம் - ஜிக்கி
3. ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்
-
9th May 2012, 07:03 AM
#3274
Senior Member
Seasoned Hubber
பொம்மை கல்யாணம் பாடல் காட்சிகள் தொடர்ச்சி
4. வசந்த காலம் - ஜிக்கி
தாயின் வார்த்தைக்கும் தாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்கும் இடையில் சிக்கிப் போராடும் இளைஞனின் மன நிலையை சித்தரிக்கும் காட்சியில் நடிகர் திலகம்.
-
9th May 2012, 07:07 AM
#3275
Senior Member
Seasoned Hubber
பொம்மை கல்யாணம் காட்சிகள் தொடர்ச்சி
5. சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் ஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் இன்பமே பொங்குமே
ஸ்டைல் மன்னன் கலக்குவதைப் பாருங்கள்.
-
9th May 2012, 07:10 AM
#3276
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
வாசுதேவன் சாரின் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டியவை. அவருக்கு நம் அனைவரின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்.
-
9th May 2012, 03:22 PM
#3277
Junior Member
Junior Hubber
-
9th May 2012, 07:31 PM
#3278
Junior Member
Junior Hubber
அனைவருக்கும் வணக்கம்!
சமீபத்திய பதிவுகள் அனைத்திற்கும் என் நன்றி!
இதோ என்னால் முடிந்த சிறு பதிவு.
இந்த ஓரங்க நாடகத்திற்கு பின்னால்....
இந்த ஓரங்க நாடகத்திற்காக கலைஞர் அவர்கள், தான் ஏற்கனவே நாடகத்திற்காக எழுதி அதை திரு.SSR அவர்கள் பேசியதை நடிகர் திலகம் அவர்களுக்காக தந்திருக்கிறார். இதை அறிந்த நடிகர் திலகம் அவர்களோ அது எச்சில் பட்டுவிட்டது அது எனக்கு வேண்டாம் என்று கலைஞரிடம் கோபித்திருக்கிறார். இதை கேட்ட கலைஞரோ கவலைப் படாதே கணேசா! இதோ உனக்காக உடனே வேறு வசனம் எழுதி தருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தில் எழுதித் தந்ததை நடிகர் திலகம் அவர்கள் அரை மணி நேரத்தில் மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி நடித்து தந்திருக்கிறார். இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் ஒரே டேக்கில் பேசி நடிப்பது என்று முடிவாகியப் பிறகு, அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க நடிகர் திலகம் அவர்கள் ஒரே டேக்கில் மொத்த வசனத்தையும் பேசி நடித்து முடிக்க அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஒருவருக்கொருவர் தங்கள் சந்தோஷத்தை பரிமாரிக் கொண்டிருந்தபோது கேமரா மேனும் அவருடைய உதவியாளரும் மட்டும் ஏதோ தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கவணித்த நடிகர் திலகம் அவர்கள் கேமரா மேனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் கேமராவில் ரீல் லோடு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. உடனே நடிகர் திலகம் அவர்கள் அதை சொல்ல வேண்டியது தானய்யா! என்று கூறி உடனே மறுபடியும் ஒரே டேக்கில் இரண்டாவது முறை பேசி நடித்து தந்திருக்கிறார்.
THAT IS OUR BELOVED NADIGAR THILAGAM
நட்புடன்!
Last edited by sivajidhasan; 9th May 2012 at 07:56 PM.
-
9th May 2012, 09:07 PM
#3279
Senior Member
Seasoned Hubber
சோனியா வாய்ஸ் பருவ இதழில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை மற்றும் திரைப்படங்களைப் பற்றிய தொடர் வந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர் நவாஸ், தீவிர சிவாஜி ரசிகர். இந்த தொடரை எழுதுபவர் ஹசன் அவர்கள். இத்தொடரின் சமீபத்திய பகுதி தங்கள் பார்வைக்கு. இதற்கு முன்னர் வந்தவற்றை சேகரித்த பின் தரவேற்ற முயல்கிறேன்.
-
9th May 2012, 09:40 PM
#3280
Junior Member
Seasoned Hubber
From THE HINDU
Small screen promotes theatre art, says ‘Vietnam Veedu' Sundaram
The small screen has become an integral and inevitable part of present day life style. When it comes to drama, the role being played by the television in promoting the art is immeasurable, says ‘Vietnam Veedu' Sundaram, noted film script writer and director.
Describing television as a comfortable medium projecting all major events across the world at one's doorstep, Mr. Sundaram is enthusiastic about utilising mass media technological advancements to the best of his advantage .
He feels proud to be able to use the television as a platform to expose his talents and thereby paving way for people to enjoy his performances. This apart, many TV artistes are as popular as drama and film artistes, he says indicating the role being played by television in promoting drama. In fact, it is electronic media which had made him an actor. “I may not be so good at acting, but it provides a platform to a large number of artistes,” he says. The veteran actor recalls his relationship with Y.Gee.Mahendra, with a sense of gratitude, who had given him vital inputs on the nuances of acting and helped him become an actor in the small screen.
Going down memory lane, Mr. Sundaram, who has been in the cinema field for over five decades, proudly recalls his association with late thespian Sivaji Ganesan, a ‘born and blessed actor'.
Even Sri Paramacharyar of Sri Kanchi Mutt had blessed the late actor for his extraordinary skill, a testimonial to the divine gift Sivaji Ganesan possessed.
Tracing the journey of Sivaji Ganesan from drama field, Mr. Sundaram praises the late actor's photographic memory in grasping and delivering dialogues, irrespective of its length.
Citing an example, he says that he stepped into the world of drama only to emerge with flying colours with an hat trick, with three prominent dramas ‘Vietnam Veedu', ‘Gnana Oli' and ‘Gowravam'.
Although he had scripted a number of plays, it was these three dramas which proved to be a trend setter.
In fact these dramas and later the films, with Sivaji Ganesan playing the lead role, went down well with the audience.
The three films evoked overwhelming response from various sections of film-goers irrespective of economic strata. On ‘Vietnam Veedu', he says almost every individual identified with the character of ‘Padmanabha Iyer'. Sivaji Ganesan was an ideal actor who was perfect in dialogue delivery and precise in body language.
Bookmarks