-
22nd June 2012, 10:26 AM
#11
Senior Member
Diamond Hubber
மேலேயுள்ள செந்தில் என்பவரின் பதிவு... படிக்கும்போதே தூக்கம் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நான் பதிலுக்கு என் தரப்பிலிருந்து கருத்துக்களை வைத்தால்தான் சரிப்படுமா? "பெயர்களை திருப்பிப் படித்தால் அர்த்தம் வரா. ஆனால் இசைக்குறிப்புக்களுக்கு உண்டு" என்ற கருத்திற்கு பொழிப்புரை என்ற பெயரில் பிதற்றுவதற்கு பதில் மௌனமாகவே இருந்துவிடலாம். நாயகர்களின் வாயசைக்கும் இசைப்பாடலே செயற்கையான விஷயம் தான் என்றாலும் அதிலும் முடிந்தவரை ஒரு சிறப்பு அவர்களின் பேசும் மொழி. "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி" - இந்த வரிகள் தரும் உணர்வெழுச்சிக்கு முன்பு அந்தப் பாடலின் எந்த இசைக்குறிப்பும் எனக்கு இரண்டாம் பட்சமே. சில நேரங்களில் பாடல் வரிகள் முன்னெடுத்துச் செல்லும், சில நேரங்களில் இசைக்குறிப்புக்கள், சில நேரங்களில் இரண்டும் இணை கோடுகளாக.. ராக அமைப்பில் ஏறிக்கொண்டிருந்தாலும் "பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது" எங்கே இந்த கவித்துவக் காட்சிப் படலத்தை இசைக்குறிப்பில் மட்டுமே காட்டுங்கள் பார்ப்போம்? ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். இதுதான் பெரியது எனச் சொன்னால் அது என் பார்வைக்கு பிதற்றல்தான். அகந்தைதான். "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!" என பாறைகளைப் பார்த்து உரக்கக் கத்துகிறானே ஒரு அப்பாவி - அந்த உணர்ச்சி அந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட பின்னணி இசைக்குறிப்புக்களுக்கு இணையானது என்னைப் பொறுத்தவரை. அந்தப் படத்தின் அச்சாணியே அந்த வசனம்தான். அது சரியாக அந்தப் பாடலிடையே அமைந்து மென்மேலும் மெருகூற்றுகிறது. ராஜாவின் கிடார் ஒலிகள் எனக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" வரிகளும் முக்கியம். நூறு, இரு நூறு வருடங்கள் கழித்தும் இது ஒலிக்கப்ப்படும்போது அப்போதும் இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் புகழப்படும். நிறையச் சொல்லலாம். பாடல் வரிகள், வசனம் இவற்றின் முக்கியத்துவம் உங்கேளுக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் இதெல்லாம் இப்படிச் சொல்லித்தான் ஆகணும் என்ற அவசியமேயில்லை. மொழிகளே இல்லாமல் முழுக்க முழுக்க பின்னணி இசை அல்லது இசை ஆல்பங்கள் செய்யும் தொழிலில் ராஜா ஈடுபட்டிருந்தால் அவரின் இத்தகைய பேச்சை மதிக்க வேண்டியதுதான். ஆனால், கருப்பு வெள்ளை காலம் தொட்டு டிஜிட்டல் காலமான இன்று வரை உச்சப் பாடல்கள் எனப் பட்டியல் இடும் பலவற்றில் பாடல் வரிகள் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இதுபோன்ற ஒருசார்பான கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது ஒரு வகையில் மூளைச்சலவை செய்யும் யுக்தி. எனக்கு கண்ணதாசன் பாரம்பரியமும் வேண்டும். ராஜாவின் பாரம்பரியமும் வேண்டும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd June 2012 10:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks