-
7th August 2012, 03:56 AM
#501
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :11
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 12.6.1983

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
7th August 2012 03:56 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2012, 04:13 AM
#502
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
இந்த வீடியோக்களை வழங்கிய 'www.behindwoods.com' இணையதளத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
7th August 2012, 04:20 AM
#503
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
இந்த வீடியோக்களை வழங்கிய 'Star View'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
7th August 2012, 04:31 AM
#504
Senior Member
Veteran Hubber
-
7th August 2012, 04:38 AM
#505
Senior Member
Veteran Hubber
-
7th August 2012, 04:43 AM
#506
Senior Member
Veteran Hubber
-
7th August 2012, 07:00 AM
#507
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
நேற்று இரவு பயணம் முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக அமர்ந்தது நமது திரியில் உள்ள பதிவுகளைப் பார்க்கத் தான். மலைப்பு என்ற வார்த்தைக்கு பொருளாக தங்கள் உழைப்பைத் தான் சொல்ல வேண்டும். 4ம் தேதி விழா 4 மணி நேரம் என்றால் அதை நாங்கள் பார்வையிட தங்களுக்குத் தேவைப்படும் உழைப்பு 4 நாட்களும் அதற்கு மேலும். என்ன என்று சொல்வது.
நமக்காக வைத்திருந்த அழைப்பிதழில் ஒன்றினை மிகவும் வயது முதிர்ந்த ஒரு ரசிகருக்கு கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேல் அவருக்கு இருக்கும், அவருக்கு கொடுத்து விட்டதனால் நம்முடைய அழைப்பிதழ் எண்ணிக்கையில் உபரி எதுவும் இல்லாத காரணத்தால் முரளி சாரின் அழைப்பிதழை மற்றொரு நண்பருக்கு தர வேண்டிய சூழ்நிலை. உபரி இருந்திருந்தால் மேலும் நமது நண்பர்களை அழைத்திருக்கலாம். மேலும் அடியேன் முன் கூட்டியே உள்ளே செல்ல வேண்டியது இருந்ததால், காத்திருந்து நண்பர்களை வரவேற்க இயலாத நிலைமை. இவற்றை நமது முரளி சார் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். அதனால் தான் அவருடைய அழைப்பிதழை மற்றொருவருக்குத் தரும் நிலைமை.
ஸ்வாமி சார் தங்களுடைய பதிவுகளின் மூலம் இந்த மய்யத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் மீண்டும் மீண்டும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th August 2012, 07:02 AM
#508
Senior Member
Seasoned Hubber
கார்த்திக் சார்,
பம்மலார் பற்றிய தங்கள் பதிவுகள் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th August 2012, 07:14 AM
#509
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்களே,
அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்றிருந்த சூழ்நிலை நன்கு தெரியும். பி.வாசுவின் உரையினால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது. தொடர்ந்து வந்த திரு ஒய்.ஜி.மகேந்திராவின் உரை தான் சற்று அந்த சூழ்நிலையைத் தணித்தது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையை மிகவும் அருமையாக தனக்கே உரிய ஒரு பக்குவத்துடன் பிரபு அவர்கள் கையாண்டதுடன் அந்த பக்குவத்தை அவருடைய உரையிலும் வெளிப்படுத்தினார். நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பல புதிய தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. அதில் அனைத்து கலைஞர்களின் ரசிகர்களும் அடங்குவர். எனவே இதை அந்த முறையில் அணுகிப் பார்த்தால் பிரபு அவர்களின் பேச்சில் இருந்த முதிர்ச்சி தென்படும். அது மட்டுமல்ல, கும்கி விழாவில் கமலும் ரஜனியும் அந்த யானையின் இரு தந்தங்கள் என்று ஒரு கருத்து சொல்லப் பட்ட போது, அந்த யானையின் முகமே எங்கள் அப்பாதான் என்று சிறப்பாக நடிகர் திலகத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் பிரபு, அதே கருத்தைத்தான் இந்த விழாவிலும் கூறினார்.
எனக்குத் தெரிந்து பிரபு அவர்களையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தைப் பற்றியும் குறை சொல்லவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற வர்களுக்கு நாம் இனிமேல் எந்த பதிலும் சொல்வதில் அர்த்தமில்லை. நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் என்றைக்குமே அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தையும் குறை சொல்லும் மன வலிமை இல்லாதவர்கள். மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நம்மிடைய உள்ள மற்ற நண்பர்கள் இனிமேல் இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது சற்று சிந்தித்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் 4ம் தேதி நடந்த கர்ணன் 150-வது நாள் விழாவில் பிரபு அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு அதைக் கையாளும் விதத்தையும் அறிந்திருக்கும் அவருடைய அனுபவமிக்க முதிர்ச்சியைத் தான் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th August 2012, 07:46 AM
#510
Senior Member
Seasoned Hubber
Bookmarks