-
27th August 2012, 11:39 AM
#2671
Senior Member
Diamond Hubber
http://tamil.oneindia.in/movies/tele...tv-160302.html
என்றென்றும் அவர் இசைக்கு ராஜா என்பதை நிரூபித்த கச்சேரி இது. இதில் எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே பூவே செம்பூவே பாடல் பலமுறை ரசிகர்களுக்குப் போய் சேர்ந்தது. ராஜா ரசிகர்களின் மனக்குவியல்களில் இந்த பாடல் ஒரு முத்து. இரண்டாம் இடையிசை மின் கிதாருடன் துவங்குகையிலேயே ரசிகர்களின் ஆராவாரமும் துவங்குகிறது.அந்த இடையிசையில் வயலின் குழு சேர்கையில் அந்தப் பரவசம் தரும் இன்பத்தை அத்தனை பேரும் மெய்மறந்து அனுபவித்தனர்.
ஆனால் இடையிசை முடியும் முன்னரே ஜேசுதாஸ் பாடத்துவங்க, வேலையில் கவனமாக இருந்த நடத்துநர் என்ன செய்வதென புரியாமல் ஜேசுதாஸைப் பார்த்தபடியே இசைக்கோர்வையை தொடர எல்லாம் குளருபடியானது. ஆனாலும் இசைஞர்கள் ஜேசுதாஸை மொத்தமாக கைவிடாமல் அவர் பாடும் வரிகளுக்கேற்ற தாளத்துடன் இணைய, நுழைகிறார் ராஜா. இது என் ஷோ.
இப்படியிருக்க கூடாது என ஜேசுதாஸை நிறுத்தினார்.
ஜேசுதாஸ் வாழ்நாளில் இவ்வளவு பேர் முன்னிலையில் தாளத்துக்கு தவறி மீண்டும் துவங்கியது இது எத்தனையாவது முறையாக இருக்க முடியும்? ராஜா என்ன சொல்லி நிறுத்தினாரோ... ரிக்கார்டிங்கென்று ஜேசுதாஸ் மைக்கில் சொல்ல... மறுபடியும்... இங்கு ஜனங்களின் ஆராவாரம். இது ராஜாவுக்கு.தங்களுக்குத் தேவையானதை தெளிவாக தரும் அவர்களுடைய ராஜாவிற்கு ரசிகர்கள் கைத்தட்டலை பரிசாகத் தந்தனர்.
இரண்டாம் முறையும் ஜேசுதாஸ் சொதப்ப, ராஜா இந்த முறை வெறும் கையசைவில் அவரை நிறுத்தி இசைஞர்களுக்கு பாதை காட்டுகிறார். முதல் முறை ஜேசுதாஸைக் காப்பாற்றியவர்களை இந்த முறை ராஜா காப்பாற்றுகிறார். பின்னர் ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க ராஜாவின் முகத்தில் வரும் அந்த நிம்மதி ஆள்காட்டி விரலுடன் அவர் உதிர்க்கும் அந்த புன்னகையில் தெரிந்தது. பாடல் என்பது வெறும் மனிதர்களின் குரல் அல்ல அது இசையுடன் கூடிய ஒருவித பிணைப்பு. ராஜாவின் பாடல்களில் அநேக பாடல்களில் நிறைவுப் பகுதி அருமையானதாக இருக்கும்.. இந்த நிகழ்விலும், குற்றவுணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த ஜேசுதாஸ் பூவேவேஏஏஏஏ க்குப் பின் எனக்காக இன்னொரு வாட்டி பார்க்கலாமா என கேட்கிறார். ராஜாவுக்கும் அப்பொழுது தான் தோன்றுகிறது பாடல் இன்னும் முடியவில்லையென்று. மக்களுக்கும் தெளிவாக்குகிறார்.
பாட்டு இன்னும் முடியலை அதுக்குள்ள கை தட்டுறீங்களே என்று கேட்க ரசிகர்களின் ஆராவாரம் மெதுவாக அடங்குகிறது. முடிவு சரி இல்லாமல் எப்படி? ஜேசுதாஸ் பெரிய ஆளுமை. குற்றவுணர்ச்சியுடன் வீடு செல்ல முடியுமா. திருத்திக்கொள்கிறார்.
நடத்துநர் அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்க ராஜா தானே இசைஞர்களை வழிநடத்த... பதறியபடியே
அவர் புத்தகத்தை வைத்துவிட்டு அதே பாடலுக்கான தன் வேலைக்கு மீண்டும் திரும்ப ராஜாவுக்கு சந்தோஷம். கூட்டத்துக்கு தேவையான ஒன்ஸ்மோர்கள் இப்படியாக போய் சேர்கின்றதே என்கிற உற்சாகத்துடன் ராஜா. இந்த முறை ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க கூட்டத்தில் பலத்த கைதட்டல். அது இசைக்கு அவர்களின் வரவேற்பு, ஜேசுதாஸ் ராஜா எல்லோருக்குமான வாழ்த்து.
நான் செய்த பாவம் என்னோடு போகும் என ஜேசுதாஸ் தன்னை தானே சொல்லிக் கொண்டு தன் பக்கம் விரலைக் காட்டுவதைப் பார்த்த ராஜா கையெடுத்து ஜேசுதாஸை வணங்குவது கலையைத் தாண்டி மனிதத்துக்கான பாடம். அது தரும் நெகிழ்வு அலாதியானது. புல்லாங்குழலும் அதே அமைதிக்கு எல்லாவற்றையும் திருப்ப... ஜேசுதாஸ் முடிக்கிறார்.
-
27th August 2012 11:39 AM
# ADS
Circuit advertisement
-
30th August 2012, 01:11 AM
#2672
Senior Member
Platinum Hubber
IR attending felicitation of mellisai mannarkaL
விழாவில், மூத்த திரைப்பட பாடகர்கள் டி.எம். செüந்திரராஜன், பி.பி. சீனிவாஸ், சுசீலா, ராகவன், எம்.எஸ். ராஜேஸ்வரி, எஸ்.பி. பாலசுப்பிரமணியன், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களையும் முதல்வர் வழங்கி பாராட்டினார்.
விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், இயக்குநர் கே.பாலசந்தர், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகியோர் பேசினர். எம்.எஸ். விஸ்வநாதன் ஏற்புரையாற்றினார். பத்திரிகையாளர் சோ ராமசாமி, சமக தலைவர் சரத்குமார் மற்றும் அமைச்சர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
30th August 2012, 01:13 AM
#2673
Senior Member
Platinum Hubber
It should be interesting to see what rAsA talked about MSV in the presence of JJ 
yArAchchum youtube link pOdungappA...
-
30th August 2012, 08:03 AM
#2674
Senior Member
Diamond Hubber
-
30th August 2012, 08:46 AM
#2675
Senior Member
Regular Hubber
http://www.thehindu.com/arts/music/article3827816.ece
Ilaiyaraaja is a genius, said Anil. “Absolutely the last of the true composers before they all became compositors.” A ‘cartooned’ Ilaiyaraaja could be seen playing on a piano with ‘Orampo Rukmini Vandi Varudhu’ spiralling out above and then there was A.R. Rahman, with his halo of hair and ‘Chaiya Chaiya’. And of course, the slum dog with the words ‘Jai Ho’.
-
30th August 2012, 12:27 PM
#2676
Junior Member
Devoted Hubber
Surprised to see KB and Ilaiyaraaja sharing good vibes!
-
30th August 2012, 12:47 PM
#2677
Senior Member
Seasoned Hubber
Found two tiny clips with excerpts from an interview of Vairamuthu on the soundcloud link (http://soundcloud.com/mrnags/kaatrai-konjam-full-song).
In one of it he says (not verbatim) - Raaja, while speaking on stage (on some occasion), had commented about VS Narasimhan saying the latter is a very intelligent musician, someone whom he placed higher than himself. KB had also attended the function. The next thing that happened was VSN getting a call from KB to score for his film Achamillai achamillai.
-
30th August 2012, 01:24 PM
#2678
Senior Member
Diamond Hubber
விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.
அவர் பேசியது:
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.
ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான். அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும் (பாடிக் காட்டுகிறார்...) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.
மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்.. அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு இளையராஜா பேசினார்.
-
30th August 2012, 06:42 PM
#2679
Senior Member
Platinum Hubber
Good speech!
Question - Is 'veNNiRa Adai' debut for JJ? (It was possibly so for Moorthy & Nirmala who both carried that tag as permanent adai mozhi for them)
-
30th August 2012, 06:47 PM
#2680
Senior Member
Diamond Hubber
enga thalaivar varaliyaa??
Bookmarks