Page 346 of 410 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 4092

Thread: Manidharul Punithar, Maha-Avatar RAJINIKANTH News and Update

  1. #3451
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    Quote Originally Posted by lmkbabu View Post


    Superstar Rajinikanth began his carrer as a bus conductor.. This rare pic was taken at that time!!

    are u sure?.. anyway, thanks for the information lmkbabu...
    Sach is Life..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3452
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2011
    Location
    Coimbatore
    Posts
    360
    Post Thanks / Like
    “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே”…. தமிழக முதல்வர் தலைமையேற்ற எம்.எஸ்.வி அவர்களின் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை! முழு வடிவம்!!

    ஜெயா டி.வி.யின் 14 வது ஆண்டுவிழாவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 5.00 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.



    இந்நிகழ்ச்சியில் நாம் நண்பர்களுடன் கலந்துகொண்டோம். நிகழ்ச்சி குறித்த மற்ற சுவையான அப்சர்வேஷங்களை பின்னர் சொல்கிறேன். நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் உரை இதோ. (எழுத எழுத அப்டேட் செய்கிறேன்). Photographs will be updated later.

    சூப்பர் ஸ்டாரின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, அரங்கமே கைத்தட்டல்கள் அதிர்ந்தது.

    (கைத்தட்டல்… விசில்) “இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவிற்கும் தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, (கைத்தட்டல்… விசில்) இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்னுடைய குருநாதர் கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே (கைத்தட்டல்… விசில்), என்னுடைய நண்பன் கமல் ஹாசன் அவர்களே(கைத்தட்டல்… விசில்), இங்கே வருகை தந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, மற்றும் திரையுலக சிறந்த பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும் (பலத்த கைத்தட்டல்… விசில்), வாழ வைத்த தமிழக மக்களே (கைத்தட்டல்… விசில்) அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கைத்தட்டல்… விசில்)…..



    “சி.எம். பதவிக்கு பதவிக்கு வந்தபிறகு நான் கேள்விப்பட்டேன் இண்டஸ்ட்ரில இருக்கிறவங்க எல்லாரும் அவங்களுக்கு பாராட்டுவிழா நடத்தனும்னு சொல்லி ஆசைப்பட்டாங்க. ஆனா அவங்க தான் “இப்போ வேண்டாம்”னு சொன்னதா கேள்விப்பட்டேன். அவங்களே இப்போ இங்கே வந்து எம்.எஸ்.வி.அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரி. மிகப் பெரிய விஷயம். இது உங்களுக்கும் கூட ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பம். இல்லேன்னா… உங்களை கூட பாராட்ட இப்போ எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்க முடியாது.”

    “முதல்ல ஜெயா.டி.வி. 13 ஆண்டுகள் முடிந்து 14 ஆண்டுகள் அடியெடுத்து வைக்கிறாங்க. அந்த சாதனைக்காக அங்கே வேலை பார்க்குற அத்துனை பேருக்கும் நான் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்குறேன். நானும் ஜெயா.டி.வி. நிகழ்ச்சிகளை நிறைய பார்க்குறேன். சரவணன் சார் சொன்ன மாதிரி காலைல போடுற நிகழ்ச்சிகள் (பக்தி, ஆன்மிகம்) எனக்கு ரொம்ப பிடிச்சவை. அதே போல, இந்த நியூஸ் போடுறதுக்கு முன்னால போடுற ‘வரலாற்று சுவடுகள்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் சோ சாரோட ‘எங்கே பிராமணன்’ தொடரை நான் ரொம்ப விரும்பி பார்ப்பேன். அதுல சோ சார் கொடுக்குற விளக்கங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அது அப்புறம் ஸ்டாப் ஆயிடுச்சு. நான் கூட சோ சார் கிட்டே இது பத்தி கேட்டேன். அதுக்கு சோ சார் சொன்னனாங்க… “சி.எம். கூட இது பத்தி என்கிட்டே கேட்டாங்க. “எனக்கு நேரமில்லே!”

    சி.எம்.சொல்லி கூட கேட்க்காத ஒரு ஆள் தமிழ் நாட்டுல இருக்காங்கன்னு சொன்ன அது சோ சார் தான். (பலத்த கைத்தட்டல்… விசில்)

    சோ அவர்களை காமிரா குளோசப்பில் காட்டுகிறது. அவர் தலையில் கை வைத்துக்கொள்கிறார். “இதையெல்லாம் ஏன்பா சொல்றே நீ?” என்கிற அர்த்தத்தில்.”

    “ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டீ.வி. இன்னைக்கு கமல்ஹாசன் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால என்பது பெரிய விஷயம்.”

    “எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களுக்கு இங்கே பாராட்டு விழா. இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் எல்லோரைவிட நான் சினிமாவில் ஒரு ஜூனியர் தான். எம்.எஸ்.வி. அவர்களை பாராட்டுவதற்கு இளையராஜா சார், கமல்ஹாசன், கே.பி.சார் அவங்களே தயங்கும்போது வார்த்தைகள் இல்லைன்னு சொல்லும்போது நான் மட்டும் எப்படி பேசுவேன்? என்னோட படங்கள் கூட அவர் நிறைய செய்யலே.”

    “ஆனா பெங்களூர்ல நான் இருக்கும்போது – கன்னடா பேசுறவங்க எல்லாம் – “போனால் போகட்டும் போடா”ன்னு பாடுவாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”னு பாடுறாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே.” (பலத்த கைத்தட்டல்… விசில்)

    “நான் மொழியே தெரியலேன்னாலும் படங்களுக்கு போவேன். அந்த கதையோட அம்சத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு. ‘சர்வர் சுந்தரம்’ அப்படின்னு ஒரு படம். ஒரு சர்வர் சினிமா ஆக்டர் ஆகுறான் அப்படின்னு ஒரு கதை. நானும் கண்டக்டரா இருந்து சினிமா ஆக்டரா ஆகணும்னு ஒரு நினைப்பு. கனவு. அதனால அந்தப் படத்துக்கு போனேன். அந்த படத்துக்கு நான் போயிருந்தபோது, ‘அவளுக்கென்ன அழகிய மனம்’ அப்படின்னு ஒரு பாட்டு. அதுல மியூசிக் வாசிக்கிற மாதிரி, ஒரு MUSICIAN கம்போஸ் பண்ணும் சீன வர்றப்போ ஒரே கைதட்டல் விசில். ஒரு எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இங்கல்லாம் பர்ஸ்ட் டைம் இன்ட்ரோட்யூஸ் ஆகும்போது எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு கைதட்டல் ஒரு விசில். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கை தட்டுறாங்கன்னு. ஏன் இவ்ளோ ஆரவாரம்னு. என் பக்கத்துல இருக்குறவருகிட்டே கேட்டேன். “அந்த மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரை காட்டுறாங்க இல்லே… அவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு தான் நாங்க கைதட்டுறோம்” அப்படின்னு சொல்றார்.”

    “ஒரு இசையமைப்பாளருக்கு இவ்ளோ ஆரவாரம்… ஃபேன்ஸ்… மதிப்பு…. அப்படிங்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு. அதுக்கப்புறம் நான் மெட்ராஸ் வந்ததுக்கப்புறம், ‘அபூர்வ ராகங்கள்’ சமயத்துல தான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது காவி உடையில, நேத்தியல் குங்குமம் சந்தனம் இதெல்லாம் வெச்சிகிட்டு இருந்தாரு.”

    “எனக்கு ‘மூன்று முடிச்சு’ படத்துல நடிக்கும்போது படத்துல நான் பாட்டு பாடும்போது, அந்த போட்ல வர்ற ஸாங்… ‘மனவினைகள் யாருடனோ’ அந்த ஸாங்…. எனக்கு பெக்கூளியரான ஒரு ஃபேஸ்… அதுக்கு பெக்கூளியரான ஒரு வாய்ஸ் வேணும்னு, எம்.எஸ்.வி.சாரைத் தான் எனக்கு பாட வெச்சாங்க. எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி. சார் தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும்… ‘சம்போ…சிவ சம்போ…’ பாட்டை பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க…”

    “எம்.எஸ்.வி. & ராமமூர்த்தி இந்த மாதிரி சாதனையாளர்களை பத்தி பேசனும்னு சொன்னா எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அதாவது இந்த மரணம்குறது இயற்கையானது. எல்லாருக்கும் நிகழக்கூடியது. இந்த மரணம் என்பது ஒரு தடவை தான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும்.”

    “நிறைய பேருக்கு அதாவது 90% ஜனங்களுக்கு ஒரு தடவை தான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா ஃபினிஷ். அவ்ளோ தான்.”

    “மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள் அந்த பெயரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களினாலோ அந்த பெயரையும் புகழையும் இழந்துவிட்டால் அப்போ அவன் சாகிறான். அப்போ ஒரு முறை மரணம் நடக்கும். அதற்கப்புறம் இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும். ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க 1% தான் இருப்பாங்க. அவங்க வாழும்போதும் சரி.. இறந்து போன பிறகும் சரி… அவங்க பேரும் புகழும் என்னைக்குமே இருக்கும். அவங்கல்லாம் பார்த்தீங்கன்னா சாகா வரம் பெற்றவர்கள். (கைத்தட்டல் அடங்க சற்று நேரமாகிறது. அவரால் பேச முடியவில்லை. பின்னர் மீண்டும் தொடர்கிறார்.) அவங்கல்லாம் ஒரு தனிப்பிறவி.”

    “நார்த்துல பார்த்தீங்கன்னு சொன்னா… சினிமா துறையில, வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன்… நம்ம தமிழ்நாட்டுல பார்த்தீங்கன்னு சொன்னா… நம்ம காமராஜர் அவர்கள்… பெரியார் அவர்கள்… அறிஞர் அண்ணா அவர்கள்… புரட்ச்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், (கைத்தட்டல்… விசில்), நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், கண்ணதாசன் அவர்கள், இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. அதே போல, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில சாகா வரம் பெற்ற பிறவிகள் நம்மோடு. அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் (கைத்தட்டல்)… விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். இவங்களுக்கெல்லாம் தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.”

    “வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா… அதையெல்லாம் தாண்டி ஒரு லெவல்ல அவங்க இருப்பாங்க. தோல்வி, வெற்றிகளை தாங்கிக்கொள்கிற ஒரு சமமான மனநிலையில இருப்பாங்க. அந்த வரிசையை சேர்ந்தவங்க நம்ம புரட்சி தலைவி அவர்கள்… எம்.எஸ்.வி. அவர்கள். அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கிறேன். அவங்க கூட பழகியிருக்கிறேன். அப்படிங்கிற மனசு சந்தோஷத்தோட இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செஞ்சி, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும்…. அதற்கு அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அந்த இறைவன் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.” (கைத்தட்டல் விசில்… கைத்தட்டல் விசில்).
    Know something about everything and go deeper in one thing

  4. #3453
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post

    are u sure?.. anyway, thanks for the information lmkbabu...
    i dint giv u info.. i jus copy & paste..

  5. #3454
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2011
    Location
    Coimbatore
    Posts
    360
    Post Thanks / Like
    ஜெ மேடையில் ரஜினி…. நேர்மையாளர்கள் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

    ரஜினியை ஏன் விமர்சனங்கள்.. எதிர்ப்புகள் ஒன்றும் செய்வதில்லை தெரியுமா? அது அவரது அதிகபட்ச நேர்மை.. ‘உன்னால் எனக்கொன்றும் ஆகவேண்டியதில்லை… என்னால் உனக்கு ஆகப்போவதும் ஒன்றுமில்லை. எனக்கு நான் நேர்மையாக இருந்தால் போதும்,’ என்ற நினைப்புதான் அவரை அவராகவே இருக்க வைக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் பேசிய பேச்சு!

    வரிசையாகப் பேசிய எல்லோருமே – இளையராஜா தவிர – கொஞ்சமல்ல, ரொம்பவே செயற்கையாக, ஒருவித பயத்துடனே பேசிக் கொண்டிருக்கையில், ரஜினியின் பேச்சில் அப்படி ஒரு யதார்த்தம்.

    ‘ரஜினி – கமல் காம்பினேஷன்’ காலத்துக்குப் பின் வந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் பில்லா, தீ, போக்கிரிராஜா, பொல்லாதவன் போன்றவற்றுக்கெல்லாம் எம்எஸ்விதான் இசை.

    கடைசியாக இருவரும் இணைந்த படம் முக்தா சீனிவாசன் இயக்கிய சிவப்பு சூரியன்.

    எம்எஸ்வி – ராமமூர்த்தி பற்றி அலங்காரமாக எதுவும் பேசவில்லை ரஜினி. ஆனால் சாகாவரம் பெற்ற பிறவிகள் வரிசையில் அவர்களை வைத்துவிட்டார்.

    பொதுவாக அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நிற்கும் மேடை அரசியலாகிவிடுகிறது.. அவர் பேச்சிலும் அரசியல் தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால் நேற்றைய பேச்சு நிச்சயம் அரசியல் அல்ல!

    இந்த மேடையில் இறப்புக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், கலைஞர்கள் பற்றிப் பேசும்போது, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன் வரிசையில் எம்எஸ்வியையும் வைத்த ரஜினி, மேடைக்கு ஒரு பேச்சு என்பது தன் வழக்கமல்ல என்பதை உணர்த்த நினைத்தாரோ.. அல்லது அவருக்கே உரிய நேர்மையின் வெளிப்பாடோ… இந்த தலைவர்கள் வரிசையில் கருணாநிதியையும் அவர் வைத்தார். அதுவும் அரசியலில் கருணாநிதியை தனது ஜென்ம எதிரியாக நினைக்கும் ஜெயலலிதா முன்னிலையில்.

    கருணாநிதியின் பெயரை ரஜினி அந்த மேடையில் உச்சரித்தபோது, அதுவரை எல்லாவற்றுக்கும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். காமிரா முதல்வர் முகத்தைக் காட்ட, அவர் ஆர்வத்துடன் ரஜினி பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    தான் அனைவருக்குமே பொதுவானவன்தான். யார் நல்லது செய்தாலும் சரி.. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை அவர் பகிரங்கமாகவே உணர்த்தியிருக்கிறார் இதன் மூலம்.

    ஒரு தலைவரின் மேடையில், மாற்றுக் கட்சித் தலைவரைப் புகழ்வது.. பாராட்டுவது ரஜினிக்குப் புதிதல்ல.

    கருணாநிதி முதல்வராக வீற்றிருந்த ‘சிவாஜி வெள்ளி விழா மேடை’யில், மறக்காமல் ‘இந்தப் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி என்னைப் பாராட்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று ரொம்ப கூலாக சொன்னார்!

    அதே கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான், ‘உங்க பேரைச் சொல்லி மிரட்டிக் கூப்பிடறாங்க,” என்று அஜீத் முறையிட்டபோது, கருணாநிதியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்.

    அந்த விழாவிலேயே, ஜெயலலிதா திரையுலகினருக்காக நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் சொன்னவர் ரஜினி.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. அது இளைஞன் விழா. சத்யம் அரங்கில் முதல்வர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த நேரம். வெளியே பேய் மழை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கிட்டத்தட்ட 1 வார கால மழை. மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தன் முறை வந்தபோது, “முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும். வெளிய மக்கள் படாத பாடுபட்டுக்கிட்டிருக்காங்க.. சாப்பாடு, கரண்ட், ரோடு வசதியில்லே.. நான் அதிக நேரம் பேச எடுத்துக்கல,” என்று மகா நாகரீகத்துடன் இடித்துக் காட்டியவர் இதே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!

    ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிப்பவர்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் விஷயம் இது.

    ஒரு முறை ரஜினி இப்படிக் குறிப்பிட்டார்…

    “ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்னு கமிட் பண்ணிக்கிட்டா, அங்க போயி என்ன பேசறதுண்ணு நிறைய யோசிச்சு வைப்பேன். காலையிலே வரும்போதும், மேடையில் அமர்ந்திருக்கும் போதும்கூட நினைவிருக்கும். ஆனா, மைக்கைக் கையிலெடுத்ததும், நான் நினைச்சிட்டிருந்த அத்தனையும் எனக்கு மறந்துடும். ப்ளாங்க்.. அப்போ என் மனசுல படறதை, உண்மையா நினைக்கிறதை டக்குனு பேசிடுவேன்!”

    -நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!

    -வினோ
    என்வழி ஸ்பெஷல்
    Know something about everything and go deeper in one thing

  6. #3455
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2011
    Location
    Coimbatore
    Posts
    360
    Post Thanks / Like
    தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!

    ஜெயா டிவியின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில் அரங்கை அதிர வைத்த விஷயம், சோ பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் கமெண்ட்தான். சோ – ரஜினி நட்பு குறித்து புதிதாக சொல்ல வேண்டியதில்லை.

    நேற்றைய விழாவில், ஜெயா டிவியின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த ரஜினி, சோவின் எங்கே பிராமணன் தொடர் பற்றிக் குறிப்பிட்டார்.

    அதில், “…அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். அதில் சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி.

    நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்…” என்றார்.


    ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டலிலும் சிரிப்பிலும் அதிர்ந்தது… அப்போது சோ முகத்தைப் பார்க்க வேண்டுமே… தலையில் கை வைத்துக் கொணடு, ‘ஏம்பா இதெல்லாம்?’ என்று லேசாக சிரித்தபடி அவர் வாய் முணுமுணுத்தது, தொலைக்காட்சியில் தெரிந்தது.

    பேச்சு முடிந்து, பாடல்களைக் கேட்க மேடையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா இறங்கி வந்ததும், முதலில் அவரை நோக்கி வேகமாக வந்தவர் சோதான். ரஜினியின் பேச்சு குறித்து அவர் ஏதோ சொல்ல முயல.. ‘நான் அதை ரொம்ப ரசிச்சேன். சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க (தொடர்)’, என சிரித்தபடி கூறிவிட்டு அமர்ந்தார் ஜெயலலிதா!

    -என்வழி ஸ்பெஷல்
    Know something about everything and go deeper in one thing

  7. #3456
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by lmkbabu View Post


    Superstar Rajinikanth began his carrer as a bus conductor.. This rare pic was taken at that time!!
    Avara Ivaruuuuu
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  8. #3457
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    http://www.envazhi.com/wp-content/up...nvazhispl8.jpg

    rendu perukum ulla enna prechanai..... ippadi mothikuranga... KB ethuku sandai pottu ean manatha vagureenganau... antha pakkama thirupikuraru...
    In theory there is no difference between theory and practice; in practice there is

  9. #3458
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    watta nice click... thanks to the fotografer..
    Sach is Life..

  10. #3459
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    கமல்:- என்ன ரஜினி வெருங்கையுடன் வந்துட்டீங்க! அம்மாவுக்கு கிஃப்ட் குடுக்கலியா?!?
    ரஜினி :- விடுங்க கமல்! பேசியே சமாளிச்சிடுறேன்!
    கமல்:- அது!

    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  11. #3460
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    ரஜினி, கோட் வேர்ட்ஸ்ல பேசுங்க, பின்னாடி இருக்குறவன் ஒட்டு கேக்குறான்! பீ கேர்ஃபுல்!

    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Similar Threads

  1. Title Update test
    By hamid in forum Testing
    Replies: 0
    Last Post: 3rd February 2011, 03:31 PM
  2. sangeetha maha yuddham
    By Plum in forum TV,TV Serials and Radio
    Replies: 33
    Last Post: 15th December 2010, 10:31 AM
  3. Update your bookmarks for this forum
    By Minni in forum Indian Food
    Replies: 2
    Last Post: 1st May 2005, 11:45 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •