-
8th September 2012, 08:24 PM
#1121
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :22
நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்
பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.3.1961

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
8th September 2012 08:24 PM
# ADS
Circuit advertisement
-
8th September 2012, 09:13 PM
#1122
Senior Member
Veteran Hubber

Originally Posted by
kalnayak
அற்புதமான விவரங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லோரும் தந்து கொண்டே இருக்கிறீர்கள். என்னால் அலுவலகப்பணியில், இடையிடையே எப்போதாவது வந்து படித்து செல்ல முடிகிறதேயன்றி பங்களிக்க முடியவில்லை. மன்னிக்கவும். KCSekhar சார் என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்கு. பல நாட்கள் கழித்து நீண்ட நேரம் செலவழித்து ....
ஞாயிறு (26/08/12) இரவுக்காட்சியாக 'சன் லைப்' - ல் 'பலே பாண்டியா' பார்க்க நேர்ந்தது. இந்த படத்தைப் பற்றி பலர் அங்குலம் அங்குலமாக பல விதத்தில் அலசிவிட்டார்கள் இங்கே. எண்ணற்ற முறை நான் பார்த்து இருந்தாலும் இம்முறை பார்த்தபின் என் எண்ணத்தில் எழுந்தவைகள் இதோ...
திரு B. R. பந்துலு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். குறிப்பாக கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனது அழுத்தமான முத்திரைப் படங்களை கொடுத்தவர். நடிகர் திலகத்துடன் இணைந்து பிரமாண்டமான, வித்தியாசமான, அற்புதமான பல படங்களை கொடுத்தவர். நடிகர் திலத்தின் முத்திரைப் படங்களாகவும் அவை அமைந்திருந்தன. இருவரும் பிரிந்து சென்றது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு.
பதினோரு நாட்களில் இப்படியொரு உயர்தரமான படத்தை கொடுக்க இப்படியொரு குழுவால் மட்டுமே சாத்தியம். (நடிகர் திலகம், நடிக வேள், தேவிகா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர், B. R. பந்துலு). நடிகர் திலகத்தின் நடிப்பை இந்த படத்தில் என்று இல்லை, எந்தப் படத்திலும் அற்புதம், அட்டகாசம், பிரமாதம், ஆஹா, ஓஹோ என்று நான் காட்சிவாரியாக சிலாகித்து சொல்வதில்லை. ஏனென்றால் 'சூரியன் கிழக்கில் தோன்றுகிறது. மேற்கில் மறைகிறது' என்ற கூற்றுகளில் எந்த தகவலும் (Information) இல்லையோ அது போல அந்த கூற்றுகளிலும் எந்த தகவலும் இருக்காது. இருந்தாலும் பலரைப்போல் என் மனதை மிகவும் கவர்ந்த சில காட்சிகள்... குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சிகள் (தேவிகா அண்ணி ரசிகர் மன்றம் சாட்சி), 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சிகள், அதுமுடிந்து மாமனாரை கண்டு அஞ்சுவது, அவரும் கபாலியும் வேறு வேறு ஆட்கள் என காணுவது, மற்றும் படத்தின் இறுதி காட்சிகளில் ரவுடி மருதுவும், விஞ்ஞானி சங்கரும் பாண்டியன் போல வேடம் போடுவதும் நகைச்சுவைக்கு உச்சக்கட்டங்கள். ரவுடி மருது, கபாலியிடம் 'பாஸ்', 'பாஸ்' என்றே அழைப்பதுவும், மதராஸ் தமிழிலேயே உரையாட வந்து தவிப்பதுவும், விஞ்ஞானி சங்கர் ஆங்கிலம் கலந்த கீச்சுத்தமிழில் உரையாட வருவதை தவிர்த்து பாண்டியன் போல இயல்பான தமிழ் பேச முயற்சி எடுப்பதையும் பின்னி எடுத்திருப்பார். படம் பார்ப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரம் எப்படி மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாக இருக்கும் என்பதால் நகைச்சுவை உற்சாகம் கரைபுரண்டோடும். இதற்கு பின்னர் வந்த பல படங்களில் கூட பலர் செந்தமிழில் உரையாடி இருப்பார்கள். ஆனால் 1962-ல் வந்த இந்தப்படத்தில் எல்லோரும் (ரவுடி மருது - மதராஸ் தமிழிலும், சங்கர் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலும்) இயல்பான தமிழில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்கள். உடன் வந்து கலக்கிய நடிகவேளை நான் குறிப்பிடாவிட்டால் எனது எண்ணவோட்டங்கள் முடிவு பெறாது. ஆனால் இவரை சிலாகித்து பேசுவதிலும் தகவல் இராது. ஆமாம் நடிகர் திலகமும், நடிக வேளும் மற்ற சிலரும் தங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்று சொன்னால்தான் பிரமாண்டமான தகவல் இருக்கும். நகைச்சுவைக்கேற்ற நல்ல கதைதான். Logic-உம் சரியாகவே இருந்தது ஆனால்... பாலாஜி, தேவிகாவிற்கு முறை மாமன்/மாப்பிள்ளை. எனவே பாண்டியனுக்கு அண்ணன்/தம்பி முறை. அவரே பாண்டியனின் தங்கை வசந்தாவை மணப்பது சற்று சிரமமாய் இருந்தது. யாரோ அங்கே என்னை முறைப்பது தெரிகிறது. நிறுத்திகொள்கிறேன்.
இந்த படத்தின் பாடல்கள் தொலைக்காட்சி மற்றும் FM ரேடியோ நிகழ்ச்சிகளில் எங்கேயாவது ஒளிபரப்பாகிகொண்டேதான் இருக்கின்றன. பார்த்தால் அல்லது கேட்டால் சற்றே நிறுத்தி கண்டு அல்லது கேட்டு விட்டுத்தான் செல்ல முடியும் 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய்', 'ஆதிமனிதன் காதலுக்குப்பின்', 'நான் என்ன சொல்லிவிட்டேன்', 'நியே உனக்கு என்றும்', 'யாரை எங்கே வைப்பது' போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைப் பற்றி சொல்ல நான் இன்னும் பல கற்றுக்கொள்ளவேண்டும்.
'பலே பாண்டியா' என்ற சொற்றொடர் மஹாகவி பாரதி பிரயோகித்ததாக புதிய 'பலே பாண்டியா' (2010) திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் சொல்லி இருந்தார். இந்த புதிய படத்திலும் பாண்டியன் என்ற கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும். அது மட்டுமே இரு படங்களுக்கும் தொடர்பு. மற்றபடி இது மறுவாக்கம் (ரீமேக்) அல்ல. பழைய புகழ் பெற்ற படங்களின் பெயர்களை வைக்காதீர்கள் என்று என்ன சொன்னாலும் தற்போதைய திரைப்படத்துறையினர் கேட்பதாகவே இல்லை. படத்தின் பெயரிலுருந்தே copy துவங்குகிறது. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடல் காட்சியை 'உள்ளதை தா' என்று அள்ளி கபளீகரம் செய்திருந்தார்கள். தனது திரைப்படங்களை (தங்கமலை ரகசியம், ஸ்கூல் மாஸ்டர் (கன்னட) ) மாற்று மொழிகளில் அந்த மொழிகளின் பிரதான நடிகர்களை வைத்து இயக்கிய திரு. B. R. பந்துலு இந்த படத்தை மற்ற மொழிகளில் எடுத்தாரா என தெரிந்தவர்கள் யாரேனும் கூறினால் நல்லது.
சமீபத்தில் கூட யாரோ ஒருவர் நடிகர் திலகத்தின் படங்களை அறிமுகம் செய்யுங்கள். அவருடைய 'கனத்த' கதையம்சம் நிரம்பிய படங்களை பின்பு பார்க்கிறேன். அதற்கு முன் 'light-hearted' படங்களை அறிமுகம் செய்யுங்கள் என்றபோது மற்றொருவர் இந்த படத்தைப் பாருங்கள் என்று கூறியது மிகவும் பொருத்தமானது. நடிப்பின் பாடங்களைக் கற்றுகொள்ள நல்லதோர் நகைச்சுவைப் படம்.
அன்புடன்.
பலே கல்நாயக்கரே, "பலே பாண்டியா" பதிவு பிரமாதம்..! ஒரு அருமையான ஆய்வு இழையோடும் தகவலார்ந்த பதிவை படித்த திருப்தி தங்களின் இந்தப்பதிவை வாசித்தபோது கிடைத்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலக்குங்கள்..!
எனக்குத் தெரிந்தவரை "பலே பாண்டியா"வை வேற்றுமொழிகளில் யாரும் பிரதி எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழைப்போல் நடிக்க அங்கேயெல்லாம் யார் இருக்கிறார்கள்..?!
-
8th September 2012, 09:26 PM
#1123
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :23
நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்
பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 16.3.1961

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
8th September 2012, 09:32 PM
#1124
Junior Member
Senior Hubber
IT was a saturday in sep 61 monday my wuarterly exams are starting i was standing in a big que on ladies side 166 ticket couners at sri krishna theatre mint for getting tikets to my mother and her friend for PALUM PAZAMUM PICURE RELEASE DAY. by 2pm got the tikets unfortunately my mother's friend who came to the theatre fell down unconcious by looking at the big crowds. then we sent back her home by a rickshaw mother wanted me to come for the movie Till then i was very regular visitor for sivaji movies but i have not seen fistday first shows. when the unexpected offer came to me iwas very happy on one side other side i have thefears
from my father at home. somehow mother convinced me and took me for the picure.
enjoyed the movie amidst very big allaparais and aarpattangal.
returned home got allaparais from father. my first experience of watching first day first show was tremdarous. that day i decided and succesfully enjoyed the first day first show watching almost till trisulam in 79. most memorale day in my life.
-
8th September 2012, 10:10 PM
#1125
Senior Member
Veteran Hubber
-
8th September 2012, 10:30 PM
#1126
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
IT was a saturday in sep 61 monday my wuarterly exams are starting i was standing in a big que on ladies side 166 ticket couners at sri krishna theatre mint for getting tikets to my mother and her friend for PALUM PAZAMUM PICURE RELEASE DAY. by 2pm got the tikets unfortunately my mother's friend who came to the theatre fell down unconcious by looking at the big crowds. then we sent back her home by a rickshaw mother wanted me to come for the movie Till then i was very regular visitor for sivaji movies but i have not seen fistday first shows. when the unexpected offer came to me iwas very happy on one side other side i have thefears
from my father at home. somehow mother convinced me and took me for the picure.
enjoyed the movie amidst very big allaparais and aarpattangal.
returned home got allaparais from father. my first experience of watching first day first show was tremdarous. that day i decided and succesfully enjoyed the first day first show watching almost till trisulam in 79. most memorale day in my life.
டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே சொல்லமுடியாது. அதுவும் அந்நினைவுகள் சிறுபிராயத்தவையாக இருந்தால் கொள்ளைஇன்பம்தான்..! அதிலும் அவை நமது நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட நினைவுகளாக இருந்துவிட்டால் நமது மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லையேது..! தாங்கள் 'முதல் நாள்-முதல் காட்சி' பார்த்த 'முதல் நடிகர் திலகத்தின் காவிய'மான "பாலும் பழமும்" திரைக்காவியம் பற்றிய தங்களின் நினைவுப்பதிவு அருமை..! தாங்கள் தங்கள் அன்புத்தாயுடன் இக்காவியத்தை முதல் நாள்-முதல் காட்சி பார்த்தேதீரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததனால்தான், தங்கள் அன்னையாரின் தோழியும் மயக்கமடைந்து பின் தெளிவாகி, திரையரங்கிலிருந்து அவர்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். எல்லாம் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தின் செயலேயன்றி வேறென்ன..!
நாளை [9.9.2012] 52வது ஆண்டு ஆரம்பவிழாவைக் காணும் "பாலும் பழமும்" திரைக்காவியம் பற்றி, அதன் 51வது தொடக்க ஆண்டான சென்ற ஆண்டின் செப்டம்பர் 9 அன்று, நமது எட்டாவது பாக நடிகர் திலகம் திரியில் அளிக்கப்பட்ட இக்காவியத்தினுடைய ரிலீஸ்மேளா பொக்கிஷங்களை மீண்டும் அனைவரும் கண்டுகளிக்க கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post736801
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post737195
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post737401
"பாலும் பழமும்" திரைக்காவியம், முதல் வெளியீட்டில் உருவாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளையம் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டிதனைச் சொடுக்கவும்:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post544924
அன்புடன்,
பம்மலார்.
-
9th September 2012, 03:39 AM
#1127
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் மேல் பெரு மதிப்பு வைத்தவரும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் புகழ்பாடும் அமைப்பாக ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. துவக்க விழா வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் வருக.

"துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!
"துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....

"துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.
-
9th September 2012, 06:30 AM
#1128
Junior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
"துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!
"துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....
"துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.
CONGRADULATIONS AND b BEST WISHES FOR LAUNCHING OF JAI JOY
TODAY One of the decent actors whoWAS away from all politics and a b rave person too. As i had close association with thengai srinivasan through him got introduced to jai. iravum pagalum was the first picture for both of them unfortunately the producer director joseph thalyath does not want to try two new faces at the same time hence thengai was removed. from then onwards jai was very affectionate to thengai. A TRUE gentleman thrughout his life. all the very best raghavender.
Last edited by Subramaniam Ramajayam; 9th September 2012 at 06:33 AM.
-
9th September 2012, 09:54 AM
#1129
Junior Member
Platinum Hubber
A RARE STILL - MOOVENDHARGAL MATRUM JAISHANKAR - BALAJI - MN NAMBIYAR - AL SRINIVASAN AND ACTRESS SAVITHRI - SAROJADEVI - MNRAJAM
-
9th September 2012, 11:47 AM
#1130
Junior Member
Senior Hubber
Essvee sir you are doing great jobs not only for mgr hub but also for nadigarthilagam hub. the above photograph is taken on the balcony of erstwhile shanthi theatre where
the photographs all leading tamil film stars were installed since inception of the theatre. iam not able to get answer how all the stars joined together at that spot or shanthi theatre can pammalar raghavender sarada or karik get the answer
really a very very rare still so far not published or known outside.
Bookmarks