-
30th November 2012, 05:26 AM
#1071
Junior Member
Platinum Hubber
Thazhampoo- marakka mudiyadha energy song
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
-
30th November 2012 05:26 AM
# ADS
Circuit advertisement
-
30th November 2012, 05:28 AM
#1072
Junior Member
Platinum Hubber
Thazhampoo-romance song
ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்
(ஏரி)
தென்புறத்துச் சீமையிலேதென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்
(ஏரி)
காலம் இன்று கனியும் என்றுகனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ
(ஏரி)
-
30th November 2012, 05:41 AM
#1073
Junior Member
Platinum Hubber
-
30th November 2012, 06:10 AM
#1074
Junior Member
Platinum Hubber
-
30th November 2012, 08:32 AM
#1075
Junior Member
Platinum Hubber
-
30th November 2012, 08:33 AM
#1076
Junior Member
Platinum Hubber
-
30th November 2012, 08:46 AM
#1077
Junior Member
Platinum Hubber
NOTED STORY WRITER KAMALA -WITH MAKKAL THILAGAM
-
30th November 2012, 08:52 AM
#1078
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1
சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.
6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
Courtesy- makkal thilagam oru varalaru
-
30th November 2012, 08:54 AM
#1079
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார் சிறந்த நடிகர்? யார் வசூல் சக்ரவர்த்தி?” என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம்.
ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.
எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும் இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-
“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.
என் மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.
எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். “சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம் கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார் கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.
அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே” என்று சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது.”
இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
-
30th November 2012, 09:20 AM
#1080
Junior Member
Platinum Hubber
Bookmarks