-
5th December 2012, 03:48 AM
#421
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான்!
சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகம் என்றால் சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப்பறக்கிறது. சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு குறைந்த உடன் சின்னத்திரையில் கால்பதித்து நிரந்தரமாக செட்டிலாகிவிட்ட கதாநாயகிகளின் காட்டில்தான் இப்போது பணமழை கொட்டுகிறது. கண்ணீர் விடும் இல்லத்தரசிகள் இருக்கும் வரை இவர்களுக்கு என்றைக்கும் ஓய்வு இல்லை.
சின்னத்திரை மார்க்கண்டேயி ராதிகா
குட்டிபத்மினி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ராதிகா. பின்னர் ராடான் நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக சித்தி தொடங்கி செல்லமே வரை சன் தொலைக்காட்சியில் தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்திருக்கிறார். தான் நடிக்கும் தொடர்கள் தவிர தனியாக தொடர்களும், நிகழ்ச்சிகளும் ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கி வருகிறார்.
சின்னத்திரை தேவதை தேவயானி
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த கதாநாயகிகளில் இன்றைக்கும் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தேவயானி. சன் டிவியில் கோலங்கள் 4 வருடகாலம் ஒளிபரப்பானது. ராஜ் டிவியில் கொடிமுல்லை அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்போது மீண்டும் முத்தாரம் தொடரின் மூலம் இரட்டை வேடத்தில் களம் இறங்கியுள்ளார் தேவயானி.
கலகலப்பான ரேணுகா
பாலச்சந்தர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்து வரப்பட்டவர்தான் ரேணுகா ப்ரேமி தொடங்கி இப்போதைய அமுதா ஒரு ஆச்சர்யக்குறி வரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலகலப்பாகவும், போல்டாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். சின்னத்திரை மூலம் சினிமாவில் ரேணுகாவிற்கு புது எண்ட்ரி கிடைத்தது.
நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்
குட்டிபத்மினியின் கலசம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ரம்யாகிருஷ்ணன். அவர்கள் இருவருக்கு இடையே பிரச்சினை எழவே ரம்யாகிருஷ்ணன் கிரியேட்டிவ் ஹெட் ஆக மாறி தங்கம் சீரியலில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
போல்டான கல்கி ஸ்ருதி
பாலச்சந்தர் மூலம் கல்கி படத்தில் அறிமுகமாக ஸ்ருதி திருமணத்திற்குப் பின்னர் நடிப்புலகிற்கு டாடா காட்டினார். மண வாழ்க்கையில் முறிவு ஏற்படவே தொலைக்காட்சி சீரியலில் கால்பதித்துள்ளார். திருமுருகன் தயாரித்துள்ள கார்த்திகைப் பெண்கள் சீரியலில் அதே போல்டான ஸ்ருதியை பார்க்கலாம்.
அலங்கார நாயகி சுதாசந்திரன்
தமிழ் திரைப்படங்களில் நடித்துவந்த சுதாசந்திரன் திடீரென வட இந்திய சேனல்கள் பக்கம் ஒதுங்கினார். அங்கு நிகழ்ச்சி தொகுப்பு, சீரியல் என சேவை செய்து வந்த சுதாசந்திரனை நடிகை ராதிகா தமிழ் சீரியல் பக்கம் அழைத்துவந்தார். இங்கே சன்டிவி, ஜெயாடிவி சேனல்களில் அலங்கார நாயகியாக சீரியல்களில் வலம் வருகிறார்.
அழுகை பானுப்ரியா
கண்ணழகி பானுப்பிரியா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்னர் சில ஆண்டுகளில் இவரை வாழ்க்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் செய்தனர் ஏ.வி.எம் நிறுவனத்தினர். அதுவே சினிமாவில் அடுத்த என்ட்ரிக்கு அடித்தளமாக அமைந்தது. தற்போது சுரேஸ் கிருஷ்ணாவின் ஆசை மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
சுகாசினி தொடங்கி மதுபாலா வரை
இவர்கள் தவிர சிம்ரன், சுகன்யா, மதுபாலா, மீனா, சங்கீதா, சுகாசினி, ரேவதி, ரோகினி என பிரபல கதாநாயகிகளும் சின்னத்திரையில் சில சீரியல்களில் தலை காட்டியுள்ளனர். இவர்களில் சுகாசினியும், சிம்ரனும் இப்போது ஜெயாடிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பணியை தொடர்கின்றனர். சங்கீதா விஜய் டிவியில் நடுவராகவும், மீனா, சுகன்யா ஆகியோர் சன் டிவியில் நடுவர்களாகவும் கலைச்சேவை செய்துவருகின்றனர்.
கதாநாயகர்களை காணவில்லை
சினிமாவில் எப்படி கதாநாயகர்கள் தங்களை விட வயது குறைந்த கதாநாயகிகளுடன் நடிக்கிறார்களோ அதற்கு உல்டா வாக இங்கே தங்களை விட வயது குறைவான நடிகர்களை கதாநாயகர்களாக மாற்றி பழி தீர்த்துக் கொள்கின்றனர் இந்த சீரியல் கதாநாயகிகள்.
http://cinema.dinakaran.com
Last edited by aanaa; 5th December 2012 at 03:52 AM.
"அன்பே சிவம்.”
-
5th December 2012 03:48 AM
# ADS
Circuit advertisement
-
29th December 2012, 06:09 AM
#422
Moderator
Diamond Hubber
சின்னத்திரையின் சரவணன், மீனாட்சியின் ‘கடலை‘
சின்னத்திரையின் பிரபல ஜோடிகளான செந்தில், ஸ்ரீஜா இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமாகியுள்ள இந்த ஜோடி அதே உற்சாகத்தோடு சினிமாவில் அடி எடுத்து வைக்கின்றனர். கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை இயக்கிய மூர்த்திதான் இந்த ஜோடியை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான இந்த ஜோடி சினிமாவிலும் வெற்றிக்கொடியை பறக்க விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஜோடியை சினிமாவிலும் இணைத்துள்ளார். சரவணன் மீனாட்சி ஜோடி நடித்த விளம்பரப்படம் தற்போது பிரபலமடைந்ததைப்போல இவர்கள் நடிக்கும் சினிமாவும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
-
5th January 2013, 09:18 PM
#423
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் நட்சத்திர வாரிசு
ஜெயா டிவியில் வரும் சினி கிளிப்ஸ் பகுதியில் புதிய படங்களின் விமர்சனங்களை வழங்கும் துடிப்பான இளைஞர் ரூஹன், சின்னத்திரையில் இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம். சமீபத்தில் பிரமாண்டமாய் நடந்து முடிந்த ஏ.ஆர்.ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஜூனியர் பாடகர்களை மேடையேற்றியதும் இவர் தான். இதற்காக திருச்சி, கோவை, மதுரை, சென்னையில் நடந்த பாட்டுத் தேர்வில் இந்த சிறார்கள் தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்கள். வார்த்தைகளில் தெளிவு, உச்சரிப்பில் வேகம் என தமிழில் நம்பிக்கை தொகுப்பாளராக வெளிப்பட்டிருக்கும் ரூஹன், தொடக் கத்தில் ராஜ் டிவியில் நிகழ்ச்சி வழங்கியவர். காதலர்கள் தங்கள் உணர்வுகளை காதலுடன் பரிமாறிக் கொள்ளும் என் மனமே நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடிகளின்பேவரைட் ஆனார். அதோடு ஓல்டு இஸ் கோல்டு நிகழ்ச்சியில் தேனான பழையபாடல்களை ஒளிபரப்புவது, அன்புடன் நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்வது, சொல்லத்தான் நினைக்கிறேன் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது என சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே இவர் பரிச்சயம். இப்போது ஜெயா டிவியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மூலம் இன்னும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
பெரியதிரை ரசிகர்களுக்கு இவரின் பெற்றோர் நன்கு அறிமுகம். ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் பகோடா காதரின் மகன் இவர். அம்மா மும்தாஜூம் நட்சத்திரமே. பெற்றோர் மாதிரி நடிக்கும் எண்ணம் வரவில்லையா? ரூஹனைக் கேட்டால், கலைத்தம்பதியரின் வாரிசாகப் பிறந்து விட்டு நடிப்பு ஆர்வம் இல்லாமல் எப்படி? நடிப்பு வாய்ப்பு வரும்போது வரட்டும். அதுவரை சின்னத்திரையில் எனக்கான களங்களில் வெளிப்படலாமே என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
25th January 2013, 07:35 PM
#424
Moderator
Diamond Hubber
சினிமா பிரபலங்களில் டுவிட்டர் பக்கங்கள் … ஜெயா டிவியின் ‘சினிமா’வில் அறிமுகம்
வாரஇதழ் என எதுவாக இருந்தாலும் சினிமா பற்றிய செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குவார்கள். அதேபோலத்தான் இணையதளங்களிலும் சினிமாவிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். இப்போது சின்னத்திரையிலும் சினிமா செய்திகளை எல்லோரும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். ஜெயா டிவியில் ‘சினிமா' என்ற புதிய நிகழ்ச்சியை சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் புதுமையாக சினிமா பிரபலங்களில் சமூகவலைதளப் பதிவுகளைப் பற்றிய செய்திகளை கூறுகின்றனர். இன்றைக்கு சினிமா செய்திகளை படிக்கவும், பார்க்கவும் தனி ரசிகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகவே ஜெயா டிவியில் சினிமா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளனர் இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் தொகுத்து தருகின்றனர். திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. புதியதாக சினிமா பிரபலங்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள், அவர்களின் பதிவுகளும் இந்த சினிமா நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு அம்சம். வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
-
25th January 2013, 07:36 PM
#425
Moderator
Diamond Hubber
போராட்டம்தான் வாழ்க்கையில சுவாரஸ்யம்: ‘மிர்ச்சி’ சிவா
எனக்கு எந்த பின்னணியும் கிடையாது ஆனால் நான் இன்றைக்கு சினிமா உலகில் இருக்கிறேன்.
இதற்கு காரணம் போராட்டம்தான். அதுதான் என்னுடைய வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறது என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.
சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார். படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.
சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.
நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.
சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை.
அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார்.
சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.
-
25th January 2013, 07:38 PM
#426
Moderator
Diamond Hubber
பொம்மலாட்டத்தில் சண்டித்தனம் செய்யும் ப்ரீத்தி!
பற்பல வேடங்களில் நடித்து, இடையில் திரு்மணமாகி வீட்டோடு செட்டிலாகியிருந்த ப்ரீத்தி இப்போது தனது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்டதைத் தொடர்ந்து மறுபடியும் நடிப்புக் களத்தில் குதித்துக் கலக்க ஆரம்பித்துள்ளார்.
மறுபடியும் வெரைட்டியாக வெளுத்து வாங்கி வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
சிஏ படித்துள்ள ப்ரீத்தி நடிக்க வந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான். ஆடிட்டர் வேலையா, நடிப்பா என்ற கேள்வி வந்தபோது நடிப்பையே தேர்ந்தெடுத்தார் ப்ரீத்தி.
அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த அவரும், சக டிவி நடிகரான சஞ்சீவும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டனர். உடனடியாக குழந்தையையும் பெற்றெடுத்தார் ப்ரீத்தி. இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது குட்டிப் பாப்பா வளர்ந்து விட்டதால் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். ப்ரீத்தி மறுபடியும் நடிக்க கணவர் சஞ்சீவும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.
தற்போது மனதில் உறுதி வேண்டும், பொம்மலாட்டம் தொடர்களில் நடித்து வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார்.
வீட்டுக்கு அடங்காத, யாருக்கும் பணியாத அல்ட்ரா மாடர்ன் பணக்காரப் பெண்ணாக கலக்கி வருகிறார் ப்ரீத்தி. வீட்டுக்காரர் சஞ்சீவ் திருமதி செல்வத்தில் அதிரடி செய்து கொண்டிருக்கிறார்... ப்ரீத்தி பொம்மலாட்டத்தில் வெளுத்துக் கட்டி வருகிறார்.. செம ஜோடிதான்.
-
9th February 2013, 04:22 AM
#427
Moderator
Diamond Hubber
ஹாங்காங்கில் தமிழ் சேனல்களுக்கு தடை...?
உலகம் முழுக்க தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், டி.வி.க்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. சேனல்கள் மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் தமிழ் சேனல்களை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் விஜய் டி.வி. மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலையும் வருகிற ஜன.31ம் தேதி முதல் தடை செய்ய இருக்கிறார்களாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து விஜய் டி.வியை ஒளிப்பரப்பு செய்யவும், தொடர்ந்து தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பு ஆவதற்கு அங்குள்ள தமிழ் கலாச்சார அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகின்றனர்.
-
6th April 2013, 07:01 PM
#428
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் இருந்து...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி விட்ட செந்திலுக்கு பெரிய திரையும் கைகொடுத்ததில் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். பெரிய திரையில் அறிமுகமான செங்காத்து நல்ல கதையமைப்பை கொண்டிருந்த படம் என்றாலும், செந்திலின் நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு படம் போகவில்லை. இதனால் கொஞ்சம் அப்செட் ஆனவருக்கு இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கண்பேசும் வார்த்தைகள் படம் ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு பார்த்து இரண்டு பட நிறுவனங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் இருந்து போன சிவகார்த்திகேயன் மாதிரியே செந்திலும் பெரிய திரையில் பிரகாசிப்பார் என்கிறார்கள்.
-
16th April 2013, 09:00 PM
#429
Moderator
Diamond Hubber
எனது மதிப்பிற்குரிய ஆசான்கள்! அடக்கத்துடன் சொன்ன கமல்
விஜய் தொலைக்காட்சியில் பிரகாஷ்ராஜ் நடத்தி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், தனக்கு கற்றுக்கொடுத்த பள்ளி ஆசான்களை தவிர இன்னும் பலரை நினைவுபடுத்தினார்.
அப்போது, எனக்கு தமிழை கருணாநிதி மற்றும் கண்ணதாசனும், நடிப்பினை சிவாஜி, எம்ஜிஆர்., நான் நடித்த படங்களில் சிறப்பு பாஷை பேசி நடிக்கும்போது கூடவேயிருந்த லூஸ்மோகன், கோவை சரளா, தனது மகள் ஸ்ருதி ஆகியோர்களையும் தனது ஆசான்களாக குறிப்பிட்டார். மேலும் வேலை இல்லாமல் ஓய்வாக இருந்தபோது தான் முகச்சவரம் செய்ய கற்றுக்கொண்டதாகவும் கூறிய கமல், தேவர்மகன், விருமாண்டி படங்களில் தான் வைத்திருந்த மீசைகளை தனது கையால் தானே வடிவமைத்தவை என்றும் கூறினார்.
இதுவரை அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் கதையை சொல்லி விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், கமல் சொன்ன விசயங்களைக்கேட்டு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தார். அதோடு, இந்த நாள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று சொல்லி கமலுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கவுதமியுடன் சேர்ந்து விளையாடி ரூ.50 லட்சம் பரிசு வென்றார். பின்னர் அந்த தொகையை பெற்றால் தான் பிள்ளையை தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்தார்.
-
16th April 2013, 09:03 PM
#430
Moderator
Diamond Hubber
சினிமா தயாரிப்பதை கைவிட்டார் சிம்ரன்! சீரியல் கதாநாயகி ஆகிறார்!!
கமல், விஜய், அஜீத், சூர்யா என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் சிம்ரன். ஆனால் அவருக்கு திருமணமானதும் எல்லா நடிகைகளையும் போலவே சிம்ரனுக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் நடித்தவர் பின்னர் யாருமே கண்டுகொள்ளாததால், மாஜி ஹீரோயினிகள் தஞ்சமடையும் சின்னத்திரைக்குள் அவரும் களமிறங்கினார். ஜெயா டி.வியில் குஷ்பூ நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதையடுத்து அதில் வெறுப்பு ஏற்பட, சினிமா தயாரித்து அதில் தானும் ஏதாவது வேடத்தில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். அதற்காக பல மாதங்களாக கதைகளும் கேட்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று ஒரு நாள் சிம்ரனின் கணவர், வெளியாகும் படஙகள் எதுவுமே ஓடுவதில்லை. இந்த மாதிரி ரிஸ்க்கான நேரத்தில் சினிமா தயாரித்து லாக் ஆக வேண்டாம் என்று தடை போட்டு விட்டாராம்.
அதன்காரணமாக, இப்போது எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சிம்ரனின் கவனம் டி.வி சீரியல்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ராதிகா, ரம்யாகிருஷ்ணன், தேவயானி உள்ளிட்ட சில மாஜி ஹீரோயினிகள் சின்னத்திரையிலும் கொடி கட்டிப்பறப்பதால் தனது கொடியையும் பறக்க விட பரபரப்பாக இறங்கியிருக்கிறார். அதற்காக சில முன்னணி சீரியல் கம்பெனிகளை அணுகி தான் டைட்டில் வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அப்ளிகேசன் போட்டு வருகிறார் சிம்ரன்.
Bookmarks