-
4th January 2013, 12:20 PM
#2621
Senior Member
Senior Hubber
வனஜா மேடம் அவர்களே,
தங்களது பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
4th January 2013 12:20 PM
# ADS
Circuit advertisement
-
4th January 2013, 12:37 PM
#2622
Junior Member
Junior Hubber
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .
பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .
ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .
நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .
குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .
மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?
மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .
ரசனை தொடரும்
-
4th January 2013, 01:27 PM
#2623

Originally Posted by
Vankv
சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!
தூரத்தில் நின்றபடி சிவாஜி என்ற சிங்கத்திற்கு இறைச்சித்துண்டைக் காட்டிவிட்டு பின்னர் அதைத் தந்திரமாகக் கூண்டில் அடைத்து அதற்கு (கமலஹாசன் சொல்வது போல) தயிர் சாதம் கொடுத்து பட்டினி போட்ட, 80 களில் முளைத்த சில இயக்குனர்கள் (பாரதிராஜா போன்ற ஒரு சிலர் தவிர) மீது எனக்கு கோபமான கோபம்.
200 இற்கும் மேல்பட்ட படங்கள் இருக்க, 80 களில் வந்த ஒரு சில சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு அந்த நடிப்புச் சக்கரவர்த்தியின் நடிப்பை நேற்று முளைத்த காளான்களும் சுள்ளான்களும் விமர்சனம் செய்யுமளவிற்கு அவர்கள் கொண்டுவந்து விட்டதால் எனக்கு எரிச்சலோ எரிச்சல்.
1952 இலிருந்து 1999 வரையில் எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த அட்சய பாத்திரத்திடமிருந்து தத்தமக்குத் தேவையான பங்கை எடுத்து வந்திருக்கின்றனர். 80 களில் வந்தவர்கள், தாமும் அந்த சிங்கத்துடன் சம்பந்தப்பட்டதாக சரித்திரம் புகழவேண்டும் என்ற ஆசையில் அதன் பெயரில் குளிர் காய விரும்பினார்களேயொழிய, அச் சிங்கத்துக்கான உரிய தீனியை கொடுக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் சிவாஜி அழவேண்டும், காதல் செய்யவேண்டும், உணர்ச்சி வசப்படவேண்டும். இடையிடையே சண்டை போடவும் வேண்டும். மற்றைய நடிகர்கள் செய்வதையே சிவாஜியும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தனர். சிவாஜிக்கிருந்த தனித்திறமையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிக்கொணரப் பெரும்பாலானோர் முயலவில்லை.
80 களில் நடிகர் திலகத்திற்கு அளிக்கப்பட்ட பல கதாபாத்திரங்கள் ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை. 'டூயட்' இல்லாமல் வந்த தில்லானா மோகனாம்பாள் வெற்றிகரமாக ஓடவில்லையா? கௌரவத்தில் பார்த்த 'overly confident' ஆன ஒரு barrister ஐப் போல வேறொரு கோணத்தில், மனோவியல் ரீதியாக ஒரு கதாபத்திரத்தைச் சிருஷ்டித்திருக்கலாமே. ஆனந்த கண்ணீரிலும் சிம்ம சொப்பனத்திலும் சிவாஜியின் கதாபாத்திரங்களை மேலோட்டமாக வெறுமே கர்ஜிக்க விட்டிருந்தார்கள். மனைவி, மக்கள் என்றொரு கூட்டத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதெல்லாவற்றையும் தான் சிவாஜி ஏற்கனவே செய்துவிட்டாரே. இதெல்லாம் முடிந்துபோன விடயம் என்றாலும் ஒரு சிவாஜி ரசிகைக்குரிய ஆதங்கம் தான்.
சிவாஜிக்கென்று வருடக்கணக்காக ஒரு கதையை சிறப்பாக எழுதி, அதை இன்னும் சிறப்பாக எம்முன் பாரதிராஜா படைக்கவில்லையா? அவரது ஆர்வம் ஏன் பிற இயக்குனர்களுக்கு வரவில்லை? துரையின் 'துணை'யில் நாம் பார்த்தது தசரத ராமனைத்தான், நடிகர் திலகத்தையல்ல. அழாமல், அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தது அச்சிங்கம்.
அறுபதுகளின் இறுதியில் சிவாஜியில் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார் பாலாஜி. அத்திருப்பம் வியாபார ரீதியில் பலருக்குப் பயனளித்ததுடன் சிவாஜி நடிப்பின் இன்னொரு கோணத்தையும் ரசிகர்களுக்குக் காட்டியது. வசந்தமாளிகை, ராஜா போன்ற போழுதுபோக்குப் படங்கள் எம்மை மகிழ்வித்தன. காவல் தெய்வத்தில் சிங்கம் 'சிங்கிள்' ஆக வந்தாலும் தாக்கு வழங்கப்பட்ட 'முறையான' தீனியை ருசித்து கர்ஜித்துவிட்டுச் சென்றது. தெய்வமகனில் அச்சிங்கத்தின் மூன்று பரிணாமங்களுக்கும் தீனி கிடைத்தது.
ஆனால் 80களில் வந்த இயக்குனர்கள் (அவர்களில் 70 களில் வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்களும் அடங்குவர்) தேவையில்லாமல் நடிகர் திலகத்துக்கு இரட்டை வேடம் மூன்று வேடம் என்று கொடுத்து அச்சிங்கத்தைக் கூண்டில் அடத்துவிட்டிருந்தார்கள்.
ஆனால் பட்டினியாய்க்கிடந்தாலும் கூட அச்சிங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டிருந்தது. அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுத்தது. யாரையும் நட்டப்படுத்த விரும்பவில்லை. அரசியலில் இருந்தவர்கள் தனது பிரபல்யம் என்ற சூரிய ஒளியில் குளிர் காய அனுமதித்ததைப்போல, தனது திறமை என்ற தென்றலில் தயாரிப்பாளர்களைத் தாலாட்டியது அச்சிங்கம்.
இந்த வகையில் நாம் போற்றிப் பூஜிக்கவேண்டியவர்கள், அச் சிங்கத்துக்கு ஓரளவாவது நல்ல தீனி போட்ட தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தான். அவர்கள் படைப்பில் வந்த நல்ல சிவாஜி படங்களை, பெரிதாகப் பேசப்படாமலிருக்கும் படங்களைத் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவற்றைப் பிரபலப்படுத்தவேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லை தில்லானா மோகனாம்பாளுடனும் கௌரவத்துடனும் நின்று விடவில்லை. 300 படங்களில் எமது ரசிப்புக்கேற்ற வகையில் எத்தனையெத்தனை பாத்திரப்படைப்புகள்! அவற்றையெல்லாம் இன்றைய பார்வையாளரிடம் கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டும். திறனாய்வாளர்கள் அந்த படங்களில் சிவாஜியின் நடிப்பு பரிணாமங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணவேண்டும்.
A beautiful write-up and a well analysed one.
Anand
-
4th January 2013, 01:34 PM
#2624
"பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை."
நிதர்சனமான உண்மையை, அதிகம் பேசப்படாததை எழுதி உள்ளீர்கள்.
Hats off to You.
Anand
-
4th January 2013, 02:38 PM
#2625
Junior Member
Devoted Hubber
நன்றி சகோதரர் anm! பள்ளிக்கூடக் கட்டுரைப்போட்டியில் வென்று விட்டதைப்போன்ற உற்சாகம் எனக்கு! என் தமிழ் எழுத்துப்புலமை மீது நம்பிக்கை வந்துவிட்டது. சிவாஜியை நினைத்தவுடன் தமிழ் தானாக வருகிறது போலும்!
இங்கிருக்கும் experienced hubbers போல என்னிடம் statistics எல்லாம் இல்லை. திருவாளர்கள் ராகவேந்தர், முரளி, பம்மலார் மற்றும் சாரதா மற்றும் இன்னும் பல NT experts முந்தைய திரிகளில் எழுதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, எனது எழுத்து நடையில் எழுதியது தான்.
இன்னொன்று திரு முத்ராமன் க்கு : இது நடிகர் திலகத்துக்கான திரி. இதில் நாங்கள் அவர் புகழ் பாடும்போது பிற நடிகர்களை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அவருடைய படங்களையும் ஒன்றுடன் ஒன்றும் இரு வேறு படங்களில் அவருடைய நடிப்பு வித்தியாசத்தையுமே கூட நாம் ஒப்பிடுகிறோமே! சிவாஜி என்றல்ல, எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் நாம் விமர்சனம் செய்யும்போது comparisons வரும். அப்போது எதிர்க்கருத்தாளர்கள் தமது மாற்றுக்கருத்துக்களையோ கண்டனங்களையோ சொல்லலாம். இதில் தப்பில்லை என்பது என் கருத்து. யாரும் தமது கருத்துக்களை இங்கே தாராளமாகச் சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். வ.மா ஆனந்த் ஐ விட, எனக்கு சி.செ: அசோக்கைப் பிடித்தது: காரணம் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.
இதுவும் நன்றாயிருக்கிறதே. (வெடி) 'திரி' யைப் போட்டு வாதத்தை ஆரம்பித்தாகி விட்டது, நடக்கட்டும்!
Last edited by Vankv; 4th January 2013 at 02:41 PM.
-
4th January 2013, 03:59 PM
#2626
Junior Member
Junior Hubber
என் கண்களை நம்ப முடியவில்லை . உங்களின் எழுத்து , நடை . எல்லாமே முன்னர் பதிவிட்ட மேடம் சாரதா , கார்த்திக் போன்றோரின் சாயல் உள்ளது வியப்பாக உள்ளது . உங்களின் நகைச்சுவை கல்நாயக்கை நினைவு படுத்துகின்றது . வெடி -திரி - நண்பர் ஆதி ராமை நினைவு படுத்துகிறது .
எது எப்படியோ அவரவர் பெயரில் வரும் பதிவுகள் உணமையாக இருப்பின் வரவேற்க தக்கதே .
அசோக் -ஆனந்த் இருவருமே நடிகர் திலகம்தான் . வித்தியாச மான நடிப்பில் அசத்தியிருப்பார் .
சகோதரி
உங்களின் அருமையான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன் .
நீங்களாக எழுதுங்கள் , நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் .
அன்புடன்
முத்ராம்
-
4th January 2013, 04:36 PM
#2627
Senior Member
Seasoned Hubber
டியர் முத்ராம்,
தங்களை நான் முத்துராம் என்று நினைத்தேன். ஆனால் தங்களுடைய முத்திரையில் முத்ராம் என்று உள்ளதால் நானும் முத்ராம் என எழுதுகிறேன். முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். தங்களுடைய பங்களிப்பின் மூலம் மற்றொரு புதிய பரிணாமத்தில் நடிகர் திலகத்தின் ரசிகரைக் காண முடியும். இதற்கு வாய்ப்பளித்த இந்த மய்யத்திற்கும் அதே போல் நடிகர் திலகத்திற்கும் நம் நன்றிகள்.
பல்வேறு விதங்களில் அணுகுமுறைகளில் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத்தில் சிவாஜி ரசிகர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். இறுதி வரை சிவாஜி ரசிகர்களாக இருப்போம் என்கிறை வைராக்கியமே அது. அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உறுதியான மனப் பான்மை. யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் சிவாஜி ரசிகர்கள். அதைப் போன்று எழுத்து நடைகளிலும் ஒரே மாதிரி எழுதக் கூடிய சிவாஜி ரசிகர்கள் பலருண்டு. அதில் சாரதா, கார்த்திக், கல்நாயக், போன்று மேலும் வரலாம் அல்லவா. அப்படி சிந்தித்துப் பாருங்களேன்.
வாழ்த்துக்கள் முத்ராம், தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th January 2013, 04:51 PM
#2628
Senior Member
Seasoned Hubber
வனஜா மேடம் அவர்களே,
தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!
அருமையான கட்டுரை. நன்றி.
-
4th January 2013, 04:54 PM
#2629
Mr. MUTHURAMAN,
The other three hubbers has to reply for the doubt created by you.
But,
first person did not come for more than one year.
second one did not come for some months. (everytime he will come with some gap, give some beautiful malarum ninaivugal, then disappear)
the third one wil come then and there, but cant see nowadays.
the fourth person me (Anantha Raman) only here.
before, many times karthik accepted that he is following the writing style of saradha. but what made you to include me and mr.kalnayak in that roll, I cant able to know.
Some years before somebody was saying, Murali and Saradha are same person, because they are always talking about past history with statistical datas.
My GOD, ippo sister Vanajavaiyum indha doubtla serththaachaa?. Kashtamthaan.
-
4th January 2013, 04:56 PM
#2630
Senior Member
Seasoned Hubber
அகர வரிசையில் பார்த்தால் முதலில் அ, பிறகு தான் ஆ ...
அதாவது அசோக், பிறகே ஆனந்த் ...
இது யெதேச்சையாக அமைந்ததா ...
என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் எனச் சொல்ல வேண்டுமென்றால்.
வசந்த மாளிகை நாவலாக ஒரு காதல் காவியமாகத் தான் உருவானது. பிரேம் நகர் என்கிற சிறந்த தெலுங்கு நாவல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை எழுதிய கௌசல்யா அவர்களும் பிரபலமானார். அதை அப்படியே எடுத்திருந்தால் நிச்சயம் சிவகாமியின் செல்வனைப் போன்று முழுதும் காதலைப் பற்றி மட்டும் சொன்ன படமாயிருந்திருக்கும். ஆனால் நாவலில் கௌசல்யா அவர்கள் சற்று சமூகப் பிரச்சினைகளையும் சேர்த்திருந்தார். குறிப்பாக கிராமத்து விவசாயிகளின் சிரமங்களையும் அங்கங்கே சொல்லி யிருந்தார். ஆனால் திரைக்கதையாக அதை மாற்றும் பொழுது அதை சமூகப் பிரச்சினைக்காகவோ அல்லது முழுதும் காதலுக்காகவோ அணுகாமல் சற்றே வர்த்தக ரீதியில் அமைத்தது ஒரு அணுகுமுறை. அதனடிப்படையில் சில வியாபார அம்சங்களை சேர்த்ததனால் அது காவியம் என்கிற வார்த்தைக்கான தகுதிக்கு சற்று ஈடு தராத நிலையில் உள்ளது என்பதே என் கருத்து. நாயகன் பணக்கார வர்க்கத்தில் பிறந்து மதுவுக்கும் மாதுவுக்கும் ஆட்படுவது சாதாரணமான நிலை. அவனுக்குள் உள் மனதில் புகுந்து காதலை உருவாக்கி அவனை சிறிது சிறிதாக நல்லவனாக்குவதாக வரும் போது காதலின் மகத்துவம் நிச்சயம் உயர்த்தித் தான் காட்டப் பட்டிருக்கிறது. அதே போல் அவளைப் பற்றி தான் கேள்விப் பட்டதை அவளிடமே நேரில் கேட்கும் போது அந்த பாத்திரத்தின் நேர்மையினை கதாசிரியர் வெளிப் படுத்துகிறார். உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லா குணம் காதலரிடம் இருப்பது நல்லது என்பதை அந்த இடத்தில் வலியுறுத்துகிறார். இது காதலர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை. அதே நேரத்தில் அந்த பணக்கார வாலிபனின் போலித்தனமற்ற நல்ல உள்ளத்தை பிரதி பலிப்பதாகவும் அமைகிறது பாத்திரப் படைப்பு. அதைக் கேட்டு நாயகி கோபப் படுவதும் நியாயமே, இயல்பான மனித உணர்வினைத் தான் காட்டுகிறார். ஆக, இந்த காட்சியில் சந்தர்ப்பமும் சூழ்நிலயும் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கின்றன என்பதையே கதாசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
வசந்த மாளிகை திரைப்படம் ... நான் சொல்வது படத்தை .. மூலக்கதையை அல்ல ... காவியம் என்கிற வார்த்தைக்கு சற்றே தகுதி குறைந்ததாக தோற்ற மளிப்பதற்கு முதற் காரணம் திரைக்கதையாக்கலே. படத்தின் விறு விறுப்பு அல்லது வணிக நோக்கம் இந்த இரண்டு காரணங்கள் திரைக்கதையை வழுவ வைத்து விட்டன. குறிப்பாக நகைச்சுவை என்கிற பெயரில் நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா அடிக்கும் கூத்துக்கள் விரசத்தின் உச்சம். இவையே அந்தப் படத்தின் மாற்றைக் குறைக்கின்றன. அதே போல் ஹோட்டலில் நாயகியை நிர்வாகி கற்பழிக்க முயலுவதும் நாயகன் காப்பாற்றப் போடும் சண்டைக் காட்சியும் செயற்கையின் உச்சம். அதை நாம் அப்போது விழுந்து விழுந்து ரசித்தோம், இன்றும் ரசிக்கிறோம், நாளையும் ரசிப்போம் ... காரணம் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ... அது வேறு விஷயம் ...
இது போன்ற குறைகள் இல்லாமல் முழுக்க முழுக்க --- தழுவலாக இருந்த போதிலும் --- காதல் உணர்வை வெளிப்படுத்திய படம் சிவகாமியின் செல்வன்.. படத்தின் பெயரே நம்மை சுண்டி இழுக்கும் ... பெருந்தலைவரைக் குறிப்பதல்லவா ... இருந்தாலும் அதனைக் கதைக்கேற்ற வாறு பயன் படுத்திய விதம்... மிகவும் பொருத்தம்.
முதலிலிருந்து கடைசி வரை சிவாஜி ரசிகர்களுக்கு சிவகாமியின் செல்வன் பிடித்திருக்கிறதென்றால் காரணம் ...
வேறெ யாரு

ஒரு புதிய தலைமுறையினரையே நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி விட்ட சிவிஆர் அல்லவா...
நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கும் விஷயத்தையே இங்கே கூற விரும்புகிறேன்.
இதே வசந்த மாளிகை படத்தை சிவிஆர் இயக்கியிருந்தால் .
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும்.
வசந்த மாளிகை ஒரு வெற்றிகரமான மசாலா காதல்
சிவகாமியின் செல்வன் ஒரு வெறித்தனமான உண்மையான காதல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks