-
11th January 2013, 12:51 PM
#2821
Senior Member
Seasoned Hubber
-
11th January 2013 12:51 PM
# ADS
Circuit advertisement
-
11th January 2013, 03:00 PM
#2822
Junior Member
Devoted Hubber
அலுவலக நேரத்தில் அடிக்கடி 'hub' ஐயும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நான், மனச்சாட்சி உறுத்தியதால் (இரு கோடுகள் நாகேஷ் சொல்வதுபோல) 'சரி சரி, கொஞ்சம் office வேலையும் பார்ப்போம்' என்று இருக்கிறேன். நான் ஏதாவது எழுதப்போக அது ஏற்கனவே யாராவது எழுதியதாக இருந்துவிடக்கூடாதே என்றும் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
-
11th January 2013, 03:03 PM
#2823
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
. உங்கள் பன்முக ஆற்றல் உங்கள் எழுத்து வாயிலாக அனைவருக்கும் தெரியட்டும்.வாழ்த்துக்கள்.
மறுபடியுமா?
-
11th January 2013, 03:49 PM
#2824
Senior Member
Seasoned Hubber
பராசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம்

மிக மிக அபூர்வமான இந்த நிழற்படத்திற்கு நன்றி திரு செந்தில் வேல் சிவராஜ், முகநூல் நண்பர்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th January 2013, 04:16 PM
#2825
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
மறுபடியுமா?

LOL vanaja ji! கண்டு பிடிப்பீர்களா என அறியத்தான் இப்படி எழுதினேன்..you are really sharp!
-
11th January 2013, 04:28 PM
#2826
Junior Member
Devoted Hubber
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்[/quote]
திரு.ராகவேந்தரா.அவர்களே..
உங்களிடமிருந்து,
திருவாளர்கள்.
பம்மலாரிடமிருந்து,
பார்த்தசாரதியிடமிருந்து,
முரளியிடமிருந்து,
கோபாலிடமிருந்து,
மற்றும் வாசுதேவனிடமிருந்து
பாராட்டு பெறுவது என்பது
என்னைப்பொறுத்தவரை
சொர்க்கத்தில் இருக்கும்
சாட்சாத் "அவரி"டமிருந்து
பாராட்டு பெறுவதற்கு நேர்
மனமார்ந்த நன்றி..
-
11th January 2013, 05:18 PM
#2827
Junior Member
Seasoned Hubber
A ton of thanks ----
Dear Mr.Raghavendran and Mr.Gopal - I'm not good in writing in such an excellent manner like all of you including Vanaja madam . The hub was witnessing good amount of heat in last few days - good enough for global warming . I'm happy to see that a quick resolution is done and thread is re started with same zeal . I pray for harmony and concerted efforts from all of us so that this thread will become a good foot print for next generation . There are many who confined in reading this the thread only and we need to enocourage them to come out and host articles / write ups about NT - NT is a gold mine and more we speak , the more will come - this is like a temple - and our analysis about NT is a silence prayer and unity is flowers that we offer to NT through our silence prayers. I'm sure with this reunion , and seniors returning to the thread , we will not witness any more slowdown , breaks in our speed. With kind regards - Ravi

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு சகோதரி வனஜா,
இங்கு எல்லோரும் தங்களுடைய வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வரவேற்கும் சூழ்நிலையில் சில தேவையற்ற விவாதங்களால் தாங்கள் மனம் வருந்தும் படி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமென தாங்கள் கருதினால் அதற்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இங்கு ஒருவர் கூட மனம் வருந்தக் கூடாது என்பதே என் ஆசை, எண்ணம். தாங்கள் தொடர்ந்து தங்கள் பதிவினைத் தாருங்கள்.
டியர் ஆதிராம் சார்,
வெவ்வேறு பெயர்களில் ஒருவர் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். சொல்ல வரும் கருத்தினை முக்கியமாய்க் கொள்வோம். முடிந்த வரையில் தங்களுக்குப் பிடித்த வகையில் என்னுடைய பதிவினை அளிக்க முயற்சிக்கிறேன். தங்களுக்குப் பிடித்த பம்மலார், முரளி சார், கோபால் சார் வரிசையில் என் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக முடிந்த வரையில் முயற்சிக்கிறேன். யதேச்சையாக அவராக இருக்கமோ இவராக இருக்குமோ என்ற உரையாடலில் கோபால் சார் ஆதிராம் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்று கேட்டேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை. அதற்காக தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.
டியர் முத்ராம் சார்,
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடி வரும் பதிவுகளில் உள்ள கருத்தைப் பார்ப்போம். யார் என்பதை நாம் தவிர்ப்போம். ஒருவரே பல பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தாங்கள் கூறியது போல் இனிமேல் இந்த விவாதம் வேண்டாம்.
அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனக்காக தங்கள் அக்கறையினை பதிவின் மூலம் தெரிவித்துக் கொண்ட திரு ராதாகிருஷ்ணன், திரு முத்ராம், திரு பார்த்த சாரதி, திரு முரளி சார், மற்றும் அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
-
11th January 2013, 06:57 PM
#2828
Senior Member
Seasoned Hubber
Dear Ravi,
Thank you for the appreciation.
A sample image. Navarathiri still coloured and presented.

Raja in a tennis court
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th January 2013, 08:58 AM
#2829
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பராசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம்

மிக மிக அபூர்வமான இந்த நிழற்படத்திற்கு நன்றி திரு செந்தில் வேல் சிவராஜ், முகநூல் நண்பர்..
நடிகர் திலகத்தின் மிகவும் அரிய புகைப்படத்தை தந்த சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்படி full force இல் hub இற்கு வரும்போது it makes me feel at home. மற்றைய 'பழம்பெரும்' உறுப்பினர்களும் அடிக்கடி வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
-
12th January 2013, 10:20 AM
#2830
Junior Member
Devoted Hubber
சிவாஜி-வாணிஸ்ரீக்கும் சிவாஜி-தேவிகாவுக்கும் விசிறிகள் அதிகமாகவிருக்கும் இந்த hub இல் ஏன் pretty doll மஞ்சுளாவை பிடிக்காமல் போனது என்று நினைத்துப்பார்த்தேன். Not that I am fan of மஞ்சுளா, but அவர் 'இரு பெரும் திலகங்களுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவே அவருக்குரிய qualification ஐக்கொடுத்துவிட்டதே. அதுமட்டுமல்லாமல் அவர் தாராளமாக அள்ளித் தெளித்த கவர்ச்சிக்கு இன்றைய ஹன்சிகா கூட கிட்ட நெருங்கமுடியாது. குஷ்பூவையும் நக்மாவையும் நமீதாவையும் விரும்பும் ரசிகர்கள் நிச்சயமாக மஞ்சுளாவையும் விரும்பியிருக்கவேண்டும்.
ஒருவேளை அவர் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்தது பிடிக்கவில்லையோ? NT ரசிகர்கள் வெறும் கவர்ச்சி மட்டும் காட்டும் நடிகைகளை NT உடன் சேர்த்துப் பார்க்க விரும்பவில்லை என்பது இங்கு பழைய பதிவுகளைப் படித்ததிலிருந்து புரிகிறது.
சிவாஜியுடன் பத்மினியும் தேவிகாவும் வாணிஸ்ரீயும் கண்களால் பேசிய காதலை மஞ்சுளா 'two -piece' போட்டுக்காட்டியும் வெளிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. இயக்குனர்கள் 'எள்' என்றால் அவர் 'எண்ணெய்'யாக நிற்பார் போல; பாய்ந்து விழுந்து, நெருங்கி நடித்து, தாராளமாக கவர்ச்சியை அள்ளித்தெளித்து விடுவார். அது MGR படங்களுக்கு (அது வழமையான ஒன்று என்றபடியால்) பொருந்தியிருக்கலாம். ஆனால் மஞ்சுளாவின் அந்த தாராள மனப்பான்மை சிவாஜியின் படங்களுக்கு ஆபத்தாக வந்து முடிந்து விட்டது. மிகநல்ல உதாரணம் Dr சிவா. படம் நல்ல படம் தான். பாடல்களோ அற்புதம். ஆனால் மஞ்சுளா ஒரு 'திருஷ்டிப்பொட்டு'. அவர் மிகவும் அழகாக பொம்மை போல இருப்பார். அதுதான் பிரச்சனையே; 'பொம்மை' போல மட்டுமே இருப்பது.
'நல்லவர்....' பாடல் முழுவதும் அவர், எந்த அவசியமும் இன்றி (நிச்சயமாக பெண் NT ரசிகர்களுக்கு) half naked ஆக வந்து, அந்த பாடலின் தரத்தை குறைத்து விட்டார். பாட்டு முடிந்த பின்னரும் அதே 'கோல'த்தில் மேலும் 1/2 மணித்தியாலம் வளைய வருகிறார். அது தேவையா? அதற்குப் பின்னரும் ஒரு duet இல் (பாட்டு ஞாபகமில்லை) மஞ்சுளாவின் compromising position, little more than necessary. சிலசமயங்களில் அவரின் 'over exposure' seemed mockingly ridiculous. Not only that, it makes NT's performance under valued.
அன்பே ஆருயிரே இக்குப்பின் இதை சிவாஜி உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது, அவர் தான் director's actor ஆச்சே, சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். திருலோகசந்தரின் மீது ஆத்திரம் வருகிறது. talking of which, 'அன்பே ஆருயிரே' யில் அந்த அருமையான பாட்டு 'மல்லிகை முல்லை பூப்பந்தல்' ஐ வீணடித்து விட்டார். கவித்துவமான பாட்டை சிவாஜி- வாணிஸ்ரீ ஜோடியுடன் கற்பனை செய்து பார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
அடுத்தது 'உத்தமன்'. அதுவும் சிவாஜி-வாணிஸ்ரீ க்குப் பொருத்தமான கதையே. வசனம் பாலமுருகன் (?) என்பதை நம்ப முடியவில்லை. வசனங்களில் ஆழமில்லை. பாடல்கள் அதிகம். MSV இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். KV மகாதேவன் பக்தி படங்களுக்கு இசை அமைத்தால் தான் எனக்கு பிடிக்கும். இந்தப்படம் வெள்ளி விழாக்கொண்டாடியதாமே? இதிலும் மஞ்சுளாவின் தாராளம் இருந்தது. பிரிவுத்துயரை NT அழகாக காட்டியிருந்தாலும், முக்கியமாக அந்த 'கனவுகளே' பாடலில்; மஞ்சுளாவின் poor performance ஆல் இந்த படம் NT படத்திற்கு இருக்கவேண்டிய தாக்கத்தை கொடுக்கவில்லை. இங்கு அடிக்கடி பேசப்படும் 'screen chemistry' சிவாஜி-மஞ்சுளாவுக்கிடையே இல்லவே இல்லை.
சிவாஜியின் இன்னொரு 'திருஷ்டிப்பொட்டு' ஸ்ரீபிரியா. ஆனால் அதைப்பற்றி இந்தளவுக்குக் கூட சொல்ல முடியாது.
Last edited by Vankv; 12th January 2013 at 11:19 AM.
Bookmarks