Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast
Results 91 to 100 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

  1. #91
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பச்சைப் பசேல் வயல்வெளிகளினிடை
    சிக்னல் கிடைக்கலையாம்
    வாடியது அவள்முகம்..

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #92
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவளது அழகு மிக எளிமை
    கழுத்தில் ஒரே ஒரு
    எட்டு காரட் வைர ஆரம்..

  5. Likes kirukan, kalnayak liked this post
  6. #93
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எதிர்பாராத மின்வெட்டு
    எதிர்பாராத உன் விரல்களின் சீண்டல்
    மனதுள் உணர்வுகளின் வெளிச்சம்..

  7. Likes kirukan, kalnayak liked this post
  8. #94
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புதுக்குடித்தனம் வந்த
    பழைய சி.டி ப்ளேயரை
    இன்முகத்துடன் வரவேற்றது வி.ஸி.ஆர்

  9. Likes kalnayak liked this post
  10. #95
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    புது செல்பேசியை வாங்கிய என்னைவிட
    என் மகனுக்கே மகிழ்ச்சி அதிகம்
    வீடீயோ விளையாட்டு நிறையவாம்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. Likes kirukan, chinnakkannan liked this post
  12. #96
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆய்வோம் வாங்கடா

    துவாதசிபாராயணத்திற்காக
    ஞாயிற்றுக் கிழமை சந்தையில்
    பேரம் பேசி
    வாங்கிய அகத்திக் கீரைக் கட்டுக்களைப்
    பிரித்த வண்ணம்
    கூப்பிடுவாள் அம்மா

    நான் அண்ணா தங்கை
    சுற்றி அமர்ந்து
    அண்ணா அவன் விளையாட்டுபர்றி
    தங்கை அவள் வகுப்பில் நடந்ததுபற்றி
    நான் படித்த அணிலில் வந்த கதை பற்றிப்
    பேசப் பேச
    வெற்று இலைகள்
    விரித்திருக்கும் பேப்பரில் மலரும்..

    பின்
    வெற்றுக்காம்புகளை வாசலில் போடலாம்
    எனச் செல்லும் போது
    அம்மா நிறுத்துவாள்
    இந்தா மாட்டுக்குத் தானே கொடுக்கப்போற
    என
    உள்ளிருந்து இன்னுமிரண்டு கட்டு
    எடுத்துக் கொடுப்பாள்..
    இதையும் கொடு..

    எடுத்து தெருமுனையில்
    இருக்கும் மாடடிடம் நான் கொடுக்க
    கன்றிடம் தங்கை கொடுப்பாள்
    மாடு என்றால் பயம்
    கன்று முட்டாது..
    அழகாய் மாடும்கன்றும்
    அசைபோடுவதைப் பார்ப்பதும் ஒரு அழகு..

    இப்போதும்
    துவாதசி க்கள் வந்து போகின்றன
    அதைப்பர்றிக் கவலையும் பட்டதில்லை..
    நான் வேலைசெய்யுமிடத்தில்
    என்றும் அகத்திக்கீரை கிடைத்ததில்லை..
    மாடுகளும்..

    முடிந்ததெல்லாம் நினைவை
    அசைபோடுவது தான்

  13. Likes kalnayak liked this post
  14. #97
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அமைரா என்ற புது ஹீரோயினுக்கு முக நூலில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார்..அதைத் தொடர்ந்து நான் எழுதிப்பார்த்த வெண்பாக்கள்!

    தூண்டும் சிரிப்பழகில் துல்லியமாய் வேடங்கள்
    மூன்றாய் இருந்தும் முயன்றிருந்தார் – மீண்டும்
    திரும்பியே பார்க்கவைக்கும் சீரான தோற்றம்
    கரும்பாய் இனித்திடும் கண்..!

    அழகாய் அமைராக்கு ஆனந்தப் பண்ணாய்
    நயமாகப் பாடல் நவின்றீர் – நிலவுபோல்
    தேயாமல் நன்றாய் திரையிலே மின்னுதற்கு
    மேவியே வாழ்த்துவோ மே..

  15. Likes kalnayak liked this post
  16. #98
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திட்டமும் இலக்கும் கொண்டே
    ..தீர்க்கமாய்த் தேடி னேன்நான்
    இட்டமாய்க் கொண்ட ஆசை
    ..எழுச்சிகொள் பயணம் என்றே
    சட்டமாய் நெஞ்சில் வைத்தே
    ...தக்கன செய்யச் செய்ய
    வித்தைகள் வெற்றி எல்லாம்
    ..விரும்பியே தொடர்ந்த தங்கே..

  17. #99
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஃபேஸ் புக்ல லிமரிக் பற்றிப் பேச்சு வந்தது..கிட்டத்தட்ட மரபுக் கவிதை தான்

    வாய்ப்பாடு

    காய் காய் மா
    காய் காய் மா
    காய் காய்
    காய் காய்
    காய் காய் மா

    ஸிம்ப்பிள் தான் 1,2,5 அடிகள்ல மட்டும் இயைபு வரணும்..இயைபுன்னா பாட்டி ஏட்டி போட்டி; வந்தேன் தந்தேன் நொந்தேன் இந்தமாதிரி..

    மதியுங்கள் நு பாட்டுக்குப் பாட்டு த்ரெட்ல எழுதியிருந்தேன்..இன்றைய முக நூல் முயற்சி..

    *

    மதியென்றால் மலையாளப் போதும்
    மதியென்றால் தமிழ்நிலவாய் மாறும்
    பாடுபவன் கறபனையில்
    பாய்ந்துவரும் சொல்லசைவில்
    விதிவைத்த செயலாக ஆகும்..

    *

    மதியென்றாய் மகிழ்ந்ததுவும் நானா
    மதியென்றேன் கேட்கலையே வீணா
    மலையாளச் சொல்லசைவில்
    மனதுள்ளே நாணமிட
    சதிபோலே முத்தமிடல் வேணா(ம்)

    *

    இதுல முக்கியமான விதி என்னன்னாகொஞ்சம் ஹ்யூமர் இருந்தால் இன்னும் நன்னா இருக்கும்

    எங்கே கல் நாயக் முரளீ ட்ரை பண்ணுங்க..

  18. #100
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Face bookla kidaitha ponmozhi:

    Open your "Eye" and close your "I"

    இதற்கு வெண்பா எழுதிப் பார்த்தேன்..

    நானை மறைத்தங்கு நல்லவிழி தான் திறந்தால்
    வீணையொலி மீட்டும் உளம்

    நானொத்த எண்ணங்கள் நன்றாகத் தான்மறந்தே
    மீனொத்த கண்கள் திறந்துவிடு - தேனொத்தே
    வாழ்விலே உந்தன் வளம்பெருகி தோற்றமதும்
    ஆழ்ந்தே அழகாகும் ஆம்

Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •