Page 173 of 274 FirstFirst ... 73123163171172173174175183223273 ... LastLast
Results 1,721 to 1,730 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1721
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Before trolls start again yadidadida... let me just post again before it gets hijacked by so innocent stomach burning trolls again!

    Quote Originally Posted by Ragu Raj View Post
    கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #1 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)

    எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை, ரயில், அருவி, குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்.

    தமிழ் சினிமா 75-ல் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை 'கரகர' கரம் மசாலாவாகவே இருந்தது. இதில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம். ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த 'முள்ளும் மலரும்' மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டு வந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா. அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல். "கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

    கமல் ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும், பின்பு ஆக்சனுக்கும் மாறியவர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். 'குரு', 'சகலகலா வல்லவன்' அதில் சிகரம் என சொல்லலாம். தன்னுடைய 100வது படமான 'ராஜபார்வை'யில் நடித்தபோது கமலின் வயது 25. தன்னுடைய 100வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள். (இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் ஆகியோர்தான். ரஜினி, சத்யராஜ், பிரபு எல்லோருக்கும் 100வது படம் தோல்விப்படங்களே). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே 'ராஜபார்வை' என்ற தீயில் கையை வைத்தார். "ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை 'ஜில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.

    கமலும் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார். ஆனால், அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் 'விக்ரம்'. எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காண்பிக்கப்பட்டது விக்ரமில்தான். ஏவுகணையின் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம். 'ப்ளூ மேட்' டெக்னாலஜியில் உருவான முதல் தமிழ்ப்படம். ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம் பிடிக்கபட்ட படம். சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு. இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும், கமலும் செய்த 'பேட்ச் ஒர்க்' படத்துக்கு செட்டாகவில்லை. இதனால் விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது. அதுவரை நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு. 'மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.


    தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் 'பேர் சொல்லும் பிள்ளை'யும், 'மங்கம்மா சபதமும்' வந்திருக்காது. கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். மூன்று வேடங்கள், மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம். கிரேசி மோகன், கமலுக்கு 'பக்கா'பலம் ஆனார். அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம். அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று. அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை. ஆனால், ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதுதான் நிதர்சனம். கமல், அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி, பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல். சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1722
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Aandavar saranam

    Quote Originally Posted by Ragu Raj View Post
    கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #2 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)

    கமல் 90க்கு பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல் முயற்சிதான் 'குணா'. குணா மனநிலை பாதிக்கபட்டவன், அவனது தாய் தப்பான தொழில் செய்பவள். இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்து கொண்டதில்லை. கமல் - இளையராஜா - சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றி தராமல் போனாலும், தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா. கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதில் இரண்டாம் படம் தான் குணா. இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் 'பைத்தியம்' என்ற உச்சரித்த தமிழ் சினிமா 'மனநிலை பாதிக்கப்பட்டவன்' என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.

    அது செல்வராகவன் காதல் கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது. கமல் குணாவாகவே மாறி உலவினார். ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது. அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை. குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன்) போகும் வழி மிகவும் ஆபத்தானது. ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார். ஆனாலும், அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது. கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் 'கண்மனி அன்போடு காதலன்'க்கு நியாயம் செய்ய முடிந்தது. இதுதான் எல்லா இளையராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்க காரணம்.

    கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் 'தேவர் மகன்' தான். அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல். (படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.) பொதுவாக கமல், ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு. குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் ரூ.85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல். கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். தேவர் மகன் மூலம் 'ஃபங்க்' ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி 'ஃபங்க்' வைத்துக்கொண்டார்கள். பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார். செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும். உதாரணம், 'சத்யா' பட ரிங் இப்போது வரை காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்.

    தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடியாது. தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார். சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்க வைத்தார். தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்க வேண்டியவை. தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று. திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம். தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை, பெரியவர், சின்னவர் என்ற பேதத்தை, சொத்து பிரச்சனையை, அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை. சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் 'இன்னைக்கு நான் விதை போடுறேன்' வசனம் மனித வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று. 'போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா' என்று சொல்லி தமிழர்களை விழிக்க செய்தார். தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார். எனக்கு பிடித்த கமலின் 'எவர் கிரீன் மூவி' என்றால் அது 'தேவர்மகன்'தான்.

    தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் 'மகாநதி'. கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார். பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை, அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம். 'சோனாகாஞ்சி' என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டு போய் சேர்த்தார். ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உடைத்து 'தான் ஒரு நடிகன் மட்டுமே' என்று கமல் ஊருக்கு உணர்த்தினார். சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார். எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து, ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் 'மகாநதி' தான். அதில் முதன்முதலில் 'ஆவிட்' எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். புதுமையை தமிழ் சினிமாவில் புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார். இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம், ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது. அதற்கென ஒரு பதிவு எழுதனும்.

  4. #1723
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    First film to introduce Dolby sound to Tamil Cinema: Kurudhipunal

    Sent from my SM-G531F using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  5. #1724
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    let's see how Kabali fares to TV or UV and then let's all conclude if he really lost the glamour and shine and the market. if i have to guess it'll sell at the price TV + UV put together to show who's the real king.
    Why are you bringing kabaali here?! I mean, who compared that with UV or TV??? Kamal has habit of making small films and Tv is one such. Its just a remake and not original script. It will make its own money in BO and Kamal is not in a position to prove anything to rajini fans becos he has proved and beaten square one Rajini, in ALL departments. He need not keep on doing that, becos thats not his interest. He is not one to make empty films, hype it, and wish each and every film to be a blockbuster, and finally get bulb severely. He has lot of things to be done with his eacn and every films. recently so far, none of his films has been damaging to any of producer/theater-ppl/distributors
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  6. #1725
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Sarcasm is a gift? HUH!!

    Interesting!

    When others are sarcastic, people label them as they are "provocative"!

    Dont we have two balances and one for ourselves and the other for others?? That's the problem. Yeah sarcasm is a gift. Seems like you claim yourself as "gifted"! I humbly agree with your claim at this time!


    இத பாருங்க - உங்கள மாதிரி 'மீணு மீணு வாங்கலையோ, மீணு வாங்கலையோ, வாங்க வாங்க, வந்து வாங்கிட்டு போங்க'ண்ணு ஒவ்வொரு திரியிலையும் போயி இம்சை படுத்தினா, sarcasm தான் பதிலுக்கு கிடைக்கின்.

    உங்கள யாரும் 'அம்மா தாயே, தயவு செஞ்சு கமல் படத்தை பார்த்து புண்ணியம் அடையுங்கம்மா' நு யாரும் கெஞ்சல - உங்களோட தயவும், பேராதரவும், (விஜய், அஜித் உள்பட) யாருக்கும் தேவையும் இல்ல.

    'முதல் மரியாதை' 'தேவர் மகனை' விட சிறந்த படம்ணு ஆரம்பிச்சவரு, 'தேவர் மகன்' ஒரு mediocre படம் வரைக்கும் இறங்கிட்டீங்க - உங்க class/rangeக்கு, ஒரு 'பாபா', 'குசேலன்', 'சொரியப்பா/ சிறந்கப்பா/கால்ல புன்னப்பா' மாதிரியான காவியப்படங்கள எங்களால ரசிச்சு ருசிச்சு பார்க்க முடியலைனாலும், ஏதோ எங்களால முடிஞ்ச வரைக்கும், ஒரு 'தேவர் மகன்', இல்ல ஒரு 'அன்பே சிவம்' மாதிரி mokkai படங்கள பார்த்து சந்தோசப்பட yedho try பண்றோம்...

    இதுல உங்களுக்கு ஏனுங்க எரியுது?
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  7. #1726
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    எப்படியாவது படத்தை ஓடவைக்கணும் என்ற ஒரே முடிவோடு பலவித சமரசங்களை செய்துகொண்டு கடைந்தெடுத்த மசாலா படைப்பிற்கும், பெரும்பாலான விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் முடிந்தவரை புதிய முயற்சிகளை முயற்சி செய்து செதுக்கப்படும் படைப்பிற்கும் உள்ள வசூல் வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் அதெப்படி பாக்ஸ் ஆபிஸ் என வருகையில் இரண்டையும் ஒரே தராசில் எடை போடவேண்டும்? ரீமேக் செய்யும்போதுகூட மூலப் படைப்பிற்கு எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்தாத வண்ணம், மூலம் பெரிதா, ரீமேக் பெரிதா என்ற விவாதங்களை உருவாக்கும் வண்ணம் படைக்கப்படும் படங்களுக்கும், ரீமேக் என்ற பெயரில் மூலப் படைப்பிற்கு முடிந்தவரை களங்கத்தை ஏற்படுத்தி, திரைக்கதையை முடிந்தவரை நீர்த்துப்போகச் செய்து பணம் பார்க்கும் வியாபாரப் படைப்புகளுக்கும் வித்யாசம் இருக்கு. அதனால கமல் படங்களை பாக்ஸ் ஆபிஸ் தளத்தில் என்றைக்குமே மற்ற சராசரி படங்களோடு ஒப்பிடக் கூடாது. அப்படியே ஒப்பிட்டாலும் இதுபோன்ற காரணிகளை மனதில் கொள்ளனும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #1727
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    It will make its own money in BO and Kamal is not in a position to prove anything to rajini fans becos he has proved and beaten square one Rajini, in ALL departments. He need not keep on doing that, becos thats not his interest. He is not one to make empty films, hype it, and wish each and every film to be a blockbuster, and finally get bulb severely. He has lot of things to be done with his eacn and every films. recently so far, none of his films has been damaging to any of producer/theater-ppl/distributors
    chumma intha dagalti venam.. padam is a padam. he's not making movies to be failures. i agree at the same time he puts more efforts to make more meaningful entertainment but end goal is only to make money. chumma ivar art padam edupparu quality pathi pesu apdi ipdinnu padam podathinga.. he's acting non-stop though low budget films to get what he lost in some of the big blockbusters you're claiming. if he's half successful as his counterpart he could have slowed down in his pace considering his age. his new objective is to complete films in 30-40 days, may i know why? is he trying to produce more movies to help this society move along when you guys claim he has nothing to prove to anyone?

  9. #1728
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    இத பாருங்க - உங்கள மாதிரி 'மீணு மீணு வாங்கலையோ, மீணு வாங்கலையோ, வாங்க வாங்க, வந்து வாங்கிட்டு போங்க'ண்ணு ஒவ்வொரு திரியிலையும் போயி இம்சை படுத்தினா, sarcasm தான் பதிலுக்கு கிடைக்கின்.

    உங்கள யாரும் 'அம்மா தாயே, தயவு செஞ்சு கமல் படத்தை பார்த்து புண்ணியம் அடையுங்கம்மா' நு யாரும் கெஞ்சல - உங்களோட தயவும், பேராதரவும், (விஜய், அஜித் உள்பட) யாருக்கும் தேவையும் இல்ல.

    'முதல் மரியாதை' 'தேவர் மகனை' விட சிறந்த படம்ணு ஆரம்பிச்சவரு, 'தேவர் மகன்' ஒரு mediocre படம் வரைக்கும் இறங்கிட்டீங்க - உங்க class/rangeக்கு, ஒரு 'பாபா', 'குசேலன்', 'சொரியப்பா/ சிறந்கப்பா/கால்ல புன்னப்பா' மாதிரியான காவியப்படங்கள எங்களால ரசிச்சு ருசிச்சு பார்க்க முடியலைனாலும், ஏதோ எங்களால முடிஞ்ச வரைக்கும், ஒரு 'தேவர் மகன்', இல்ல ஒரு 'அன்பே சிவம்' மாதிரி mokkai படங்கள பார்த்து சந்தோசப்பட yedho try பண்றோம்...

    இதுல உங்களுக்கு ஏனுங்க எரியுது?
    அய்யா.. உங்களுக்கு ஏன் அவங்க மேல இப்டி ஒரு காழ்ப்புணர்ச்சி ? personal attack retort பண்ணாம அவங்க கேக்ர கேள்விக்கு பதில் சொல்லுங்க.. முடியிலன்னா பேசாம விடுங்க அத விட்டுட்டு ஏன் இந்த காண்டு உங்களுக்கு?

    அப்புறம் அவங்க மேல இருக்கற கோவம் SS மேல வருதா இல்ல இயற்கையாவே உங்களுக்கு SS மேல ஏதோ காண்டா? ஏதோ KH படம் பாக்றவங்க எல்லாம் அறிவாளிங்க மத்தவங்கல்லாம் முட்டாள்ங்க அப்டிங்கிற உங்களளோட கருத்த பாத்தா சிரிப்பு தான் வருது..

  10. #1729
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    First film to introduce Dolby sound to Tamil Cinema: Kurudhipunal

    Sent from my SM-G531F using Tapatalk
    lately most of your posts ring ஜங் ஜக் ஜங் ஜக் ஜங் ஜக் ஜங் ஜக் sound

  11. #1730
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •