-
26th June 2014, 08:23 PM
#1011
Junior Member
Newbie Hubber
பேஹாக்.
தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.
தமிழில் அத்தனை பாடகர்களும் தொண்டை புடைக்க கத்தி ,சங்கீதத்தை MKT பாணியில் ஓலமாக்கி குதறி கொண்டிருந்த போது (பாவம் bass ,barritone பாடகர் TMS ஐயே உச்ச ஸ்தாயி ஓலத்தில் படுத்தி எடுத்தனர் இசையமைப்பாளர்கள்)அப்போது மென்மை இசையை இசையாக்கி நமக்கு ஆறுதல் கொடுத்தது ஏ.எம்.ராஜா வும்,ஏ.எல்.ராகவனும். ஆனால் ராஜா பல் கடித்து உதடு பிரிக்காமலும்,ராகவன் ஏனோ கொஞ்சம் இனிமை குறைவாகவும் இருந்ததால் கிஷோர் ,ரபி என்று தஞ்சமடைந்த இசை வெறியர்களை தமிழை நோக்கி படையெடுக்க வைத்த வசந்த பாடல்.பிறந்த நாள் விழா கண்ட கண்ணதாசன்-எம்.எஸ்.வீ, டி.கே.ஆர் இணைவில் ,ஒரு velvet குரல் ,மென்மையான ஆண்மை குறையாத ஒரு அதிசய பாடகரின் வாழ்விலும் வசந்தம் தந்த அந்த அதிசய பாடல் "காலங்களில் அவள் வசந்தம்."
அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம் . திரைக்கதை,நடிப்பு அத்தனையிலும் விந்தை புரிந்த அந்த படத்தில் சத்தமில்லாமல் முதலிடத்தை ஒரே பாடலில் கவர்ந்தார் ஒரு அதிசய பாடலாசிரியர்.(கண்ணதாசனை இந்த படத்தில் ஓரம் கட்டிய அவர்,சித்திர பூவிழி வாசலில் வாலியை ஓரம் கட்டினார்.) மாயவநாதன்.தெய்வ பாடகி அம்மா சுசிலாவின் மெலடி,பாடலின் அழகு, சாவித்திரியின் பாந்தம் எல்லாம் சேர்ந்து இன்றும் நம்மை சொக்க வைக்கும் ராகம்" தண்ணிலவு தேனிறைக்க".
erotic என்ற ஒரு ரக ரசனையே தமிழில் கொண்டு வந்த புண்ணியம் செய்தவர் நடிகர்திலகம். தன மனம் கவர்ந்த எழில் நாயகி தேவிகாவுடன் நம் மனதை துடிக்க வைத்த (அமைதியின் நிசப்தமும்,சர வெடியின் படபடப்பும் இணைய முடியுமா?முடியுமே)என்று காட்டிய திரை இசை திலகத்தின் பாடலில் உச்ச பட்ச chemistry காட்டிய டி.எம்.எஸ் -சுசிலா இணைவில், பிறந்த நாள் நாயகன் கண்ணதாசனின் சிரஞ்சீவி பாடல் "மடி மீது தலை வைத்து".
தான் நேசித்த பெண்ணை அடைய நினைத்த பெண் பித்தன் ,தன் அனைத்து தீ வழிகளையும் நேசத்திற்கு ஈடாக அடகு வைத்து, வழி தவறேயாயினும் அடைந்த பெண்ணை ,இனிய கற்பனையால் இணைய விழையும் குதூகல கற்பனை முதலிரவு கானம். வேட்டி சட்டையில் ஒரு ஆண் மகன் எவ்வளவு அழகாக திகழ முடியும் என்பதை திராவிட மன்மதன் உலகுக்கு உணர்த்திய தேவ கானம்.திரை இசை திலகத்தின் "கண்ணெதிரே தோன்றினாள் "
இந்த ராகத்தின் மற்ற தேர்வுகள்.
பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்.
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்- தெய்வத் தாய்.
அவள் ஒரு நவரச நாடகம்- உலகம் சுற்றும் வாலிபன்.
ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு.
Last edited by Gopal.s; 26th June 2014 at 08:29 PM.
-
26th June 2014 08:23 PM
# ADS
Circuit advertisement
-
26th June 2014, 09:03 PM
#1012
Senior Member
Diamond Hubber
Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார்,
நம்முடைய ஸ்ரீகாந்தும், நம்முடைய மஞ்சுளாவும்
ஆஹா! தேன் வந்து பாயுதே காதினிலே! சொல்லும்போதே எவ்வளவு இனிமையா இருக்கு.
கார்த்திக் சார்,
நிச்சயமாக உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்.
-
26th June 2014, 09:07 PM
#1013
Senior Member
Diamond Hubber
கோ,
எனக்கு அறவே தெரியாத பேஹாக் ராகம் பற்றிய அருமையை உணர்த்தி அருமையான பாடல்களுடன் எங்கள் நெஞ்சை ஹைஜாக் செய்து விட்டீர்கள்.
கோபால் என்றால் தரம் நிரந்தரம்.
தங்கள் சீரிய ராகங்களைப் பற்றிய பதிவு திரிக்கு நிஜமாகவே ஒரு மணிமகுடம்.
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
தொடரவும்.
-
27th June 2014, 08:14 AM
#1014
Senior Member
Seasoned Hubber
வாசு சார், கிருஷ்ணா சார், சி.க. சார் மற்றும் நண்பர்கள்...
ஜெட் வேகம் என்றால் என்ன என்பதற்கு இந்தத் திரியின் வேகத்தை உதாரணமாகச் சொல்லலாம். இன்வால்வ்மெண்ட், ஆக்டிவ் பார்டிசிபேஷன் என்கிற வார்த்தைகளெல்லாம் அர்த்தம் இங்கு தான் பெறுகின்றன. கார்த்திக் சார் உள்பட பேர் சொன்ன, பேர் விட்டுப் போன ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2014, 08:15 AM
#1015
Senior Member
Seasoned Hubber
100வது பக்கத்தில் மூன்றெழுத்து திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் வாசு சார். போகிற போக்கைப் பார்த்தால் இது பல பாகங்களை சந்திக்கும் போல் உள்ளது.
தொடருங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும் 100 பக்கங்களைப் புயல் வேகத்தில் கடந்து விட்டதற்கு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2014, 08:16 AM
#1016
Senior Member
Seasoned Hubber
கோபால்
பெஹாக் போன்ற அபூர்வமான ராகங்களைத் தேடிப் பிடித்து அலசி இங்கே பதிவிடுவதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
தொடர்ந்து பைரவி, வசந்தா போன்ற ராகங்களையும் அலசுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2014, 08:19 AM
#1017
Senior Member
Seasoned Hubber
ரீதி கௌளை, இது மிகவும் அபூர்வமாக திரைப்படங்களில் இடம் பெறுகிறது. எனக்குத் தெரிந்து இந்த ராகத்தை மெல்லிசை மன்னர் தெனாலி ராமன் திரைப்படத்தில் பயன் படுத்தினார். பி.லீலா பாடிய அந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. தென்னவன் தாய்நாட்டு என்று தொடங்கும். அதற்குப் பிறகு இந்த ராகம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இடம் பெற்ற தலையைக் குனியும் தாமரையே பாடலில் பளிச்சென்று தெரியும் வண்ணம் அருமையாக அமைக்கப் பட்டிருந்தது. சமீப காலங்களில் உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு பாடலில் ரீதி கௌளை ராகத்தைக் கேட்கலாம்.
இதைப் பற்றியும் விரிவாக அலசும்படி கோபாலைக் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2014, 08:20 AM
#1018
Senior Member
Seasoned Hubber
ஜூன் 27 .. இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் திரைக்காவியம் அஞ்சல் பெட்டி 520. ஒரு முழு நீள நகைச்சுவை நிறைந்த பொழுது போக்கு சித்திரம். தவறுதலாக அஞ்சல் பெட்டியில் போடப்பட்ட ஒரு கடிதத்தை மீட்க கதாநாயகன் முயற்சிக்க, அதில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை. நடிகர் திலகம், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மூவரும் இணைந்து நகைச்சுவையில் கலக்கும் திரைப்படம். கோவர்த்தனம் நடிகர் திலகத்திற்கு இசையமைத்த ஒரே படம். பாடல்கள் அனைத்தும் அருமை. இனிமை. சந்தன சிலையே கோபமா எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அதுவும் நடிகர் திலகத்தின் துள்ளல் அதுவரையிலும் அதற்குப் பிறகும் அந்த அளவிற்கு எனர்ஜெடிக்காக வேறு படங்களில் பார்த்திருப்போமா என்பதை ஐயமே. ஒரு நொடி கூட கண்ணை அசைக்காமல் நடிகர் திலகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய பாடல்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th June 2014, 10:14 AM
#1019
தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.
அனைவருக்கும் காலை வணக்கம் 27/06/14
கோபால் சார் இன் இனிய பேஹாக் ராகம் பற்றிய அலசல் வெகு அருமை
ஆரம்பமே அருமை
இந்த ராகம் பற்றிய ஒரு மருத்துவ குறிப்பு
For patients suffering from insomnia and need எ peaceful sonorous sleep.
லேட் midnight இல் பாடுவதற்கு ஏற்ற ராகம்
ஆடும் சிதம்பரமோ அய்யன் கூத்தாடும் சிதம்பரோ
என்று ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது
பஞ்ச சபைகளில் ஒன்றான பொன் சபையின் சிற்றம்பலது ஈசனை
புகழ்ந்து பாடும் பாடல் - கோபாலக்ருஷ்ண பாரதி பாடல்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதைகள் - அம்மன் கோயில் கிழகாலெ
விஜயகாந்த் ராத நடித்து ஜெயச்சந்திரன் ஜானகி குரல் என்று நினவு
அதே போல் மீண்டும் கோகிலா படத்தில்
"ஹே ஹே ஓராயிரம் கவிதைகள் " பாலாவின் குரலில்
இந்த இரண்டு பாடல்களும் பேஹாக் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது . திரு கோபால் அவர்களும் இதை உறுதி செய்வார் என்று நம்புகிறேன்
http://www.youtube.com/watch?v=பிக்ஸ்6ஜ்ல்க்பழ்க்க்க்
-
27th June 2014, 10:30 AM
#1020
வேந்தர் சார்
உங்களின் அஞ்சல் பெட்டி 520 ஆய்வு மிக அருமை
அந்த படத்தை பற்றி சமீபத்தில் திரு முரளி அவர்களிடம் உரையாடி கொண்டு இருந்தேன் . நான் மிக ரசித்த படம் . பொதுவாகவே சில ஜனரஞ்சக திரைப்படங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது .அப்படிப்பட்ட சில படங்களில் இதுவும் ஒன்று .
நீங்கள் சொன்னது போல் நடிகர் திலகம்
"இளமை எனும் பூங்காற்று தான் "
இந்த திரை படத்தில்
ரீதிகௌளை ராகம் மிக அருமையான ஒரு ராகம் .
ராஜ வந்த பிறகு தான் நிறைய சினிமா ரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்து தான் ) கர்நாடக இசை கலந்த பாடல்களை ரசிக்கும்
சினிமா ரசிகர்களுக்கு இப்படி ஒரு ராகம் இருப்பதாக தெரிய வந்தது
என்று சுப்புடு எழுதியது நினவு
கவிக்குயில் பாலமுரளியின் "சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை " என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்தது என்று நினவு . அதே போல் சமீபத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தில் james வசந்தன் இசையில் இடம் பெற்ற "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் " பாடலும் இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று நினவு
Bookmarks