http://www.inbaminge.com/t/a/Anbukku...nan/folder.jpg
இதே ஜெமினியும், ஜெய்சங்கரும் நடித்த 'அன்புக்கு ஒரு அண்ணன்' என்ற பிரபலமே இல்லாத படம் ஒன்றில் நம் இரு பாடகிகளும் பாடும் பாடல் ஒன்று. மிக அருமையான கருத்தை உணர்த்தும் பாடல்.
திருமணம் வேண்டாம் அண்ணனே போதும் என்று சொல்லும் தோழியிடம் (சுசீலா) திருமணம் கொள்ளாமல் பெண் வாழ்வு சிறக்காது என்று பதிலுக்கு வாதம் செய்யும் தோழி (ஈஸ்வரி)
(ஈஸ்வரி)
அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
(சுசீலா)
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு ஆடவன் வந்தால் நாம்
அடிமைகள்தானே
(ஈஸ்வரி)
தாயாரும் உன்னைப் போல்
தனியாக வாழ்ந்தால்
நீ ஏது உன் அண்ணன் உறவேதடி
(சுசீலா)
மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி
(ஈஸ்வரி)
பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே
(சுசீலா)
பல பெண்வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே
அடியேய்... ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு ஆடவன் வந்தால் நாம்
அடிமைகள்தானே
(ஈஸ்வரி)
இன்பங்கள் சரிபாதி
துன்பங்கள் பாதி
கொண்டாடும் இல்வாழ்வு
குலவாழ்வடி
(சுசீலா)
இன்பங்கள் துன்பங்கள்
எங்கென்று தேடி
அங்கெல்லாம் நான்
போக முடியாதடி
(ஈஸ்வரி)
தள்ளாடும் காலத்தில் அறிவாயடி
(சுசீலா)
அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி
(ஈஸ்வரி)
அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
(ஈஸ்வரி)
ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
நீராடும் நிலை போல நிலை ஏதடி
சுசீலா)
நீராடு நாம் சென்று போராட நேர்ந்தால்
வேரோடும் கண்ணீரில் முடிவேதடி
(ஈஸ்வரி)
கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி
(சுசீலா)
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி