அழகான பாடல்..அங்கே வெப்ப்மா..இங்கே இன்னும் மெல்லிய குளிர் இருக்கிறது...இன்னும் ஏசி போட் ஆரம்பிக்கவில்லை..அனேக்மாக அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
Printable View
அழகான பாடல்..அங்கே வெப்ப்மா..இங்கே இன்னும் மெல்லிய குளிர் இருக்கிறது...இன்னும் ஏசி போட் ஆரம்பிக்கவில்லை..அனேக்மாக அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
முன் பக்கத்தில உள்ள நழுவல்கள் படிச்சுடுங்க... இது பாட்டுக்குப் பாட்டுக்காக எழுதியது...
போச்சு போச்சுவென்றே பொங்குவதும் போதாமல்
...பேச்சில் நல்வார்த்தை சிறிதேனும் சொல்லாம்ல்
வீச்சு வீச்சென்றே விள்ங்காமல் கத்துவதும்
...வில்லி நாயகனின் நாயகியை வீழ்த்திடவே
பூச்சி பிடிக்கின்ற பல்லியைப்போல் காய்நகர்த்தி
... பொன்னும் மணிநகையும் புடவையும் தானுடுத்தி
சூழ்ச்சி செய்வதையும் விடாமலே பார்த்திடுவார்
...சோம்பல் மாந்தரவ்ர் தொலைக்காட்சித் தொடரினிலே
இதுவும் பாட்டுக்குப் பாட்டுக்காய் எழுதியது..
நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா
ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...
Well written poems,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Enjoy the coolness of the climate and write more...
விடைதன்னை வியனுலகம்
விரிந்தெங்கும் தேடுகின்ற
நடைசிறந்த கவியுடையார்
அடைந்திடுக இனியவிடை.
தொலைக்காட்சி நிகழ்வுகளைத்
தொலைவில்நின்றே அலசியிந்த
வலைத்தளத்தில் வளர்த்துவதும்
வண்டமிழ்க்கும் இலக்கியமே.
உள்ளத்துக் கிடக்கைகளை
ஒளிவறவும் மறைவறவும்
தெள்ளிதினே தெரிவிக்கும்
திறனிதற்கோ ஒப்பரிதாம்.
வெள்ளமொரு வீறுகொண்டு
விரைந்தணையைக் கடந்ததுபோல்
கள்ளமற வருமொழிகள்
பொருத்தமென்பார் கருத்துடையார்.
நன்றிங்க..
ஒங்களுக்கு சுலபமா வஞ்சி வருது..ம்ம்
எத்துணைப் பேருவகை ஏலா தியம்புதற்கே
அத்துணையும் இன்ப மயமாகும் --ஒத்தியன்றே
உள்ளபடி ஓங்கித் திளைத்திடுக -- நல்லபடி
நாளைக்கு வஞ்சி நயம்தருவாள் என்னகுறை
அல்லல் அலுவலகம் ஆய்வுகள் என்றாலும்
இல்லையிவை என்னும் இன்ஞாலம் -- இல்லையில்லை!
சொல்லுங்கள் வஞ்சியே சோர்வின்றி வந்திடுவள்
வெல்லுங்கள் வெல்கவே வேல்.
அருட்கவிகள் வாழ்ந்தவந் நாளில்நாம் வாழ்ந்தே
இருப்பினது இன்பமே நெஞ்சம் -- பொருத்தி
அவரருகில் நின்று செவிமடுத்தல் போல்பே(று)
எவர்க்கெளிதாய்க் கிட்டு மினி.
This was composed some years back and published in uNarvuakaL forum, which now appears to have changed,
I have now re-written the stanza to put it in veNba format.
ஒரு --
குமரியின்மேல் உனக்குக்
கோபம் வந்திடுமானால்
கொடிகளுடன் சென்று விளையாடுவாய்!
கொடிகள் அவைபல தடைகள் தமைத்தாண்டி,
படரும் திறன்கண்டு பயன்காணுவாய்,
மடியும் வாஞ்சைஅது முடியும் கணம் வருமுன்
நொடியும் தயங்காமல் படிபேணுவாய்.
நொசித்தன்பு மாறாத படிபேணுவாய்.
(ஒரு குமரியின்)
Ref to a Malaysian case in which an accountant (young female ) was killed with 5 stab wounds by a low grade worker .He was apparently so angry with her.....Isn't there a way of channeling such emotional surges to some positive direction....? These lines deal with such situation albeit in an oversimplified manner....
இரண்டு குருவித் தோழிகள் பேசிக்கொண்டார்கள். பின் கூரையின் கீழ் அவர்கள் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டார்கள்.
அப்பம் எறிந்தாள் சிவமாலா -- தோழீ
அதுநம் விருந்தாம் வருவாயே.
வெப்பம் மிகுந்திடில் கூரையுண்டு - தோழீ
வேறேது வேண்டும் மகிழ்வாயே
கூரையின் கீழொரு மண்டபமாம் -- கேள்
குறையில்லை அங்கே வருவாயே.
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ
முட்டை குஞ்சென்றே எதனையுமே --திருடி
முடக்கிடும் தீமைகள் நேர்வதில்லை;
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.
note: வகையுளி: முட்டைகுஞ் / சென்றே / எதனையுமே. இதை முட்டை குஞ்சென்றே எதனையுமே என இயல்பாகவே எழுதியுள்ளேன்.
அஞ்சா அரசு! அடடா!Quote:
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ
அருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.Quote:
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.
கவிதையைப் படித்துத் திறனாய்வு செய்து பாராடிய தாங்களுக்கு என் நன்றி.
இந்தக் குருவிகள், கூரைக்குக் கீழும் கூரைப்பலகைக்கு மேலுமுள்ள இடைவெளியில் வாழ்கின்றன. இவ்வளவு உயரத்துக்குப் பூனைகள் ஏறிப் போவதில்லை.( 3 storey building) எலிகளும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்த "உயிரி"யும் (other than insects etc) செல்லாத இடம். இந்தக் குருவிகளுக்கே உரிமைபூண்ட இடம்போல ஆகிவிட்டது. ஒருவன் நிலம் வாங்கினால்கூட, அங்கு விளவனவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் அத்துமீறி யாரும் அங்கு புகுந்துவிடாதபடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியனாய் இருக்கின்றான்.அவன் பட்டா பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆகவேதான் "பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் மிகப் பண்ணாகும் நல்லிடம்" என்று வருணித்தேன். இந்தக் குருவிகள் அதிகாலையிலேயே எழுந்து ஒலிசெய்கின்றன. அதிலும் பண் ( இசை) இருக்கிறது...இதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளேன்.
குழந்தைகள் விரும்பும் பாடல் எழுதுவது கடினம் என்று நினைக்கிறேன்.
பள்ளிப் பிள்ளைகள் படிக்க விரும்பும் பாடலாக இது அமையுமானல் அஃது எனக்கு மகிழ்வு தரும்.
எழுத்துப்பிழைத் திருத்தம்: விளவனவற்றை என்பதை விளைவனவற்றை என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும். முன் இடுகையைத் திருத்த இயலவில்லை. The Edit feature is "jammed".
nanRikaL bis_mala!
தன்பற்றியே யாரும்
பேசும்படி செய்தோன்,
பண்பட்டு உயர் தன்விளம்பரத்தின்
விண்தொட்டோன்!
சிக்கினோன் அன்னோன் எனப்பட்டால்
சிக்கினோன் அன்னவனோ?
மற்றோரோ
யார்?
குறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.
சின்னக்கண் அழகன் என்றால்
சீனனைச் சொல்ல வேண்டும்.
என்பக்கம் சிரிக்கும் போதில்
இமை மூடிக் கண்மறைக்கும்.
வெளிறிய மஞ்சள் மேனி
வேண்டுமோ குளிக்க மஞ்சள்?
உளறிய அசை ஒவ் வொன்றுக்கும்
உட்பொருள் வாஞ்சை கெஞ்சும்.
வண்ணமாய்ப் பாடினீரே
..வழக்கமென் றாலும் கூட
சின்னதாய்க் கண்ணன் பற்றி
சந்தமாய்க் கவிதை சொல்வீர்....
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி
நன்றி மாலா..
வெளியிலே வெய்யி லென்றால்
..உளத்திலே சூடு எல்லாம்
மெலியதாய்க் கூடிக் கூடி
..மேகமாய்ச் சூழ்ந்துகொள்ளும்
துளியென மகிழ வந்தேன்
..தூங்கிய நெஞ்சை இன்று
களிகொளச் செய்த தாலே.
..கண்ணனும் சொல்வான் நன்றி..
அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !
உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:
நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு
வருக வருக, நல்வரவாகுக திரு சுந்தரராஜ் அவர்களே; நீங்கள் நலம்தானே?
நீங்கள் சொல்வது சரிதான். பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் சமமாகாத நிலையில், ஏமாற்று வேலைதான்.
பெண்ணியத்திற்கு உங்களைப்போல் நீதியுணர்வு மிக்க ஆடவர்களின் தார்மீக ஆதரவு என்றும் தேவைப்படுகின்றது.
இப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றக்கூடா தென்றுதான்,
"தந்தையர் நாடென்னும் பேச்சினிலே --ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று பாடிவிட்டார் பாரதியார்.
உங்கள் நேரிசை வெண்பாவும் நன்று. இத்துடன் ஒரு இருநூறாவது பாடிமுடித்திருப்பீர்களா?
மிகவும் நன்றி ...மாலா அவர்களே. இருநூறு பாடல்கள் முடிக்கவில்லை. ஏதோ கொஞ்சம்தான். கடுமையான நீரழிவு நோய், தைரோயடு, இதய நோய் எல்லாம் சேர்ந்து கஷ்டப்பட்டேன். அதிகவேளைப்பளு வேறு. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். ஆக எல்லாம் சேர்ந்து கவிதை எழுதுவதில் கவனம்செலுத்த முடியவில்லை. இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. எனவே அவ்வப்போது எழுதி வருகிறேன். இன்னும் ஒரு வருடத்தில் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின்பு முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளேன்.
நம்முடைய நாடறி நீ நன்கு
[இன்னிசை கலிவெண்பா]
ஆண்குழந்தை வேண்டுமென்ற ஆசையிலே நம்நாட்டில்
வீண்கொலைகள் செய்கின்றார் வீணர்கள் பெண்சிசுவை
சொல்கிறதே ஐநாவின் தூற்றுகின்ற ஓரறிக்கை
“கொல்வதுவோ ராயிரமேல்க் கூடுமென்றார் ஒர்நாளும்”
பெண்பிள்ளை வந்துதித்தால் பெற்றோர்கள் பேரிடியால்
மண்ணிடிந்து வீழ்ந்திட்ட மாளிகைபோ லாகிடுவர்
கள்ளிப்பால் ஊட்டிவிட்டுக் கல்நெஞ்சாய் நெல்மணியை
உள்வாயில் தூவிவிட்டே ஓருயிரைத் மாய்த்திடுவர்
இப்படியே செய்வதினால் இங்கோஈர் பால்விகிதம்*
தப்பிதமாய் தான்குறைந்தே தாறுமாறாய் போனதுபார்
சின்னதிலே கல்யாணம் செய்தவளைத் தள்ளிடுவர்
சொன்னபடித் தட்சனையைத் துன்முகமாய்த் தந்திடுவர்
தப்பிதமாய்த் தன்கணவன் தற்செயலாய் மாண்டுவிட்டால்
எப்போதும் கைம்பெண்ணாய் ஏதிலிபோல் வைத்திடுவர்
மும்பையிலும் கொல்கத்தா முன்வளர்ந்த வூர்களிலும்
தம்முடலைத் தந்தலையும் சாக்கடையாய் லட்சம்மேல்
நம்முடைய நாடறிநீ நன்கு
ஈர் பால்விகிதம்* = Male/Female Sex Ratio
-----சுந்தரராஜ் தயாளன்
[முழுவதுமாக நேரில் துவங்கும் காய்ச்சீரில் இக் கலிவெண்பவை எழுதியுள்ளேன். உங்களின் கருத்தை தெரிவிக்கவும். குற்றம் குறைகள் இருப்பேன் தவறாமல் சுட்டவும்.]
அன்பின் சுந்தர்ராஜன்.. சின்னக் கண்ணனின் நமஸ்காரங்கள்.. தங்கள் பாடல்கள் அபாரம்..அது என்ன நம் நாட்டில் நல்லதே இல்லையா என்ன
குற்றங்கள் பல்விதமாம் கூச்சலுமே பல்வாறாம்
உற்றுத்தான் பார்த்தாலே எவ்விடமும் தானுளதாம்
விம்மிடுதே நெஞ்சமெலாம் வெற்றிபல பெற்றவரும்
திம்மென்றே தண்மதியாய் நங்கையரும் தானிருக்க
பாட்டுப் பலபாடிப் பேர்பெற்ற பாவலர்கள்
நாட்டமாய் பாடுபட்ட நல்லவரைத் தான்நினைத்தே
உம்மென்றே மற்றவற்றை உன்னிப்பாய் நோக்காமல்
நம்முடைய நாடறிவீர் நன்கு
இப்படி எழுதித் தான் சமாதான்ம கொள்ளவேண்டும்..(சும்மா எழுதிப் பார்த்தேன்..தவறாக எண்ண வேண்டாம்)
திரையிட்டுக் கண்மறைகக் செல்வமதைத் தேடி..
..திரைகடலைத் தாண்டிபல அன்னியமண் நாடி
விரைந்தேதான் பலவாறாய் உழைத்ததொரு காலம்..
..வண்ணமய இளமையுந்தான் கரைந்ததுவந் நேரம்..
நிறைகுடமாய் வாழ்ந்தேனா நானுமிந்த ஊரில்
..நினைக்குங்கால் பதைக்குந்தான் நெஞ்சத்தின் ஓரம்..
மறைத்ததெது நான்வாழ்ந்த தேசத்தை இங்கே
..மறக்கத்தான் வைத்ததெது எனக்கொள்ளும் ஏக்கம்...
மழையே நீபோய் எங்கள் மண்ணில்
..விழுந்தால் எழும்பும் வாசம் வேறு
அலையே நீபோய் வங்கக் கடலில்
..உரசிப் பார்த்தால் உள்ளம் மலர்வாய்
கலையே நீபோய்ப் பாரென் ஊரில்..
..கண்களிவ் வைத்தே போற்றுவர் உன்னை
சிலையாய்ப் போன் நெஞ்சம் எல்லாம்
..சிரித்து மகிழும் பூமி எமது.
பெண்ணொருத்தி சொல்வது:
கல்யாணம் கட்டி வாழென்று சொன்னார்
கருத்துரை கழறும் பெரியவர்!-- சரி
கல்யாணம் பண்ணிக் கொள்வோமென்றாலே
காதலன் கிடைக்கவில்லை! -- பின்னே
காதலன் நான் என்றுஅவன் வந்த போதினில்
நேரமே கிட்டவும் இல்லை! -- கொஞ்சம்
நேரம் இருந்துநான் வாவென்ற நாளிலே
கூட வேறொரு குட்டி!--பின்
குட்டியை விட்டவன் வர நின்ற வேளையில்
எட்டவே நின்றதென் நெஞ்சம் -- மீண்டும்
வேறொரு பெரியவர் பகர்ந்த மதியுரை
கல்யாணம் கட்டி வாழ் என்று......--சரி
கட்டி முடிக்கலாம் என்று ஒட்டிப் போகையில்
காதலன் யாருமிங் கில்லை.....
மனதை வெறுக்காமல் மாயவனை எண்ணுங்
கணத்தினில் வந்திடுவான் காண்..
ம்ம்ம் யார்யாருக்கு என்னென்ன சோகம் இருக்கோ..புரியவே மாட்டேங்குது! (ச்சும்மா நகைச்சுவைங்க)
சின்னக்கண் ணன்தரும் சீர்மிகு நற்கவிதை
கன்னத்தில் கைவைத்தேன் காண் !!
ஹையாங்க்...
படித்த புலவர்உம் பாமலர்கள் முன்னே
அடியவன் சின்ன அரும்பு
என் மூன்றாவது மாடி ஃப்ளாட்டிலிருந்து பார்த்தால் ஒரு மலை தெரியும்..மஸ்கட் மலையும் மலை சார்ந்த இடமும் எனத் தெரியும் தானே.
சில மாதங்களாக மலையுச்சிக்கு ஒரு/இரு இயந்திரம் எடுத்துச் சென்று காலைமுதல் மதியம் வரை வேலை பார்க்கிறார்கள்..காலை ஐந்தரை மணிக்கே
டக்டக் டக் என ஒலி கேட்கும்..இப்போது பார்த்தால் மலையின் ஒரு பகுதி நீளவாக்கில் வெட்டப் பட்டது..இன்னும் இரண்டுமூன்று மாதத்தில்
மலையும் காணாமல் போய்விடும்!
தள்ளும் இயந்திரத்தால் தக்கபடி இவ்விடத்தில்
மெல்லக் கரையும் மலை
நாணியே நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்தாலும்
வானில் மிதக்கின்றேன் நான்..
ஏங்க ரொம்ப வெட்கமாய் இருக்கு..( நான் கொஞ்சம் குண்டுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!)
பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல பிரமையாய் இருக்கிறது..
க.க.துவில் சின்ன முயற்சி..
நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே
உங்களுக்கு திரு சுந்தரராஜ் அவர்கள்தான் ஆறுதல் சொல்ல, போதிய வயது உள்ளவர். அவரை அழைப்போம்.
அவர்தம் பாடல்கள் இனியவை.
சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.
சொல்லாட்டு - சொல்விளையாட்டு.
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.
Humour -- wherever it appears, do not take things seriously. Just be happy.
கலிவிருத்தம்:
கல்லையே கடவுளெனக் கைகூப்பி நிற்கின்றார்
கல்லையே கடைந்துபல கைவண்ணம் காண்கின்றார்
கல்லையே கோவிலா கமைக்கின்றார்; சிலரிங்கே
கல்லையே (தற்)கொலைசெய் களமாக்கு கின்றாரே!