Originally Posted by
Gopal,S.
சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.
எல்லா அரசியல் கட்சிகளும் அவர் உழைப்பையும் ,நேரத்தையும் (சில நேரம் பணத்தையும் )உறிஞ்சி,
எதையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த நேர்மையான ,கபடம் அறியாத வெகுளி தொண்டர்களின் இதய தலைவனை,
அவர்கள் நடத்திய விதம் குறித்த பார்வை.
60 களில் ,திராவிட இயக்கம் அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட
வன்முறை,
துர்பிரசாரம்,
பதவிக்கு வந்த பின் அவருக்கெதிரான அரசு முறைகேடான மலின போக்கு இவற்றை நாங்கள் விமரிசிக்காமல் இருக்க முடியாது.
பெருந்தலைவர் ,அவரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பினும் ,தனது வாரிசாக அவரை (யாரையுமே குறிப்பிடவில்லை) குறிப்பிடாதது (குறியீடாக அவர் இறகு முன் சிவாஜி இல்லம் சென்று வாழ்த்தினார்)ஒரு சாபக்கேடே.
இந்திராவின் அகால மரணம், மூப்பனாரின் மித்திர பேத துரோகம், பிறகு கூட்டணி என்ற பெயரில் அவரிடம் பண மோசடி இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்கும் கொதிப்பேற்படுத்தும்.
மற்றபடி அரசியல் இங்கு நுழைவதில்லை.