கல்லின் அழகு :
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்
Printable View
கல்லின் அழகு :
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
கற்களைப் பற்றிந்ற் கவிதந்தீர் உம்முடைய
சொற்திறம் கண்டோம் சுகம்..
இதற்குப் பதிலிறுக்கும் வகையில் நான்கு அடிகள் கொண்ட இரண்டு சந்தப் பாடல்கள் எழுதினேன். கடைசி வரியை முடித்துக்கொண்டிருக்கும்போது கணிணி கண் சிமிட்டுவதுபோல சிமிட்டொளி செய்து, நின்றுவிட்டதுடன், நானெழுதியவை மீட்க முடியாமல் போய்விட்டன. அப்புறம் தாளில் மீட்டெழுதி, அதை இங்கு பதியவில்லை. எனது blogspot-இல் வைக்கப்போகிறேன்.
இன்று மீண்டும் DNS சேவையகம் வீழ்ந்துவிட்டது/ இப்போதுதான் மீட்க முடிந்தது....
உங்கள் கேள்விக்குக் கணிணியே அஞ்சுகிறது போலும்....Just in jest...
எனினும், திரு சின்னக்கண்ணன் அவர்கள் கூறுவதுபோல, நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறீர்கள். நீங்கள் புகழ்ச்சிக்கு மிகவும் தகுதியானவரே.
தகுதி உடையவருக்கு அத் தகுதியை வழங்காமல் இருப்பதும் தவறுதான். நீங்கள் தகுதி உடையவரே என்பது என் கருத்துமுடிவாகும். My best wishes for more goodie poems from you. Write more and enjoy more by composing...
மிகவும் நன்றி மாலா அவர்களே. உங்களின் blockspot என்ன என்று தெரிவிக்கவும். பார்க்க ஆவலாக உள்ளேன். எனக்கு ஒரு சந்தேகம் மாலா அவர்களே, எனது திரி
"எனது கவிதைகள்" என்பது இங்கு poems/kavithaigal பக்கத்தில் உள்ளது. அங்கே எனது கவிதைகளைப் பதியாமல் உங்களின் திரியில் பதிந்து வருகிறேன். அதில் வெறும் சில குறள் வெண்பாக்களை பதிந்து வருகிறேன். நான் உங்களை திரியில் பதிந்துள்ள கற்களைக் குறித்த வெண்பாக்களை எனது திரையிலும் பதியலாமா. அப்படி இரு இடங்களின் பதிந்தால் தவறு ஆகுமோ. எனக்குத் தெரியவில்லை. சற்று விளக்கவும்.
இது இத்திரிகளின் மட்டுறுத்துநரைக் (moderators) கேட்டறியத் தக்கதென்பர். ஒரே விடயத்தை ஈரிடங்களிலும் இடுவதால் இடம் வீணாகுமென்று முன்பு அவர்கள் கூறியதாக நினைவு.. நான் சில வேளைகளில் குறுக்குச்சுட்டுகைகளின் (cross references) மூலமாக, வாசிப்போருக்கு உதவியிருக்கிறேன். அப்படிச் செய்வது போதுமானதென்பது என் கருத்து. அப்படிச் செய்வதுகூட இப்போது தேவையில்லை. இன்னார் எழுதியதனைத்தும் காட்டு என்று ஆணையிட்டால், இன்றைய தேடும் அமைப்புகள் (search engines) கொணர்ந்து கொட்டிக் காட்டிவிடுமல்லவா? கவலையை விடுங்கள். நானும் பல திரிகளிலும் எழுதிவைத்திருக்கிறேன். அங்கெல்லாம் சுட்டுகைகள் ஏதும் இல்லாமையே பெரும்பான்மை. My last such cross ref. was many years back............. Happy sir?
http://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post.html
You are welcome.
பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன்
எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்.......
மிக்க நன்றி...என்னஎழுதுவதென்று தெரியவில்லை..
வண்ணக் கவிபுனையும் வல்லவரில் இங்கேதான்
கண்ணன் சிறிய பயல்
**
பள்ளி விடுமுறையில் பெற்றோரும் மாணவரும்
துள்ளியே தாய்நாடு செல்ல தினந்தோறும்
மெல்ல நகர்ந்திருந்து மேவுகின்ற வாகனங்கள்
நல்ல நெரிசலுமே நன்றாகக் குறைந்ததனால்
கள்ளநகை சிந்துவதைக் காண்
உள்நாட்டார் தொகையாதோ ஊரினையே நோக்கிப்போம்
வெளிநாட்டார் விகிதமென்ன விரும்பாத நெரிசலென்றால்
வளிகேட்டில் வானமெங்கும் கரும்புகையோ நறும்பெயலும்
துளிகேட்டும் கிடைக்காத துன்பமிதோ விலகியதோ
மகிழுந்துகள் கக்கும் புகை மிஞ்சும் அளவுக்கு நெரிசலோ. அந்த ஊரில் வெளி நாட்டினர்தாம் ("தாய்நாடு செல்ல") அதிகமோ?
மேற்கண்ட பாடலில் சொற்பயன்பாடு சில கடினமாய்த் தோன்றலாம். எளிதாக்க இதோ கொஞ்சம் விளக்கம்.
வளிகேட்டில் = காற்றுத் தூய்மைக் கேட்டின் காரணமாக .வளி = காற்று.
நறும்பெயல் = நல்ல மழை. அது வந்தால் வானத்துப் புகைக்கூட்டம் கரைந்துவிடும் என்பார்கள்.
துளி கேட்டும் = கொஞ்சம் மாழை வேண்டுமென்று அங்குள்ளோர் கடவுளிடம் வேண்டியும்கூட.
இவர்கள் தொகை என்ன,அவர்கள் விகிதம் என்ன என்பனவெல்லாம் விளையாட்டுக்குக் கேட்டவைதாம் சின்னக்கண்ணன் அவர்களே, அதற்காக நீங்கள் புள்ளி விவர வாரியத்துக்குப் போய் இன்னல் உறவேண்டாம். சும்மா ஏதாவது எழுதி எழுப்பிய கேள்விகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்.
Enjoy the school holidays....!
ஹய்யோ.. அஃது அப்படி இல்லை..உடன் வராததற்கு மன்னிக்க
பொதுவாக அரபு நாடுகளில் உள் நாட்டார் வெகு குறைவு.. எல்லாம் அங்கு வந்து வேலை அல்லது வியாபாரம் செய்யும் வெளி நாட்டார் தான்..குறிப்பாக இந்தியர்கள்..அதுவும் பள்ளி விடுமுறைக்கு வெயில் கொஞ்சம் அதிகமென்பதாலும் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள்..இந்தமாத இறுதியில் ரமதான் ஆரம்பிக்கிறது..கேட்கவே வேண்டாம் எல்லா வியாபாரங்களும் கொஞ்சம் சின்னதாய் உறங்க ஆரம்பித்துவிடும்..
நோன்பிருக்கும் மாதத்தில் நன்றாய் வியாபாரம்
பூணும் விரதம் பார்..
இந்ததடவை விடுமுறை கொஞ்சம் தாமதம்.. எனில் ரமதான் விடுமுறையும் சேர்த்து பள்ளிகள் செப்டம்பர் ஆரம்பம் தான் துவங்கும்..
நெரிசல் குறைந்தது என்று சொன்னேனே தவிர..சில இடங்களில் சாலை பராமரிப்பின் காரணமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது..
எனக்கெங்கே பள்ளி விடுமுறை.. வேலை தான் இருக்கிறதே..
பள்ளி விடுமுறைக்குப் பாய்ந்து நினைத்ததவும்
கள்வெறி கொண்டுதான் கண்மூச்சி ஆடியதும்
துள்ளியே மானாக திக்கெட்டும் சென்றதுவும்
அள்ளும் இளமை அலைபாய வைத்ததுவும்
கொண்டிருந்த காலமெல்லாம் கானலாய் மாறிப்போய்
எண்ணுகிறேன் நாளைத்தான் இன்று..
இங்கே தினம் தினம் நடக்கும் விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான்.. போன மாதம் மட்டும் 600க்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம் ஒரு நொடி வேகம் குறைக்காததினால்.. முக்கால் வாசி ஓமானியர்கள் குறிப்பாக பெண்கள்..காரில் ஏறினோமா ம்ம் விதிகள் இருப்பது மீறுவதற்கே என எண்ணுவார்கள் போலும்.. கொஞ்சம் அறிவையும் உபயோகப்படுத்தாமல் கொய்ங்க் கொய்ங்க் என வேகமாய் ச் செல்வதனால் விபத்துக்கள்..ஒரே விபத்தில் மூன்று நான்கு கார்கள்..அடிவாங்கும்.. காரின் சொந்தக்காரர்களுக்கு வேண்டாத மன உளைச்சல்.. அலைச்சல் இன்ஷ்யூரன்ஸிற்காக..
என்ன அந்த ஒரு நொடி - யாரும் யோசிப்பதில்லை..
குறித்த நேரத்தில் கொண்ட இலக்கை
சரியாய் அடையத்தான் சற்றேனும் எண்ணாமல்
ஓட்டுவார் வாகனத்தை ஓர்நொடியில் மோதிவிட
காட்டுவார் கண்களிலே நீர்..
ஏதோ யோசியாமல் படபடவென வெண்பா(?) அடிக்கிறேன்.. சுவை குறைவின் மன்னிக்க்
ப்ளாக் ஸ்பாட் வைத்திருப்பதாய் எழுதியிருந்தீர்கள் முடிந்தால் சொல்லவும்.. படித்து இன்புறுவேன்
You are forever welcome,
The address is: http://sivamaalaa.blogspot.com/
Enjoy yourself by reading as much as possible.
(You may also join as member and criticize and comment freely,,,,even attack....Everything is fine with me). Have a nice journey through the blogspot pl)
காலின் பெருவிரலில் - ஒரு
கட்டை விழுந்ததம்மா! --இது
போலோர் வலிதனையே -- எது
போதும் அறிந்ததில்லை.
தோலும் கிழியவில்லை --விரல்
துண்டாய்த் தெறிக்கவில்லை -- புறம்
மேலே சுரந்துவீங்கி-- நகமே
வேகும் வலிமிகுதே....
அழகிய நகமே அகல்வாயோ எனைவிட்டு
பழகிய நாளெலாம் மறந்தாயோ வினைபட்டு!
கட்டை யாக்கையிலே - ஒரு
கட்டை விழுந்ததனால் - சொற்
செட்டாய் பாடலுமே - இங்கு
ஜோராய் எழுந்ததம்மா
வலியின் ஓசையதும் -உள
ஒலியாய்க் காட்டிவிட்டே -நகம்
மெலிந்தே சென்றிடுமோ -குரல்
குறைந்தே கூறிவிட்டார்..
நகமும் விரலும் போல் - இங்கே
நல்லதோர் பாபுனையும் - திற்ன்
சுகமாய்க் கொண்டவர்க்கு - என்றும்
சுகமும் மாறாதே
எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..
நல்ல பாடல் சிவ மாலா..:clap:
நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...
Hope I do not have to get this toe nail extracted..
பழைய தாள்களை (பேப்பர்) ஒரு அலமாரியின் மேலடுக்கி, அதன்மேல் ஒரு கட்டையை வைத்துவிட்டாள் பணிப்பெண். காகிதம் (edge) தெரிகிறது. தலை உயரத்துக்குமேல் இருந்த கட்டை தெரியவில்லை. தாள் தேவை படுகிறதென்று ஒரு தாளை இழுக்கப்போய், கட்டை வந்து காலில் (நகத்தின்மேல்) விழுந்துவிட்டது.
நொண்டி நொண்டி நடக்கும் காலம் வந்தால் , அப்படித்தான் நடக்கவேணும்...என்ன செய்வது, வலியை அனுபவிக்கவேண்டியதுதான்.
உங்கள் கவிதை மிகவும் நன்று.
நோவிற் கிடந்தாலும் - கால்
நொண்டி நடந்தாலும் - ஒரு
பாவில் கவிந்துமனம் - வலி
மறந்தே பறந்திடுதே!
nanRi nanRi
வலி நிவாரணி - பெய்ன் கில்லர்ஸ் எடுத்து க் கொண்டீர்களா.. கொஞ்சம் பின் விளைவுகள் வந்தாலும்வ்லி நிவாரணி உட்கொள்வது கொஞ்சம் ரிலீஃப் ஆக இருக்கும்..
Paracetimol.
Pain relieving spray.
இப்போது ஓய்வு!
I have taken one tablet... thanks. Pain is now lessened.
a truly affectionate maid....
என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.
சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!
அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்
இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது
வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்.
காட்டை அழித்துவிட்டார் -- அந்தக்
காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே
கூட்டமாய் வந்தனவே -- அவை
கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின்
ஓட்டை அகற்றினவே -- கீழே
ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி
ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை
அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!
இருப்பிடம் போனதென்று ---அதில்
ஏற்பட்ட கோபத்தின் பாற்பட்டிவ் வண்ணமாய்
தெருக்களில் கூரைகளில் -- ஏறித்
திரண்டதோர் சேட்டைகள் செய்தனவோ இவை!
பொறுப்புடன் செய்தக்கதோ --பிடித்துப்
போக்கிட வேண்டுமே காட்சிசேர் காப்பகம்!
பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ!
கால்வலி முழுக்கக் குணமாகி விட்டதா.. இப்பொழுது தான் உங்கள் பாடல் பார்த்தேன்.. நல்ல பணிமகள்..
”பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ! -” நல்ல வரிகள்..
உங்களுக்கும் குணமடைய வாழ்த்திய ஏனையோருக்கும் நன்றி.
பணிமகள் என்ற சொல்லைப் பயன்படுத்திய தங்களையும் பாராட்டவேண்டும். நல்ல தமிழ்.
கால் நன்று. நகமும் தப்பித்துக்கொண்டது.
நலம்தானே? வேலைப்பளு குறைய வாழ்த்துக்கள்.
உங்கள் நாட்டில் இப்போது நோன்புப் பெருநாள் வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்குமே......
நேற்று ஈத் பெரு நாள் இங்கு.
இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..
If one is from a vegetarian background, he or she may not be able to partake in such festivals, unless invited with specially catered food thrown in!
Now, on a recent funny criminal case in TN.
ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!
மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.
மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!
Notes
#அணல் -தொண்டை, வாய்
ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.
மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )
வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.
பார்க்குமிடம் எங்குமொரு
நீக்கமற நிறைந்துள்ளாய்
பரிபூரணானந்தமே! --- நானும்
நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
ஈர்ப்பதெது கவனமதை
மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!
படைத்தவன்நீ உலகமிதை,
துடைத்தழிக்கும் பலமுடையோன்,
கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
இடைத்துலக்கித் துயர்விலக்கி
இவர்களெலாம் அமைதிபெற
ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!
இவர்களைநீ விலக்கிவிடு
இனிநீயே மேற்கொள்வாய்
இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
தவம்பிழைத்த நெறிசெல்வார்!
தண்ணருளைப் புறம்வைத்தார்
தலைதடு மாற்றமுற்றார்.
Note:
இடை - இடையில்; முன் அல்லது தொடக்க காலத்திலிருந்து தலையிடாமல் இருந்ததை விட்டு இவ் இடைக்காலத்தில் சென்று....; துலக்கி = தூய்மை செய்து.
நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.
நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும். Further explanation of the word is here: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post980046
குறிப்பு: கவிதைகளில் "ஓர் துயரும்" என்று எழுதலாம். உரைநடையில் அங்ஙனம் எழுதலாகாது. ஒரு துயரும் என்று இப்பாடலில் வந்தால் தளைதட்டி, ஓசை கெட்டுவிடும்.
ஓர் -= ஒன்று என்னும் எண்ணிக்கை; ஓர் > ஓர்தல் = சிந்தித்தல்.
ஓர்துயரும் என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, சிந்திக்கத் தக்க எந்தத் துயரும் என்றும் பொருள்கொள்ளலாம். எனவே இது இருபொருள் தரும் தொடர் என்று உணர்க.
காலைகாற் புள்ளிவிட்டு மாலையது மீள இட்டு
நாளை முடிப்ப தெழுத்து.
எழுத்து = எழுத்துக்கலை,
================================================== ===
Quote:
I was working on the proof of one of my poems all the morning, and took out a comma. In the afternoon I put it back again.
OSCAR WILDE ((16 October 1854 – 30 November 1900)
நேரம் எப்போதும் ஒருமாதிரிதான்!
நல்லது நடந்தால் நல்ல நேரம்!
கெட்டது நடந்தால் கெட்ட நேரம்.
நல்லதைக் கெட்டதாக்கி விடலாம், ஆனால்
கெட்டதை நல்லதாக்கிவிடப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.
நல்ல நேரத்தில் உலவப் போய்,
கழுத்தணியைத் திருடன்
பறித்துக்கொண்டால்,
திருடனுக்கே நல்ல நேரம்!
வருட முழுமையும் காப்பி குடிக்க
வருமானம் தந்த நேரம்!
முதல் ஏதும் போடவில்லை,
பொன்னாக வந்துவிட்டது அவனுக்கு.
இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.
http://www.voanews.com/content/saudi...d/1555885.html
.
போரிடாத உலகமைக்க வழியோ இல்லை
போரிடுதற் கருவிகட்குத் குறைவோ இல்லை!
ஏறிவரும் கொலைக்கருவி வகைகள் எண்ண
இருக்குமெண்கள் தமைக்கொண்டு திகைய வில்லை!
பாரில்சிலர் அமைதிவரப் பரிந்து சொல்வார்
பாழ்வெடிவை தீவிரரும் அதையே சொல்வார்
யாரிவருள் உலகமைதி யாப்புற வுள்ளார்
யாம் காணோம் சொல்லளவில் ஒருமை கண்டோம்
மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?
நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனைக் குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.
செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.
நிமையம் = நிமிடம்.
இணங்கி நடந்து............
இணங்கி நடந்து வணங்கிக் கிடந்தால்
சுணங்கிச் சுருளாத வாழ்க்கை--- பணங்குறையா
நன்னிலை என்றாலும் உண்மையே மேற்கொண்டு
தன்னிலை தாழாமை நன்று.
மனிதன் மனத்தில் எண்ணுவது அளவிலது!
நம்பிக்கை என்பது இதனில் ஒருவகை!
உலகம் இந்நாள் அழியும் என்பதாய்ப்
பலரும் நம்பிப் பயப்படல் காண்கிறோம்.
அழிந்தால் நாம்தான் யாது செய்வது?
வானம் இடிந்து விழுமெனப் பயந்து
சின்னா என்ற கோழிக் குஞ்சு
ஏனை விலங்குகள் தம்மைக் கூட்டி
அழுது புலம்பி அவற்றுடன் ஓட,
கண்ட நரியும் நன்கு நகைத்து
வான மிடிந்தால் எங்கு செல்வது
அஞ்சாது உங்கள் இருப்பிடம் ஏகுவீர்
என்று புகட்டியது அறிவு அதனைப்போல்
இப்போது ஒருநரி வருதல் வேண்டும்
உலகத்தின் அச்சம் தீர்த்திடும் பொருட்டே!
Note:
" மனிதன் மனத்தில் எண்ணுவ அளவில!
நம்பிக்கை என்பது இவற்றுள் ஒருவகை!" ,,,,,,,,,,,,,,,,,,,,
என்றிருக்கவேண்டும் என்பது இலக்கணம். வேண்டியவாறு
வாசித்துக்கொள்ளவும்.
I have written this without the usual rhymes etc.
காலிகள் கொட்டம் களைந்திட, கார்முகத்துப்
பாலியல் வன்செயல்கள் பாழ்பட--- நூலியைக்கும்
சட்டம் இயற்றவைகள் சாலச் செயல்பட்டு
நட்டம் தவிர்ப்பதெந் நாள்?
குறிப்பு:
புதிதாய் இயற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு என்னும் உயர் சட்ட நூலுடன் ஒத்துப்போவதாய் இருத்தல் வேண்டுமெனப் படுவதால் : அந்நூலுடன் இயைபுடைய புதிய சட்டம் என்பது தோன்ற, "நூலியைக்கும் சட்டம்" எனப்பட்டது.
குற்றச் செயல்கள் ஒரு குமுகாயத்தின் (சமுதாயத்தின்) ஒரு கரும்பகுதி அல்லது கருப்பு முகம் எனலாம், ஆதலின் கார்முகத்து எனப்பட்டது.
பாலியல் கொடுமையால் நெடுநாட்கள் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டுபுரிய வேண்டிய பெண், கொல்லப்பட்டும் மற்றபடி அவலம் அடைந்தும் போவது ஒரு நட்டம் ஆகும். இதையே இங்கு நட்டமென்றோம்.