-
-
-
அதிமுக வரலாற்றையும் , அதற்கு முந்தய திராவிட வரலாற்றையும் அழகாக படம் பிடித்து காட்டிய இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை .
இனிய நண்பர்திரு ராமமூர்த்தி அவர்களின் வேலூர் நகர பிளாஷ் தகவல்கள் சூப்பர்
ஜெயா டிவியில் ஒளிபரப்பான மக்கள் திலகத்தின் பாடல்கள் பற்றிய தகவல்கள் வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தினகரன் , தி ஹிந்து , மாலைமலர் , மாலைமுரசு செய்திகள் , தொகுப்பு பாராட்டுக்கள் .
திரு முத்தையன் அவர்களின் மக்கள் திலகத்தின் டைட்டில் மற்றும் நிழற்படங்கள் அணிவகுப்பு - புதுமை .
திரு ரவிகிரணின் கருத்துகளும் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று . மக்கள் திலகத்தின் அரசியல் மாண்புகளை திரு
ரவிகிரண் பட்டியல் இட்டு உள்ளது சிறப்பாகும் . நன்றி .
-
-
மக்கள் திலகத்தின் ;;நீரும்நெருப்பும் '' - 18.10.1971
43 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த பிரமாண்ட படைப்பு . பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த காவியம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரட்டை வேடங்கள் - நடிப்பு அபாரம் . அனல் பறக்கும் சண்டை காட்சிகள்
இனிய பாடல்கள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .
நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .
பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.
தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!
-
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் விசேஷ காட்சி படம் வெளியான 18.10.1971 அன்று சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் பிரமாண்டதுவக்க விழா நடைபெற்றது . மேடையில் அன்றைய
தமிழக முதல்வர் , நம்மை ஆண்ட தமிழக முதல்வர் ,
தோன்றும் அபூர்வ படம் .
http://i60.tinypic.com/wlxg0n.jpghttp://i60.tinypic.com/r2j2bc.jpg
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நீரும் நெருப்பும் படவெளியீட்டு துவக்க விழாவில் மக்கள் திலகம் - ஜெயலலிதா
http://i60.tinypic.com/1se2yh.jpg
-
-
-
-
மிகவும் அருமையாகவும்,விளக்கமாகவும்,படங்களுடன் பதிவை அளித்த தங்களுக்கு நன்றிகள்
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
நம் இதயம் நிறைந்த புரட்சித் தலைவர் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 43 வது ஆண்டு துவக்க நாள் இன்று ! இந்த நன்னாளில், திராவிட இயக்க வரலாற்றின் சில நிகழ்வுகளையும், திரி பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, 1916ல், சமூக நீதி, சமத்துவம் போன்ற நோக்கங்களுடன், சர் பி. டி. தியாகராசர், டாக்டர் பி. டி. ராசன், டாக்டர் சி. நடேச முதலியார், ஏ. டி. பன்னீர்செல்வம், டி.எம்.. நாயர், மற்றும் சில முன்னணி தலைவர்களால் தொற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி, பின்னர் 1920ல் நடைபெற்ற சென்னை மாகாண பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த , பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் போராட்டம் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் 1926ம் ஆண்டு "சுயமரியாதை இயக்கம்" கண்டார். காங்கிரஸ் கட்சியின் எதேச்சிகார போக்கும், அக்கட்சி கையாண்ட அணுகுமுறைகளும் பிடிக்காத காரணத்தால் , வைக்கம் வீரராம், தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் நீண்ட காலம் நீடிக்க முடிய வில்லை.
http://i58.tinypic.com/sm3oyd.jpg
சீர்திருத்த செம்மல், வெண்தாடி வேந்தன், தந்தை பெரியார் அவர்கள் பின்னர் 1935ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து, நடைபெற்ற 1937ம் ஆண்டு பொது தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. நீதிக்கட்சி தேய்பிறை போல் தேய்ந்து வந்த நிலையில், ஈரோட்டு சிங்கம். தந்தை பெரியார் அவர்கள், 1944ல் திராவிட கழகத்தை நிறுவினார். இதில் முக்கிய தலைவர்களாக தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால்,காஞ்சி கரிபால்டி பேரறிஞர் அண்ணா அவர்கள், நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், அன்பழகன், சி. பி. சிற்றரசு, என்.வி.நடராசன், க. ராசாராம் கலைஞர் கருணாநிதி, குத்தூசி குருசாமி ஆகியோர் கருதப்பட்டனர். திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையாக தனித்திராவிட நாடு காண்பதே என்றிருந்தது. மேலும், தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை மணம் புரிந்த காரணத்தால், தந்தை பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டால், மக்கள் திலகத்தால் அன்புடன் இதய தெய்வம் என்றழைக்கப்பட்ட ,காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949 செப்டம்பர் 17ம் தேதியன்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் கட்சியை ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக முக்கிய தலைவர்கள் அனைவரும் அவரது தலைமயில் அணி திரண்டனர். தி. மு.க. வின் ஐம்பெரும் தலைவர்களாக - பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வி.கே. சம்பத் மற்றும் என். வி. என். நடராசன் விளங்கி வந்தனர்.
சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, குடந்தை நீலமேகம், தூத்துக்குடி கே. வி. கே. சாமி போன்ற தியாக சீலர்களால் மெல்ல வளர்ந்த இயக்கம், 1953ல் நம் பொன்மனச்செம்மல் தி. மு. க. வில் இணைந்த பிறகு, அசுர வளர்ச்சி கண்டது.
கட்சி சார்ந்திருந்தாலும், சுயேட்சை வேட்பாளராகத்தான் நகரசபை தேர்தலில் போட்டியிட முடியும் என்றிருந்த அப்போதைய நிலையில், கோவில்பட்டியில் ஈ. வே. அ. வள்ளிமுத்து அவர்களும், திருவண்ணாமலை நகரசபையில் ப. உ. சண்முகம் அவர்களும், உடுமலைபேட்டையில் சாதிக் பாட்சா அவர்களும் நகரசபை தலைவர்களாக, தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
தன்னுடைய திரைப்படங்களில், அவர் சாம்ர்த்தியமாக புகுத்திய தி. மு. க. ஆதரவு கொள்கைகளும், சின்னத்தை பட்டி தொட்டியெங்கும், பரப்பிய விதமும், காங்கிரசாரை கதி கலங்கச் செய்தது. உதாரணத்துக்கு சில : விக்கிரமாதித்தன் திரைப்படத்தில் நெற்றியில் உதய சூரியன் சின்னத்தை, திலகமாக வைத்துக் கொண்டது, சக்கரவர்த்தி திருமகள் படத்தில், கதாநாயகன் பெயரையே "உதயசூரியன்" என்று சூட்டிக்கொண்டது, உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என்றும் , தான் ஏற்றுக் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை திரைப்படங்களில் இடம் பெறும் காட்சிகளிலும், பாடல்களிலும் காண்பித்து, மக்கள் மனதில் நிலைபெறச் செய்தது, இப்படி தி. மு. க. வின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பெருமை நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களையே சாரும்.
10-10-1972 அன்று, தான் வளர்த்த கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள், கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சதிகாரர்கள் பின்னிய சதி வலையின் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்று சத்யா ஸ்டுடியோ வாசலில் கூடிய ஆயிரக்கணக்கானோரில் அடியேனும் ஒருவன். மறு நாள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகலிருந்தும், குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்தும், லட்சக்கணக்கானோர் புரட்சித்தலைவர் இல்லம் முன்பும், அலுவலகம் முன்பும், சத்யா ஸ்டுடியோ வாசல் முன்பும் எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டனர்.
தனிப்பட்ட ஒருவரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வுக்காக, தமிழகமே ஸ்தம்பித்த சரித்திரம், புரட்சித் தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பு நடந்தது. அவரது உருவப்படம் தாங்கிய வாகனங்கள்தான் தமிழகத்தில் ஓட முடிந்தது என்ற நிலையம் ஏற்பட்டது. இந்த சாதனையை அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.
புரட்சித்தலைவர் முடிவெடுக்கும் முன்பே, தொண்டர்கள் முடிவெடுத்தனர், புரட்சித்தலைவர் தலைமையில் தனி இயக்கம் காண்பதற்கு ! சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்காமல், தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கட்சி ஆரம்பித்தவர் நம் புரட்சித் தலைவர். ஊழலை ஒழிப்பதே, தனது கட்சியின் பிரதான நோக்கமாக கொண்டு, தன் இறுதி மூச்சு வரை கட்சியை நேர்மையாக வழி நடத்தி சென்றார் நம் புரட்சித் தலைவர்.
இவ்வளவு ஏன் - தனது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக, மதிப்பின் காரணமாக, சென்னை நகரின் மையப்பகுதியில் அவருக்கு சிலை நிர்மாணித்து, அவரை அனுதினமும் துதி பாடினார்.
http://i62.tinypic.com/20uy3jk.jpg.
அண்ணா தி. மு. க . என்ற பேரியக்கத்தை கண்ட புரட்சித் தலைவர் அவர்கள், எங்கும் தான் போற்றி வணங்கும் பேரறிஞர் அண்ணாவின் திருநாமத்தையே உச்சரித்து வந்தார். கட்சி கொள்கை - அண்ணாயிசம், கட்சி கொடியில் - அண்ணா அவர்களின் உருவம், கட்சியின் பெயரில் - அண்ணா, பொதுக்கூட்ட மேடை பேச்சுக்களின் இறுதியில் - அண்ணா நாமம் வாழ்க என்று முடிப்பது.
தனக்கென்று ஒரு லட்சியக் கூட்டம் இருந்த போதிலும், உறுதியான பலத்த வாக்கு வங்கி இருப்பதை உணர்ந்த போதிலும், தான் போற்றும் தலைவர் அண்ணா அவர்களைத்தான் முன்னிலைப்படுத்தினார்.
http://i60.tinypic.com/331qek3.png
கழக உறுப்பினர் அட்டையிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை பெரிய அளவில் வடிவமைத்து, தான் அவரை வணங்கும் காட்சியை சிறிய அளவில் இடம்பெறச்செய்தவர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் பொன்மனச்செம்மல்.
ஆட்சியில் வந்த பின்பு, சொத்து சேர்க்காத முதல்வர் என்ற பட்டியலில் இடம் பெற்ற பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு.
லட்சக்கணக்கில் கழகத்தில் உறுப்பினர்களை சேர்த்தது மட்டுமல்லாமால் அந்த உறுப்பினர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அவர் கண்ட இயக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்கும் மனப்பாங்கினை ஏற்படுத்திய பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.
ஆட்சி - அதிகாரத்தில், ஊழலை அறவே களைந்தெடுத்த பெருமையை பெற்றவர் நம் புரட்சித்தலைவர்.
மூத்தவர்களை மதித்து, அவர்களை கவுரவிப்பதிலும் முதன்மை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். (உதாரணத்துக்கு - மேற்கூறிய கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களை அண்ணா தி. மு. கவின் அவைத்தலைவராகினார். அவரது அரசியல் பணிகளுக்காக, கட்சி நிதியிலிருந்து, அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்து அகமகிழ்ந்தார் நம் புரட்சித்தலைவர். தள்ளாத வயதிலும், புரட்சித் தலைவரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்ட போது, தனது கால்களை விலக்கி கொண்டு, அவரை நெஞ்சாரத் தழுவிய போது, கோவில்பட்டி வள்ளிமுத்து அவர்களின் நா தழு தழுத்தது, வார்த்தைகள் வராமல். நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை கழக பொதுச் செயலாளராக்கி, அழகு பார்த்து, அவரின் கீழ் கழகப் பணியாற்றினார். அதே போன்று, ப. உ. சண்முகம் அவர்களையும் பொதுச்செயலாளர் ஆக்கி அவரது தலைமையையும் ஏற்றுகொண்டார்.
கட்சியில் ஒரு சாதாரண தொண்டனையும் இழக்க விரும்பாதவர் என்ற பெருமையும் புரட்சித் தலைவருக்கு உண்டு.
எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக பாவிக்காமல், அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தி, சட்டமன்ற நாகரீக நெறி முறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த பெருமையும், புரட்சித் தலைவருக்கே உண்டு.
சட்டமன்ற பொது தேர்தல்களில், தோல்வியே சந்திக்காமல், தொடர்ந்து வெற்றி பெற்ற முதல்வர் என்ற பெருமையை பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரே தலைவர் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம், கொள்கை வேந்தனாம் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள்.
கழகம் வென்ற தொகுதிகள் எதையும் இடைத்தேர்தல்களில் கூட மாற்றுக் கட்சியினர் வசம் செல்ல விடாமல் செய்து, மக்களின் செல்வாக்கை முழுமையாக பெற்ற மாபெரும் சக்தி படைத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர்.
தனது ஆட்சிக்காலம் முழுவதும், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல்களில், பண நாயகர்களை வென்றுக்காட்டிய உன்னதமான உத்தமத் தலைவர் எம். ஜி. ஆர்.
எளிமையின் உருவமாக, பந்தா இல்லாமல், பொது மக்களிடையே கலந்து, சர்வ சாதாரணமாக அவர்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை அவ்வப்போது களைந்த கண்ணியவான் நம் புரட்சித்தலைவர்.
அமைச்சரைவையை அடிக்கடி மாற்றியமைக்காமல், அமைச்சர்களை முழுமையாக நம்பி, அவர்கள் (நடிக்காமல்) உண்மையிலேயே அவரது விசுவாசிகளாக மாற்ற வைத்த பெருமை புரட்சித் தலைவருக்கே உண்டு !
தன் தலைவரை மதித்ததினால்தான், துதித்த்தினால்தான், போற்றி வணங்கியதால்தான், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றார் நம் புரட்சித்தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது.
தனி ஒரு மனிதனாம் நம் புரட்சித் தலைவரின் புகழால் மட்டுமே ஒரு இயக்கம் 42 ஆண்டுகள் கடந்து, 43வது ஆண்டை துவக்குகிறது என்றால் அது ஒரு சகாப்தம், வரலாறு, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்